வானத்தில் இருந்து வந்த ரூ.500 நோட்டுகள்… பண மழையால் பெரிய அதிர்ச்சி – பீகாரில் நடந்தது என்ன?

National News In Tamil: பீகாரில் திடீரென பண மழை பொழிந்த காரணத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து இங்கு விரிவாக காணலாம். 

கேரளாவில் கனமழை; 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் – பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

திருவனந்தபுரம்: கேரளாவின் பல மாவட்டங்களில் கனமழை தொடர்வதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கேரளாவின் இடுக்கி, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று சிவப்பு எச்சரிக்கையும், மீதமுள்ள மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது. இதனால் பல மாவட்டங்களின் ஆட்சியர்கள் தங்கள் அதிகார வரம்பிற்குட்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர். இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்களின்படி, “கேரளா … Read more

''முக்கிய பிரச்சினை முடிவுக்கு வந்தது'': காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்தை பாராட்டிய சல்மான் குர்ஷித்!

புதுடெல்லி: “ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பு பிரிவு 370, அப்பிரதேசம் இந்தியாவின் பிற பகுதியில் இருந்து தனியானது என்ற கருத்தை நீண்ட காலமாக உருவாக்கி வந்தது. அப்பிரிவினை அரசு ரத்து செய்ததன் மூலம் அந்தக் கருத்து இறுதியாக முடிவுக்கு வந்துள்ளது” என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்குவதற்கான அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் தூதுக்குழுவில் இடம்பெற்றுள்ள சல்மான் குர்ஷித், இந்தோனேசியாவில் உள்ள சிந்தனையாளர்கள் … Read more

தேஜஸ் போர் விமானம் உட்பட தளவாட கொள்முதலில் நீண்ட தாமதம்: விமானப்படை தளபதி ஏ.பி.சிங் வேதனை

புதுடெல்லி: ‘‘தேஜஸ் போர் விமானம் உட்பட ராணுவ தளவாட கொள்முதலில், ஒரு ஒப்பந்தமும் குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவேற்றப்படுவதில்லை’’ என சிஐஐ ஆண்டு கூட்டத்தில் பேசிய விமானப்படை தளபதி ஏ.பி.சிங் வேதனை தெரிவித்தார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்திய விமானப்படை முக்கிய பங்காற்றியது. தீவிரவாத முகாம்களையும், பாக். விமானப்படை தளங்கள் மீதும் இந்திய போர் விமானங்கள் குண்டு வீசின. இந்தியா மீதான தாக்குதலையும், வான் பாதுகாப்பு படைப் பிரிவுகள் வெற்றிகரமாக முறியடித்தன. இந்நிலையில் இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) … Read more

‘பிஆர்எஸ் கட்சியை பாஜக உடன் இணைக்க முயற்சி’ – கவிதா தகவலும், தெலங்கானா அரசியல் பரபரப்பும்

ஹைதராபாத்: பிஆர்எஸ் கட்சியை பாஜக உடன் இணைக்க தொடர் முயற்சி முன்னெடுக்கப்பட்டதாக தெலங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகளும், பிஆர்எஸ் கட்சியின் மேலவை உறுப்பினருமான கவிதா குற்றச்சாட்டை வைத்துள்ளார். இது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உளள்து. “நான் என் அப்பாவுக்கு நூற்றுக்கணக்கான கடிதங்களை எழுதுகிறேன். அதில் உங்களுக்கு என்ன பிரச்சினை? நான் எழுதிய கடிதம் எப்படி பொது வெளியில் கசிந்தது. அந்த செயலை செய்தது யார்? அதை ஏன் இதுவரை கண்டறியவில்லை? ஆனால், … Read more

பிரதமர் மோடியை பாராட்டிய சசி தரூருக்கு காங். எதிர்ப்பு

புதுடெல்லி: ப​னாமா நாட்​டில் மோடி அரசின் முடிவு​களை காங்​கிரஸ் எம்​.பி. சசி தரூர் பாராட்​டி​யிருப்​ப​தற்கு அவரது கட்​சி​யில் மீண்​டும் எதிர்ப்பு கிளம்​பியுள்​ளது. காங்​கிரஸ் மூத்த தலை​வரும் எம்​.பி.​யு​மான சசி தரூர் சமீப கால​மாக பிரதமர் மோடியை​யும் மத்​திய அரசை​யும் பாராட்டி பேசி வரு​கிறார். இதற்கு காங்​கிரஸ் கட்​சி​யில் கடும் எதிர்ப்பு கிளம்​பி​யுள்​ளது. என்​றாலும் சசி தரூர் அதனை கண்​டு​கொள்​வ​தில்​லை. ஆபரேஷன் சிந்​தூர் குறித்து வெளி​நாடு​களிடம் விவரிக்​கும் எம்​.பி.க்​கள் குழு​வில் காங்​கிரஸ் எதிர்ப்​பை​யும் மீறி சசி தரூர் இடம்​பெற்​றுள்​ளார். … Read more

12ம் வகுப்பில் 65% மார்க் எடுத்தால்… மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி – கலக்கல் திட்டம்!

Free Scooty Scheme: 12ஆம் வகுப்பில் மாநில பாடத்திட்டத்தில் படித்து 65% மதிப்பெண் எடுத்து உயர்க்கல்வி பயின்றால் மாணவிகளுக்கு இலவசமாக ஸ்கூட்டி வழங்கப்படுகிறது.

மேற்கு வங்கம் முழுவதும் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஊழல் அதிகரித்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி நேற்று குற்றம்சாட்டினார். மேற்​கு​வங்​கத்​தின் அலிப்​பூர்​து​வாரில் நேற்று நடை​பெற்ற அரசு நலத்​திட்ட விழா​வில் பிரதமர் மோடி பங்​கேற்​றார். அப்​போது அலிப்​பூர்​து​வார் மற்​றும் கூச்​பெஹார் மாவட்​டங்​களில் ரூ.1,010 கோடி மதிப்​பிலான எரி​வாயு விநி​யோக திட்​டத்​துக்கு அவர் அடிக்​கல் நாட்​டி​னார். விழா​வில் அவர் பேசி​ய​தாவது: அண்​மை​யில் மேற்​கு​வங்​கத்​தின் முர்​ஷி​தா​பாத், மால்​டா​வில் வன்​முறை சம்​பவங்​கள் அரங்​கேறின. அப்​பகுதி பொது​மக்​கள் மீது கொடூர தாக்​குதல்​கள் நடத்​தப்​பட்​டன. அவர்​களின் சொத்​துகள் சூறை​யாடப்​பட்​டன. அவர்​களின் … Read more

போரை தடுத்து நிறுத்தியதாக ட்ரம்ப் 8 முறை கூறிவிட்டார்; ஆனால், பிரதமர் மோடி? – காங். கேள்வி

புதுடெல்லி: “வணிகத்தைப் பயன்படுத்தி இந்தியா – பாகிஸ்தான் போரை தான் தடுத்து நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த 11 நாட்களில் 8 முறை கூறிவிட்டார். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி முற்றிலும் மவுனமாக இருக்கிறார்” என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ், “கடந்த 11 நாட்களில் அமெரிக்கா, சவுதி அரேபியா மற்றும் கத்தார் ஆகிய 3 நாடுகளில் போர் நிறுத்தம் … Read more

மகாராஷ்டிர கனமழை பாதிப்புகள்: இதுவரை 16 பேர் உயிரிழப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் கடந்த ஐந்து நாட்களாக கனமழை தொடர்பான சம்பவங்களால் 16 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இவர்கள் நிலச்சரிவு, இடி, மின்னல் தாக்குதல், மரம் அல்லது கட்டிடம் இடிந்து விழுதல் போன்ற சம்பவங்களால் உயிரிழந்தனர். இந்த ஆண்டு வழக்கத்தை விட 8 நாட்களுக்கு முன்பாகவே தென்மேற்கு பருவமழை தொடங்கியது. அதன்படி பருவமழை தொடங்கிய மே 24-ல் இருந்தே மகாராஷ்டிராவில் கனமழை பெய்து வருகிறது. மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மழை தொடங்கிய … Read more