மகாராஷ்டிராவில் அனைத்து தொகுதியிலும் போட்டியிட தயாராகும் காங்கிரஸ்

நாக்பூர்: மக்களவை தேர்தலில் மகராஷ்டிராவில் உள்ள 48 தொகுதிகளில் 30 தொகுதிகளை மகா விகாஸ் அகாடி கூட்டணி வென்றது. இந்நிலையில், மகாராஷ்டிராவில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பாஜக (என்டிஏ) கூட்டணியும் சிவசேனா (உத்தவ் அணி), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்), காங்கிரஸ் உள்ளிட்ட மகா விகாஸ் அகாடி கூட்டணியும் போட்டியிடவுள்ளன. இதுகுறித்து மாநில காங்கிரஸ் தலைவர் நானா படேல் கூறும்போது, “ஒரு கட்சிக்கு நிர்வாக அமைப்பு இருக்க … Read more

கனமழை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்

ஸ்ரீநகர்: அமர்நாத் குகை கோயிலுக்கு இட்டுச்செல்லும் பஹல்காம் பாதை மற்றும் பால்டால் பாதை ஆகிய இரு வழிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் நேற்று அதிகாலை, ஜம்முவில் இருந்து 5,876 பக்தர்கள் அமர்நாத் யாத்திரைக்கு புறப்பட்டனர். கனமழை பெய்துவரும் நிலையில், 245 வாகனங்களில் 1, 118 பெண்கள், 18 குழந்தைகள் உட்பட மொத்தம் 5, 876 பேர் கிளம்பிச் சென்றனர். இவர்களில் 3,759 பக்தர்கள் … Read more

ஆந்திரா – தெலங்கானா பிரச்சினை குறித்து இரு மாநில முதல்வர்கள் ஆலோசனை

ஹைதராபாத்: ஆந்திரா மற்றும் தெலங்கானா இடையே நிலவும் பிரச்சினைகளைக்கு சுமுக தீர்வு காண இரு மாநில முதல்வர்களான சந்திரபாபு நாயுடுவும், ரேவந்த் ரெட்டியும் ஹைதராபாத்தில் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்திலும் உரிமை வேண்டுமென தெலங்கானா மாநிலஅரசு சந்திரபாபு நாயுடுவிடம் கோரிக்கை வைத்துள்ளது. ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் இருந்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தெலங்கானா மாநிலம் உருவானது. மாநில பிரிவினைக்கு பின்னர் பல பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படாமலேயே உள்ளன. தற்போது ஆந்திர … Read more

நாடாளுமன்ற கூட்டத் தொடர் 22-ம் தேதி தொடக்கம்: மத்திய பட்ஜெட் ஜூலை 23-ல் தாக்கல்

புதுடெல்லி: ஜூலை 22-ம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்க உள்ளது என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து 23-ம் தேதி 2024-25-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். 18-வது மக்களவை கூட்டத்தொடர் கடந்த ஜூன் 24-ம் தேதி தொடங்கியது. 24, 25-ம் தேதிகளில் மக்களவை எம்.பி.க்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். அதன் பின்னர் 26-ம் தேதி மக்களவைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. … Read more

ஹாத்ரஸ் சம்பவத்தில் தேடப்பட்ட முக்கிய நபர் மதுக்கர் கைது: நீதிமன்றத்தில் விரைவில் ஆஜர் 

புதுடெல்லி: ஹாத்ரஸ் சம்பவத்தின் தேடப்பட்டுவந்த முக்கியக் நபர் தேவ்பிரகாஷ் மதுக்கர் நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவில் கைதானார். டெல்லியில் சிகிச்சை பெற்று வந்தவரை இன்று உபி போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகின்றனர். உத்தரப்பிரதேசம் ஹாத்ரஸ் மாவட்டத்தின் சிக்கந்தராராவில் போலே பாபாவின் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. 80,000 பேருக்காக அனுமதிபெற்றதில் சுமார் 1.25 லட்சம் பேர் வந்திருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் தலித் மற்றும் பிறடுத்தப்பட்ட சமூகத்தினர். இதன் முடிவில் ஏற்பட்ட நெரிசலில் 112 பெண்கள் உட்பட 121 பேர் பலியாகினர். இந்தச் … Read more

சென்னை உட்பட 4 இடங்களில் உச்ச நீதிமன்றக் கிளைகள் அமைக்க திமுக எம்.பி. வில்சன் கோரிக்கை

புதுடெல்லி: சென்னை உட்பட 4 இடங்களில் உச்ச நீதிமன்றக் கிளைகளை அமைக்க மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வாலிடம், திமுக எம்பி பி.வில்சன் நேரில் வலியுறுத்தியுள்ளார். உச்ச நீதிமன்றத்தின் நிரந்தர பிராந்திய அமர்வுகளை நிறுவுதல்: இது தொடர்பாக அர்ஜூன் ராம் மேக்வாலை சந்தித்த பி. வில்சன், உச்ச நீதிமன்றக் கிளைகளை அமைப்பது தொடர்பாக கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த கோரிக்கை மனுவில் அவர் கூறியிருப்பதாவது: டெல்லியில் உள்ள அரசியல் சாசன அமர்வினைத் தவிர்த்து, தெற்கு, … Read more

“அயோத்தியில் தோற்கடித்ததைப் போல குஜராத்திலும் பாஜகவை காங்கிரஸ் தோற்கடிக்கும்” – ராகுல் காந்தி

அகமதாபாத்: மக்களவைத் தேர்தலின்போது அயோத்தியில் தோற்கடித்ததைப் போல, சட்டப்பேரவைத் தேர்தலின்போது குஜராத்தில் பாஜகவை காங்கிரஸ் தோற்கடிக்கும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அகமதாபாத்தில் நடைபெற்ற கட்சித் தொண்டர்கள் மாநாட்டில் உரையாற்றிய காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, “அவர்கள் (பாஜகவினர்) எங்களை அச்சுறுத்தி எங்கள் அலுவலகத்தை சேதப்படுத்தியதன் மூலம் எங்களுக்கு சவால் விடுத்துள்ளனர். எங்கள் அலுவலகத்தை சேதப்படுத்தியது போல் நாங்கள் ஒன்றாக சேர்ந்து அவர்களின் அரசாங்கத்தை காலி செய்வோம். … Read more

“போலே பாபா தவறை ஒப்புக்கொள்ள வேண்டும்” – ராமர் கோயில் தலைமை அர்ச்சகர்

அயோத்தி: உத்தரபிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் போலே பாபா சாமியார் நடத்திய பிரசங்க கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர். இந்தச் சூழலில் இந்த சம்பவம் குறித்து தனது கருத்தை அயோத்தி ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சாரிய சத்யேந்திர தாஸ் தெரிவித்தது. “ஹாத்ரஸில் சத்சங்கம் நடத்தியவர் ‘போலே பாபா’ அல்லது சூரஜ் பால் என அறியப்படும் பிரபலமாக உள்ளார். கடந்த ஜூலை 2-ம் தேதி அன்று அங்கு நடந்த துயர சம்பவத்தை … Read more

இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி: புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் பிரதமர் மோடி இன்று உரையாடினார். இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்றுள்ளதற்கும், தேர்தலில் தொழிலாளர் கட்சி பெற்ற குறிப்பிடத்தக்க வெற்றிக்கும் பிரதமர் மோடி, அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க உறவுகளை நினைவு கூர்ந்த இரு … Read more

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்: முக்கிய எதிர்பார்ப்பு என்ன?

புதுடெல்லி: நடப்பு 2024 – 25 நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் ஜூலை 23-ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்காக ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற இருக்கிறது. மோடி 3.0 அரசின் முதல் பட்ஜெட் இதுவாகும். இது குறித்து நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மத்திய அரசின் பரிந்துரையின் பெயரில், 2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் … Read more