உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு தாமதம்: உச்ச நீதிமன்றத்தை நாடிய ஹேமந்த் சோரன்

புதுடெல்லி: பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை உயர் நீதிமன்றம் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார். ஹேமந்த் சோரன் சார்பாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் திபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு ஆஜரானார். அப்போது கபில் சிபல், “கைது நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று … Read more

வெப்ப அலை எச்சரிக்கை: பள்ளிகளுக்கு ஏப்ரல் 24 முதல் 27 வரை மூன்று நாள் விடுமுறை அறிவிப்பு

Heatwave Alert, Holiday in Schools: வெப்ப அலை எச்சரிக்கையை அடுத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் ஏப்ரல் 24 முதல் 27 வரை மூடப்படும் என பள்ளிகள் கல்வி துறை அறிவித்துள்ளது.

சாம் பிட்ரோடாவின் கருத்துக்குப் பிறகு காங்கிரஸ் முற்றிலும் அம்பலப்பட்டுவிட்டது: அமித் ஷா

கொச்சி(கேரளா): சாம் பிட்ரோடாவின் கருத்துக்குப் பிறகு காங்கிரஸ் முற்றிலும் அம்பலப்பட்டுவிட்டது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அமித் ஷா, “சாம் பிட்ரோடாவின் கருத்துக்குப் பிறகு காங்கிரஸ் முற்றிலும் அம்பலப்பட்டுவிட்டது. முதலில் அவர்கள் கணக்கெடுப்பு நடத்துவோம் என தங்கள் தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தார்கள். நாட்டின் வளங்களைப் பகிர்ந்தளிப்பதில் சிறுபான்மையினருக்கே முன்னுரிமை என பிரதமராக இருந்த மன்மோகன் சிங் கூறி இருக்கிறார். தற்போது, அமெரிக்காவில் தனியார் சொத்தில் 55% … Read more

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்: மண்டை ஓடு, தற்கொலை மிரட்டல்.. போலீசார் குவிப்பு

Tamil Nadu Farmers Protest in Delhi: தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லியில் தமிழக விவசாயிகள் மண்டை ஓடுகளுடன் போராட்டம். மரம், செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் என பரபரப்பு.

‘சொத்துகள் மறுபங்கீடு’ – சாம் பித்ரோடா கருத்தும், பாஜக கடும் எதிர்வினையும்

புதுடெல்லி: இந்திய தேர்தல் களத்தில் காரசார விவாதப் பொருளாகியுள்ளது காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள ‘சொத்துகள் மறுபங்கீடு’ தொடர்பான வாக்குறுதியும் அதன் மீதான பிரதமர் மோடியின் விமர்சனமும். கடந்த வாரம் ராஜஸ்தானில் பேசிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் கட்சி இந்துக்களின் சொத்துகளை ஊடுருவல்காரர்களுக்கு பிரித்துக் கொடுத்துவிடும்” என்று விமர்சித்திருந்தார். அதற்கு காங்கிரஸ், இண்டியா கூட்டணிக் கட்சிகள் பரவலாக எதிர்வினையாற்றி வருகின்றன. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் அயலக பொறுப்பாளரான சாம் பித்ரோடா ‘சொத்துகள் மறுபங்கீடு’ குறித்த காங்கிரஸ் தேர்தல் … Read more

‘நிபந்தனையற்ற பொது மன்னிப்பு’ – பெரிய சைஸில் விளம்பரம் வெளியிட்ட பதஞ்சலி நிறுவனம்

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்தை அடுத்து செய்தித்தாள்களில் பெரிய சைஸில் மன்னிப்பு விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொது மன்னிப்பு கேட்டுள்ளது பதஞ்சலி நிறுவனம். மன்னிப்பு விளம்பரத்தில், “மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருவதை அடுத்து, மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள், ஆணைகளுக்கு இணங்காததற்கு அல்லது கீழ்ப்படியாததற்கு தனிப்பட்ட முறையிலும் நிறுவனத்தின் சார்பாகவும் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், “நிபந்தனையற்ற பொது மன்னிப்பு” என்பது முன்பை விட பெரிய எழுத்துக்களில் அச்சிடப்பட்டுள்ளது. மேலும் அந்த … Read more

காங். ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பதுகூட குற்றமாக உள்ளது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

ஜெய்ப்பூர்: காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் அனுமன் பாடல்கள் கேட்பது கூட குற்றமாக இருந்து என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார். மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு வரும் வெள்ளிக்கிழமை (ஏப். 26) நடைபெற உள்ளது. இதையொட்டி ராஜஸ்தான் மாநிலம் டோங்க்-சவாய் மதோபூர் தொகுதியில் பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவில் சிலநாட்களுக்கு முன் கடைக்காரர் ஒருவர் அனுமன் பாடல்களை கேட்டுக் கொண்டிருந்ததற்காக கொடூரமாக … Read more

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைதான கேஜ்ரிவால், கவிதாவின் காவல் மே 7 வரை நீட்டிப்பு

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் கவிதாவின் நீதிமன்ற காவல் மே 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. திஹார் சிறையில் உள்ள டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்ததையடுத்து இன்சுலின் ஊசி செலுத்தப்பட்டது. டெல்லி அரசின் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு உள்ளார். டைப்-2 நீரிழிவு நோயாளியான … Read more

லாலுவை பல குழந்தைகள் பெற்றவர் என விமர்சித்த பிஹார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு தேஜஸ்வி பதிலடி

புதுடெல்லி: பிஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவருமான லாலுவுக்கு ஏழு மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இவரது மனைவி ராப்ரி தேவியும் பிஹார் முதல்வராக இருந்துள்ளார். இந்தமுறை மக்களவைத் தேர்தலில் லாலுவின் மூத்த மகளான மிசா பாரதியும், இரண்டாவது மகளான ரோஹினி ஆச்சார்யாவும் போட்டியிடுகின்றனர். இச்சூழலில் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) தலைவரும் பிஹார் முதல்வருமான நிதிஷ்குமார், கத்தியார் தொகுதியில் நேற்று பிரச்சாரம் செய்தபோது லாலுவின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் குடும்பம் … Read more

“மிகவும் வருந்துகிறேன்… நாங்கள் துணை நிற்போம்…” – மாணவி நேஹா தந்தைக்கு சித்தராமையா ஆறுதல் 

பெங்களூரு: பல்கலைக்கழகத்தில் கொலை செய்யப்பட்ட மாணவி நேஹா ஹிரேமத்வின் தந்தையிடம் தொலைப்பேசியில் பேசிய கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, “நான் மிகவும் வருந்துகிறேன். உங்களுடன் நாங்கள் துணை நிற்போம்” ஆறுதல் தெரிவித்தார். நேஹா ஹிரேமத் கர்நாடகாவின் கே.எல்.இ. தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் எம்சிஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவருடன் படித்த ஃப‌யாஸ் வெள்ளிக்கிழமை பல்கலைக்கழக வளாகத்தில் நேஹாவை கத்தியால் குத்தி கொலை செய்தார். இந்தச் சம்பவத்தின் சிசிடிவி வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் … Read more