முதல்வர், துணை முதல்வர் போட்டியால் கர்நாடக அரசுக்கு அவப்பெயர்: கார்கேவிடம் முறையிட்ட டி.கே.சிவகுமார்

பெங்களூரு: கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் டி.கே.சிவகுமார் துணை முதல்வராக பதவி வகிக்கிறார். இந்நிலையில் உள்துறை அமைச்சர் பரமேஷ்வரா, பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி, கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜண்ணா ஆகியோர் தங்களுக்கும் துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என போர்க்கொடி தூக்கினர். இதேபோல ஒக்கலிகா பிரிவை சேர்ந்த எம்எல்ஏக்கள் சிலர் டி.கே.சிவகுமாருக்கு முதல்வர் பதவியை வழங்க வேண்டும் என ஊடகங்களில் வெளிப்படையாக பேசினர். இதற்கு சித்தராமையாவின ஆதரவாளர்களான அமைச்சர்கள் லட்சுமி ஹெப்பல்கர், பைரதி … Read more

மதுபான கொள்கை ஊழல்: கேஜ்ரிவாலுக்கு ஜூலை 12 வரை காவல்; கவிதா, சிசோடியாவுக்கு 25 வரை நீதிமன்ற காவல்

புதுடெல்லி: டெல்லியில் புதிய மதுபான கொள்கையில் நடைபெற்ற ஊழல் வழக்கில், முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை வரும் 12-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. கவிதா மற்றும் மணீஷ் சிசோடியாவுக்கு வரும் 25-ம் தேதி நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது. முதல்வராக அர்விந்த் கேஜ்ரிவால் இருக்கிறார். மதுபான கொள்முதல், விநியோகம், பார்கள் போன்ற விஷயத்தில் புதிய கொள்கையை டெல்லி அரசுஅமல்படுத்தியது. இதில் பல கோடிரூபாய் ஊழல் நடந்தது … Read more

பெண்களின் ஆரோக்கியம் குறித்து மாநிலங்களவையில் சுதா மூர்த்தி முதல் உரை: பிரதமர் மோடி பாராட்டு

புதுடெல்லி: மாநிலங்களவை எம்.பி.யாகநியமிக்கப்பட்டுள்ள இன்போசிஸ்நிறுவனர் நாராயண மூர்த்தியின்மனைவி சுதா மூர்த்தி, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்றுமுன்தினம் 13 நிமிடம் தனது முதல் உரையை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது: தாய் ஒருவர் இறந்துவிட்டால் அது மருத்துவமனையைப் பொருத்தவரை மரணக் கணக்கு. ஆனால்,அவரது குடும்பத்தைப் பொருத்தவரை அது ஈடுசெய்ய முடியாதஇழப்பு. இதனை கருத்தில் கொண்டு, 9 வயது முதல் 14 வயதுவரையிலான பெண் குழந்தைகளுக்கு கர்ப்பப்பை வாய் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். … Read more

பதவியேற்க ஆளுநர் அழைப்பு: மீண்டும் ஜார்க்கண்ட் முதல்வராகிறார் ஹேமந்த் சோரன்

ராஞ்சி: ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனின் அழைப்பை அடுத்து, ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார். இது தொடர்பாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் பொதுச் செயலாளர் சுப்ரியோ பட்டாச்சார்யா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், பதவியேற்க ஹேமந்த் சோரனுக்கு ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார். அவரோடு, அமைச்சர்களும் பதவியேற்க இருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் முதல்வராக பதவி வகித்த ஹேமந்த் சோரன், பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது … Read more

‘பாஜக தோற்றால் ராஜினாமா…’ – தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய ராஜஸ்தான் அமைச்சர்!

ஜெய்ப்பூர்: நாடாளுமன்றத் தேர்தலின்போது, ராஜஸ்தானின் தவுசா மக்களவைத் தொகுதியில் பாஜக தோற்றால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன் என கூறியதற்கு இணங்க, அம்மாநில மூத்த அமைச்சர் கிரோடி லால் மீனா பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராஜஸ்தானில் பஜன்லால் ஷர்மா தலைமையிலான அமைச்சரவையில் முதல்வர் மற்றும் இரண்டு துணை முதல்வர்களுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் கிரோடி லால் ஷர்மா. பாஜகவின் மூத்த தலைவரான இவர், 2 முறை மக்களவை உறுப்பினராகவும், 2 முறை மாநிலங்களவை உறுப்பினராகவும், 5 முறை … Read more

ஹாத்ரஸ் சம்பவத்தில் 6 பேர் கைது; போலே பாபா பின்னணியையும் விசாரிப்பதாக உ.பி போலீஸ் தகவல்

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் ஹாத்ரஸ் மாவட்டத்தில் நடந்த ஆன்மிக நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது. மேலும், போலே பாபாவின் குற்றப் பின்னணி குறித்தும் விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அலிகர் ரேஞ்ச் ஐஜி ஷலப் மாத்தூர், “ஹாத்ரஸ் சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 4 பேர் ஆண்கள். 2 பேர் … Read more

போலே பாபாவின் குவாலியர் ஆசிரமத்துக்கு சீல்: ஹாத்ரஸ் சம்பவத்தால் ம.பி அரசு நடவடிக்கை

புதுடெல்லி: ஹாத்ரஸ் சம்பவத்துக்குப் பின் போலே பாபாவின் குவாலியர் ஆசிரமத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை மத்தியப் பிரதேசத்தின் பாஜக அரசு எடுத்துள்ளது. ஹாத்ரஸில் 121 உயிர்கள் பலியாகக் காரணமாக இருந்தது நாரயண் சாக்கா விஷ்வ ஹரி போலே பாபா நடத்திய கூட்டம். இந்த விவகாரத்தில் உத்தரப் பிரதேச அரசு வழக்கு பதிவு செய்து விசாரணை துவக்கி உள்ளது. இதையடுத்து, அண்டை மாநிலங்களில் உள்ள போலே பாபாவின் ஆசிரமங்கள் மீதும் அதன் அரசுகள் கவனம் செலுத்தத் துவங்கி … Read more

ரஷ்யா, ஆஸ்திரியா நாடுகளுக்கு ஜூலை 8 முதல் 10 வரை பிரதமர் மோடி பயணம்

புதுடெல்லி: ரஷ்யா, ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்குப் பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 8 முதல் 10 வரை அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரஷ்யா, ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்குப் பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 8 முதல் 10 வரை அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார். 22-வது இந்தியா-ரஷ்யா வருடாந்தர உச்சிமாநாட்டில் பங்கேற்குமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விடுத்த அழைப்பின் பேரில் பிரதமர், ஜூலை 8, 9 … Read more

3-வது முறை: ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்பு

ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்றார். மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்ற அவருக்கு, பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன். ஜார்க்கண்ட் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஹேமந்த் சோரன் முதல்வராக வியாழக்கிழமை பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார். முன்னதாக, ஜார்க்கண்ட் முதல்வராக பதவி வகித்த ஹேமந்த் சோரன், பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்படுவதற்கு … Read more

மேட்டுப்பாளையம் – கோவை இடையே இரட்டை இருப்புப் பாதை: ரயில்வே அமைச்சரிடம் எல் முருகன் கோரிக்கை

புதுடெல்லி: மேட்டுப்பாளையம் – கோவை ரயில் நிலையம் வரை இரட்டை இருப்புப் பாதை அமைக்க ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம், மத்திய இணை அமைச்சர் எல் முருகன் கோரிக்கை விடுத்துள்ளார். மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை ரயில் நிலையம் வரையிலான வழித்தடத்தில் இரட்டை இருப்புப் பாதை அமைக்க வேண்டும் என்ற பொது மக்களின் கோரிக்கையை வலியுறுத்தும் மனு ஒன்றை மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் எல் முருகன், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் வழங்கியுள்ளார். இது … Read more