குவைத் தீ விபத்து | உயிரிழந்த இந்தியர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரணம் அறிவிப்பு

புதுடெல்லி: குவைத் நாட்டில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நிவாரண நிதி அறிவித்துள்ளார். குவைத்தின் தெற்கு மங்காஃப் மாவட்டத்தில் உள்ள கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 41 பேர் பலியாகினர். உயிரிழந்தவர்களின் பலர் இந்தியர்கள் என்று அஞ்சப்படுகிறது. 43 பேர் காயமடைந்துள்ள நிலையில், இவர்களில் 30 பேர் இந்தியர்கள் என தெரியவந்துள்ளது. இந்த நிலையில் தீவிபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நிவாரண நிதி அறிவித்துள்ளார். … Read more

உத்தர பிரதேசத்தில் குற்ற வழக்குகளில் சிக்கி உள்ளதால் இண்டியா கூட்டணியின் 6 எம்.பி. பதவிக்கு ஆபத்து

லக்னோ: மக்களவை தேர்தலில், உத்தர பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 மக்களவை தொகுதிகளில் இண்டியா கூட்டணியின்கீழ் போட்டியிட்ட சமாஜ்வாதி 37 இடங்களையும் காங்கிரஸ் 6 இடங்களையும் வென்றன. பாஜகவினால் 33 இடங்களை மட்டுமே கைபற்ற முடிந்தது. இதனால் மத்தியில் மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்தாலும் சக்திவாய்ந்த எதிர்க்கட்சியாக இண்டியா கூட்டணி இடம்பெற உ.பி.யில் அவர்கள் வென்ற 43 இடங்கள் முக்கிய காரணமாக அமைந்துள்ளன. இந்நிலையில், இண்டியா கூட்டணியின் கீழ் போட்டியிட்டு வெற்றி பெற்ற … Read more

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்; மருத்துவ கலந்தாய்வுக்கு தடை இல்லை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: வினாத்தாள் கசிவு, மதிப்பெண் முரண்பாடு போன்றவற்றால் நீட்தேர்வின் புனிதத் தன்மை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது என்று கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக பதில்அளிக்குமாறு மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. எனினும், மருத்துவ கலந்தாய்வை நடத்த தடை இல்லை என்று அறிவித்துள்ளது. நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சில மாநிலங்களில் நீட் தேர்வு நடப்பதற்குமுன்னதாகவே வினாத்தாள் வெளியானதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதேபோல, … Read more

ஜம்முவில் இரு வேறு இடங்களில் தீவிரவாத தாக்குதல் – என்கவுன்டரில் ஒருவர் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இருவேறு இடங்களில் மீண்டும் தீவிரவாத தாக்குதல் நடந்துள்ளன. இதில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டான். அதேநேரம், 6 வீரர்கள் காயமடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நேற்று மட்டுமே இரண்டு தீவிரவாத சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடாவில் நேற்று இரவு ராணுவ தளம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது. தற்போது வரை இந்த சண்டை … Read more

ஒடிசா முதல்வராக மோகன் மாஜி பதவியேற்பு: பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்பு

புவனேஸ்வர்: ஒடிசாவில் முதன்முறையாக பாஜக ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், அம்மாநிலத்தின் முதல்வராக மோகன் மாஜி பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஒடிசா முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள மோகன் மாஜி பதவியேற்பு விழா புவனேஸ்வரில் உள்ள ஜனதா மைதானத்தில் நடைபெற்றது. இதில் மோகன் சரண் மாஜி முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அவரோடு கே.வி. சிங் தியோ, பிரவாதி பரிதா ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றுக் கொண்டனர். மாநில … Read more

‘சதி, நம்பிக்கை துரோகமே காரணம்’: உ.பி-யில் தோல்வி குறித்து பாஜக தலைமைக்கு அறிக்கை

புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தில் பாஜக வேட்பாளர்கள் தோல்வி குறித்து அதன் தேசிய தலைமைக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதில், தொகுதிகளில் கட்சியினரும், தலைவர்களும் செய்த சதியும், நம்பிக்கை துரோகமும் தோல்விக்கானக் காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது முடிந்த மக்களவை தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் 80 தொகுதிகளில் அதிக வெற்றியை பாஜக எதிர்பார்த்தது. ஆனால், எதிர்பார்க்காத வகையில் 33 தொகுதிகளில் மட்டுமே பாஜக வென்றது. இதன் கூட்டணிகளில் ராஷ்டிரிய லோக் தளம் 2 மற்றும் அப்னா தளம் 1 தொகுதிகளும் கிடைத்தன. அதேநேரம், எதிர்க்கட்சியான … Read more

ஜூன் 24 – ஜூலை 3 வரை நாடாளுமன்ற கூட்டத்தொடர்: கிரண் ரிஜ்ஜு அறிவிப்பு

புதுடெல்லி: வரும் 24-ம் தேதி 18-வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவிப்பிரமாணம் செய்துகொள்வார்கள் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு அறிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. கடந்த 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி(என்டிஏ) அறுதிப் பெரும்பான்மையை பெற்றது. கடந்த … Read more

மக்களவை தேர்தல் முடிவுகள்: இந்திய ஜனநாயகம் அளித்த வலுவான எதிர்க்கட்சி

நரேந்திர மோடியின் அரசு ‘மோடி 3.0′ அரசாக அனைவராலும் குறிப்பிடப்படுகிறது. மாறாக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசை, ‘என்டிஏ 2.0’ அரசு என்று அழைப்பதே பொருத்தமானது. என்டிஏவின் முதல் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்தான். அரசியல் செயல்பாட்டாளர் யோகேந்திர யாதவ் உள்ளிட்ட மூத்த அரசியல் விமர்சகர்கள் இது பிரதமர் மோடிக்கு தார்மீக மற்றும் அரசியல் தோல்வி என்று கூறி வருகின்றனர். ஆனால், தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்றது அரிதான … Read more

ஆந்திர முதல்வராக 4-வது முறையாக பதவியேற்றார் சந்திரபாபு நாயுடு: அமைச்சரானார் பவன் கல்யாண்

விஜயவாடா: ஆந்திர மாநிலத்தின் முதல்வராக 4-வது முறையாக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு விஜயவாடா அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரம்மாண்டமான விழாவில் பதவியேற்றுக்கொண்டார். இதில் பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, ஜெ.பி.நட்டா, நிதின் கட்கரி, ரஜினிகாந்த், சிரஞ்சீவி, ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் அமைச்சரானார். மேலும் 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தலில் … Read more

சந்திரபாபு நாயுடு அரசில் 24 அமைச்சர்கள் – துணை முதல்வராகிறார் பவன் கல்யாண்

விஜயவாடா: சந்திரபாபு நாயுடு தலைமையில் பதவியேற்க உள்ள அமைச்சரவை பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண், சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷ் உள்ளிட்ட 24 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. பவன் கல்யாண் துணை முதல்வராக பதவியேற்பது உறுதியாகியுள்ளது. ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற தெலுங்கு தேசம் தலைமையிலான கூட்டணி கட்சிகளின் கூட்டம் விஜயவாடாவில் நேற்று நடைபெற்றது. இதில் தெலுங்கு தேசம், பாஜக மற்றும் ஜனசேனா கட்சிகளைச் சேர்ந்த 162 எம்எல்ஏ.க்கள் … Read more