2024-ல் உத்தரவாதத்தை கொண்டு வருகிறேன்: பிரதமர் மோடி பேச்சு @ அசாம்

குவாஹாட்டி: மக்களவைத் தேர்தலையொட்டி பிரதமர் மோடி நேற்று காலை அசாம் மாநிலம் நல்பாரியில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பேசியதாவது: இன்று வரலாற்று சிறப்புமிக்க ராம நவமி விழா கொண்டாடப்படுகிறது. 500 ஆண்டுகால காத்திருப்புக்கு பின்னர் பாலராமர் இறுதியாக தனது பிரம்மாண்ட கோயிலில் அமர்ந்துள்ளார். உலகின் புனிதநகரமான அயோத்தியில் உள்ள பால ராமர் கோயிலில் ராமருக்கு சூரிய திலகம் இட்டு கொண்டாடப்பட்டது. நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் அணுகி அவர்களுக்கு தகுதியான வசதிகளை வழங்க தேசிய … Read more

அயோத்தி பாலராமர் சிலை மீது சூரிய ஒளி விழுவது எப்படி? – தொழில்நுட்பம் குறித்து விஞ்ஞானிகள் விளக்கம்

அயோத்தி: ஆண்டுதோறும் ராமநவமி தினத்தில் அயோத்தி ராமர் கோயில் பாலராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழும் வண்ணம் கோயில் கட்டப்பட்டுள்ளது. அதிநவீன அறிவியல் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, 5.8 சென்டிமீட்டர் சூரிய ஒளிக்கற்றை பாலராமர் சிலையின் நெற்றியில் விழும் வண்ணம் கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த குறிப்பிடத்தக்க நிகழ்வை அடைய, கோயிலில் ஒரு சிறப்பு கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 10 விஞ்ஞானிகள் அடங்கிய குழு கோயிலில் பார்வையிட்டு அந்தக் கருவியை வடிவமைத்தனர். நேற்று பகல் 12.16 மணிக்கு இந்த … Read more

தேர்தலில் பாஜக 150 இடங்களுக்கு மேல் வெற்றி பெறாது: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கூட்டாக பேட்டி

காஜியாபாத்: மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட பிரச்சாரம் நேற்று ஓய்ந்தது. கடைசி நாளான நேற்று, இண்டியா கூட்டணியின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவும் உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் பிரச்சாரம் செய்தனர். பின்னர் ராகுல் கூறியதாவது: உத்தரபிரதேசத்தில் இண்டியா கூட்டணி போட்டியிட வேண்டும் என முடிவு செய்தோம். இதற்காக திறந்த மனதுடன் தொகுதி பங்கீடு செய்து கொண்டோம். இந்த விவகாரத்தில் நெகிழ்வுத் தன்மையை காட்ட விரும்பினோம். அதனால்தான் … Read more

“60 ஆண்டுகளில் காங்கிரஸால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன்” – அசாமில் மோடி பெருமிதம்

அசாம்: “காங்கிரஸ் கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்புக்காக உழைத்தேன். 60 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியால் செய்ய முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன்” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, அசாமின் நல்பாரி மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “2014-ல் நம்பிக்கையையும், 2019-ல் உறுதியான உணர்வையும் கொண்டு வந்தேன். தற்போது அசாம் மண்ணுக்கு 2024-ஆம் … Read more

பிரபல யூடியூபர் ஆங்கிரி ரான்ட்மேன் 27 வயதில் மரணம்

பெங்களூரு: சமூக வலைதளங்களில் ‘ஆங்கிரி ரான்ட்மேன்’ என்ற பெயரில் பரவலாக அறியப்படும் யூடியூபர் அப்ரதீப் சாஹா பல்வேறு உறுப்புகள் செயலிழப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 27. சில நாட்களுக்கு முன்பு அவருக்கு இதயவால்வு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பின் அவர் ஐசியுவில் இருப்பதாகவும், குணமடைந்து வருவதாகவும் அவரது தந்தை தெரிவித்திருந்தார். பின்னர் அவரது உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து பல்வேறு உறுப்புகள் செயலிழப்பால் இன்று காலமானார். அவரது ரசிகர்களும், சக யூடியூபர்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு … Read more

தேர்தல் பத்திரம் குறித்த ட்வீட்டை தேர்தல் ஆணையம் நீக்க சொன்னது ஏன்? – காங்கிரஸ் கேள்வி

புதுடெல்லி: தேர்தல் பத்திர விவகாரம் தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்ட பதிவினை நீக்கும் முடிவை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது ஏன் என புதன்கிழமை அன்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருந்த பிரச்சினைகள் அரசு தரப்பை தர்ம சங்கடத்துக்கு ஆழ்த்தியது தான் காரணமா என்றும் காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சந்திரபாபு நாயுடு மற்றும் பிஹார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி ஆகியோரது எக்ஸ் தள பதிவுகளை தேர்தல் ஆணையம் … Read more

சிஏஏ ரத்து முதல் 10 இலவச சிலிண்டர்கள் வரை: திரிணமூல் காங். தேர்தல் அறிக்கை அம்சங்கள்

புதுடெல்லி: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் வரும் 2024 மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை புதன்கிழமை வெளியிட்டது. அக்கட்சியினர் தேர்தல் அறிக்கையை வெளியிடும்போது, “பாஜக ஜமீன்தார்களை தூக்கி எறிந்துவிட்டு, அனைவருக்குமான கண்ணியமான வாழ்க்கைக்கு வழி வகுப்போம்” என்று முழங்கினர். திரிணமூல் காங்கிரஸின் முக்கிய வாக்குறுதிகள்: வேலை அட்டை வைத்திருப்பவர்களுக்கு 100 நாள் வேலைக்கு உத்தரவாதம் வழங்கப்படும். மேலும் அனைத்து தொழிலாளர்களும் ஒரு நாளைக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.400 பெறுவார்கள். அனைத்து ஏழைக் … Read more

பாஜகவின் ‘விங்’ ஆக செயல்படுகிறது தேர்தல் ஆணையம்: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

புதுடெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் விரிவாக்கப்பட்ட அங்கம் (Wing) ஆக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகக் கூறி ஆம் ஆத்மி கட்சியின் தேர்தெடுக்கப்பட்ட பதிவுகளை நீக்குமாறு எக்ஸ் தளத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி இவ்வாறு தெரிவித்துள்ளது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி கட்சி, என்.சந்திரபாபு நாயுடு மற்றும் பிஹார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி ஆகியோர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில … Read more

“தேர்தல் பத்திரம் பற்றி பேசியபோது மோடியின் கைகள் நடுங்கின” – ராகுல் காந்தி

பெங்களூரு: “உச்ச நீதிமன்றம் தேர்தல் பத்திர திட்டத்தை ரத்து செய்து, அதை சட்டவிரோதமானது என்று விவரித்தது. ஆனால் மோடி அதை நியாயப்படுத்த முயன்றார். அப்போது அவரின் கைகள் நடுங்கின” என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் விமர்சனம் செய்துள்ளார். கர்நாடகா மாநிலம் மண்டியாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் ராகுல் பேசியது: “பாஜக கட்சி பணக்காரர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு எதுவும் செய்யவில்லை. ஆனால், தொழிலதிபர்களின் ரூ.16 லட்சம் கோடி கடனைத் தள்ளுபடி … Read more

குஜராத் சாலை விபத்து: அகமதாபாத் வதோதரா விரைவு சாலையில் லாரி மீது கார் மோதியதில் 10 பேர் பலி

Gujarat Road Accident: டிரக் மீது கார் மோதிய விபத்தில், காரில் இருந்த 10 பேரும் உயிரிழந்தனர் மற்றும் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.