நாடாளுமன்றம் 140 கோடி மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் மையம்: பிரதமர் மோடி

புதுடெல்லி: நாடாளுமன்றம் வெறும் கட்டிடமல்ல என்றும், அது 140 கோடி மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் மையம் என்றும் மக்களவையில் பிரதமர் மோடி தெரிவித்தார். மக்களவைத் தலைவராக ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் மக்களவையில் பிரதமர் மோடி ஆற்றிய உரை: “ஓம் பிர்லா தொடர்ந்து இரண்டாவது முறையாக மக்களவைத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அவையின் வாழ்த்துகளை அவருக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். அமிர்த காலத்தின் போது ஓம் பிர்லா, 2-வது முறையாக பொறுப்பேற்றுள்ளது முக்கியத்துவம் வாய்ந்தது. தமது ஐந்தாண்டு கால … Read more

கேஜ்ரிவால் விடுதலைக்கு எதிராக முழு அமைப்பும் முயல்வது சர்வாதிகாரம்: சுனிதா குற்றச்சாட்டு

புதுடெல்லி: அரவிந்த் கேஜ்ரிவால் வெளியே வராமல் இருக்க மத்திய அரசின் அனைத்து அமைப்புகளும் முயல்வதாகவும், இது சர்வாதிகாரப் போக்கு எனவும் அவரது மனைவி சுனிதா கேஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஜூன் 20-ம் தேதி அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைத்தது. ஆனால், அமலாக்கத் துறை உடனடியாக அதற்கு ஒரு தடையைப் பெற்றது. அடுத்த நாளே சிபிஐ அவரை குற்றவாளியாக்கி, இன்று கைது செய்துவிட்டது. கேஜ்ரிவால் சிறையிலிருந்து வெளியே வராமல் இருக்க … Read more

‘1975 அவசரநிலை’க்கு எதிராக தீர்மானம்: சபாநாயகர் ஓம் பிர்லா நடவடிக்கையால் மக்களவையில் அமளி!

புதுடெல்லி: இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட அவசநிலை பிரகடனத்தைக் கண்டித்து மக்களவை சபாநாயகர் ஒம் பிர்லா தீர்மானம் ஒன்றை வாசித்தார். அவரது நடவடிக்கைக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்தது. மக்களவை சபாநாயகர் பதவிக்கு இன்று (ஜூன் 26) நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்றதை அடுத்து, 18வது மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா பொறுப்பேற்றார். பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஆகியோர் அவரை அவரது இருக்கைக்கு அழைத்துச் சென்று … Read more

ஹிஜாப் தடை: இரு கல்லூரிகளின் முடிவில் தலையிட மும்பை உயர் நீதிமன்றம் மறுப்பு

மும்பை: கல்லூரி வளாகத்துக்குள் ஹிஜாப், புர்கா, தொப்பி போன்றவற்றை அணிய தடை விதித்த கல்லூரி நிர்வாகத்தின் முடிவில் தலையிட பாம்பே உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. மும்பையில் உள்ள என்.ஜி. ஆச்சார்யா கல்லூரி மற்றும் டி.கே.மராத்தே கல்லூரி ஆகியவற்றில் 2-ம் ஆண்டு மற்றும் 3-ம் ஆண்டு அறிவியல் பயிலும் இஸ்லாமிய மாணவிகள் 9 பேர், தங்கள் கல்லூரி நிர்வாகத்தின் முடிவை எதிர்த்து பாம்பே உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அவர்கள் தங்கள் மனுவில், “நாங்கள் பயிலும் கல்லூரி … Read more

ஜாமீன் தடையை எதிர்த்து புதிய மனு: கேஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி

புதுடெல்லி: விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனுக்கு தடை விதித்த டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து புதிய மனு தாக்கல் செய்ய டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி கேஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை விசாரித்த விசாரணை நீதிமன்றம் கடந்த 20-ம் தேதி அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. … Read more

மீண்டும் மக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா: குரல் வாக்கெடுப்பு மூலம் தேர்வு

புதுடெல்லி: மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். குரல் வாக்கெடுப்பு மூலம் நடந்த தேர்தலில் மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து அவரை பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் அழைத்து வந்து சபாநாயகர் இருக்கையில் அமரவைத்தனர். இதன்மூலம் கடந்த 25 ஆண்டுகளில் தொடர்ந்து இரண்டாவது முறையாக மக்களவை சபாநாயகராக தேர்வானவர் என்ற பெருமையைப் பெற்றார் ஓம் பிர்லா. முன்னதாக, மக்களவை சபாநாயகர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் … Read more

சபாநாயகராக மீண்டும் தேர்வானார் ஓம் பிர்லா… மக்களவை குரல் வாக்கெடுப்பில் நடந்தது என்ன?

Lok Sabha Speaker Election: மக்களவையின் அதிகாரமிக்க பதவியான சபாநாயகருக்கு நடைபெற்ற தேர்தலில், குரல் வாக்கெடுப்பில் பெரும்பான்மையான ஆதரவு பெற்றதை அடுத்து ஓம் பிர்லா (Om Birla) மீண்டும் மக்களவை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். 

மக்களவை சபாநாயகர் தேர்தலில் போட்டியிடும் கட்டாயத்தை அரசுதான் உருவாங்கியது: கே.சுரேஷ்

புதுடெல்லி: “மக்களவை சபாநாயகர் தேர்தலில் நாங்கள் போட்டியிடும் கட்டாயத்தை அரசுதான் உருவாங்கியது” என்று காங்கிரஸ் வேட்பாளார் கே.சுரேஷ் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், இன்றைய தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியானது சுரேஷுக்கு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்துள்ளது. மக்களவை தலைவர் பதவிக்கு ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும், இண்டியா கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக பேட்டியளித்துள்ள கே.சுரேஷ் கூறியிருப்பதாவது: இண்டியா கூட்டணி இத்தேர்தலில் போட்டியிடும் … Read more

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கர்நாடகா மறுப்பு: காவிரி மேலாண்மை ஆணையம் முடிவெடுப்பதில் தாமதம்

பெங்களூரு / புதுடெல்லி: ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை திறந்தவிட கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால் காவிரி மேலாண்மை ஆணையத்தால் முடிவெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் 31-வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் டெல்லியில் நேற்று பிற்பகல் நடைபெற்றது. அதில் தமிழக அரசின் சார்பில் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் ஆர்.சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கர்நாடகா, … Read more

இண்டியா கூட்டணி போராட்டத்தால் அரசியல் சாசன புத்தக விற்பனை அதிகரிப்பு

புதுடெல்லி: இண்டியா கூட்டணி கட்சியினரின் போராட்டத்தால், கடந்த 3 மாதத்தில், 5,000 அரசியல் சாசன பாக்கெட் புத்தகங்கள் விற்பனையாகிஉள்ளன. மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் உத்தர பிரதேசம் ஃபைசாபாத்தொகுதி பாஜக வேட்பாளர் லல்லு சிங் பேசுகையில்,‘‘இந்திய அரசியல் சாசனத்தை மாற்ற 3-ல் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை” என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இவரது கருத்தைபாஜகவின் திட்டம் என எதிர்க்கட்சித் தலைவர்கள் கூறி வந்தனர். ஆனால், பாஜக தலைவர்கள் இந்த கருத்தை மறுத்து வந்தனர்.ராகுல் காந்தி தனது பிரச்சாரத்தில், … Read more