விவசாயிகளுக்கு நிதி: 3-வது முறையாக பிரதமரான மோடியின் முதல் கையெழுத்து

புதுடெல்லி: மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொண்ட நரேந்திர மோடி, இன்று (திங்கட்கிழமை) தனது அலுவலகத்தில் விவசாயிகள் நலன் சார்ந்த திட்டம் தொடர்பான கோப்பில் தனது முதல் கையொப்பத்தை இட்டுள்ளார். 9.3 கோடி விவசாயிகள் பயன் அடையும் வகையில் ரூ.20,000 கோடி விடுவிக்கும் கோப்பில் பிரதமர் மோடி கையெழுத்திட்டார். முன்னதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அன்று அவருக்கு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மொத்தம் 72 பேர் நேற்றைய தினம் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். … Read more

மோடி 3.0 அமைச்சரவையின் ‘கேரள சர்ப்ரைஸ்’ – பாஜகவின் கிறிஸ்தவ முகம் ஜார்ஜ் குரியனின் பின்புலம்

கோட்டயம்: மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் கேரள பாஜகவின் கிறிஸ்தவ முகமாக அறியப்படும் ஜார்ஜ் குரியனுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு நேற்று பதவியேற்றுக் கொண்டது. புதிய அமைச்சரவையில், பிரதமர் மோடி உட்பட 24 மாநிலங்களைச் சேர்ந்த 72 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 11 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் கேரளாவில் இருந்து 2 பேர் இணையமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். அனைவரும் எதிர்பார்த்தது போல் நடிகர் சுரேஷ் கோபி அமைச்சராக … Read more

கங்கனா ‘பயங்கரவாதம்’ என்றதும், அவரை பெண் காவலர் அறைந்ததும் தவறுதான்: பஞ்சாப் முதல்வர்

புதுடெல்லி: “விவசாயிகள் போராட்டம் குறித்து கங்கனா முன்பு தெரிவித்த கருத்துகளால் (சிஐஎஸ்எஃப்) பெண் காவலர் கோபமடைந்திருக்க கூடும். இதனால் அவர் கங்கனாவை அறைந்திருக்கலாம். இருப்பினும் இந்தச் சம்பவம் நடந்திருக்கக் கூடாது” என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “விசாயிகள் குறித்து கங்கனா முன்பு தெரிவித்த கருத்துகளால் (சிஐஎஸ்எஃப்) பெண் காவலர் கோபமடைந்திருக்க கூடும். இதனால் அவர் கங்கனாவை அறைந்திருக்கலாம். ஆனால், ஒவ்வொரு … Read more

“மணிப்பூரில் வன்முறை தடுக்கப்பட வேண்டும்” – மத்திய அரசுக்கு மோகன் பாகவத் வலியுறுத்தல்

நாக்பூர்: “மணிப்பூர் மக்கள் அமைதிக்காக காத்திருக்கிறார்கள். மணிப்பூர் பிரச்சினையை முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக தீர்க்க வேண்டும். அங்கே வன்முறை தடுத்து நிறுத்தப்பட வேண்டும்” என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். நாக்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மோகன் பாகவத், “கடந்த ஓராண்டாக மணிப்பூர் மக்கள் அமைதிக்காக காத்திருக்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக அந்த மாநிலம் அமைதியாகவே இருந்து வந்தது, ஆனால் திடீரென மீண்டும் துப்பாக்கி கலாச்சாரம் அங்கே தலைதூக்கியுள்ளது. மணிப்பூர் பிரச்சினையை … Read more

தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக வி.கே.பாண்டியன் அறிவித்ததன் பின்னணி என்ன?

ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கின் வலதுகரமாக செயல்பட்டவரும், பிஜு ஜனதா தளத்தின் முக்கியத் தலைவராக விளங்கியவருமான தமிழகத்தைச் சேர்ந்த வி.கே.பாண்டியன், தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். அவரது இந்த அறிவிப்பின் பின்னணி என்ன என்பது குறித்து தற்போது பார்ப்போம். ஐஏஎஸ் அதிகாரியாக சிறப்பாக செயல்பட்டு நற்பெயர் ஈட்டியவர் வி.கே. பாண்டியன். அதன் காரணமாகவே, அவரை நவீன் பட்நாயக் தனது அலுவலக அதிகாரியாக நியமித்தார். சுமார் 12 ஆண்டு காலம் நவீன் பட்நாயக்கின் அலுவலக அதிகாரியாக … Read more

அமித் ஷா, ராஜ்நாத், நிர்மலாவுக்கு மாற்றமில்லை; நட்டாவுக்கு சுகாதாரம்: மோடி 3.0-ல் யாருக்கு எந்தத் துறை?

புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான புதிய மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு விவரம் திங்கள்கிழமை அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ரமேஷ் ஆகியோரின் துறைகளில் மாற்றமில்லை. முழு விவரம்: பிரதமர் மோடி – மத்திய பணியாளர், அணுசக்தி துறை, விண்வெளி துறை ராஜ்நாத் சிங் – பாதுகாப்புத் துறை அமித் ஷா – உள்துறை நிதின் கட்கரி – மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை … Read more

ஏழைகளுக்கு 3 கோடி வீடுகள்: பிரதமர் மோடியின் முதல் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

புதுடெல்லி: ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் (PMAY) 3 கோடி வீடுகள் கட்ட முடிவெடுக்கப்பட்டு, அதற்கான நிதியுதவி அளிப்பதற்கு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு, முதல் அமைச்சரவைக் கூட்டம் திங்கள்கிழமை மாலை 5 மணியளவில் பிரதமரின் இல்லத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மூத்த அமைச்சர்களான ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் … Read more

பிரமதர் மோடியின் புதிய அமைச்சரவை… இலாக்காக்கள் அறிவிப்பு

PM Narendra Modi Cabinet Portfolio: பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்று வரும் சூழலில், மத்திய அமைச்சர்களின் இலாகாக்கள் குறித்த விவரங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. 

மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலக முடிவா? – சுரேஷ் கோபி மறுப்பு

திருவனந்தபுரம்: “கேரள மக்களின் பிரதிநிதியாக மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பது பெருமைக்குரிய விஷயம்” என்று மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகப்போவதாக வெளியான தகவலுக்கு நடிகர் சுரேஷ் கோபி மறுப்பு தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பதவியேற்பு நேற்று நடந்தது. இதில் கேரள மாநிலத்தை பிரிதிநிதித்துவப்படுத்தும் வகையில் கேரளாவின் முதல் பாஜக எம்.பி.யாக திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற மலையாள சூப்பர் ஸ்டார் சுரேஷ் கோபி மத்திய … Read more

“அமைச்சர் பதவியில் விருப்பமில்லை, விரைவில் நான் விடுவிக்கப்படலாம்” – நடிகர் சுரேஷ் கோபி

திருவனந்தபுரம்: “கேரள மக்களின் பிரதிநிதியாக மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பது பெருமைக்குரிய விஷயம்” என்று மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகப்போவதாக வெளியான தகவலுக்கு நடிகர் சுரேஷ் கோபி மறுப்பு தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பதவியேற்பு நேற்று நடந்தது. இதில் கேரள மாநிலத்தை பிரிதிநிதித்துவப்படுத்தும் வகையில் கேரளாவின் முதல் பாஜக எம்.பி.யாக திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற மலையாள சூப்பர் ஸ்டார் சுரேஷ் கோபி மத்திய … Read more