“உயிரிழந்தது போல நடித்தோம்” – ஜம்மு காஷ்மீர் பேருந்து தாக்குதலில் பிழைத்தவர் வேதனைப் பகிர்வு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று யாத்ரீகர்கள் பயணித்த பேருந்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 10 பேர் உயிரிழந்தனர். இந்தச் சூழலில் உயிர் பிழைத்த ஒருவர் இறந்து போனது போல நடித்ததாக தெரிவித்துள்ளார். ரியாசியில் உள்ள சிவ் கோரி கோயிலுக்கு சென்றுவிட்டு கட்ரா நோக்கி யாத்ரீகர்கள் பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது பேருந்தை நோக்கி தீவிரவாதிகள் சுட்டனர். இதனால், பேருந்து ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்தது. இதில் … Read more

ஜம்மு காஷ்மீர் தாக்குதல்: ரியாஸி விரைந்தது என்ஐஏ குழு; ராணுவம் தேடுதல் வேட்டை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த 9 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தாக்குதல் நடந்த ரியாஸி மாவட்டத்தில் இன்று (ஜூன் 10) காலை முதல் ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக தாக்குதல் நடந்த அடர்ந்த வனப்பகுதியில் ராணுவத்தினர் ட்ரோன்களை பயன்படுத்தி தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவத்துக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இதற்கிடையில் இந்தச் சம்பவம் … Read more

மோடி 3.0 | பதவி ஏற்பு விழாவில் ஆசி வழங்க வந்த மூன்றாம் பாலினத்தவர்

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடந்த பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க 50 மூன்றாம் பாலினத்தவர் வந்தனர். இதுகுறித்து பாஜக தலைவரும் முன்னாள் சமூக நீதித் துறை அமைச்சருமான வீரேந்திர குமார் கூறுகையில், “பதவி ஏற்பு விழா அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி விரும்பினார். குறிப்பாக, மூன்றாம் பாலினத்தவர்களையும் விழாவுக்கு அழைக்க வேண்டும் என்று கூறினார். இதற்காக 50 மூன்றாம் பாலினத்தவர்களுக்கு அழைப்பு வழங்கினோம். பதவி ஏற்பு விழாவில் … Read more

3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடந்த கோலாகல விழாவில் நரேந்திர மோடி மூன்றாவது முறைபிரதமராக பதவியேற்றுக் கொண்டார். அவரோடு 71 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதிமுதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல்நடைபெற்றது. கடந்த 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன. ஆட்சியமைக்க 272 எம்பிக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் பாஜக 240 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி … Read more

மத்திய அமைச்சரவையின் டாப் பணக்காரர்… யார் அந்த சந்திரசேகர் பெம்மசானி..!!

Richest Minister In PM Modi Govt 3.0: டாக்டர் சந்திரசேகர் பெம்மாசானி, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் குண்டூரில் (ஆந்திரப் பிரதேசம்) மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட பெம்மாசானி வெற்றி பெற்றார். 

தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உட்பட கூட்டணி கட்சிகளுக்கு 11 அமைச்சர் பதவி

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் டிடிபி, ஜேடியு உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 11 பேர் இடம்பெற்றுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடிதலைமையிலான புதிய அரசு நேற்று பதவியேற்றுக் கொண்டது. புதிய அமைச்சரவையில், பிரதமர் மோடி உட்பட 24 மாநிலங்களைச் சேர்ந்த 72 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 11 பேர் இடம்பெற்றுள்ளனர். ஆந்திர முதல்வராக பொறுப்பேற்கவுள்ள சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியை (டிடிபி) சேர்ந்த டாக்டர் சந்திரசேகர் … Read more

மோடி 3.0 | மத்திய அமைச்சர்கள் பட்டியல் – நிர்மலா சீதாராமன் முதல் புதுமுகம் ராம்மோகன் வரை

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக 3-வது முறையாக பதவியேற்றுக் கொண்டார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த பிரம்மாண்ட பதவியேற்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதன்மூலம் நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக 3வது முறையாக பதவியேற்றுள்ளார். மோடியுடன் 72 பேர்: மோடியைத் தொடர்ந்து ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, ஜே.பி.நட்டா, சிவ்ராஜ் சிங் சவுகான், நிர்மலா சீதாராமன், எஸ்.ஜெய்சங்கர், … Read more

மோடி 3.0 | மத்திய அமைச்சரவை பதவி இழந்தவர்கள் யார் யார்?

புதுடெல்லி: பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவியேற்றுக் கொண்டுள்ளார். அவருடன் பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் உறுப்பினர்களும் மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த சூழலில் கடந்த 2019 முதல் 2024 வரையிலான பிரதமர் மோடியின் அமைச்சரவையில் இடம் பிடித்து, இந்த முறை பதவியை இழந்தவர்கள் யார் யார்? என்பதை பார்ப்போம். புதிதாக அமைந்துள்ள மத்திய அமைச்சரவையில் 24 மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. … Read more

கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு ஆதரவாக விவசாய அமைப்புகள் பேரணி @ பஞ்சாப்

மொஹாலி: நடிகை கங்கனா ரனாவத்தை விமான நிலையத்தில் அறைந்த சிஐஎஸ்எஃப் பெண் காவலருக்கு ஆதரவாக மொஹாலியில் பல்வேறு விவசாய அமைப்புகள் பேரணி நடத்தினர் சண்டிகர் விமான நிலையத்தில் நடிகையும், பாஜக எம்.பி.யுமான கங்கனா ரணாவத்தின் கன்னத்தில் சிஐஎஸ்எஃப் பெண் காவலர் அறைந்ததாக வெளியான வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. விமான நிலையத்தில் பணியிலிருந்த சிஐஎஸ்எஃப் பெண் காவலர் குல்விந்தர் கவுர் என்பவர் கங்கனா ரணாவத்தின் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இதற்கு விவசாயிகளுக்கு எதிராக கங்கனா தெரிவித்த கருத்துகளே … Read more

ஜம்மு காஷ்மீரில் பேருந்து மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 9 பேர் உயிரிழப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த 9 பேர் உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாஸி மாவட்டத்தில் உள்ள ரான்ஸூ என்ற பகுதியில் இன்று (ஜூன் 09) மாலை 6 மணியளவில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்றின் மீது தீவிரவாதிகள் சிலர் திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் நிலை தடுமாறிய ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்தார். இதனைத் தொடர்ந்து பேருந்து … Read more