மாயாவதிக்கு மாற்றாக சந்திரசேகர் ஆசாத்? – உ.பி-யில் சுயேச்சையாக வென்ற தலித் தலைவரின் பின்புலம்

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) தலைவி மாயாவதிக்கு மாற்றாக சந்திரசேகர் ஆசாத் (37) உருவாகி வருவதாகத் தெரிகிறது. நகீனா தொகுதியில் இந்த தலித் தலைவர் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 மக்களவை தொகுதிகளில் ஒரே ஒரு வேட்பாளர் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அவர், பீம் ஆர்மி எனும் அமைப்பை துவக்கி நடத்தும் ராவண் என்கிற சந்திரசேகர் ஆசாத். 2020ல் ‘ஆசாத் சமாஜ் கட்சி(கன்ஷிராம்)’ எனும் … Read more

“குற்றம் செய்வோரை நீங்கள் ஆதரித்தால்…” – கங்கனா ரனாவத் @ அறைபட்ட சம்பவம்

மும்பை: “குற்றம் செய்பவர்களுக்கு நீங்கள் ஆதரவு தெரிவித்தால் நாட்டின் சட்டங்களை மீறி குற்றம் செய்ய அது அவர்களுக்கு ஓர் உந்துதலாக அமையும். அனுமதியின்றி, ஒருவரின் உடலைத் தொட்டு, தாக்குவது உங்களுக்கு சரி என்றால், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக் குற்றத்தையும் நீங்கள் ஆதரிக்கிறீர்கள் என்றே அர்த்தம்” என சிஐஎஸ்எஃப் பெண் காவலருக்கு ஆதரவானவர்களை பாஜக எம்.பி கங்கனா ரனாவத் சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஒவ்வொரு பாலியல் குற்றவாளிக்கும், … Read more

வி.கே.பாண்டியன் மீதான விமர்சனம் துரதிருஷ்டவசமானது: நவீன் பட்நாயக்

புவனேஸ்வர்: ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் பிஜு ஜனதா தளத்தின் தோல்விக்கு வி.கே.பாண்டியனை விமர்சிப்பது துரதிர்ஷ்டவசமானது என்று அக்கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். புவனேஸ்வரில் செய்தியாளர்களிடம் பேசிய நவீன் பட்நாயக், “நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கிடைத்துள்ள தோல்வியை மனதார ஏற்றுக்கொள்கிறேன். மாநில மக்களுக்கு முடிந்தவரை சிறந்த சேவைகளை நாங்கள் வழங்கினோம். இருந்தும் தோல்வி அடைந்துள்ளோம். இந்த தோல்வியை அடுத்து, வி.கே.பாண்டியன் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. இவை துரதிருஷ்டவசமானவை. அவர் கட்சியில் சேர்ந்து எந்தப் … Read more

மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா வருகை

புதுடெல்லி: பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா டெல்லி வந்துள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நாளை மாலை 6 மணி அளவில் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். அவருடன் அவரது அமைச்சரவையும் பதவியேற்க உள்ளது. அமைச்சரவையில் இடம் பெற உள்ளவர்கள் குறித்த தொடர் ஆலோசனைகளை ஜெ.பி.நட்டா, அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். நரேந்திர மோடி நாளை பதவியேற்க உள்ள நிலையில், டெல்லியில் பாதுகாப்பு … Read more

மோடி 3.0 அமைச்சரவையில் யாருக்கு எந்த அமைச்சகம்? – பாஜக முக்கிய ஆலோசனை

புதுடெல்லி: நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி 3-வது முறையாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) பதவியேற்க உள்ள நிலையில், அவரது அமைச்சரவை குறித்து இறுதி முடிவு எடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று (சனிக்கிழமை) நடைபெற்று வருகிறது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 240 தொகுதிகளிலும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத அதேநேரத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்துள்ளது. இதையடுத்து, கூட்டணி கட்சிகளின் ஆதவோடு நரேந்திர மோடி … Read more

மக்களுக்கு போக்குவரத்தில் இடையூறு இருக்க கூடாது: சந்திரபாபு நாயுடு உத்தரவு

அமராவதி: ‘‘என்னால் போக்குவரத்தில் எவ்வித இடையூறும் இருக்க கூடாது. குறிப்பாக மக்கள் பாதிக்கப்பட கூடாது’’ என தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். டெல்லிக்கு செல்லும் முன் தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு தனது பாதுகாப்பு அதிகாரிகளை அழைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: என்னால் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்பட கூடாது. போக்குவரத்து பாதிப்பு ஏற்பட கூடாது. நான் செல்லும் போதும், வரும்போதும், சாலைகளின் இருபுறமும் மக்களை நிற்கவைத்து விடுவது, கடைகளை … Read more

நாளை மோடி 3.0 பதவியேற்பு விழா: நேரலையில் எங்கு, எப்படி காண்பது? முழு விவரம் இதோ

Oath Taking Ceremenony of PM Narendra Modi: சமீபத்தில் அறிவிக்கப்பட்ட மக்களவைத் தேர்தல் முடிவுகளின் படி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ) பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. இதன் மூலம் மூன்றாவது முறையாக மோடி தலைமையிலான எண்டிஏ அரசு, மத்தியில் ஆட்சி அமைக்க தயாராகி வருகின்றது. 

ட்ரோன்கள் பறக்க தடை: மோடி பதவியேற்பு விழாவுக்கான கட்டுப்பாடுகள் என்னென்ன?

புதுடெல்லி: நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக நாளை (ஜூன் 8) பதவியேற்கவுள்ள நிலையில் டெல்லியில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய்ப்பட்டு வருகிறது. ட்ரோன்கள் பறக்கத் தடை, எல்லைகளில் கண்காணிப்பு, போக்குவரத்து மாற்றம் எனப் பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேசிய ஜனநாயக கூட்டணியின் (என்டிஏ) நாடாளுமன்ற குழு தலைவராக பிரதமர் மோடி ஏகமனதாக தேர்வுசெய்யப்பட்டதை அடுத்து, மத்தியில் ஆட்சி அமைக்க உரிமை கோரிய அவருக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு விடுத்தார். நாளை இரவு 7.15மணி … Read more

ஜெகனுக்கு நெருக்கமான 3 அதிகாரிகள் இடமாற்றம்

அமராவதி: ஆந்திர மாநிலத்தின் புதிய தலைமை செயலராக பொறுப்பேற்ற நீரப் குமார் பிரசாத் பணியில் அமர்த்தப்பட்ட முதல் நாளிலேயே ஜெகனுக்கு நெருக்கமான 3 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அதிரடி காட்டியுள்ளார். ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியில் தலைமை செயலாளராக பணியாற்றி வந்த ஜவஹர் ரெட்டிக்கு புதிய அரசு விடுப்பு கொடுத்து அனுப்பியது. அவருக்கு பதிலாக புதிய தலைமை செயலராக ஆந்திர மாநில சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளராக பணியாற்றி வந்த நீரப் குமார் … Read more

நாடாளுமன்றத்திற்குள் ஊடுருவ முயன்ற 3 பேர் கைது

புதுடெல்லி: போலி ஆதார் அட்டைகளுடன் டெல்லியில் உள்ள புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்குள் கடந்த ஜூன் 4-ம் தேதி ஊடுருவ முயன்ற மூன்று பேரை மத்திய தொழிலக பாதுகாப்புப் படை வீரர்கள் கைது செய்துள்ளதாக நேற்று தெரிய வந்தது. இந்த குற்றத்தில் ஈடுபட்ட மூவர்மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் கூறியதாவது: கடந்த ஜூன் 4-ம் தேதி மதியம் 1:30 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தின் மூன்றாவது நுழைவாயில் கதவு வழியாக உள்ளே நுழைய உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த … Read more