மீண்டும் பூமிக்கு திரும்பும் ஏவுகலன்: 3-வது முறையும் இஸ்ரோ பரிசோதனை வெற்றி

சித்ரதுர்கா: விண்ணுக்கு செயற்கைக்கோள்களை சுமந்து சென்று மீண்டும் பூமிக்கு திரும்பும் புஷ்பக் ஏவுகலன் சோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இதன்மூலம் மீண்டும் பயன்படுத்தக்கூடிய புஷ்பக் ஏவுகலனின் (Reusable Launch Vehicle) தரையிறங்கும் பரிசோதனையை மூன்றாவது முறையாக வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது இஸ்ரோ. RLV LEX-03 என அழைக்கப்படும் தரையிறங்கும் பரிசோதனையானது கர்நாடகாவின் சித்ரதுர்காவில் உள்ள ஏரோநாட்டிகல் டெஸ்ட் ரேஞ்சில் (ATR) இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.10 மணிக்கு நடத்தப்பட்டது. புஷ்பக் என்று பெயரிடப்பட்ட இறக்கைகள் கொண்ட … Read more

அசாமில் வெள்ளம்: 3.9 லட்சம் மக்கள் பாதிப்பு, முகாம்களில் 50,000 பேர் தஞ்சம்

குவாஹாட்டி: அசாமில் தொடர்ந்து கன மழைபெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மீட்புப்பணியில் ஈடுபட்டு வரும் அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் கூறியதாவது: வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி மாநிலத்தின் காம்ரூப், தமுல்பூர், ஹைலகண்டி உள்ளிட்ட 19 மாவட்டங்கள் கடுமையாக பாதிப்பட்டுள்ளன. மழைகாரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு,சூறாவளி காற்று உள்ளிட்டவற்றில் சிக்கி இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளனர், ஒருவரை காணவில்லை. ஒட்டுமொத்தமாக 3.9 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரீம்கஞ்ச் மாவட்டத்தில் மட்டும் வெள்ளத்தால் 2 லட்சத்து 40 … Read more

டெல்லிக்கு குடிநீர் வழங்காத ஹரியாணா அரசை கண்டித்து அமைச்சர் ஆதிஷி 2-ம் நாளாக உண்ணாவிரதம்

புதுடெல்லி: டெல்லி நகரில் கடுமையான குடிநீர்தட்டுப்பாடு நிலவி வருகிறது. அண்டை மாநிலமான ஹரியாணா குறிப்பிட்ட அளவிலான தண்ணீரை டெல்லிக்கு வழங்காததால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக டெல்லி மாநில அரசு புகார் தெரிவித்துள்ளது. இந்நிலையில்தான் நேற்று முன்தினம் டெல்லி மாநில அமைச்சர் ஆதிஷி, ஹரியாணா அரசுதண்ணீர் திறந்து விடக்கோரி காலைவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார். இந்நிலையில் அந்த உண்ணாவிரதப் போராட்டம் நேற்று 2-வது நாளை எட்டியுள்ளது. டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து அமைச்சர் ஆதிஷி கூறியதாவது: இது என்னுடைய 2-வது … Read more

போட்டி தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்டால் 10 ஆண்டு சிறை, ரூ.1 கோடி அபராதம்

புதுடெல்லி: நீட் போன்ற போட்டித் தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபடுதல், வினாத்தாளை கசியவிடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு ரூ.1 கோடி அபராதம், 10 ஆண்டு சிறைத் தண்டனை வழங்க வழிவகை செய்யும் சட்டத்தை மத்தியஅரசு அமலுக்குக் கொண்டு வந்துள்ளது. சமீபத்தில் நடந்த நீட் தேர்வில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்தது மாணவர்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதேபோல் அண்மையில் நடைபெற்ற நெட் தேர்விலும் வினாத்தாள் கசிந்து முறைகேடு நடைபெற்றதாகத் தெரியவந்தது. இதையடுத்து அந்தத் தேர்வை மத்திய கல்வி அமைச்சகம் … Read more

குண்டூரில் நில ஆக்கிரமிப்பு செய்து கட்டிய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அலுவலக கட்டிடம் இடிப்பு

குண்டூர்: குண்டூர் மாவட்டம், தாடேபல்லி கூடம் சீதாநகரில் ஜெகன்மோகன் ஆட்சியில், நீர்வளத்துறைக்கு சம்மந்தப்பட்ட 17 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து, அதில் 2 ஏக்கரில் மிகப்பெரியதாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைமை அலுவலகம் கட்டப்பட்டு வந்தது. கட்டுமானப் பணிகள் முடியும் தருவாயில் இருந்த நிலையில், ஆந்திராவில் ஆட்சி மாறியது. ஆதலால், இக்கட்டிடம் நில ஆக்கிரமிப்பு செய்து, சட்டத்தை மீறி கட்டியது என்பதால் நேற்று அதிகாலை 5.30 மணியில் இருந்து மாநகராட்சி அதிகாரிகள் 2 ஜேசிபி இயந்திரங்கள் … Read more

நீட் முறைகேடு புகார்கள்… நீக்கப்பட்டார் NTA தலைவர் – முன்னாள் ஐஏஎஸ் புதிதாக நியமனம்!

NTA Chief Sacked: நீட் உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளில் முறைகேடு ஏற்றப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து அதன் தலைமை பொறுப்பில் இருந்த சுபோத் குமார் சிங்கை நீக்கி மத்திய அரசு உத்தரவிட்டது.

நீட் தேர்வு வினாத் தாள் கசிந்த வழக்கில் முக்கிய குற்றவாளி உ.பி.யில் கைது

புதுடெல்லி: நீட் வினாத் தாள் கசிவுக்கு மூளையாக செயல்பட்ட ரவி அத்ரியை உ.பி. போலீஸார் கைது செய்துள்ளனர். பிஹார் மாநிலம் பாட்னாவில் நீட் தேர்வுக்கு முன்னதாக வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் மாணவர்கள் சிலரையும் அவர்களின் கூட்டாளிகளையும் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் உத்தரபிரதேச மாநிலம்கிரேட்டர் நொய்டாவை சேர்ந்தரவி அத்ரி என்ற இளைஞருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதன் அடிப்படையில் கிரேட்டர் நொய்டாவின் நீம்கா கிராமத்தில் ரவி அத்ரியை உ.பி. போலீஸார் நேற்று … Read more

தேவகவுடா குடும்பத்துக்கு மீண்டும் சிக்கல்: சூரஜ் ரேவண்ணா மீது தன்பாலின சேர்க்கை புகார்

பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ஹாசன் முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடியோக்கள் வெளியாகி சர்ச்சை ஏற்பட்டது. அவரது வீட்டு பணிப்பெண், கட்சியின் பெண் நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் அளித்த புகாரில், பிரஜ்வல் ரேவண்ணா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பிரஜ்வலின் அண்ணனும் மஜத எம்எல்சியுமான சூரஜ் ரேவண்ணா (36) மீது 24 வயதான இளைஞர் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். … Read more

இந்தியா – வங்கதேசம் இடையே சுகாதாரம், மீன்பிடி தொழில் உள்பட 10 ஒப்பந்தங்கள் நிறைவேற்றம்

புதுடெல்லி: சுகாதாரம், மீன்பிடி தொழில் உள்பட இந்தியா – வங்கதேசம் இடையே 10 ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகியதாக வெளியுறவுத் துறை செயலர் வினய் குவாத்ரா விளக்கம் அளித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக நேற்று (வெள்ளிக்கிழமை) இந்தியா வந்த வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, இன்று பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தலைவர்களின் சந்திப்பை அடுத்து, இரு நாட்டு அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் … Read more

நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வு நடைமுறையை சீர்திருத்த உயர்மட்ட குழு அமைத்தது மத்திய அரசு

புதுடெல்லி: நீட், நெட் உள்பட தேசிய தேர்வு முகமை நடத்தும் போட்டித் தேர்வுகளை சீர்திருத்தவும், தேசிய தேர்வு முகமையின் கட்டமைப்பை வலுப்படுத்தவும் 7 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. ஜேஇஇ (மெயின்), நீட் (யுஜி), சிமேட், ஜிபாட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. சமீபத்தில் நடைபெற்ற நீட் (யுஜி) நுழைவுத் தேர்வுக்கான வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் காரணமாக பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. … Read more