மும்பை அடல் சேது பாலத்தில் விரிசலா? – காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு மகாராஷ்டிர அரசு விளக்கம்

மும்பை: பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த் அடல் சேது பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக காங்கிரஸ் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு மகாராஷ்டிர அரசு விளக்கமளித்துள்ளது. மும்பை மற்றும் நவிமும்பை நகரங்களை இணைக்கும் வகையில் அரபிக்கடலில் 22 கி.மீ. தூரத்துக்கு அடல் சேது என்ற பிரம்மாண்ட கடல் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் மிக நீளமான கடல்வழி பாலம் என்ற சிறப்பை பெற்றுள்ள இந்த பாலம், மும்பை சிவ்ரி பகுதியில் தொடங்கி நவிமும்பை புறநகரான சிர்லேவில் முடிவடைகிறது. 2018ஆம் தொடங்கிய இப்பாலத்தின் … Read more

கேஜ்ரிவாலின் ஜாமீனை நிறுத்தி வைத்தது டெல்லி ஐகோர்ட் – அமலாக்கத் துறை முன்வைத்த வாதம் என்ன?

புதுடெல்லி: மதுபான கொள்கை முறைகேடு தொடர்புடைய பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு, விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை, டெல்லி உயர் நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கேஜ்ரிவால், ஜாமீன் கேட்டு விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது நேற்று (ஜூன் 20) உத்தரவு பிறப்பித்த விசாரணை நீதிமன்றம், கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியது. இந்த உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் … Read more

மகாராஷ்டிரா உள்ளிட்ட 4 மாநில வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கும் பணியை தொடங்கியது தேர்தல் ஆணையம்

புதுடெல்லி: மகாராஷ்டிரா, ஹரியாணா, ஜார்க்கண்ட், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்கியுள்ள இந்திய தேர்தல் ஆணையம், இந்த மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கும் பணிகளை தொடங்கி உள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை: 18வது மக்களவைக்கான பொதுத் தேர்தல்கள் நடந்து முடிந்ததைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கான ஆயத்தப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. 2024 … Read more

நீட் மறு தேர்வு கோரும் மனு மீது பதிலளிக்க தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: நீட் தேர்வை புதிதாக நடத்தக் கோரும் மனு மீது பதிலளிக்க தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் பிற முறைகேடுகள் காரணமாக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வின் புனிதம் குலைந்துள்ளதால், புதிதாக மீண்டும் நீட் தேர்வு நடத்த உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதிகள் விக்ரம் நாத், எஸ்.வி. பாட்டி அடங்கிய விடுமுறைக் கால அமர்வு முன் விசாரணைக்கு … Read more

நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து நாடு தழுவிய அளவில் காங்கிரஸ் போராட்டம்

புதுடெல்லி: நீட் தேர்வில் நடந்த முறைகேடுகளைக் கண்டித்து நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று போராட்டம் நடத்தப்பட்டது. சத்தீஸ்கரில் போராட்டம்: சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அம்மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபேஷ் பெகல் கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிய பூபேஷ் பெகல், மத்திய அரசு நடத்திய நீட் தேர்வில் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தது. பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. மோடி அரசில் அதிகரித்து வரும் ஊழலால் மாணவர்களின் எதிர்காலம் … Read more

தலைநகரில் தண்ணீர் பிரச்சினை: டெல்லி அமைச்சர் அதிஷி காலவரையற்ற உண்ணாவிரதம்

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்தச் சூழலில் அண்டை மாநிலத்தில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லி அமைச்சர் அதிஷி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியுள்ளார். அதிஷி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியபோது, டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா கேஜ்ரிவால், ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் மற்றும் டெல்லி அமைச்சர் சவுரப் பரத்வாஜ் ஆகியோர் உடன் இருந்தனர். திஹார் சிறையில் உள்ள முதல்வர் … Read more

டெல்லியில் வெப்ப அலை தாக்கத்துக்கு வீடு இல்லாதவர்கள் 192 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் வெப்ப அலையின் தாக்கத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் வீடற்ற நிலையில் சாலையில் வசிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த 192 பேர் கடந்த 9 நாட்களில் உயிரிழந்துள்ளதாக தன்னார்வ தொண்டு அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஹோலிஸ்டிக் டெலவப்மெண்ட் மையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வட மாநிலங்களில் எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக உள்ளது. குறிப்பாக, டெல்லியில் வெப்ப அலையின் பாதிப்பு அதிகமாக காணப்பட்டது. அங்குள்ள வீடற்ற குடும்பங்கள் தற்காலிகமாக சாலை ஓரங்களில் … Read more

இந்திய-இலங்கை எல்லையில் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்திய மத்திய அமைச்சர்!

Respect To Indian Flag In India Sri Lanka Border : இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லையை ஆய்வு செய்த மத்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் இந்தியா பெயர் பலகை அருகே உள்ள தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தினார்

அமேசான் பார்சலில் நல்ல பாம்பு: உயிரை காப்பாற்றிய டேப் @ பெங்களூரு

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள‌ சார்ஜாபூரை சேர்ந்தவர் ரம்யா (பெயர்மாற்றப்பட்டுள்ளது). பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றும் இவர், கடந்த 16-ம் தேதி அமேசான் ஆன்லைன் நிறுவனத்தில் எக்ஸ் பாக்ஸ் கன்ட்ரோலரை ஆர்டர் செய்தார். இதற்கான பார்சல் நேற்று முன்தினம் அவரது வீட்டுக்கு வந்தது. அந்த பார்சலை திறந்ததும் அதிலிருந்து நல்ல பாம்பு வெளியே வருவதை கண்டு ரம்யா திடுக்கிட்டார். மேலும் இதனால் அதிர்ச்சிஅடைந்த அவர், உடனடியாக அதனை வீடியோ எடுத்து ‘எக்ஸ்’சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்தார். மேலும் … Read more

ராமாயணத்தை கிண்டல் செய்து நாடகம் நடத்திய மும்பை ஐஐடி மாணவர்கள் 8 பேருக்கு அபராதம்

மும்பை: மும்பையில் உள்ள ஐஐடி.யில் கடந்த மார்ச் 31-ம் தேதி நிகழ்த்துக் கலை விழா நடைபெற்றது. இதில் மாணவர்கள் சிலர் சேர்ந்து, ‘ராகோவன்’ என்ற பெயரில் நாடகம் நடத்தினர். ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு மாணவர்கள் நாடகத்தில் நடித்தனர். ஆனால், இந்து மத நம்பிக்கைகளையும், இந்துக் கடவுள்களையும் இழிவுப்படுத்தும் வகையில் நாடகம் நடத்தியதாக மற்றொரு பிரிவு மாணவர்கள் புகார் தெரிவித்தனர். இந்த விவகாரம் குறித்து கடந்த மே 8-ம் தேதி ஒழுங்கு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தி … Read more