“அராஜகம், உறுதியின்மை, ஊழலுக்கானது காங்கிரஸுக்கான வாக்குகள்!” – எடியூரப்பா

பெங்களூரு: காங்கிரஸுக்கு அளிக்கப்படும் வாக்குகள் என்பது அராஜகம், பொருளாதார திவால், ஊழல், உறுதியற்ற தன்மை ஆகியவற்றுக்கானவையாக இருக்கும் என்றும், அது நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பை ஆபத்தில் தள்ளும் என்றும் பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா விமர்சித்துள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தலைமை முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது. பிரச்சாரத்தின்போது ராகுல் காந்தியின் பெயரைக் கூற அவரது கட்சியைச் சேர்ந்த யாரும் தயாராக இல்லை. இந்தத் தேர்தல் நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டுக்கானது. கர்நாடகாவில் … Read more

அப்போது வடநாட்டில்… இப்போது வயநாட்டில் – வேலையை தொடங்கும் பாஜக… என்ன சர்ச்சை?

Sultan Bathery BJP Controversy: வட இந்திய நகரங்களை போன்று கேரளாவின் வயநாட்டில் உள்ள சிறிய நகரத்தின் பெயரான சுல்தான் பத்தேரியை, கணபதி வட்டம் என மாற்றுவோம் என கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் பேசி உள்ளார்.   

“மகனை முதல்வர் ஆக்குவதே ஸ்டாலினின் ஒரே நோக்கம்” – அமித் ஷா

மாண்ட்லா: “இண்டியா கூட்டணி தலைவர்களின் ஒற்றை நோக்கம், தங்கள் குடும்ப உறுப்பினர்களின் முன்னேற்றமே” என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தின் மாண்ட்லா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அமித் ஷா, “இந்தத் தேர்தலில் ஒரு பக்கம் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக இருக்கிறது. மறுபக்கம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட இண்டியா கூட்டணி இருக்கிறது. இண்டியா கூட்டணி தலைவர்களின் ஒற்றை நோக்கம், தங்கள் குடும்ப உறுப்பினர்களின் முன்னேற்றம் … Read more

EPFO Update: பிஎஃப் உறுப்பினர்களுக்கு சூப்பர் செய்தி…. உயர்கிறதா ஊதிய உச்சவரம்பு? ஆலோசிக்கும் அரசு!!

EPFO Hike Wage Cieling: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO ஊதிய உச்சவரம்பை ரூ.15000 -இல் இருந்து ரூ.21000 ஆக உயர்த்த அரசு ஆலோசித்து வருவதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கவிதாவை கைது செய்தது சிபிஐ

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தெலங்கானா மேலவை உறுப்பினர் கவிதாவை சிபிஐ கைது செய்துள்ளது. டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கவிதா ஏற்கெனவே அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு தற்போது திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்த டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்தது. இதையடுத்து, கடந்த 5-ம் தேதி நீதிமன்றம் சிபிஐக்கு அனுமதி வழங்கியது. இதையடுத்து, கவிதாவிடம் விசாரணை நடத்திய சிபிஐ, தற்போது அவரை கைது செய்துள்ளது. டெல்லி … Read more

“மேற்கு வங்கத்தில் பொது சிவில் சட்டத்தை ஏற்க மாட்டோம்” – மம்தா பானர்ஜி பேச்சு

கொல்கத்தா: குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவுவேடு (என்சிஆர்), பொது சிவில் சட்டம் ஆகியவற்றை மேற்கு வங்கத்தில் ஏற்க மாட்டோம் என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கொல்கத்தா மசூதி ஒன்றில் நடந்த ரம்ஜான் சிறப்புத் தொழுகையை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “நாட்டுக்காக நாம் ரத்தம் சிந்தத் தயாராக உள்ளோம். ஆனால் நாட்டின் … Read more

ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து கவிழ்ந்து விபத்து: 6 குழந்தைகள் பலி

சண்டிகர்: ஹரியாணா மாநிலம் மஹேந்தர்கரில் தனியார் பள்ளி பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 15 குழந்தைகள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹரியாணா மாநிலம் மஹேந்தர்கர் மாவட்டத்தில் உள்ள உன்ஹானி கிராமம் அருகே இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. விபத்தில் சிக்கியுள்ள பள்ளிக் குழந்தைகளை மீட்கப்பட்டு வரும் நிலையில், விபத்து குறித்து வழக்குப் பதிந்து போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர். முதல்கட்ட விசாரணையில், ஜிஎல் பப்ளிக் பள்ளி என்ற தனியார் பள்ளிக்குச் சொந்தமான … Read more

“பல நூற்றாண்டு தியாகத்தின் உச்சம் அயோத்தி ராமர் கோயில்” – பிரதமர் மோடி 

புதுடெல்லி: “அயோத்தி ராமர் கோயில் பல நூற்றாண்டு கால விடாமுயற்சி மற்றும் தியாகத்தின் உச்சம். இந்தியாவின் தேசிய உணர்வில் பகவான் ஸ்ரீராமரின் பெயர் பதிந்துள்ளது.” என்று பிரதமர் மோடி பேசியுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க்கை தளமாகக் கொண்ட நியூஸ் வீக் பத்திரிகைக்கு பிரதமர் மோடி நேர்காணல் அளித்துள்ளார். அந்த நேர்காணலில் ராமர் கோயில், சீனா விவகாரம், பாகிஸ்தான் என பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமர் பேசியுள்ளார். அந்த நேர்காணலில் பிரதமர் மோடி ராமர் கோயில் குறித்து கூறுகையில், … Read more

காங். தேர்தல் அறிக்கையை விமர்சித்த பிரதமர் மோடிக்கு ராகுல் பதிலடி

வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடைபெற்றபோது, ஆங்கிலேயர்களுடன் கூட்டு வைத்தது யார்? என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். ‘காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையின் ஒவ்வொரு பக்கமும் நாட்டை துண்டாட முயற்சிப்பது போல் உள்ளது. சுதந்திர இயக்கத்தின்போது இருந்த முஸ்லிம் லீக் சிந்தனையை பிரதிபலிப்பதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை உள்ளது’ என பிரதமர் மோடி கூறியிருந்தார். இதற்கு எக்ஸ் தளத்தில் பதில் அளித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது: இந்த தேர்தல் இரண்டு … Read more

சந்தேஷ்காலி நில அபகரிப்பு, பாலியல் வழக்குகளை சிபிஐ விசாரிக்கும்: கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம், சந்தேஷ்காலி தீவுப் பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் ஷாஜகான். திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சந்தேஷ்காலி சட்டப்பேரவைத் தொகுதி ஒருங்கிணைப்பாளராக இருந்தார். இவர் தனது ஆதரவாளர் களுடன் இணைந்து ரேஷன் பொருட்கள் கடத்தல், நில அபகரிப்பு, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. அவர் மீது புகார் கொடுத்தாலும் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் இந்த விவகாரம் … Read more