மக்களவைத் தேர்தலில் வென்ற 4 இளம் வேட்பாளர்களும் பின்புலமும்

புதுடெல்லி: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 25 வயதுக்குட்பட்ட 4 பேர் வெற்றி பெற்றுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் சஞ்சனா ஜாதவ், லோக் ஜனசக்தி கட்சியின் சாம்பவி சவுத்ரி, சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த புஷ்பேந்திர சரோஜ் மற்றும் பிரிய சரோஜ் ஆகியோர் எம்.பிக்கள் ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவது மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மைக்கு தேவையான 272 தொகுதிகளுக்கு மாறாக, 240 தொகுதிகளே கிடைத்துள்ளன. எனினும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக … Read more

தேசிய அளவில் காங்கிரஸ் வாக்கு வங்கி உயர்வு; பாஜகவுக்கு சற்றே சரிவு!

புதுடெல்லி: 2019 தேர்தல் உடன் ஒப்பிடுகையில் 2024 மக்களவைத் தேர்தலில், தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது. 2019-ல் 19.49% என்ற அளவில் இருந்த காங்கிரஸின் வாக்கு சதவீதம் இந்த தேர்தலில் 21.19% ஆக உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 2% சதவீதம் காங்கிரஸின் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது. அதேநேரம், பாஜகவை பொறுத்தவரை ஒரு சதவீதம் சரிவை கண்டுள்ளது. தேர்தல் ஆணைய தரவுப்படி, பாஜக மொத்தமாக 36.56 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. அதுவே கடந்த 2019 தேர்தலில் … Read more

“நாம் வெட்கப்பட எதுவும் இல்லை” – பிஜேடி கட்சியினர் முன் நவீன் பட்நாயக் உருக்கம்

புவனேஸ்வர்: 24 ஆண்டுகால ஆட்சி குறித்து நாம் வெட்கப்பட எதுவும் இல்லை என பிஜேடி எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் முன் நவீன் பட்நாயக் உருக்கமாக தெரிவித்தார். மக்களவைத் தேர்தலோடு சேர்த்து ஒடிசா சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், மொத்தமுள்ள 147 தொகுதிகளில் பாஜக 78 தொகுதிகளில் வெற்றிபெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கான உரிமையைப் பெற்றுள்ளது. கடந்த 2000ம் ஆண்டு முதல் தொடர்ந்து 24 ஆண்டுகளுக்கும் மேலாக ஒடிசாவின் … Read more

“பாஜகவின் பாசிச ஆட்சிக்கு எதிராக…” – இண்டியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் கார்கே விவரிப்பு

புதுடெல்லி: டெல்லியில் நடைபெற்ற இண்டியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “இது ஒரு தெளிவான தார்மிக தோல்வி என்பதைத் தாண்டி தனிப்பட்ட முறையில் மோடிக்கு இது ஒரு பெரிய அரசியல் தோல்வி. எனினும், அவர் மக்களின் விருப்பத்தை தகர்ப்பதில் பிடிவாதமாக இருக்கிறார்” என்று தெரிவித்தார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி 232 இடங்கள் வெற்றி பெற்ற நிலையில், இன்று (ஜூன் 5) மாலை டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே … Read more

எல்.முருகன் முதல் ஸ்மிருதி இரானி வரை: தேர்தலில் தோல்வியுற்ற மத்திய அமைச்சர்கள்!

புதுடெல்லி: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும் இந்தத் தேர்தலில் மத்திய அமைச்சர்கள், ஸ்டார் வேட்பாளர்கள் என்று அறியப்பட்ட ஸ்மிருதி இரானி, எல்.முருகன் உள்ளிட்ட பலரும் போட்டியிட்டு தோல்வியை தழுவியுள்ளனர். 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற அறைகூவலுடன் தேர்தலை சந்தித்தது பாஜக. ஆனால் பாஜகவுக்கு இந்த தேர்தல் முடிவு சற்று அதிர்ச்சியை கொடுத்துள்ளது. பாஜக இந்த தேர்தலில் பல அமைச்சர்களை களம் இறக்கியது. இதில், ஸ்மிரிதி ராணி உள்பட பலர் … Read more

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக மோடி ஒருமனதாக தேர்வு: பாஜக

புதுடெல்லி: தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக நரேந்திர மோடி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக பாஜக அறிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவை அடுத்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணியின் முதல் ஆலோசனைக் கூட்டம் புதுடெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் இன்று நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா, ராஜ்நாத் சிங், அமித் ஷா, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஐக்கிய ஜனதா தளம் தலைவர் … Read more

வி.கே. பாண்டியனை பொறியாக வைத்து பாஜக செய்த அரசியல்… நவீன் பட்நாயக் வீழ்ந்த கதை!

VK Pandian: ஒடிசாவில் பாஜக முதல்முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், பிஜூ ஜனதா தளத்தை வீழ்த்த பாஜக எப்படி வி.கே. பாண்டியனை வைத்து வியூகத்தை அமைத்தது என்பதை விரிவாக இதில் காணலாம். 

சந்திரபாபு நாயுடு மீண்டும் ‘கிங்’ ஆன பின்னணியில் ‘ரியல் கிங் மேக்கர்’ பவன் கல்யாண்!

தனிப் பெரும்பான்மை இல்லாததால் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் 3-வது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது பாஜக. இதனால், சந்திரபாபு நாயுடு கிங் மேக்கராக உருவெடுத்துள்ளார். அது மட்டுமில்லாமல், ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. அமராவதியில் வரும் 9-ம் தேதி சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக முதல்வராக பதவியேற்க உள்ளார். … Read more

கடிவாளம் போடும் நிதிஷ் குமார்-சந்திரபாபு நாயுடு… கோரிக்கைகளை நிறைவேற்றுமா பாஜக?

NDA Meeting :  தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முக்கிய பங்கு சந்திரபாபு நாயுடு மற்றும் நிதீஷ் குமார் ஆகியோர் தற்போதைய நிலையில் உள்ளனர்.   

“உங்களை வீழ்த்த முடியவில்லை!” – ராகுல் காந்தி குறித்து பிரியங்கா காந்தி பெருமிதம்

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் 99 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது காங்கிரஸ் கட்சி. இந்நிலையில், தனது சகோதரர் ராகுல் காந்தி குறித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார் பிரியங்கா காந்தி. “உங்களை குறித்து யார் என்ன சொன்னாலும், என்ன செய்திருந்தாலும் களத்தில் உறுதியுடன் நீங்கள் நின்றீர்கள். எந்த மாதிரியான சிக்கலை கண்டும் நீங்கள் பின்வாங்கவில்லை. உங்களது உறுதிப்பாடு மீது பலரும் சந்தேகம் கொண்டிருந்தனர். ஆனால், நீங்கள் நம்பிக்கையை இம்மியும் இழக்கவில்லை. பொய்களை பரப்பியபோதும் நியாயத்துக்காக நீங்கள் … Read more