நலத் திட்டங்களை பெற உ.பி.யில் குடும்ப அட்டை: முதல்வர் ஆதித்யநாத் உத்தரவு

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் மத்திய, மாநில அரசுகளின் நலத் திட்டங்களை சுலபமாக பெற ஏதுவாக, குடும்ப அடையாள அட்டை வழங்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்பத்தினருக்கும், குடும்ப அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார். இதில் குடும்ப உறுப்பினர்களின் பெயர், முகவரி, வருமானம், சாதி உள்ளிட்ட பல முக்கிய … Read more

பிரதமர் மோடியுடன் அமெரிக்க குழு சந்திப்பு

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்காவின் உயர்நிலைக் குழு டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசியது. அமெரிக்க நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசி, அமெரிக்க நாடாளுமன்ற வெளியுறவு விவகாரக் குழு உறுப்பினர் மைக்கேல் மெக்கால் தலைமையிலான 6 பேர் அடங்கிய உயர்நிலைக் குழு இந்தியாவில் முகாமிட்டுள்ளது. இந்தக் குழு, இந்தியாவின் இமாச்சல பிரதேசம், தர்மசாலாவில் திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமாவை நேற்று முன்தினம் சந்தித்துப் பேசியது. திபெத் தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் அண்மையில் தீர்மானம் … Read more

அமேசான் பார்சலில் வந்த நாகப்பாம்பு @ பெங்களூரு

பெங்களூரு: பெங்களூருவின் சர்ஜாபூர் சாலை பகுதியை ஒட்டியுள்ள குடியிருப்பில் வசித்து வரும் தம்பதியர், அமேசான் தளத்தில் எக்ஸ்பாக்ஸ் கன்ட்ரோலரை ஆர்டர் செய்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு வந்த பார்சலில் நாகப்பாம்பு இருந்துள்ளது. அதை கண்டு அதிர்ச்சியில் உறைந்த அவர்கள், பின்னர் அதனை வீடியோவாக ரெக்கார்ட் செய்து சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளனர். அந்த வீடியோ சமூக வலைதள பயனர்களின் கவனத்தை பெற்றுள்ளது. இன்றைய டிஜிட்டல் உலகில் ஆன்லைன் ஷாப்பிங் மேற்கொள்வது மக்களின் வழக்கங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. அதன் காரணமாக … Read more

தேஜஸ்வி யாதவ் மீது பிஹார் துணை முதல்வர் குற்றச்சாட்டு

பாட்னா: பிஹாரில் நீட் வினாத் தாள் கசிந்தது தொடர்பாக அம்மாநில பொருளாதார குற்றப் பிரிவின் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. பிஹார் துணை முதல்வர் விஜய்குமார் சின்ஹா நேற்று கூறிய தாவது: நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் பிஹார் அரசு விருந்தினர் இல்லத்தில் இருந்துகைது செய்யப்பட்டவர்களுக்கும் பிரீத்தம் என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதுபோல பிரீத்தமுக்கும் முன்னாள் துணை முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தள(ஆர்ஜேடி) மூத்த தலைவருமான தேஜஸ்வி யாதவுக்கும் தொடர்பு இருந்துள்ளது. இதுதொடர்பான … Read more

நீட் விடைத்தாள் கிழிந்ததாக புகார் அளித்த மாணவி: நீதிமன்றத்தில் போலி ஆவணங்களை சமர்ப்பித்தது அம்பலம்

லக்னோ: தன்னுடைய நீட் விடைத்தாள் கிழிந்துவிட்டதாகவும் இதனால், தனக்கான தேர்வு முடிவு முறையாக அறிவிக்கப்படவில்லை என்றும் மாணவி ஆயுஷி படேல் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கான ஆவணங்களை இணைத்த அவர், தன்னுடைய விடைத்தாளை கணினி மூலம் இல்லாமல் கைப்பட திருத்த வேண்டும் என்றும் தன் மனுவில் கோரி இருந்தார். இதுதொடர்பாக தேசிய தேர்வு முகமை பதில் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அம்மாணவியின் விடைத் தாள் தொடர்பான ஆவணங்களை தேசிய … Read more

பவன் கல்யாண் ஆந்திர மாநில துணை முதல்வராக பொறுப்பேற்பு

விஜயவாடா: ஜனசேனா கட்சி தலைவர் பவன்கல்யாண் விஜயவாடாவில் உள்ள அவரது அலுவலகத்தில் ஆந்திர மாநிலத்தின் துணைமுதல்வராக நேற்று பொறுப்பேற்றார். நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண், தற்போதைய ஆந்திர மாநில அரசியலின் ‘கேம் சேஞ்சர்’ என்று அழைக்கப்படுகிறார். இவர் பாஜகவுடன் கூட்டணியில் இருந்தாலும், சிறையில் இருந்த சந்திரபாபு நாயுடுவை நேரில் சென்று சந்தித்த பின்னர், சிறைக்கு வெளியே வந்து, “தெலுங்கு தேசம் கட்சியுடன் ஜனசேனா கட்சியும் இணைந்து வரும் தேர்தலில் போட்டியிடும்” என அறிவித்தார். இதுதான் … Read more

காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் 54-வது பிறந்தநாள் கொண்டாடிய ராகுல்

புதுடெல்லி: ராகுல் காந்தி தனது 54-வது பிறந்த நாளை காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சித் தலைவர்களுடன் கொண்டாடினார். ராகுல் காந்தியின் 54-வது பிறந்த நாளை நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் நேற்று கொண்டாடினர்.இதனிடையே டெல்லியில்உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் தேசியத்தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,மூத்த தலைவர்கள் கே.சி.வேணுகோபால், கவுரவ் கோகோய், காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி வதேரா உள்ளிட்டோருடன் நேற்று தனது பிறந்தநாளை ராகுல் காந்தி கொண்டாடினார். அப்போது … Read more

நீட் தேர்வு சர்ச்சை: காங்கிரஸ் நாளை நாடு தழுவிய போராட்டம்

புதுடெல்லி: நீட் தேர்வு சர்ச்சை பூதாகரமாக வெடித்துள்ள சூழ்நிலையில் மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமையை (என்டிஏ) கண்டித்தும், மாணவர்களுக்கு நீதி கோரியும் நாடு முழுவதும் நாளை (ஜூன் 21) போராட்டம் நடைபெறும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், பொறுப்பாளர்கள், அனைத்து பிரிவு தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், காங்கிரஸ் பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால் கூறியுள்ளதாவது: இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் … Read more

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி நீதிமன்றம்!

புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் தொடர்புடைய சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத் துறை கடந்த மார்ச் 21-ம் தேதி கைது செய்தது. கடந்த ஏப்ரல் 1-ம் தேதி டெல்லி திஹார் சிறையில் கேஜ்ரிவால் அடைக்கப்பட்டார். இதையடுத்து மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக கேஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 10–ம் … Read more

மதுபான முறைகேடு வழக்கு… டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்..!!

மதுபான முறைகேடு வழக்கில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்.