வேலைக்கு நிலம் வழக்கு | லாலுவின் மனைவி ராப்ரி தேவி, இரண்டு மகள்களுக்கு நீதிமன்றம் ஜாமின்

புதுடெல்லி: ரயில்வே வேலைக்கு நிலம் லஞ்சமாக பெற்ற வழக்கில் பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மனைவி ராப்ரி தேவி, மகள்கள் மிசா பாரதி மற்றும் ஹேமா யாதவ் ஆகியோருக்கு பிப்.28ம் தேதி வரை ஜாமின் வழங்கி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. வழக்கமான ஜாமின் மனு மீது பதில் அளிப்பதற்கு அமலாக்கத்துறை கால அவகாசம் வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்ததைத் தொடர்ந்து சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே மூவருக்கும் இந்த இடைக்கால ஜாமினை … Read more

உத்தரகாண்ட் ஹல்த்வானியில் வன்முறை வெடித்தது ஏன்? தொடரும் பதற்றம்.. 6 பேர் பலி, 300 பேர் காயம்

Haldwani Violence News: உத்தரகாண்ட் மாநிலத்தில் மதராஸா இடிக்கப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் 6 பேர் பலி, 300 பேர் காயம் மற்றும் ஊரடங்கு உத்தரவு அமல்.

உத்தராகண்ட்டில் வன்முறை – 2 பேர் உயிரிழப்பு, 100க்கும் அதிகமானோர் காயம்; இணையசேவை முடக்கம்

ஹல்த்வானி: உத்தராகண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தின் ஹல்த்வானி பகுதியில் ஆக்கிரமித்து சட்டவிரோதமாக கட்டப்பட்டு இருந்த மதரஸா இடிப்பு தொடர்பாக வெடித்த வன்முறையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக அங்கு ஊரடங்கு உத்தரவும், கலவரக்காரர்களை கண்டதும் சுடவும் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இணைய சேவையும் தடைசெய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நைனிடால் மாவட்ட ஆட்சியர் வந்தனா சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்த கலவரத்தில் இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர், 100க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர், அவர்களில் … Read more

சரத் பவார் அணிக்கு புதிய பெயர்: தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு

சரத் பவார் அணிக்கு ‘தேசியவாத காங்கிரஸ் கட்சி–சரத்சந்திர பவார்’ என்ற புதிய பெயர் அளிக்கப்பட்டுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 8 எம்எல்ஏ.க்கள் அஜித் பவார் தலைமையில், சிவ சேனா ஷிண்டே பிரிவு மற்றும் பாஜக கூட்டணியில் கடந்தாண்டு ஜூலை மாதம் இணைந்து மகாராஷ்டிரா அரசில் அங்கம் வகித்தனர். இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி யாருக்கு சொந்தம் என தேர்தல் ஆணையத்திடம் முறையிடப்பட்டது. பெரும்பான்மையுடன் திகழும் துணை முதல்வர் அஜித் பவார் தலைமையிலான அணிதான் உண்மையான தேசியவாத … Read more

அறக்கட்டளை நிதியில் முறைகேடு புகார்: சல்மான் குர்ஷித் மனைவிக்கு கைது வாரன்ட்

லக்னோ: காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித்தின் மனைவி லூசி குர்ஷித்தை கைது செய்ய வாரன்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மத்திய வெளியுறவு, சட்டத் துறை அமைச்சராக சல்மான் குர்ஷித் பதவி வகித்தார். தற்போது உத்தர பிரதேச காங்கிரஸின் மூத்த தலைவராக அவர் செயல்படுகிறார். சல்மான் குர்ஷித் தனது தாத்தாவும் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவருமான ஜாகீர் உசேன் பெயரில் அறக்கட்டளையை நிறுவிஉள்ளார். உத்தர பிரதேசத்தின் பரூக்காபாத்தை தலைமையிடமாக கொண்டு அறக்கட்டளை செயல்படுகிறது. கடந்த … Read more

Paytm Payments வங்கி வாடிக்கையாளர்களுக்கு இடியாய் வந்த EPFO சுற்றறிக்கை: இங்கும் தடை

EPFO on Paytm Payments Bank: பிப்ரவரி 23, 2024 முதல், Paytm Payments வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்குகளைக் கொண்ட சந்தாதாரர்களின் க்ளெய்ம்களை ஏற்க வேண்டாம் என தனது கள அதிகாரிகளுக்கு இபிஎஃப்ஓ உத்தரவிட்டுள்ளது. 

மத்திய பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு – டெல்லியில் திமுக எம்.பி.க்கள் கருப்பு சட்டை போராட்டம்

புதுடெல்லி: மத்திய இடைக்கால பட்ஜெட்டில் தமிழகத்துக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்று கண்டனம் தெரிவித்து, டெல்லியில் திமுக எம்.பி.க்கள் நேற்று கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 1-ம் தேதி மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார். தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என்று மக்களவையில் திமுக எம்.பி.க்கள் கடந்த 6-ம் தேதி குற்றம்சாட்டி பேசினர். இதன் தொடர்ச்சியாக, திமுக மற்றும்கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் … Read more

நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து நாடாளுமன்றத்தில் வெள்ளை அறிக்கை: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்

புதுடெல்லி: பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றபோது நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களால் இன்று இந்தியா உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக மாறி உள்ளது என்று, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான 10 ஆண்டுகால பாஜக ஆட்சி மற்றும் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் எப்படி இருந்தது எனஒப்பீடு செய்து மத்திய அரசு … Read more

போக்குவரத்து தொழிலாளர் 15-வது ஊதிய ஒப்பந்தம்: பேச்சுவார்த்தைக்கு குழு அமைத்து அரசாணை

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 15-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகங்களில் சுமார் 1.20 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான ஊதியஉயர்வு ஒப்பந்தம், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை போடப்பட்டு வந்தது. 13-வது ஊதிய ஒப்பந்தம், கடந்த 2019-ம் ஆண்டு ஆக.31-ம் தேதியுடன் காலாவதியானது. இதையடுத்து தொழிற்சங்கங்களுடன் நடைபெற்ற பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு 2022-ம் ஆண்டு ஆக.24-ம் தேதி 14-வதுஊதிய ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. அதன்படி, … Read more

பஞ்சாப் டு டெல்லி பேரணி: விவசாயிகளுடன் 3 மத்திய அமைச்சர்கள் பேச்சுவார்த்தை @ சண்டிகர்

சண்டிகர்: 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 13-ம் தேதி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் பேரணி செல்ல உள்ளதாக சுமார் 18 விவசாய சங்கங்கள் இணைந்து அறிவித்தன. பஞ்சாப் மாநிலத்தில் இருந்து இந்தப் பேரணி தொடங்கும் என தகவல். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மூன்று மத்திய அமைச்சர்கள் மற்றும் பஞ்சாப் மாநில முதல்வரும் சண்டிகரில் விவசாய சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். கடந்த 2020-21ம் ஆண்டில் நாடு முழுவதுமிருந்து திரண்ட விவசாயிகள் தலைநகர் டெல்லியை ஒட்டிய … Read more