வீட்டு உரிமையாளரை அடித்த வழக்கில் சமாஜ்வாதி எம்பி ஆசம் கானுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

ராம்பூர்: உத்தர பிரதேசம் துங்கர்பூர் பகுதியில் வசித்து வந்த வீட்டு உரிமையாளர் அப்ரார், கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி போலீஸில் ஒரு புகார் அளித்தார். அலே ஹாசன் மற்றும் ஒப்பந்ததாரர் பர்கத் அலி ஆகிய இருவர் தனது வீட்டுக்குள் புகுந்து தன்னை தாக்கிவிட்டு, வீட்டைக் கொள்ளையடித்ததாக அந்தப் புகாரில் கூறியிருந்தார். மேலும் தன்னை கொலை செய்யவும், தனது வீட்டை முற்றிலுமாக இடித்து தரைமட்டமாக்கவும் அவர்கள் முயன்றதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த சம்பவத்துக்குப் பின்னால் சமாஜ்வாதி கட்சி … Read more

கனடா கல்லூரியில் சீட்டு வாங்கித் தருவதாக இந்திய மாணவர்களை ஏமாற்றிய முகவருக்கு 3 ஆண்டுகள் சிறை

புதுடெல்லி: கனடா நாட்டில் உயர்கல்வி படிக்க போலி அனுமதிச் சீட்டு விநியோகித்து இந்திய மாணவர்களை ஏமாற்றி வந்த இந்திய முகவருக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதித்து கனடா நீதிமன்றம் உத்தரவிட்டது. ப்ரிஜேஷ் மிஸ்ரா (37) என்பவர் தன்னை குடியேற்றப்பிரிவு முகவர் என கூறிக்கொண்டு பஞ்சாப் மாநிலத்தில் அலுவலகம் நடத்தி வந்தார். கனடா நாட்டின் முன்னணி கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் படிக்கும் கனவோடுஇருக்கக்கூடிய எளிய குடும்பப்பின்னணி கொண்ட மாணவர்கள்தான் இவரது இலக்கு. பள்ளிப்படிப்பை முடித்துவிட்டுகனடா சென்று பட்டப்படிப்பு படிக்க துடிக்கும் … Read more

அன்று நரேந்திர தத்தா…! இன்று நரேந்திர மோடி…!

1892-ம் ஆண்டு கன்னியாகுமரி வந்த விவேகானந்தர், கடல் நடுவே 500 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள பாறையில் அமர்ந்து டிசம்பர் 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை தியானம் செய்தார். பின்னர், அது விவேகானந்தர் பாறை என்று அழைக்கப்பட்டது. இதற்கு அப்போது எதிர்ப்பும் கிளம்பியது. அந்தப் பாறை தங்களுக்கு சொந்தம் என்று ஒரு பிரிவினர் உரிமை கொண்டாடினர். இதனால், சர்ச்சை எழுவதைத் தடுக்க 1963-ம் ஆண்டு அப்போது முதல்வராக இருந்த பக்தவத்சலம் தலைமையிலான தமிழக அரசு சார்பில், … Read more

நாடு திரும்பினார் பிரஜ்வல் ரேவண்ணா: விமானத்தில் நிலையத்தில் கைது

பெங்களூரு: பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டு வந்த பிரஜ்வல் ரேவண்ணா இன்று ஜெர்மனியில் இருந்து விமானம் மூலம் இந்தியா திரும்பினார். பெங்களூரு விமான நிலையத்தில் அவரை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். ஜெர்மனியின் முனிச் நகரில் இருந்து பெங்களூரு திரும்புவதற்கான விமான டிக்கெட்டை பிரஜ்வல் முன்பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது. இதனையடுத்து நேற்று (மே 30) முனிச் நகரில் இருந்து புறப்பட்ட அவர் இன்று நள்ளிரவில் பெங்களூரு திரும்பினார். கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய … Read more

கடும் வெயிலில் மயங்கி விழுந்த குரங்கு – சிபிஆர் செய்து உயிர் காத்த உ.பி காவலர்!

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் நிலவிவரும் கடும் வெயிலின் காரணமாக மயங்கி விழுந்த குரங்குக்கு போலீஸ்காரர் ஒருவர் சிபிஆர் செய்து அதன் உயிரைக் காப்பாற்றிய சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. இந்நிலையில், புலந்த்ஷாஹரில் உள்ள காவல் நிலைய வளாகத்தில் இருக்கும் மரத்திலிருந்து குரங்கு ஒன்று தவறி விழுந்ததை விகாஸ் தோமர் என்ற காவலர் பார்த்திருக்கிறார். இவர் சத்தாரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து … Read more

“இண்டியா வெல்லப் போகிறது” – காங்கிரஸ் தொண்டர்களுக்கு ராகுல் காந்தி உறுதி

புதுடெல்லி: நாளை இறுதிகட்ட தேர்தல் நடைபெறும் நிலையில் காங்கிரஸ் தொண்டர்களுக்கு ராகுல் காந்தி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் நாடு முழுவதும் இறுதி மற்றும் 7-ம் கட்டமாக 57 தொகுதிகளில் நாளை நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று ஓய்ந்தது. இந்த நிலையில், காங்கிரஸ் தொண்டர்களுக்கு ராகுல் காந்தி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று நாட்டின் மகத்தான மனிதர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நேரத்தில், இண்டியா கூட்டணி அரசு … Read more

“ரஃபா மீதான தாக்குதல் ஆழ்ந்த கவலை அளிக்கிறது” – இந்திய வெளியுறவுத் துறை

புதுடெல்லி: ரஃபாவில் உள்ள தற்காலிக முகாம்கள் மீது இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதல் குறித்து இந்திய வெளியுறவுத் துறை தனது நிலைபாட்டை தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால், “ரஃபாவில் உள்ள புலம்பெயர்ந்தோர் முகாம்கள் மீதான தாக்குதலில் பொதுமக்கள் உயிரிழந்த சம்பவம் ஆழ்ந்த கவலை அளிக்கிறது. இந்த போரில், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டத்துக்கு மதிப்பளிக்குமாறு நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். 1980-களின் பிற்பகுதியில் பாலஸ்தீன … Read more

கேரளாவில் மழை தீவிரம்: வெள்ளத்தில் தத்தளிக்கும் கொச்சி நகரம்

கொச்சி: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துவரும் நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையால் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தில் சிக்கி கொச்சி நகரம் தத்தளித்து வருகிறது. மே 31-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு ஒருநாள் முன்னதாக இன்று வியாழக்கிழமை கேரளாவில் பருவமழை தொடங்கியது. இரண்டு நாட்களுக்கு முன்பு இருந்தவரை கனமழை பெய்த நிலையில், நேற்று முன்தினம் எர்ணாகுளம் மற்றும் கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் … Read more

தொடங்கியது தென்மேற்கு பருவமழை: எங்கெல்லாம் மழை வாய்ப்பு?

புதுடெல்லி: தென்மேற்கு பருவமழை கேரளாவில் முன்கூட்டியே தொடங்கியுள்ளது. நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், அருணாச்சல பிரதேசம், திரிபுரா, மேகாலயா, அசாம் ஆகிய மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகளில் பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கடலோர ஆந்திரா, தெலங்கானா, ராயலசீமா ஆகிய பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை பரவலாக மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்: தென்மேற்கு … Read more

பிரதமர் பதவிக்குரிய கண்ணியத்தைக் குறைத்த முதல் பிரதமர் மோடி: மன்மோகன் சிங் கடும் தாக்கு

Manmohan Singh Slams Narendra Modi: பிரதமர் மோடி வெறுக்கத்தக்க வகையில் பேசி வருகிறார். ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் “சர்வாதிகார ஆட்சியிலிருந்து” பாதுகாக்க வேண்டும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்