பிஜு ஜனதா தளத்தில் இருந்து 5-வது எம்எல்ஏ பாஜகவில் ஐக்கியம்

ஒடிசாவின் ஆதாமாலிக் சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏ.,வாக இருந்த ரமேஷ் சந்திர சாய்க்கு, மீண்டும் போட்டியிட பிஜு ஜனதா தளம் வாய்ப்பளிக்கவில்லை. அவரது ஆதாமாலிக் தொகுதியில் முன்னாள் அரசு அதிகாரி நளினி காந்த பிரதான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் இந்த தொகுதி எம்எல்ஏ ரமேஷ் சந்திர சாய் தனது பதவியை ராஜினாமா செய்தார். இவர் நேற்று பாஜகவில் சேர்ந்தார். மோடியின் தொலை நோக்கு பார்வையால் பாஜக.,வில் இணைந்ததாக அவர் கூறினார். ஆதாமாலிக் சட்டப்பேரவை தொகுதிக்கு ஏற்கனவே சஞ்ஜீப் சாஹூ … Read more

என்சிஇஆர்டி நூல்களில் பாபர் மசூதி இடிப்பு தகவல் நீக்கம்: பிளஸ் 2 பாடங்கள் மாற்றியமைப்பு

புதுடெல்லி: புதிய மாற்றங்களுடன் 2024-25 கல்வியாண்டுக்கான சிபிஎஸ்இ பாடநூல்கள் தயாராகி வருகின்றன. மத்திய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி பயிற்சி கவுன்சில்(என்சிஇஆர்டி) நூல்களில் பாபர் மசூதி இடிப்பு உள்ளிட்ட பல குறிப்புகள் நீக்கப்பட்டுள்ளன. புதிதாக மாற்றியமைக்கட்ட தகவல்கள், பிளஸ் 2 சிபிஎஸ்இ பாடங்களில் நடப்பு ஆண்டு முதல் சேர்க்கப்பட்டுள்ளன. உத்தரப்பிரதேசம் அயோத்தியிலிருந்த பாபர் மசூதி டிசம்பர் 6, 1992-ல் இடிக்கப்பட்டது. இந்த இடத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி ராமர் கோயில் திறக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்டமான முறையில் இக்கோயில் இன்னும் … Read more

பாஜகவின் அடிமை ஜெகன்: ஷர்மிளா விமர்சனம்

ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஒய்.எஸ். ஷர்மிளா நேற்று தான் போட்டியிடும் கடப்பா மக்களவைத் தொகுதியில் திறந்தவெளி ஜீப்பில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “கடந்த 5 வருடங்களாக பாஜகவுக்காக ஒரு அடிமை போல் ஆட்சி நடத்தியவர் ஜெகன் மோகன். கோத்ரா கலவரம் குறித்து வாய் திறக்காதவர். இப்படி பாஜக செய்த எந்தவொரு தவறுகளுக்கும் மவுனம் காத்தவர். அப்படி இருக்கையில், பாஜக என்றாலே பிடிக்காத ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டிக்கு, ஜெகன் எப்படி வாரிசாக முடியும்? … Read more

‘காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பாகிஸ்தான் தேர்தலுக்கு பொருத்தமானது’ – அசாம் முதல்வர்  தாக்கு

ஜோர்ஹட்: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இந்தியாவை விட அண்டை நாடான பாகிஸ்தானுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா விமர்சித்துள்ளார். அசாம் மாநிலம், ஜோர்ஹட் மக்களவைத் தொகுதியில் நடந்த தேர்தல் பேரணிக்கு இடையில் ஹிமந்த பிஸ்வா சர்மா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “காங்கிரசின் தேர்தல் அறிக்கை ஒரு பிரிவினரை திருப்திப்படுத்தும் அரசியல். இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். காங்கிரஸின் தேர்தல் அறிக்கை இந்தியாவுக்கானது இல்லை. பாகிஸ்தானுக்கானது போலத் தெரிகிறது. சமூகத்தை … Read more

“ஜூன் 4-க்கு பின் பிரதமர் மோடி நீண்ட விடுப்பில் செல்வார்; இது மக்களின் உத்தரவாதம்’’ – காங்கிரஸ்

புதுடெல்லி: ஜூன் 4ம் தேதிக்கு பின்னர் பிரதமர் மோடி நீண்ட விடுப்பில் செல்வார்; இது மக்களின் உத்தரவாதம் என்று காங்கிரஸ் கட்சி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முஸ்லீம் லீக் சிந்தனையை பிரதிபலிக்கிறது என்றும், காங்கிரஸ் தலைவர்களின் பேச்சு தேசிய ஒருமைப்பாடு மற்றும் சனாதன தர்மத்துக்கு எதிரானதாக உள்ளது என்றும் பிரதமர் மோடி குற்றம் சாட்டி இருந்த நிலையில், அதற்கு பதிலடியாக காங்கிரஸ் இவ்வாறு தெரிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு பொதுச்செயலாளர் … Read more

சந்திரபாபு நாயுடு குறித்த விமர்சனம் – ஜெகன்மோகன் ரெட்டிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

அமராவதி: ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாக கூறி மாநிலத்தின் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சமீபத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை அருந்ததி திரைப்படத்தின் வில்லனுடன் ஒப்பிட்டும், மற்றொரு நிகழ்வில் வாடிக்கையான குற்றவாளி என்றும் ஜெகன்மோகன் ரெட்டி விமர்சித்ததாகக் குற்றம்சாட்டி தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த வர்லா ராமைய்யா என்பவர் தேர்தல் ஆணையத்தில் புகார் … Read more

29 மணி நேரம் பெல்டால் அடித்து டார்ச்சர்! கல்லூரி மாணவர் எடுத்த விபரீத முடிவு-பின்னணி என்ன?

Latest News Kerala Student Suicide : கேரள கல்லூரி மாணவர் ஒருவர், தனது ஹாஸ்டல் அறையில் துக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.   

‘‘எதிர்பார்க்கும் வெற்றி காங்கிரசுக்கு கிட்டவில்லை எனில் ராகுல் காந்தி ஒதுங்கிக்கொள்ள வேண்டும்’’: பிரசாந்த் கிஷோர்

புதுடெல்லி: வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் எதிர்பார்க்கும் வெற்றி அக்கட்சிக்குக் கிடைக்கவில்லை எனில், ராகுல் காந்தி ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்று தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அவர், “கடந்த 10 ஆண்டுகளாக ராகுல் காந்தியால் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியை தேடித்தர முடியவில்லை. எனினும், தற்போதும் அவர்தான் காங்கிரஸ் கட்சியை வழிநடத்தி வருகிறார். கட்சியை மற்றவர்கள் நடத்த அவர் அனுமதிக்கவில்லை. கடந்த 10 வருடங்களாக … Read more

ஆத்தாடி ராகுல் காந்தியின் முதலீடுகளை பாருங்க… நிச்சயம் ஷாக் ஆவீங்க!

Rahul Gandhi Investment: ராகுல் காந்தியின் முதலீடுகள் குறித்தும் அதன் மதிப்பு குறித்தும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதனை இங்கு காணலாம். 

தொழுகை பிரச்சினை எதிரொலி | விடுதியை காலி செய்ய 7 வெளிநாட்டு மாணவர்களுக்கு குஜராத் பல்கலை. அறிவுறுத்தல்

அகமதாபாத்: ஆப்கானிஸ்தானை சேர்ந்த 6 மாணவர்கள் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஒருவர் என ஏழு வெளிநாட்டு மாணவர்களை விடுதி அறையைக் காலி செய்யுமாறு குஜராத் பல்கலைக்கழகம் கூறியுள்ளதாக அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். கடந்த மார்ச் 16ம் தேதி பல்கலை வளாகத்தில் தொழுகையில் ஈடுபட்டது தொடர்பாக இரு பிரிவு மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்தச் சம்பவத்துக்கு பின்னர் ஆப்கானிஸ்தான் மற்றும் கம்பியன் பிரதிநிதிகள் பல்கலைக்கழகத்துக்குச் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரைச் சந்தித்துப் … Read more