ஜேடியு – தெலுங்கு தேசம் இடையே கருத்து வேறுபாடு: மக்களவை தலைவர் பதவிக்கு போட்டியிட இண்டியா கூட்டணி திட்டம்

புதுடெல்லி: மக்களவையின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதில் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) – தெலுங்கு தேசம் கட்சிகள் இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன. மக்களவை தலைவர் பதவிக்கு வேட்பாளரை நிறுத்துவது குறித்து இண்டியா கூட்டணி தீவிரமாக ஆலோசித்து வருகிறது. மக்களவை தேர்தலில் பாஜக 240 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அந்த கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசத்தின் 16எம்.பி.க்கள், ஐக்கிய ஜனதா தளத்தின் 12 எம்.பி.க்கள் ஆதரவுடன் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய … Read more

கஞ்சன்ஜங்கா ரயில் விபத்து | குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்; ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

புதுடெல்லி: கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ள நிலையில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இந்த விபத்து குறித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தங்கர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், … Read more

மேற்கு வங்கம் | கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலுடன் சரக்கு ரயில் மோதி விபத்து – ஐந்து பேர் பலி

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலுடன் சரக்கு ரயில் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் இதுவரை லோக்கோ பைலட் உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். 25 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் உயிர்ப்பலி அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்துப் பகுதியில் மீட்புப் பணிகளை முடுக்கிவிட முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். மேற்குவங்க மாநிலம் நியூ ஜல்பைகுரி மாவட்டத்தில் இன்று (திங்கள்கிழமை) காலை 9 மணியளவில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு … Read more

மேற்கு வங்கத்தில் பயங்கர ரயில் விபத்து… பயணிகள் ரயில் மீது மோதிய சரக்கு ரயில்..!!

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் பயங்கர ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது. டார்ஜலிங்கில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது சரக்கு ரயில் மோதியது. ஜல்பைகுரி அருகே இந்த விபத்து நடந்துள்ளது. 

ஜார்க்கண்ட் என்கவுன்ட்டர்: 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

ராஞ்சி: ஜார்க்கண்டில் மேற்கு சிங்பும் மாவட்டத்தில் இன்று (திங்கள்கிழமை) காலை நடந்த என்கவுன்ட்டரில் 4 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். இரு தினங்களுக்கு முன்னர் சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில் 8 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்ட நிலையில் இன்று ஜார்க்கண்டில் இந்த என்கவுன்ட்டர் நடந்துள்ளது. முன்னதாக சத்தீஸ்கர் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட 8 பேரில் 6 பேர் முக்கியமானவர்கள் என்பது தெரியவந்துள்ளது. பிஎல்ஜிஏ (மக்கள் விடுதலை கொரில்லா படை) என்ற அமைப்பைச் சேர்ந்த அவர்கள் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கே ரூ.48 லட்சம் வரை பரிசுத் … Read more

குஜராத் சூரத் விமான நிலையத்தில் துபாய் பயணியிடம் ரூ.2 கோடி வைரம் பறிமுதல்

சூரத்: குஜராத்தின் சூரத் விமான நிலையத்தில், துபாய் செல்ல முயன்ற பயணி ஒருவரிடம் ரூ.2.19 கோடி மதிப்புள்ள பட்டை தீட்டப்படாத வைரம் பறிமுதல் செய்யப்பட்டது. குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள எஸ்எச்ஏ சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளிடம் வழக்கமான பரிசோதனை நேற்று முன்தினம் காலை மேற்கொள்ளப்பட்டது. அப்போது துபாய் செல்லும் இண்டிகோ விமான நிலையத்தில் ஏறுவதற்காக சஞ்சய்பாய் மொரோ தியா என்பவர் வந்தார். அவரிடம் மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்) காவலர் சோதனை நடத்தினார். அப்போது … Read more

மும்பை யோகா பயிற்சி நிகழ்ச்சியில் உலகின் மிக வயதான சுவாமி சிவானந்தா பங்கேற்பு

மும்பை: மும்பையில் நடந்த யோகா பயிற்சி நிகழ்ச்சியில் உலகிலேயே மிகவும் வயதான சுவாமி சிவானந்தா (127) பங்கேற்று சில ஆசனங்களை செய்துகாட்டினார். இந்தியாவின் கோரிக்கையை ஏற்று ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படும் என ஐ.நா.சபை அறிவித்தது. இதையடுத்து, கடந்த 2015-ம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இதன்படி, வரும் 21-ம் தேதி10-வது சர்வதேச யோகா தினம்கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா … Read more

மத்திய பிரதேச மதுபான ஆலையில் காயங்களுடன் பணியாற்றிய 58 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

புதுடெல்லி: மத்தியப் பிரதேசத்தின் ரெய்சன் மாவட்டத்தில் உள்ள மதுபான ஆலையில் காயங்களுடன் பணியாற்றிய 58 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். மத்தியப் பிரதேசத்தின் ரெய்சன் மாவட்டத்தில் ‘சாம் டிஸ்டிலெரீஸ் அண்ட் ப்ரூவரீஸ் என்ற மதுபான ஆலை செயல்படுகிறது. இங்கு குழந்தை தொழிலாளர்கள் நாள் ஒன்றுக்கு 12 மணி முதல் 14 மணி நேரம் வரை பணியில் ஈடுபடுத்தப்படுவதாகவும், அவர்களின் கைகளில் காயங்கள் உள்ளதாகவும் குழந்தை தொழிலாளர் மீட்பு இயக்கத்துக்கு (பிபிஏ) தகவல் கிடைத்தது. இதையடுத்து அதன் இயக்குநர் மனீஷ் … Read more

ஹேமந்த் சோரன் வழக்கில் நிலத் தரகர் கைது

ராஞ்சி: ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் ராணுவத்துக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் கடந்த ஜனவரியில் அவர் கைது செய்யப்பட்டார். இதே வழக்கில் அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள், தரகர்கள் உட்பட 25-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதன் தொடர்ச்சியாக ராஞ்சியை சேர்ந்த நிலத் தரகர் சேகர் பிரசாத் மகதோ நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். இவர் ராணுவ … Read more

‘உருதுஸ்தான்’ தனிநாடு கேளுங்கள்: முஸ்லிம்களை தூண்டும் சீக்கிய அமைப்பு

புதுடெல்லி: முஸ்லிம்களிடம் தனி நாடு கோரிக்கையை தூண்டிவிடும் நடவடிக்கைகளில் சீக்கிய பிரிவினைவாத அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டு வருவதாக பாதுகாப்பு முகமைகளுக்கு உளவுத் துறை மூலமாக தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: காலிஸ்தான் பிரிவினைவாத குழுவைச் சேர்ந்த சீக்கியர்கள் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக ஏராளமான உளவுத்தகவல்கள் பாதுகாப்பு முகமைகளுக்கு கிடைத்து வருகின்றன. நீதிக்கான சீக்கிய பிரிவினைவாத அமைப்பு (எஸ்எஃப்ஜே) காலிஸ்தான் தனிநாடு கோரி ஏற்கெனவே பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. … Read more