எனது தந்தைக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கு திட்டமிட்ட சதி: எடியூரப்பா மகன் விஜயேந்திரா

பெங்களூரு: எனது தந்தை எடியூரப்பாவுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கு திட்டமிட்ட அரசியல் சதி என்று அவரது மகனும் கர்நாடக பாஜக தலைவருமான பி.ஒய்.விஜயேந்திரா குற்றம் சாட்டியுள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு 100% நம்பிக்கை இருக்கிறது. இந்த விவகாரத்தில் அரசியல் சதி இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “கர்நாடக மக்களின் ஆசீர்வாதங்கள், கோடிக்கணக்கான இதயங்களின் பிரார்த்தனைகள் ஆகியவை நீதியின் கோயிலில் வெளிப்பட்டன. எடியூரப்பாவுக்கு எதிரான சதி … Read more

சத்தீஸ்கர் என்கவுன்ட்டர் | 8 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை; பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் வீர மரணம்

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் நடந்த என்கவுன்ட்டரில் 8 நக்சலைட்டுகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த மோதலில், பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் வீர மரணமடைந்தார். சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதம் மிகப்பெரிய சவாலாக உள்ளது. அந்த மாநிலத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியும் சமமற்ற நிலப்பரப்பும் மாவோயிஸ்ட்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. அவர்களை ஒடுக்க மத்திய, மாநிலஅரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் இத்தகைய முயற்சி ஒன்றின்போது 8 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ராய்ப்பூரில் காவல்துறை அதிகாரி ஒருவர் … Read more

“மோடியின் பாதங்களை நிதிஷ் வணங்கியது பிஹாருக்கு அவமானம்” – பிரசாந்த் கிஷோர் சாடல்

பாகல்பூர் (பிஹார்): நரேந்திர மோடியின் பாதங்களை தொட்டதன் மூலம் முதல்வர் நிதிஷ் குமார், பிஹாருக்கு அவமானத்தை ஏற்படுத்திவிட்டார் என்று தேர்தல் வியூக வகுப்பாளரும் சமூக செயற்பாட்டாளருமான பிரசாந்த் கிஷோர் குற்றம் சாட்டியுள்ளார். பிஹாரில் ‘ஜன் சுராஜ்’ பிரச்சாரத்தை முன்னெடுத்து வரும் பிரசாந்த் கிஷோர், பாகல்பூரில் பொதுக்கூட்டம் ஒன்றில் நேற்று (ஜூன் 14) உரையாற்றினார். அப்போது அவர், “தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றத் தலைவராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவரது கால்களை பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தொட்டு … Read more

உ.பி.யின் 12 எம்.பி.க்கள் மீது பல கிரிமினல் வழக்குகள்: தண்டனை வாய்ப்புகளால் பதவிக்கு ஆபத்து

புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தின் 12 எம்.பி.க்கள் மீது பல கிரிமினல் வழக்குகள் பதிவாகி விசாரணை நிலுவையில் உள்ளது. இதில் 2 வருடத்துக்கும் அதிகமான தண்டனை வாய்ப்பால் அவர்கள் எம்.பி பதவி பறிபோகும் ஆபத்தும் உள்ளது. நாட்டிலேயே அதிகமாக உ.பி.யில் 80 மக்களவை தொகுதிகள் உள்ளன. இதன் 12 எம்.பி.க்கள் மீது நடைபெறும் வழக்குகளில் நீதிமன்றத் தீர்ப்புகள் விரைவில் எதிர்பார்க்கப்படுகின்றன. இந்த தீர்ப்புகளில் அந்த எம்பிக்களுக்கு 2 வருடத்துக்கும் அதிகமான தண்டனை அளிக்கப்பட்டால், அவர்களது பதவிகள் பறிபோகும் ஆபத்து உருவாகி … Read more

“இந்தியத் தேர்தல் முடிவுகள் ஜனநாயக உலகத்துக்கான வெற்றி” – பிரதமர் மோடி பேச்சு @ ஜி7 மாநாடு

இத்தாலி: “இந்தியத் தேர்தல் முடிவுகள் ஒட்டுமொத்த ஜனநாயக உலகத்துக்கான வெற்றி” என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும் இவிஎம் தொழில்நுட்பத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் பாரபட்சமற்ற தன்மை ஆகியனவற்றை சுட்டிக்காட்டிப் பாராட்டினார். 50வது ஜி7 உச்சிமாநாடு இத்தாலியின் அபுலியாவில் நடைபெற்றது. இந்த மாநாட்டின் உறுப்பு நாடுகளாக கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை உள்ளன. இம்மாநாட்டை இத்தாலி நடத்துகிறது. அல்ஜீரியா, அர்ஜென்டினா, பிரேசில், இந்தியா, ஜோர்டான், கென்யா, துனிஷியா, … Read more

குஜராத்தில் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் முஸ்லிம் பெண்ணுக்கு வீடு ஒதுக்கியதற்கு கடும் எதிர்ப்பு

வதோதரா: குஜராத்தில் முதல்வர் வீட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் வதோதராவின் ஹர்னி பகுதியில் உள்ள மோத்நாத் ரெஸிடென்சி கூட்டுறவு ஹவுசிங் சொசைட்டியில் தொழில்முனைவு மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சக பிரிவில் பணியாற்றும் 44 வயது முஸ்லிம் பெண் ஒருவர் வீடு ஒதுக்கீடு பெற்றார். அந்த குடியிருப்பில் வசிக்கும் அனைவருமே இந்துக்கள். இவர்கள் அங்கு முஸ்லிம் பெண்ணுக்கு வீடு ஒதுக்கியதை ரத்து செய்ய வேண்டும் எனவும், அவருக்கு மற்றொரு வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடு வழங்க … Read more

குவைத் தீ விபத்து சம்பவம்: மத்திய அரசின் முயற்சிகளுக்கு பினராயி விஜயன் பாராட்டு

கொச்சி: குவைத் தீ விபத்தில் இறந்த 45 இந்தியர்கள் உடல்கள் இந்திய விமானப் படை விமானம் மூலம் நேற்று காலை கொச்சி வந்து சேர்ந்தன. இவற்றில் கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவை சேர்ந்த 31 பேரின் உடல்கள் அந்தந்த மாநில அரசுகளின் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தெற்கு குவைத்தின் மங்காப் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஒரே நிறுவனத்தில் பணியாற்றும் வெளிநாட்டு தொழிலாளர்கள் 196 பேர் தங்கியிருந்தனர். பல்வேறு நாடுகளை சேர்ந்த … Read more

தீ விபத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உட்பட 41 இந்தியர்களின் உடலை கொண்டுவர குவைத் விரைந்தது ராணுவ விமானம்

புதுடெல்லி/ குவைத் சிட்டி: குவைத் நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 தமிழர்கள் உட்பட 41 இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியர்களின் உடல்களை தாயகம்கொண்டுவர விமானப் படை விமானம் குவைத் விரைந்துள்ளது. வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள மங்காஃப் நகரில் 7 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் வெளிநாட்டு தொழிலாளர்கள் 196 பேர் தங்கியிருந்தனர். ஒரே நிறுவனத்தை சேர்ந்த இவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த குடியிருப்பில் உள்ள … Read more

காஷ்மீர் பாதுகாப்பு குறித்து மோடி ஆய்வு: முழு திறனையும் பயன்படுத்த பாதுகாப்பு படைக்கு உத்தரவு

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் கடந்த 4 நாட்களாக நடைபெற்ற 4 தீவிரவாத தாக்குதலையடுத்து, பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆய்வு செய்த பிரதமர் மோடி, தீவிரவாத தடுப்பு நடவடிக்கையில் பாதுகாப்பு படைகளின் முழுதிறனையும் பயன்படுத்த உத்தரவிட்டுள்ளார். ஜம்மு காஷ்மீரின் ரெசி மாவட்டத்தில் பேருந்தில் பயணம் செய்த பக்தர்கள் மீது தீவிரவாதிகள் கடந்த 9-ம் தேதி தாக்குதல் நடத்தினர். இதில் 9 பேர் உயிரிழந்தனர். தெற்கு கதுவா மாவட்டத்தில் கடந்த 11-ம் தேதி பாதுகாப்பு படையினரின் சோதனை சாவடி மீது … Read more

மணிப்பூரில் நடந்த கலவரம் மத ரீதியிலானது அல்ல: கேரள கத்தோலிக்க திருச்சபை கருத்து

திருவனந்தபுரம்: மணிப்பூர் விவகாரம் மதக்கலவரம் அல்ல. இரண்டு பழங்குடி இனங்களுக்கு இடையிலான மோதல் என்று தெரிவித்துள்ளது. இது குறித்து மலங்கரா சிரியன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாசெலி யோஸ் மார்த்தோமா மேத்யூஸ் (மூன்றாம்) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: எல்லா அடுக்குகளையும் சேர்ந்த மக்களை சமமாக மதித்துஅவர்களது நலனை உறுதி செய்பவரே உண்மையான ஆட்சியாளர்.சமயசார்பின்மை என்பதே இந்தியாவின் தனிப்பெரும் அடையாளமாகும். கண்மணியைக் காப்பது போன்று சமயசார்பின்மையை புதிய மத்திய அரசு பாதுகாக்கும் என்று இந்த திருச்சபை உறுதியாக நம்புகிறது. … Read more