தில்லியின் அடுத்த முதல்வர் யார்… ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் பரபரப்பு தகவல்!

டெல்லி மதுபான ஊழல் வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மணீஷ் சிசோடியா ஆகியோர் சிறையில் உள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்பியான சஞ்சய் சிங் உச்ச நீதிமன்றத்தால் ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். 

கேஜ்ரிவால் கைதுக்கு எதிராக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் ஆம் ஆத்மி உண்ணாவிரத போராட்டம்

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத்துறை கடந்த வாரம் கைது செய்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம் ஆத்மி கட்சியினர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் மாபெரும் உண்ணாவிர போராட்டத்தை(‘சமுஹிக் உபாவாசம்’) நடத்தி வருகின்றனர். இதற்கு எதிராக பாஜகவினரும் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி ஜந்தர்மந்தரில் மாபெரும் உண்ணாவிரதம் காலை 10 மணிக்கு தொடங்கி நடந்து வரும் வேளையில், இந்தியாவின் 25 மாநிலங்களில் உள்ள தலைநகரங்களுடன், … Read more

ரயிலில் மீண்டும் மூத்தகுடிகளுக்கு சலுகை: காங்கிரஸ் வாக்குறுதியும் பின்புலமும்

புதுடெல்லி: இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ரயிலில் மீண்டும் மூத்தகுடிகளுக்கு சலுகை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது, காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. கடந்த பல வருடங்களாக ரயிலில் மூத்தகுடிகளுக்கு கட்டணங்களில் சலுகை வழங்கப்பட்டு வந்தது. கரோனா பரவலை காரணமாக்கி பாஜக தலைமையிலான அரசு அதை ரத்து செய்தது. நாடு முழுவதிலும் ஓடும் ரயில்களில் ஆண்டுதோறும் சுமார் 800 கோடி பயணிகள் பயணம் செய்கின்றனர். இவர்களில், ஆண், பெண் என மூத்தகுடிமக்களில் இருபாலர்களுக்குமான ரயில் கட்டண சலுகை … Read more

குண்டுவெடிப்பில் தொடர்பு உடையவர்களை கைது செய்ய சென்ற என்ஐஏ அதிகாரிகள் மீது சமூகவிரோத கும்பல் தாக்குதல்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் குண்டுவெடிப்பில் தொடர்பு உடையவர்களை கைது செய்ய சென்ற தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் என்ஐஏ அதிகாரி ஒருவர் காயமடைந்தார். கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி மேற்கு வங்கத்தின் மேதினிபூர் அடுத்த பூபதி நகரில் உள்ள ஒரு வீட்டில் சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்தன. இதில் 3 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு … Read more

ம.பி.யில் பேருந்து விபத்து: மூவர் உயிரிழப்பு; 25 ராணுவ வீரர்கள் காயம்

சியோனி: மத்திய பிரதேசத்தின் சியோனி மாவட்டத்தில் ஆயுதப்படை வீரர்களை நேற்று அழைத்துச் சென்ற பேருந்து எதிரில் வந்த கார் மீது வேகமாக மோதி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த 3 பேர் உயிரிழந்தனர். 25 வீரர்கள் காயமடைந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து, கேவ்லாரி காவல் நிலைய போலீஸார் கூறியதாவது: வெள்ளிக்கிழமை நள்ளிரவு சிறப்பு ஆயுதப்படை 35-வது பட்டாலியனைச் சேர்ந்த 26 வீரர்களை ஏற்றி வந்த பேருந்து மாண்டலாவிலிருந்து பான்டுர்னா நகருக்கு சென்றுகொண்டிருந்தது. … Read more

லாவோஸ் நாட்டில் மோசடிக் கும்பலிடம் சிக்கிய 17 இந்தியர்கள் மீட்பு

புதுடெல்லி: கம்போடியா, தாய்லாந்து, லாவோஸ் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில், இந்திய இளைஞர்கள் ஆன்லைன் மோசடி உட்பட பல்வேறு சட்ட விரோத வேலைகளில் ஈடுபடுத்தும் போக்கு சமீபமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், லாவோஸ் நாட்டில் மோசடிக் கும்பல்களால் சட்டவிரோத வேலைகளில் ஈடுபடுத்தப்பட்ட 17 இந்தியர்களை மீட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “லாவோஸ்நாட்டில் பாதுகாப்பற்ற சூழலில் சட்டவிரோத வேலைகளில் ஈடுபடுத்தப்பட்ட 17 இந்தியர்கள் தற்போது பத்திரமாக இந்தியா திரும்பிக் கொண்டிருக்கின்றனர். … Read more

முதியோர் ஓய்வூதியம் உயர்வு, அமைச்சகங்கள் குறைப்பு: பிரதமர் மோடிக்கான 3.0 திட்டங்களை தயாரிக்கும் அதிகாரிகள்

புதுடெல்லி: மக்களவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன் பிரதமர் மோடி தனது அமைச்சரவை கூட்டத்தை நடத்தினார். அதில், தமது ஆட்சி 3-வது முறையாக தொடரும் என்றுநம்பிக்கை தெரிவித்திருந்தார். புதிதாக அமையும் ஆட்சியில் அடுத்த100 நாட்களுக்கான புதிய திட்டங்களை அனைத்து அமைச்சகங்களும் தயாரிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இதன்படி, புதிய ஆட்சியில் முதியோர் ஓய்வூதியத்தை கணிசமாக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அரசின் அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்கை தற்போதைய 37 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தவும் யோசனை முன்வைக்கப்பட … Read more

மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவல் 18-ம் தேதி வரை நீட்டிப்பு

புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில், டெல்லி துணை முதல்வராக இருந்தமணீஷ் சிசோடியாவை சிபிஐ கடந்தாண்டு பிப்ரவரி மாதம் கைது செய்தது. இதில் மதுபான விற்பனையாளர்களுக்கு உரிம கட்டணத்தில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பயனடைந்த மது விற்பனையாளர்கள் அதிகாரிகள் பலருக்கு லஞ்சம் வழங்கியுள்ளனர் என்று சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளன. இந்த வழக்கில் ஆம் ஆத்மி மூத்ததலைவர் சஞ்சய் சிங் சமீபத்தில்ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்தது. அவர் … Read more

செய்தித் தெறிப்புகள் @ ஏப்.6: இந்தியா Vs பாக். கருத்து மோதல் முதல் ‘தேர்தல் களத்தில் சீன சதி’ வரை

“பாகிஸ்தானுக்குள் நுழைந்து பயங்கரவாதிகளை அழிப்போம்” – ராஜ்நாத் சிங்: “இந்தியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுவிட்டு பாகிஸ்தானுக்கு பயங்கரவாதிகள் தப்பி ஓடினால் அங்கேயே சென்று அவர்களை அழிப்போம்” என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இதனை கடுமையாக கண்டித்துள்ள பாகிஸ்தான், “இந்தியாவின் ஆளும் ஆட்சியானது அதிக தேசியவாத உணர்வுகளைத் தூண்டுவதற்காக வெறுப்பூட்டும் சொற்களைப் பயன்படுத்தி வருகிறது. தேர்தல் ஆதாயங்களுக்காக இத்தகைய சொற்களை நியாயமற்ற முறையில் பயன்படுத்துகிறது” என்று கருத்து தெரிவித்துள்ளது. விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைவு: … Read more

வயநாட்டின் வருங்காலம் யார்? களைகட்டும் தேர்தல் களம்… அனல் பறக்கும் பிரச்சாரம்!!

Lok Sabha Elections: கேரளாவின் 20 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. கேரளத்தின் மிக பிரபலமான தொகுதிகளில் வயநாடும் ஒன்று.