விசா இன்றி இந்திய சுற்றுலா பயணிகள் வரலாம்: ஈரான் அறிவிப்பு

புதுடெல்லி: இந்திய சுற்றுலாப் பயணிகள் ஈரானில் அதிகபட்சம் 15 நாட்கள் விசா இன்றி தங்கலாம் என இந்தியாவுக்கான ஈரான் தூதரகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக புதுடெல்லியில் உள்ள ஈரான் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியர்கள் ஈரானுக்கு விசா இன்றி வரலாம். அவர்களிடம் பாஸ்போர்ட் இருந்தால் போதும். 6 மாதங்களுக்கு அதிகபட்சம் 15 நாட்கள் வரை அவர்கள் ஈரானில் தங்கலாம். அதற்கு மேல் நாட்கள் நீட்டிக்கப்பட மாட்டாது. சுற்றுலா நோக்கத்திற்காக வருபவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். அதிக நாட்கள் … Read more

“நீங்கள் 40 இடங்களை தக்கவைக்க இறைவனை வேண்டுகிறேன்” – கார்கேவுக்கு பிரதமர் மோடி பதிலடி

புதுடெல்லி: “வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 40 இடங்களையாவது தக்கவைத்து கொள்ள நான் பிரார்த்தனை செய்கிறேன்” என்று பிரதமர் மோடி கூறினார். காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு பதிலடி தரும் வகையில் அவர் இவ்வாறு கூறினார். குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு நாடாளுமன்ற மாநிலங்களவையில் பதில் அளித்து பிரதமர் மோடி பேசுகையில், காங்கிரஸ் குறித்த மம்தா பானர்ஜியின் 40 சீட் அறிக்கையை மேற்கோள் காட்டி, “நீங்கள் 2024 மக்களவைத் தேர்தலில் 40 இடங்களை பெறுவதற்கு … Read more

ஹேமந்த் சோரனின் அமலாக்கத் துறை காவல் மேலும் 5 நாட்களுக்கு நீட்டிப்பு

ராஞ்சி: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் அமலாக்கத் துறை காவலை மேலும் 5 நாட்களுக்கு நீட்டித்து ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிலமோசடி தொடர்பான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த ஜனவரி 31ம் தேதி ஹேமந்த் சோரனிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்திய அமலாக்கத் துறை, அதனைத் தொடர்ந்து அன்றைய இரவு 8.30 மணி அளவில் அவரை கைது செய்தது. இதனையடுத்து, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வரும் வழக்குகளை விசாரிக்கும் PMLA சிறப்பு … Read more

அமலாக்கத் துறை வழக்கில் பிப்.17-ல் ஆஜராக கேஜ்ரிவாலுக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன்

புதுடெல்லி: அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் வரும் 17-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள அமலாக்கத் துறை, அவரை விசாரணைக்கு வருமாறு அழைத்து 5 முறை சம்மன் அனுப்பியது. அவற்றை ஏற்க மறுத்து வரும் கேஜ்ரிவால், இது அரசியல் உள்நோக்கம் கொண்டது … Read more

நாடு முழுவதும் 82 வந்தே பாரத் ரயில்கள் இயக்கம்: மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: “இந்திய ரயில்வேயில் 82 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன” என்று ரயில்வே, தகவல் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அவர் அளித்த பதில்: “ஜனவரி 31 நிலவரப்படி, 82 வந்தே பாரத் ரயில்கள் இந்திய ரயில்வேயில் இயக்கப்படுகின்றன. இவை அகல ரயில் பாதை மின்மயமாக்கப்பட்ட கட்டமைப்புக் கொண்ட மாநிலங்களை இணைக்கின்றன. இது தவிர, ரயில் சேவைகளை நிறுத்துவது, வந்தே … Read more

பிரதமர் மோடியுடன் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் சந்திப்பு

புதுடெல்லி: பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற பிஹார் சட்டமன்றத் தேர்தலின்போது பாஜகவோடு கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று முதல்வராக பதவியேற்ற நிதிஷ் குமார், பின்னர், அந்த கூட்டணியில் இருந்து வெளியேறி லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் கூட்டணி சேர்ந்தார். வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வலிமையான எதிர்க்கட்சிகளின் கூட்டணியை உருவாக்க முன் முயற்சி … Read more

8th Pay Commission வருமா வராதா? நிதி அமைச்சகம் அளித்த லேட்டஸ்ட் அப்டேட்

8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வந்துள்ளது. 8வது ஊதியக்கமிஷன் விரைவில் அமலுக்கு வரும் என அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கை தற்போது ஆட்டம் கண்டுள்ளது. 

“ராமரை அடுத்து கிருஷ்ணரும் பிடிவாதம் பிடிக்கிறார்” – மதுரா மசூதி விவகாரத்தில் உ.பி முதல்வர் யோகி கருத்து

லக்னோ: அயோத்தியில் ராமருக்கு பிரம்மாண்ட கோயில் கட்டப்பட்டதை அடுத்து, தற்போது கிருஷ்ணரும் பிடிவாதம் பிடிக்கிறார் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அம்மாநில சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். மதுரா மசூதி விவகாரத்திலேயே அவர் இந்தக் கருத்தைப் பதிவு செய்துள்ளார். உத்தரப் பிரதேச சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், “அயோத்தியில் ராம ஜென்ம பூமியில் ராமருக்கு பிரம்மாண்ட கோயில் கட்டப்பட்டிருப்பதில் நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். தான் பிறந்த இடம் இதுதான் என குழந்தை ராமரே … Read more

PM Modi: இடஒதுக்கீட்டுக்கு எதிரானவர் நேரு… மாநிலங்களவையில் பிரதமர் மோடி கடும் தாக்கு!

PM Modi Attacking Nehru: முன்னாள் பிரதமர் நேரு அனைத்து விதமான இடஒதுக்கீடுக்கும் எதிரானவர் என பிரதமர் மோடி மாநிலங்களவையில் ஆற்றிய உரையில் கடுமையாக சாடி உள்ளார்.

“இடஒதுக்கீட்டை நேரு தீர்க்கமாக எதிர்த்தார்” – மாநிலங்களவையில் பிரதமர் மோடி சரமாரி குற்றச்சாட்டு

புதுடெல்லி: “பட்டியலினத்தவர், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கு இடஒதுக்கீட்டுக்கு எதிராகவே காங்கிரஸ் எப்போதும் செயல்பட்டிருக்கிறது. இடஒதுக்கீட்டை நேரு தீர்க்கமாக எதிர்த்தார்” என பிரதமர் மோடி பேசினார். மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது பிரதமர் மோடி இந்தக் கருத்தை முன்வைத்தார். மாநிலங்களவையில் பிரதமர் மோடி இன்று (புதன்கிழமை) ஆற்றிய உரையில்,“முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு தனது ஆட்சிக் காலத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதியவர். பிரதமராக இருந்த நேரு, மாநில முதல்வர்களுக்கு … Read more