1.9 கோடி ஏழை குடும்பங்களுக்கு மேலும் 2 ஆண்டுகளுக்கு சர்க்கரை மானியம்

புதுடெல்லி: நாடு முழுவதும் 1.9 கோடி ஏழை குடும்பங்களுக்கு சர்க்கரைக்கு வழங்கப்படும் மானியத்தை மேலும் 2 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது. அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் ஏழை குடும்பங்களுக்கு மானிய விலையில் சர்க்கரை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் கிலோ சர்க்கரைக்கு மத்திய அரசு ரூ.18.50 மானியம் வழங்குகிறது. இந்நிலையில் இந்த மானியத்தை மார்ச் 2026 வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் 1.89 கோடி குடும்பங்கள் … Read more

ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள், தொண்டர்கள் கைது; டெல்லியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு: முதல்வர் கேஜ்ரிவால் கண்டனம்

புதுடெல்லி: சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேடு நடந்ததாகக் கூறி பாஜக தலைமையகத்துக்கு வெளியே ஆம் ஆத்மி கட்சி இன்று (வெள்ளிக்கிழமை) போராட்டம் நடத்தி வரும் நிலையில், டெல்லியில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள், கட்சி தொண்டர்கள் கைது செய்யப்பட்டு வருவதாக முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேடு நடந்ததாகக் கூறி பாஜக தலைமையகத்துக்கு வெளியே ஆம் ஆத்மி கட்சி இன்று வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், டெல்லி முதல்வா் அரவிந்த் … Read more

உத்தராகண்ட் முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டது பொது சிவில் சட்ட வரைவு மசோதா

டேராடூன்: உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியிடம், பொது சிவில் சட்ட வரைவு மசோதா சமர்ப்பிக்கப்பட்டது. உத்தராகண்ட் முதல்வராக புஷ்கர் சிங் தாமி 2-வது முறையாக பொறுப்பேற்ற பிறகு, தாம் அளித்திருந்த வாக்குறுதிப்படி கடந்த 2022 மார்ச் 23-ம் தேதி நடத்தப்பட்ட முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், பொது சிவில் சட்டத்தை உத்தராகண்ட் மாநிலத்தில் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் … Read more

ஹேமந்த் சோரனுக்கு அடுத்து அரவிந்த் கேஜ்ரிவாலா? – இக்கட்டான சூழலில் ‘இண்டியா’ கூட்டணி!

‘பாஜகவை ஆட்சியிலிருந்து இறக்க வேண்டும்’ என்ற நோக்கில் நாடு முழுதும் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து தொடங்கிய ‘இண்டியா’ கூட்டணி நாளுக்கு நாள் பின்னடவைச் சந்தித்து வருகிறது. ஒருபுறம் கூட்டணியிலிருந்து மூன்று மாநில கட்சிகள் வெளியேறின. மற்றொரு புறம் கூட்டணி கட்சித் தலைவர் மீது சிபிஐ, அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன், அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டிருக்கிறார். அடுத்ததாக, ‘அரவிந்த் கேஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்படுவார்’ என பாஜக … Read more

வாசனை திரவிய தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: சுமார் 19 பேர் காயம் @ இமாச்சல்

சோலன்: இமாச்சல பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் உள்ள வாசனை திரவிய தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டனர். நள்ளிரவு நேரப்படி இதில் சுமார் 19 பேர் காயமடைந்த நிலையில், அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல். சோலன் மாவட்டத்தின் கீழ் உள்ள ஜார்மஜ்ரி பகுதியில் உள்ள நலகரில் செயல்பட்டு வந்த வாசனை திரவிய தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. … Read more

“மேயர் தேர்தலிலேயே முறைகேடு எனில், பிற தேர்தல்களில்…” – பாஜக மீது கேஜ்ரிவால் சாடல்

புதுடெல்லி: சண்டிகர் மேயர் தேர்தல் குறித்து பாஜகவை சாடிய டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், “மேயர் தேர்தலிலேயே முறைகேடு செய்கிறவர்கள் சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தல்களில் எந்த எல்லை வரைக்கும் செல்வார்கள்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். முன்னதாக இந்தப் போராட்டம் அங்கிருந்து சில நூறு மீட்டர்கள் தள்ளியுள்ள டிடியு மார்க்கில் … Read more

ஒய்.எஸ்.ஆர் வாரிசு யார்? – தொண்டர்களின் கொதிப்பும், ஷர்மிளாவின் பதிலடியும் @ ஆந்திர அரசியல்

கடப்பா: சமீபத்தில் ஆந்திர மாநிலம் கடப்பாவில் நடந்த காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் அக்கட்சியின் புதிய மாநிலத் தலைவர் ஷர்மிளா பேசுகையில், “நான் ஒய்.எஸ்.ஷர்மிளா ரெட்டி, என் மகன் ஒய்.எஸ்.ராஜா ரெட்டி. நான் ஒய்.எஸ்.ஆரின் ரத்தம். கடப்பா மாவட்டத்தில் உள்ள ஜம்மலமடுகுவில் முதல்வர் ஜெகன் பிறந்த அதே மருத்துவமனையில்தான் நானும் பிறந்தேன். ஜெகன் உடம்பில் பாயும் அதே ரத்தம் என்னுடைய உடம்பிலும் பாய்கிறது. ஜெகன் முதல்வரான பிறகு, தனக்கு ஆதரவாக நின்ற 18 காங்கிரஸ் எம்எல்ஏக்களை ஓரங்கட்டி விட்டார். … Read more

பட்ஜெட்டில் ஜனரஞ்சக அறிவிப்புகள் இல்லாதது ஏன்? – நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்

புதுடெல்லி: பட்ஜெட்டில் ஜனரஞ்சக அறிவிப்புகள் இல்லாதது ஏன் என்ற கேள்விக்கு, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது, நாடாளுமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில், தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட்டில் வருமான வரி உச்சி வரம்பை உயர்த்துவது போன்ற ஜனரஞ்சக அறிவிப்புகள் இடம்பெறாதது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த … Read more

கியான்வாபி மசூதி பாதாள அறையில் இந்துக்கள் வழிபட இடைக்கால தடை விதிக்க அலகாபாத் ஐகோர்ட் மறுப்பு

புதுடெல்லி: வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதியின் தரைத்தளத்தின் கீழ் உள்ள பாதாள அறையில் இந்துக்கள் வழிபாடு நடத்த வாரணாசி நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க அலகாபாத் உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தை ஒட்டி உள்ள கியான்வாபி மசூதி, கோயிலை இடித்து கட்டப்பட்டது என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த மசூதிக்குள் உள்ள கோயிலின் அர்ச்சகருடைய வாரிசுதாரர் சைலேந்திர குமார் பதக் என்பவர் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். … Read more

பட்ஜெட் உரையில் மிடிள் கிளாசுக்கு சூசகமாக குட் நியூஸ் சொன்ன நிதி அமைச்சர்: நோட் பண்ணீங்களா?

Budget 2024: மக்களின் முழு ஆதரவுடன் வரும் தேர்தலிலும் தங்கள் கட்சியே பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என நம்பிக்கை தெரிவித்த நிதி அமைச்சர், ஆட்சிக்கு வந்தால் தாங்கள் திட்டமிட்டுள்ள பல நலத்திட்டங்கள் பற்றியும் குறிப்பு காட்டியுள்ளார்.