ஜெகன் அரசின் ரூ.1,500 கோடி பாக்கியால் ஆந்திராவில் இலவச மருத்துவ காப்பீடு முடக்கம்: பொதுமக்கள் கடும் அவதி

அமராவதி: ஆந்திராவில் தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளில் வழங்கப்பட்டு வந்த இலவச மருத்துவ காப்பீடு திட்ட சேவைகள் நேற்று முதல் முடங்கின. ஜெகன் அரசு ரூ.1,500 கோடி வரை பாக்கி வைத்துள்ளதால் அரசுடன் நடந்த பேச்சு வார்த்தையும் தோல்வி அடைந்தது. இதனால், பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர். ஆந்திர மாநிலத்தில் முதன் முறையாக ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி முதல்வராக இருந்தபோது, ’ராஜீவ் ஆரோக்கிய ஸ்ரீ’ எனும் இலவச மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்தினார். இதன்மூலம் ஆயிரக்கணக்கான ஏழை,நடுத்தர வர்க்க … Read more

பிரச்சாரத்தின்போது சாதி, மத பேச்சுகளை தவிர்க்க வேண்டும்: பாஜக, காங்கிரஸுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

புதுடெல்லி: தேர்தல் பிரச்சாரங்களின்போது சாதி, மதம் குறித்த வெறுப்பு பேச்சுகளை தவிர்க்க வேண்டும் என்று பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. நாட்டின் தேர்தல் பாரம்பரியத்தை பாதிக்கக்கூடிய வகையில் பிரச்சாரம் மேற்கொள்வதை அனுமதிக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தலை 7 கட்டங்களாக நடத்தி முடிக்க திட்டமிட்ட தேர்தல் ஆணையம் இதுதொடர்பான அறிவிப்பை கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது. திட்டமிட்டபடி, மக்களவை தேர்தலில் இதுவரை 5 … Read more

மேற்கு வங்கத்தில் ஓபிசி பட்டியலில் இருந்து பல பிரிவினர் நீக்கம்: கொல்கத்தா உயர் நீதிமன்றம் தீர்ப்பு

கொல்கத்தா: சேவைகள் மற்றும் பதவிகளில் காலியிடங்கள் இட ஒதுக்கீடு சட்டம் 2012-ன் கீழ் மேற்கு வங்க பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினர் தவிர) சான்றிதழ் பெற்றவர்களின் ஓபிசி அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக கொல்கத்தா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித் துள்ளது. நீதிபதிகள் தபப்ரதா சக்ரவர்த்தி மற்றும் ராஜசேகர் மந்தா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது. தீர்ப்பில் கூறி யிருப்பதாவது: கடந்த 2010-ம் ஆண்டு மார்ச் 5-ம் தேதியிலிருந்து 2012-ம் ஆண்டு மே 11-ம் … Read more

முதல்முறையாக வாக்கு செலுத்திய பழங்குடியினர்: தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பாராட்டு

அந்தமான் நிக்கோபார் மக்களவைத் தொகுதியில் முதன்முறையாக ஷோம்பென் பழங்குடியினர் இம்முறை வாக்களித்தனர். எளிதில் பாதிக்கக்கூடிய பழங்குடியினக் குழக்களில் ஒன்றாக ஷோம்பென் பழங்குடியினர் கருதப்படுகின்றனர். நிக்கோபார் தீவின் அடர்ந்த வெப்ப மண்டல காடுகளில் வசிக்கும் இவர்களில் ஏழு பேர் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்ற முதல் கட்ட வாக்கெடுப்பில் பங்கேற்று வாக்கு செலுத்தியபோது அவர்களின் புகைப்படம் எடுக்கப்பட்டது. இந்நிலையில், அந்த புகைப்படங்களில் ஒன்றை தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா வெளியிட்டு எழுதிய … Read more

400 தொகுதிக்கு மேல் வெற்றி என்ற பாஜகவின் முழக்கம் முழுவதும் கற்பனையானது: சசி தரூர்

புதுடெல்லி: தேசிய ஜனநாயகக் கூட்டணி இம்முறை 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்ற பாஜகவின் முழக்கம் ஒரு முழுமையான கற்பனை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சசி தரூர், “400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி என பாஜக பேசத் தொடங்கியபோதே, இது முழுக்க முழுக்க கற்பனை என்பது தெளிவாகத் தெரிந்தது. கடந்த 2019-ல் நடந்த தேர்தல், மோடி அரசின் முதல் 5 ஆண்டு கால பொருளாதார தோல்வி … Read more

‘தமிழகத்துக்கு நிலக்கரி விற்றதில் அதானி நிறுவனம் மெகா ஊழல்?’ – ராகுல் காந்தி பதிவால் சலசலப்பு

புதுடெல்லி: அதிமுக ஆட்சியின்போது நிலக்கரி இறக்குமதியில் ஊழல் நடந்துள்ளதாக வெளியான செய்தி ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, “பாஜக ஆட்சியில் நடந்த மிகப் பெரிய நிலக்கரி ஊழல் அம்பலமாகியுள்ளது” என்று தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், “பாஜக ஆட்சியில் மிகப் பெரிய நிலக்கரி ஊழல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பல வருடங்களாக நடந்து வரும் இந்த மோசடி மூலம் மோடி ஜி-யின் அபிமானத்துக்குரிய நண்பர் அதானி தரம் குறைந்த … Read more

“என்னை பூமிக்கு அனுப்பியதே அந்த பரமாத்மா தான்!” – பிரதமர் மோடி

வாராணசி: “நான் பயோலாஜிக்கலாக பிறக்கவில்லை, என்னை இந்த பூமிக்கு அனுப்பியது அந்த பரமாத்மா தான்” என்று பிரதமர் மோடி கூறியது வைரலாகி வருகிறது. மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி மீண்டும் வாராணசி தொகுதியில் போட்டியிடுகிறார். வாராணசியில் கடைசி கட்டமாக தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி, ஊடகங்களுக்கும் பேட்டியளித்து வருகிறார். அதன்படி, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு செவ்வாய்க்கிழமை பேட்டியளித்த மோடியிடம், நிருபர் ‘நீங்கள் எப்போதும் சோர்வடையாமல் பணியாற்றுகிறீர்கள். உங்களின் ஆற்றலுக்கு என்ன காரணம்?’ … Read more

இந்தியக் கடலோர காவல் படையில்  மேம்படுத்தப்பட்ட ‘டோர்னியர் – 228’ ரக விமானங்கள் இணைப்பு

சென்னை: இந்தியக் கடலோர காவல்படையில் சேர்க்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட இரண்டு ‘டோர்னியர் – 228’ ரக விமானங்கள் இணைக்கப்பட்டுள்ளன. சென்னை வந்த இந்த விமானங்களுக்கு பராம்பரிய முறையில் தண்ணீர் பீய்ச்சி அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியக் கடலோரக் காவல்படையின் கிழக்குப் பிராந்திய படைப் பிரிவில் 2 அதிநவீன ‘டோர்னியர் – 228’ விமானங்கள் இணைக்கப்பட்டு, அதன் விமானப் படை பலப்படுத்தப்பட்டுள்ளது. புதிதாக சேர்க்கப்பட்டுள்ள இந்த விமானங்கள் கான்பூரில் இருந்து இன்று சென்னை வந்தடைந்தன. இந்த விமானங்கள் பாரம்பரிய முறையில் … Read more

மேற்கு வங்கத்தில் 2010-க்குப் பின் வழங்கப்பட்ட அனைத்து ஓபிசி சான்றிதழ்களும் ரத்து: கொல்கத்தா ஐகோர்ட்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 2010-க்குப் பின் வழங்கப்பட்ட அனைத்து ஓபிசி சான்றிதழ்களும் ரத்து செய்யப்படுவதாக கொல்கத்தா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேற்கு வங்க பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினர் தவிர) (சேவைகள் மற்றும் பதவிகளில் காலியிடங்கள் இடஒதுக்கீடு) சட்டம், 2012-க்கு எதிராக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பல்வேறு மனுக்கள் மீது நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து, இந்த வழக்கில் கொல்கத்தா உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. நீதிபதிகள் தபப்ரதா சக்ரவர்த்தி மற்றும் ராஜசேகர் … Read more

“திமுக தலைவர் போல செயல்படுகிறார் வி.கே.பாண்டியன்” – பாஜக விமர்சனம்

புவனேஸ்வர்: “தமிழகத்தில் இருந்து ஒடிசாவுக்கு பணியமர்த்தப்பட்ட அதிகாரியான வி.கே.பாண்டியன், திமுக தலைவரைப் போல நடந்து கொள்கிறார்” என்று பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான தர்மேந்திர பிரதான் விமர்சித்துள்ளார். ஒடிசாவின் சம்பல்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தர்மேந்திர பிரதான், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், “மக்களவைத் தேர்தல் மற்றும் ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக மிகப் பெரிய வெற்றியை பெறும். தொடர்ந்து 25 ஆண்டுகலாக ஆட்சியில் இருந்து வரும் பிஜு ஜனதா தளத்தின் மோசமான செயல்பாடு … Read more