மேற்கு வங்க ஹிஜாப் சர்ச்சை | கல்லூரியில் மீண்டும் சேர விருப்பமில்லை: ஆசிரியர் சஞ்சிதா காதர்

கொல்கத்தா: ஹிஜாப் அணிவதற்குப் பதிலாக, துப்பட்டாவால் தலையை மூடிக்கொள்ள கல்லூரி நிர்வாகம் அனுமதித்த நிலையில், பணியில் மீண்டும் சேர வேண்டாம் என்ற முடிவை தான் எடுத்துள்ளதாக ஆசிரியை சஞ்சிதா காதர் தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் உள்ள தனியாருக்குச் சொந்தமான எல்ஜேடி சட்டக் கல்லூரியில் ஆசிரியையாக சுமார் மூன்று ஆண்டு காலம் பணியாற்றி வந்தவர் சஞ்சிதா காதர். கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து அவர் ஹிஜாப் அணிந்து பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், மே 31-ம் தேதிக்கு பிறகு பணியிடத்துக்கு ஹிஜாப் … Read more

குவைத் விபத்து: 7 தமிழர்கள் உடல்கள் கொச்சி வந்தடைந்தது – சொந்த ஊர்களுக்கு அனுப்ப நடவடிக்கை

கொச்சி: குவைத் நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உட்பட 45 இந்தியர்களின் உடல்கள் இந்திய ராணுவ விமானத்தின் மூலம் கொச்சி கொண்டுவரப்பட்டன. இதில், கேரளாவைச் சேர்ந்த 23 பேர், தமிழகத்தைச் சேர்ந்த 7 பேர், ஆந்திராவைச் சேர்ந்த மூவர், கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவரின் உடல்கள் கொச்சியில் ஒப்படைக்கப்படுகிறது. கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் உடல்களைப் பெற, கேரள முதல்வர் பினராயி விஜயன், மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி மற்றும் மாநில அமைச்சர்கள் … Read more

குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்

புதுடெல்லி: குவைத் நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உட்பட 45 இந்தியர்களின் உடல்களுடன் இந்திய விமானப் படை விமானம் மூலம் தாயகம் கொண்டுவரப்படுகிறது. இந்த விமானம் இன்று (வெள்ளி) காலை 11 மணியளவில் கேரள மாநிலம் கொச்சி சர்வதேச விமான நிலையம் வந்தடைகிறது இதனை மத்திய இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தனது எக்ஸ் சமூகவலைதளப் பதிவு மூலம் உறுதி செய்துள்ளார். இந்திய விமானப் படை விமானத்தில் சென்ற … Read more

மரண தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதியின் கருணை மனு நிராகரிப்பு

புதுடெல்லி: டெல்லி செங்கோட்டை தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான்தீவிரவாதியின் கருணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2000-ம் ஆண்டு டிசம்பர்22-ம் தேதி டெல்லி செங்கோட்டையில் பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் இருராணுவ வீரர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக டெல்லி போலீஸார் விசாரணை நடத்தி, கடந்த 2001-ம் ஆண்டில் பாகிஸ்தானை சேர்ந்த முகமது ஆரீபை கைது செய்தனர். கடந்த 2005-ம் ஆண்டில் டெல்லி விசாரணை நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து … Read more

கங்கனாவை பெண் காவலர் தாக்கிய விவகாரம்: பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்…!

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளரை விட 74,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் நடிகை கங்கனா ரனாவத். கடந்த 6-ம் தேதியன்று டெல்லிக்குச் செல்வதற்காக சண்டிகர் விமான நிலையத்துக்கு கங்கனா வந்தார். அப்போது அங்கிருந்த பெண் காவலர் குல்விந்தர் கவுர் என்பவர் எதிர்பாராத வகையில் கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்தார். இந்த சம்பவமும் அதைத் தொடர்ந்து வெளியாகும் கருத்துக்களும் நாடு முழுவதும் பேசுபொருளாகி இருக்கின்றன. … Read more

ஜி7 மாநாட்டில் பங்கேற்க இத்தாலி சென்றார் பிரதமர் நரேந்திர மோடி

புதுடெல்லி: ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று இத்தாலி சென்றார். கடந்த 1973-ம் ஆண்டில் ஜி7 அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. ஜி7 அமைப்பின் 50-வது உச்சி மாநாடு இத்தாலியின் ஃபசானோ நகரில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று டெல்லியில் இருந்து இத்தாலிக்கு சென்றார். மாநாட்டில் இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில் அவர் … Read more

ஐஸ்கிரீமில் மனித விரல் – ஆன்லைனில் ஆர்டர் செய்தவருக்கு அதிர்ச்சி @ மும்பை

மும்பை: மும்பையில் மருத்துவர் ஒருவர் ஆன்லைனில் ஆர்டர் செய்த ஐஸ்கிரீம் கோனில் மனித விரல் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அந்த விரல் சுமார் 2 செமீ நீளம் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராமாநிலம், மும்பையில் பிரெண்டன் ஃபெராவ் (Dr. Brendan Ferrao- 27) என்ற மருத்துவர் ஆன்லைன் டெலிவரி செய்யும் செயலி மூலம் கோன் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்திருக்கிறார். அவர் ஆர்டர் செய்ததுபோல ஐஸ்கிரீம் வந்திருக்கிறது. அதை அதீத ஆர்வத்துடன் … Read more

கேரள சலசலப்பு: பாதிரியாருக்கு ஆதரவாக பினராயியை எதிர்க்கும் இடதுசாரிகள்!

மக்களவை தேர்தலில் மீண்டும் மிகப் பெரிய தோல்வி. 2019 போல் இந்த முறையும் 19 தொகுதிகளிலும் தோற்று ஒன்றில் மட்டுமே வென்றது கேரளாவில் ஆளும் சிபிஎம் (எல்டிஎஃப்) கூட்டணி. தொடர் தோல்விகள் விமர்சனங்களுக்கு வித்திட்டது. ஆனால, இந்த விமர்சனங்களுக்கு முதல்வர் பினராயி விஜயன் கொடுத்து வரும் பதில்கள், இடதுசாரிகளே அவரை எதிர்க்கும் அளவுக்கு சென்றிருக்கிறது. என்ன நடந்தது? – “கேரளாவில் இடதுசாரிகள் தொடர்ந்து மக்கள் அளிக்கும் அதிர்ச்சி தோல்விகளில் இருந்து பாடம் கற்கத் தயாராக இல்லை என்றால், … Read more

ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு நிலைமை குறித்து பிரதமர் மோடி ஆய்வு

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு நிலைமை குறித்து ஆய்வு செய்த பிரதமர் நரேந்திர மோடி, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை முழு வீச்சில் மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளார். ஜம்மு காஷ்மீரின் ரியாசி பகுதியில் கடந்த 9-ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. பக்தர்கள் சென்ற பேருந்தை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். 42 பேர் காயமடைந்தனர். இதன் தொடர்ச்சியாக கத்துவா மற்றும் தோடா பகுதிகளிலும் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதனால், ஜம்மு காஷ்மீரில் மீண்டும் … Read more

ஜம்மு – காஷ்மீரில் அனைத்து பள்ளிகளிலும் தேசிய கீதம் கட்டாயம்: புதிய உத்தரவு அமல்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தேசிய கீதத்துடன் காலை வகுப்புகளை தொடங்குமாறு அம்மாநில பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளர் அலோக் குமார் மாநிலம் முழுவதுமுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், சரியான வழிகாட்டுதல்களின்படி பள்ளிகளில் காலை அசெம்பிளி தேசிய கீதத்துடன் தொடங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “காலை அசெம்பிளி என்பது ஒருமைப்பாடு மற்றும் மன அமைதி ஆகியவற்றை வளர்ப்பதற்கான தளங்களாக செயல்படுகின்றன. … Read more