கேஜ்ரிவால் போனில் இருந்து ஆம் ஆத்மி தேர்தல் உத்தியை அமலாக்க துறை அறிய முயற்சி: டெல்லி அமைச்சர் ஆதிஷி குற்றச்சாட்டு

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் அர்விந்த்கேஜ்ரிவால் 6 நாள் அமலாக்கத் துறை காவலுக்கு பிறகு வியாழக்கிழமை டெல்லி ரோஸ் அவென்யூநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஏப்ரல் 1-ம் தேதி வரை மேலும் 4 நாட்களுக்கு அமலாக்கத் துறை காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்நிலையில் டெல்லி கல்விஅமைச்சர் ஆதிஷி நேற்று கூறியதாவது: டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நடந்த விசாரணையில் கேஜ்ரிவால்தனது மொபைல் பாஸ்வேர்டை தர மறுப்பதால் அவரை மேலும் சில … Read more

அமெரிக்க, இங்கிலாந்து போர்க்கப்பல்களின் பராமரிப்பு மையமாக மாறுகிறது சென்னை

புதுடெல்லி: சென்னை காட்டுப்பள்ளியில் உள்ள எல் அண்ட் டி நிறுவனத்தின் கப்பல் கட்டும் துறைமுகத்தில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போர்க்கப்பல்கள் பழுது பார்க்கப்படவுள்ளன. சீனா தனது கடற்படை கப்பல்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. இதன் மூலம் தென் சீன கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதனால் சீனா மற்றும் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா தனது கடற்படையையும் தொடர்ந்து வலுவாக வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்தோ – பசிபிக் கடல் பகுதிகளில் பயணிக்கும் போர்க்கப்பல்களை … Read more

மேகேதாட்டு திட்டத்தை எழுப்பும் கர்நாடகா: ஏப்ரல் 4-ல் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்

புதுடெல்லி / பெங்களூரு: காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளுமாறு தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 4 மாநில நீர்ப்பாசனத் துறை உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் 28-வது கூட்டம் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி டெல்லியில் நடைபெற்றது. அப்போது தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி காவிரி நீரை திறந்து விட உத்தரவிடப்பட்ட‌து. தமிழகத்தின் எதிர்ப்பை மீறி மேகேதாட்டு … Read more

“பயிற்சி இல்லையெனில், ஏஐ-யை தவறாக பயன்படுத்த வாய்ப்பு”: பில் கேட்ஸ் – மோடி உரையாடல் ஹைலைட்ஸ்

புதுடெல்லி: “முறையான பயிற்சி இல்லாமல் ஒருவருக்கு ஏஐ தொழில்நுட்பம் போன்ற நல்ல விஷயம் கொடுக்கப்பட்டால், அது தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது.” என்று ஏஐ தொடர்பான ஆபத்துகள் குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸிடம் பிரதமர் நரேந்திர மோடி எடுத்துக்கூறினார். உலக கோடீஸ்வரர்களில் ஒருவரும் மைக்ரோசாப்ட் உரிமையாளருமான பில் கேட்ஸ் இந்தியா வந்துள்ளார். அவர் டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் பிரதமர் மோடியைச் சந்தித்து சில மணிநேரங்கள் உரையாடினார். இந்த உரையாடலின்போது பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விதித்துள்ளனர். … Read more

“உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்” – கேஜ்ரிவால் கைது குறித்து ஐ.நா. கருத்து

புதுடெல்லி: தேர்தல் நடைபெறும் எந்தவொரு நாட்டையும் போலவே இந்தியாவிலும் அனைவரது உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று விரும்புவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. செய்தியாளர் சந்திப்பில் கேஜ்ரிவால் கைது, காங்கிரஸ் வங்கி கணக்குகள் முடக்கம் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக், “தேர்தல் நடைபெறும் எந்தவொரு நாட்டையும் போலவே இந்தியாவிலும் அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் உட்பட அனைவரின் உரிமைகளும் பாதுகாக்கப்பட்டு சுதந்திரமான மற்றும் நியாயமான சூழ்நிலையில் அனைவரும் வாக்களிக்க … Read more

டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலுக்காக வாட்ஸ் – அப் பிரச்சாரத்தை அறிவித்த மனைவி சுனிதா

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்காக அவரது மனைவி சுனிதா ‘கேஜ்ரிவாலுக்கு வாழ்த்துகள்’ என்ற வாட்ஸ் அப் பிரச்சாரத்தை இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளார். சிறையில் இருக்கும் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மக்கள் வாழ்த்துகள் அனுப்ப வாட்ஸ் அப் எண் ஒன்றை அறிவித்துள்ளார். இதுகுறித்து சுனிதா வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் கூறியிருப்பதாவது: “இன்றிலிருந்து ‘கேஜ்ரிவாலுக்கு வாழ்த்துகள்” என்ற ஒரு இயக்கத்தை நாங்கள் தொடங்குகிறோம். இந்த எண்ணின் மூலம் நீங்கள் உங்கள் ஆசீர்வாதங்கள் மற்றும் பிரார்த்தனைகளை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கேஜ்ரிவாலுக்கு அனுப்பலாம்” … Read more

cVIGIL | நாடு முழுவதும் சி-விஜில் செயலியில் இதுவரை 79,000+ விதிமீறல் புகார்கள் பதிவு

புதுடெல்லி: தேர்தல் விதிமீறல் குறித்த புகார்களைத் தெரிவிக்க சி-விஜில் (cVIGIL) செயலி மக்களிடத்தில் சிறந்த கருவியாக மாறியுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து இதுவரை 79,000-க்கும் மேற்பட்ட விதிமீறல் புகார்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்தப் புகார்களில் 99 சதவீத புகார்கள் தீர்க்கப்பட்டு விட்டதாகவும், அவற்றில் 89 சதவீத புகார்கள் 100 நிமிடங்களுக்குள் தீர்க்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்த தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி, 58,500 புகார்கள் (மொத்த புகார்களில் … Read more

சமோசா ரூ.15, பிரியாணி ரூ.150… பிற மாநிலங்களில் வேட்பாளர் செலவின விலைப் பட்டியல் எப்படி?

புதுடெல்லி: மக்களவையைத் தேர்ந்தெடுக்கும் திருவிழாவுக்கு நாடே தயாராகி வருகிறது. அரசியல் கட்சிகள் பரபரப்பாக பிரச்சாரத்தில் இருக்கும் நேரத்தில் வேட்பாளர்களின் தேர்தல் செலவு குறித்து விலைப் பட்டியலை நிர்ணயித்துள்ளது தேர்தல் ஆணையம். அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலர்கள் இந்த விலைப் பட்டியலை நிர்ணயம் செய்து கண்காணித்தும் வருகின்றனர். அவற்றில் உணவு குறித்த விவரம் பார்ப்போம். டீ, சமோசா தொடங்கி சைவம், அசைவம், லஸ்ஸி, தந்தூரி, தோதா, தால் மக்னி என வகை வகையாய் நீள்கிறது பட்டியல். தமிழகம், ஆந்திரா … Read more

பிரியங்காவின் ராஜஸ்தான் நம்பிக்கை… யார் இந்த சஞ்சனா ஜாதவ்? | 2024 தேர்தல் கள புதுமுகம்

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் களம் காணும் கவனிக்கத்தக்க புதுமுக வேட்பாளர்களைப் பற்றி பார்த்து வருகிறோம். அந்த வகையில், ராஜஸ்தானின் பாரத்பூர் தொகுதியில் களம் காண்கிறார் 26 வயதான சஞ்சனா ஜாதவ். இவர் பட்டியலின மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு முக்கிய இளம் தலைவராக பார்க்கப்படுகிறார். ராஜஸ்தானில் இந்த முறை காங்கிரஸ் கட்சி வித்தியாசமான வியூகம் வகுத்து செயல்படுவதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்குள் வளர்ந்து வரும் அரசியல்வாதியான சஞ்சனா ஜாதவ், காங்கிரஸ் தலைமையை எப்படி இந்த சிறு வயதிலேயே … Read more

“அன்று பிஹாரில் ராப்ரி தேவி… இன்று டெல்லியில் சுனிதா கேஜ்ரிவால்…” – மத்திய அமைச்சர்

புதுடெல்லி: “பிஹாரில் ராப்ரி தேவி செய்தது போல் டெல்லியில் தலைமை பதவியை வகிக்கத் தயாராகி வருகிறார் அரவிந்த் கேஜ்ரிவால் மனைவி சுனிதா” என்று மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஹர்தீப் சிங் பூரியிடம் அரவிந்த் கேஜ்ரிவால் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஹர்தீப் சிங் பூரி, “ஒன்பது முறை அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியும் கேஜ்ரிவால் பதிலளிக்கவில்லை. அதன்பின்னரே அமலாக்கத் … Read more