“அமைச்சர் பதவியில் விருப்பமில்லை, விரைவில் நான் விடுவிக்கப்படலாம்” – நடிகர் சுரேஷ் கோபி

திருவனந்தபுரம்: “கேரள மக்களின் பிரதிநிதியாக மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பது பெருமைக்குரிய விஷயம்” என்று மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகப்போவதாக வெளியான தகவலுக்கு நடிகர் சுரேஷ் கோபி மறுப்பு தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பதவியேற்பு நேற்று நடந்தது. இதில் கேரள மாநிலத்தை பிரிதிநிதித்துவப்படுத்தும் வகையில் கேரளாவின் முதல் பாஜக எம்.பி.யாக திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற மலையாள சூப்பர் ஸ்டார் சுரேஷ் கோபி மத்திய … Read more

மோடி பதவியேற்பு விழாவில் சிறுத்தையா…? வீடியோவில் தெரியும் மர்ம விலங்கு – வைரல்!

PM Modi Sworn In Ceremony: ராஷ்டிரபதி பவனில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவின் போது, மேடைக்கு பின்புறும் இருந்த கட்டடத்தில் சிறுத்தை போன்ற தோற்றம் கொண்ட விலங்கு ஒன்று நடந்து செல்கிறது. அதன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

“இந்துக்கள் என்பதால் தீவிரவாதிகள் பேருந்தை தாக்கியுள்ளனர்” – கங்கனா ரனாவத் கண்டனம்

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று யாத்ரீகர்கள் பயணித்த பேருந்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 10 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு நடிகையும், பாஜக எம்.பி-யுமான கங்கனா ரனாவத் கண்டனம் தெரிவித்துள்ளார். “தீவிரவாதிகளின் இந்த கொடூர தாக்குதலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அவர்கள் வைஷ்ணவ் தேவி கோயிலுக்கு தரிசன நிமித்தமாக பேருந்தில் சென்று கொண்டு இருந்தனர். அவர்கள் இந்து மக்கள் என்பதால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். … Read more

PM Modi: பிரதமர் மோடி போட்ட முதல் கையெழுத்து… எதற்கு தெரியுமா?

PM Modi First File Sign: மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பின்னர், நரேந்திர மோடி விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை திட்டத்தின் கோப்புக்கு தனது முதல் கையெழுத்தை போட்டுள்ளார்.

ஆந்திராவில் ஜெகன் கட்சி வெற்றி பெறும் என ரூ.30 கோடி பந்தயம் கட்டியவர் தற்கொலை

ஏலூரு: ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுமென பலரிடம் ரூ.30 கோடி வரை பந்தயம் கட்டிய நபர், அக்கட்சி படுதோல்வியை சந்தித்ததால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தல்களில் தெலுங்கு தேசம் கூட்டணி 175 தொகுதிக்கு 164 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. இதேபோல், 25 மக்களவை தொகுதிகளில் தெலுங்கு தேசம் கூட்டணி 21 … Read more

“உயிரிழந்தது போல நடித்தோம்” – ஜம்மு காஷ்மீர் பேருந்து தாக்குதலில் பிழைத்தவர் வேதனைப் பகிர்வு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று யாத்ரீகர்கள் பயணித்த பேருந்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 10 பேர் உயிரிழந்தனர். இந்தச் சூழலில் உயிர் பிழைத்த ஒருவர் இறந்து போனது போல நடித்ததாக தெரிவித்துள்ளார். ரியாசியில் உள்ள சிவ் கோரி கோயிலுக்கு சென்றுவிட்டு கட்ரா நோக்கி யாத்ரீகர்கள் பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது பேருந்தை நோக்கி தீவிரவாதிகள் சுட்டனர். இதனால், பேருந்து ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்தது. இதில் … Read more

ஜம்மு காஷ்மீர் தாக்குதல்: ரியாஸி விரைந்தது என்ஐஏ குழு; ராணுவம் தேடுதல் வேட்டை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த 9 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தாக்குதல் நடந்த ரியாஸி மாவட்டத்தில் இன்று (ஜூன் 10) காலை முதல் ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக தாக்குதல் நடந்த அடர்ந்த வனப்பகுதியில் ராணுவத்தினர் ட்ரோன்களை பயன்படுத்தி தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவத்துக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இதற்கிடையில் இந்தச் சம்பவம் … Read more

மோடி 3.0 | பதவி ஏற்பு விழாவில் ஆசி வழங்க வந்த மூன்றாம் பாலினத்தவர்

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடந்த பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க 50 மூன்றாம் பாலினத்தவர் வந்தனர். இதுகுறித்து பாஜக தலைவரும் முன்னாள் சமூக நீதித் துறை அமைச்சருமான வீரேந்திர குமார் கூறுகையில், “பதவி ஏற்பு விழா அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி விரும்பினார். குறிப்பாக, மூன்றாம் பாலினத்தவர்களையும் விழாவுக்கு அழைக்க வேண்டும் என்று கூறினார். இதற்காக 50 மூன்றாம் பாலினத்தவர்களுக்கு அழைப்பு வழங்கினோம். பதவி ஏற்பு விழாவில் … Read more

3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடந்த கோலாகல விழாவில் நரேந்திர மோடி மூன்றாவது முறைபிரதமராக பதவியேற்றுக் கொண்டார். அவரோடு 71 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதிமுதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல்நடைபெற்றது. கடந்த 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன. ஆட்சியமைக்க 272 எம்பிக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் பாஜக 240 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி … Read more

மத்திய அமைச்சரவையின் டாப் பணக்காரர்… யார் அந்த சந்திரசேகர் பெம்மசானி..!!

Richest Minister In PM Modi Govt 3.0: டாக்டர் சந்திரசேகர் பெம்மாசானி, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் குண்டூரில் (ஆந்திரப் பிரதேசம்) மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட பெம்மாசானி வெற்றி பெற்றார்.