IPL Final: மும்பை இந்தியன்ஸ் இல்ல.. "ஆர்சிபி அணிக்கும்…" அடித்து சொல்லும் முன்னாள் சிஎஸ்கே வீரர்!

Robin Uthappa Prediction: 2025 ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இன்று (மே 27) இத்தொடரின் கடைசி லீக் ஆட்டம் நடைபெற இருக்கிறது. நாளை மறுநாள் (மே 29) முதல் பிளே ஆஃப் சுற்றுக்கள் தொடங்க உள்ளது. ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணி தேர்வான நிலையில், தற்போது எலிமினேட்டருக்கு மும்பை அணியும் குவாலிஃபையர் 1க்கு பஞ்சாப் அணியும் தேர்வாகி … Read more

RCB இன்னைக்கு தோக்கனும்.. GTன் வேண்டுதல் இதுதான்?

IPL Playoff Race: ஐபிஎல் தொடரின் கடைசி லீக் ஆட்டம் இன்று (மே 27) லக்னோ ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில், ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகின்றன. இரவு 7 மணி டாஸ் வீசப்பட்டு 7.30 மணிக்கு தொங்டகும் இப்போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.  லக்னோ அணியை பொறுத்தவரையில் அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவர்கள் ஏற்கனவே … Read more

இந்த ஆண்டுடன் ஓய்வை அறிவிக்கும் 5 சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்!

ஐபிஎல் 2025-ன் லீக் போட்டிகள் இன்றுடன் முடிய உள்ளது. குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பிளே ஆப்க்கு தகுதி பெற்றுள்ளன. ஜூன் மூன்றாம் தேதி ஐபில் இறுதி போட்டி நடைபெற உள்ளது. இந்தாண்டு ஐபிஎல்லில் அதிக இளம் வீரர்கள் தங்களது திறனை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய ஐந்து வீரர்கள் ஓய்வை அறிவிக்க அதிக வாய்ப்புள்ளது. அவர்கள் யார் … Read more

கவுதம் கம்பீரால் ஓய்வை அறிவித்த மற்றொரு வீரர்! இங். தொடருக்கு முன்பு திடீர் ஓய்வு!

ஐபிஎல் முடிந்த பிறகு இந்திய அணி இங்கிலாந்துக்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள நிலையில்,  சுப்மான் கில் புதிய கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார், துணை கேப்டனாக ரிஷப் பந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் சில இளைஞர்களும் இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர். ஜூன் … Read more

சஞ்சு சாம்சன் இல்லை! சிஎஸ்கே-வில் தோனிக்கு பிறகு இவர் தான் விக்கெட் கீப்பர்!

சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் 2025-ல் தனது பயணத்தை முடித்துள்ளது. இருப்பினும் இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு மறக்க வேண்டிய ஒரு சீசன் ஆக அமைந்துள்ளது. 14 போட்டிகளில் விளையாடி வெறும் நான்கு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தை பிடித்துள்ளார். மேலும் தொடர்ந்து இரண்டு சீசன்களாக பிளே ஆப்க்கு தகுதி பெறாமல் இருப்பதும் இதுவே முதல் முறை. மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ், கொல்கத்தா நைட் … Read more

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; கார்லஸ் அல்காரஸ் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

பாரீஸ், ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், இத்தாலியின் கியுலியோ செப்பியேரி உடன் மோதினார். இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கார்லஸ் அல்காரஸ் 6-3, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் கியுலியோ செப்பியேரியை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார். 1 More update … Read more

ஹெதர் நைட் அரைசதம்…. வெஸ்ட் இண்டீஸ்க்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து

செல்ம்ஸ்போர்டு, வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. முதல் இரு டி20 போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக … Read more

ரோகித், கோலிக்கு பிறகு ஓய்வை அறிவிக்கப்போவது இவரா? வெளியான தகவல்!

இந்திய டெஸ்ட் அணி ஐபிஎல் தொடர் முடிந்ததும் இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணியை நேற்று முன்தினம் (மே 24) பிசிசிஐ வெளியிட்டது. அந்த அணிக்கு கேப்டனாக சுப்மன் கில்லும் துணை கேப்டனாக ரிஷப் பண்டும் நியமிக்கப்பட்டிருந்தனர்.  மேலும், அந்த அணி வேகப்பந்து வீச்சாளர்களாக பும்ரா, சிராஜ் ஆகியோ இடம் பிடித்திருந்தனர். ஆனால் முகமது ஷமியின் பெயர் அதில் இல்லை. இதற்கு காரணம் அவரால் நீண்ட … Read more

ஐ.பி.எல்.; பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 185 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை

ஜெய்ப்பூர், 10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று நாளையுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் ஜெய்ப்பூரில் இன்று இரவு நடைபெற்று வரும் 69-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து மும்பை அணியின் … Read more

மும்பையை துவம்சம் செய்த பிரியான்ஸ் & இங்கிலிஸ்.. குவாலிஃபையர் 1ல் பஞ்சாப் கிங்ஸ்!

ஐபிஎல் தொடரின் 69வது லீக் ஆட்டம் இன்று (மே 26) ஜெய்ப்பூரில் நடைபெற்றது. அப்போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் வெல்பவர்கள் புள்ளிப்பட்டியலின் முதல் இடத்திற்கு செல்வார்கள் என்பதால், மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட போட்டியாக இருந்தது. இப்போட்டியில் முதலில் மும்பை இந்தியன்ஸ் அணியே பேட்டிங் செய்தது. சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடி 57 ரன்கள் விளாசினார். மற்ற வீரர்களான ரோகித் சர்மா 24, ரிக்கல்டன் … Read more