மும்பை அணியில் இருந்து பும்ரா விலகல்! அவருக்கு பதில் விளையாடப்போவது இவர் தான்!

ஐபிஎல் 2025 தொடர் இந்த வாரம் சனிக்கிழமை கொல்கத்தாவில் தொடங்குகிறது. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் விளையாடுகின்றன. மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் போட்டியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுகிறது. இந்த போட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற உள்ளது.  துரதிஷ்டவசமாக மும்பை அணியில் உள்ள இரண்டு நட்சத்திர வீரர்கள் இந்த போட்டியில் விளையாட மாட்டார்கள். அவர்கள் வேறு யாரும் இல்லை, … Read more

கேப்டன் பொறுப்பையும், பேட்டிங்கையும் தனித்தனியாக பார்ப்பதுதான் நல்லது – சுப்மன் கில்

அகமதாபாத், ஐ.பி.எல் தொடரின் 18-வது சீசன் தொடங்க இன்னும் 3 நாட்களே உள்ளது. இதன் தொடக்க ஆட்டம் கொல்கத்தாவில் தொடங்குகிறது. இதில் கொல்கத்தா- பெங்களூரு அணிகள் மோதுகிறது. இந்த சீசனில் குஜராத் அணி சுப்மன் கில் தலைமையில் களம் இறங்குகிறது. இந்நிலையில் கேப்டன் பொறுப்பையும், பேட்டிங்கையும் தனித்தனியாக பார்ப்பதுதான் நல்லது என குஜராத் கேப்டன் சுப்மன் கில் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, கேப்டன் பொறுப்பையும், பேட்டிங்கையும் தனித்தனியாக பார்ப்பதுதான் நல்லது என நினைக்கிறேன். என்னுடைய … Read more

மியாமி ஓபன் டென்னிஸ்; அன்னா பிளிங்கோவா அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

புளோரிடா, மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் ரஷியாவின் கமிலா ரகிமோவா, சக நாட்டவரான அன்னா பிளிங்கோவா உடன் மோதினார். இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 4-6 என்ற புள்ளிக்கணக்கில் இழந்த அன்னா பிளிங்கோவா ஆட்டத்தின் அடுத்த இரு செட்களை 6-3, 6-2 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றி அசத்தினார். இறுதியில் இந்த ஆட்டத்தில் 4-6, 6-3, … Read more

ஐ.பி.எல். 2025: சி.எஸ்.கே அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த அம்பத்தி ராயுடு

சென்னை, இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த தொடரில் கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது. இந்த தொடரில் சென்னை அணி தனது தொடக்க ஆட்டத்தில் வரும் 23ம் தேதி மும்பை அணியை சேப்பாக்கம் மைதானத்தில் சந்திக்கிறது. இந்நிலையில், இப்போட்டிக்கு இந்திய முன்னாள் … Read more

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்: கிடாம்பி ஸ்ரீகாந்த் வெற்றி

பாசெல், சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நேற்று தொடங்கியது. வரும் 23-ம் தேதி வரை இத்தொடர் நடக்கிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளார்கள். இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், சக நாட்டு வீரர் எச்.எஸ்.பிரனாய் உடன் மோதினார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தி சிறப்பாக விளையாடிய ஸ்ரீகாந்த் 23-21, 23-21 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் … Read more

ஆர்சிபி இந்த வருடமாவது கோப்பையை வெல்லுமா? பலம், பலவீனம் என்ன? பிளேயிங் XI?

வரும் மார்ச் 22ஆம் தேதி ஐபிஎல் தொடர் தொடங்க இருக்கிறது. இத்தொடரை எதிர்பார்த்து ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். குறிப்பாக ஆர்சிபி அதாவது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ரசிகர்கள் கோப்பையை வென்றே ஆக வேண்டும் என்ற முடிவுடன் இருக்கின்றனர்.  இம்முறை ஆர்சிபி அணி புது தோற்றத்துடன் இருக்கின்றது. புதிய வீரர்கள் புதிய கேப்டன் என புது முகத்துடன் இம்முறை ஐபிஎல் தொடரை எதிர்கொள்கிறது. கேப்டனாக ரஜத் படிதார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கேப்டனாக்கப்பட்டது குறித்து கோலியும் பெருமையாக … Read more

இந்த வயதிலும் ஏன் ஐபிஎல் விளையாடுகிறாய்? தோனியிடமே கேட்ட ஹர்பஜன்

2025 ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது. இத்தொடருடன் பல முன்னணி வீரர்கள் ஓய்வு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் மிகவும் முக்கியமானவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்.எஸ்.தோனி.  இன்று வரை சென்னை ரசிகர்கள் சிலர் ஐபிஎல்லை விரும்புவது தோனிக்காகதான். ஐபிஎல்லில் தோனியின் பார்ப்பதற்காகவே பலர் மைதானத்திற்கு வருகிறார்கள். சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்றாலும் தோனி தொடர்ந்து ஐபிஎல் விளையாடி வருகிறார்.  அதேபோல் தோனிக்கு இந்த சீசன் தான் கடைசியாக … Read more

ஐபிஎல் 2025: IPL Ball Boy to பஞ்சாப் கேப்டன்.. ஸ்ரேயாஸ் ஐயர் நெகிழ்ச்சி!

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கும் 2025 ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது. இத்தொடரில் ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் என முக்கிய வீரர்களே கேப்டனாக இருந்த தங்களது அணியை விட்டு வேறு அணிகளுக்கு மாறினர்.  இதில் ரிஷப் பண்ட் லக்னோ அணிக்கு கேப்டனாவும் ஸ்ரேயாஸ் ஐயர் பஞ்சாப் அணிக்கு கேப்டனாகவும் இத்தொடரில் பயணம் செய்ய உள்ளனர். குறிப்பாக ஸ்ரேயாஸ் ஐயர் கடந்த  ஐபிஎல் தொடரில் கொல்கத்த நைட் … Read more

IPL 2025: கொல்கத்தாவில் நடைபெறும் போட்டி இடமாற்றம்? வெளியான தகவல்!

2025 ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது. முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இப்போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.  மைதானத்தை மாற்ற வாய்ப்பு  இந்த நிலையில், வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி அஜின்கியா ரகானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடஸ் அணியும் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்டஸ் அணியும் … Read more

மும்பை இந்தியன்ஸ் கேப்டன் மீண்டும் மாற்றம் – பரபரப்பு பின்னணி

Mumbai Indians New Captain : ஐபிஎல் 2025 தொடர் மார்ச் 22 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து பிரேங்கிங் நியூஸ் வெளியாகியுள்ளது. அந்த அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டயா முதல் போட்டியில் விளையாடமாட்டார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கேப்டன் பொறுப்பை ஹர்திக் பாண்டியா இழந்திருப்பதால் அவருக்கு பதிலாக இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கான முதல் போட்டியில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்பட உள்ளார். இந்த … Read more