147 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த பாபர் அசாம் – ஷான் மசூத் ஜோடி

கேப்டவுன், தென் ஆப்பிரிக்கா – பாகிஸ்தான் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கேப்டவுனில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே தென் ஆப்பிரிக்கா 615 ரன்களும், பாகிஸ்தான் 194 ரன்களும் அடித்தன. இதனையடுத்து பாலோ ஆன் ஆன நிலையில் தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக ஷான் மசூத் மற்றும் பாபர் அசாம் களமிறங்கினர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 205 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். இதன் மூலம் … Read more

ஓய்வு முடிவு உங்கள் கையில்தான் உள்ளது… ஆனால்.. – ரோகித் சர்மாவை எச்சரித்த சஞ்சய் மஞ்ரேக்கர்

மும்பை, இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் கேப்டனான ரோகித் சர்மாவிற்கு நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர் அவரது கெரியரில் மோசமான ஒன்றாக அமைந்துள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக முதல் டெஸ்டை தவற விட்ட அவர், அதற்கடுத்த 2, 3 மற்றும் 4-வது போட்டிகளில் கேப்டனாக களமிறங்கினார். இருப்பினும் அந்த போட்டிகளில் அவரது தலைமையில் விளையாடிய இந்திய அணி 2 மற்றும் 4 -வது போட்டிகளில் தோல்வி கண்டது. மழை காரணமாக … Read more

பும்ரா – கான்ஸ்டாஸ் மோதல் விவகாரம்: ஆஸி.பயிற்சியாளர் கருத்துக்கு கம்பீர் பதிலடி

சிட்னி, இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முன்னதாக இந்த டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தின் இறுதி ஓவரை இந்திய கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான ஜஸ்பிரித் பும்ரா வீசினார். அவர் ஒரு பந்தை வீசுவதற்கு சில அடி ஓடி வந்தபோது, பேட்ஸ்மேன் கவாஜா இன்னும் தயாராகவில்லை என நடுவர் சிக்னல் … Read more

ஓய்வுக்கு பிறகு ரோகித் ஸ்டாண்ட் அப் காமெடியனாக மாறலாம் – ஆஸி.முன்னாள் வீரர் கிண்டல்

சிட்னி, இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர் நிறைவடைந்துள்ளது. இதில் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. இதன் கடைசி போட்டியில் மோசமான பார்ம் காரணமாக ரோகித் விலகிய நிலையில், பும்ரா கேப்டனாக செயல்பட்டார். மோசமான பார்ம் காரணமாக ரோகித் தாமாக முன்வந்து இந்த போட்டியிலிருந்து ஓய்வு எடுத்ததாக கூறப்பட்டது. முன்னதாக இந்த தொடரின் முதல் போட்டியில் பும்ரா தலைமையில் இந்திய அணி வெற்றி பெற்றது. ஆனால் ரோகித் தலைமையில் … Read more

BGT தொடரில் தோல்வி! சாம்பியன்ஸ் டிராபியில் பிசிசிஐ அதிரடி மாற்றம்!

பிப்ரவரியில் தொடங்கவுள்ள சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியை பிசிசிஐ இந்த வாரத்திற்குள் அறிவிக்க வேண்டும். கடந்த ஆண்டு இந்திய அணி மொத்தமாக 3 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியது. 50 ஓவர் வடிவில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறுகிறது. பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை நடைபெறும் இந்த போட்டியில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்தியா தனது அனைத்து போட்டிகளையும் துபாயில் விளையாட உள்ளது. சமீபத்தில் நடந்து … Read more

திடீர் ஓய்வை அறிவித்த இந்திய அணி முக்கிய ஆல்-ரவுண்டர்! ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரிஷி தவான் வைட் பால் கிரிக்கெட்டில் இருந்து மட்டும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஹிமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்தவர் கிரிக்கெட் வீரர் ரிஷி தவான். தற்போது  34 வயதான அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முழுவதுமாக ஓய்வு பெறாமல் வைட் பால் கிரிக்கெட்டில் இருந்து மட்டும் ஓய்வை அறிவித்துள்ளார். உள்நாட்டு கிரிக்கெட்டில் பல சாதனைகள் படைத்துள்ளார். இதுவரை ரிஷி தவான் சர்வதேச அளவில் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டி … Read more

பும்ரா வர மாட்டார்… ஓய்வில் சிராஜ்… இவரை மட்டும் நம்பும் இந்திய அணி – சாம்பியன்ஸ் டிராபி கிடைக்குமா?

India National Cricket Team: கடந்த நவம்பர் 22ஆம் தேதி தொடங்கிய ஆஸ்திரேலியா – இந்தியா அணிகளுக்கு இடையிலான பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. ஆஸ்திரேலிய அணி 3-1 என்ற கணக்கில் வென்று, 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. மேலும் 2018, 2020 இரண்டு சுற்றுப்பயணங்களில் இந்தியாவிடம் சொந்த மண்ணில் அடைந்த தோல்விக்கு தற்போது பழிதீர்த்து இருக்கிறது. சொந்த மண்ணில் நியூசிலாந்து அணியுடன் வைட்வாஷ், தொடர்ந்து நான்கு முறை கைப்பற்றிய … Read more

பார்டர் – கவாஸ்கர் கோப்பை தோல்வி: இந்திய அணியின் கேப்டன் பும்ரா கூறியது என்ன..?

சிட்னி, இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதல் போட்டியில் ரோகித் இல்லாத சூழலில் கேப்டன் பொறுப்பை ஏற்ற பும்ரா இந்திய அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். 2-வது போட்டியில் ரோகித் அணிக்கு திரும்பிய நிலையில் கேப்டன் பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டார். ஆனால் ரோகித் தலைமையில் விளையாடிய இந்தியா 2 மற்றும் 4-வது போட்டிகளில் தோல்வியும், 3-வது டெஸ்டில் டிராவும் கண்டது. … Read more

இந்திய அணி உருப்பட வேண்டும் என்றால்… இந்த 5 மாற்றங்களை கண்டிப்பாக செய்ய வேண்டும்!

India National Cricket Team: இந்திய கிரிக்கெட் அணி கடந்த 10 ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரும் ஆதிக்கத்தை செலுத்தி வந்தது எனலாம். ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இரண்டு முறை தகுதிபெற்றும், ஒருமுறை கூட இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்லவில்லை. SENA நாடுகளில் ஆஸ்திரேலியாவை தவிர வேறு எங்கும் டெஸ்ட் தொடர்களை வெல்லவில்லை. இருப்பினும், இந்திய அணி டெஸ்டில் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது.  தற்போதும் கூட WTC தரவரிசையில் இந்திய அணி … Read more

முதல் ஒருநாள் போட்டி: இலங்கையை எளிதில் வீழ்த்திய நியூசிலாந்து

வெலிங்டன், இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, நியூசிலாந்தின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 178 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக விஷ்வா பெர்னண்டோ 56 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து தரப்பில் மேட் … Read more