ஐ.பி.எல்.2025: முதல் பாதியை தவற விடும் லக்னோ அணியின் நட்சத்திர வீரர்…? வெளியான தகவல்

மும்பை, 10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் வருகிற 22-ந் தேதி முதல் மே 25-ந் தேதி வரை நடக்கிறது. இதன் தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சந்திக்கிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக கடந்த சீசனில் அறிமுகமாகி சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய இளம் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான மயங்க் யாதவை இந்த சீசனுக்காக ரூ.11 கோடிக்கு தக்கவைத்தது. ஆனால் கடந்த சீசனில் முழுமையாக … Read more

இந்திய மல்யுத்த சம்மேளனம் மீதான நடவடிக்கை ரத்து

புதுடெல்லி, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் (டபிள்யு.எப்.ஐ.,) தலைவராக பிரிஜ் பூஷன் சரண் சிங் இருந்தார். இவர் மீது பாலியல் புகார் கூறப்பட, கூட்டமைப்பில் இருந்து ஒதுங்கினார். இவருக்கு நெருக்கமான சஞ்சய் சிங், புதிய தலைவராக தேர்வு செய்யப்பட, சர்ச்சை தொடர்ந்தது. இதையடுத்து மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் டபிள்யு.எப்.ஐ.,க்கு தடை விதித்தது. மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிக்க உயர் மட்ட கமிட்டியை, இந்திய ஒலிம்பிக் சங்கம் அமைத்தது. தற்காலிக குழுவிற்கு பூபிந்தர் சிங் பஜ்வா தலைமை தாங்கினார். ஹாக்கி … Read more

துபாய்க்கு உலக லெவனை கூட்டி வந்தாலும் இந்தியா வெல்லும் – பாக். முன்னாள் வீரர் பாராட்டு

லாகூர், 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடர் முதலில் பாகிஸ்தானில் மட்டுமே நடைபெறுவதாக இருந்தது. ஆனால் பாதுகாப்பு பிரச்சினை காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் அனைத்தும் துபாயில் நடைபெற்றது. இதில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்தியா தோல்வியே சந்திக்காமல் கோப்பையை கைப்பற்றியது. ஆனால் இந்திய அணி ஒரே மைதானத்தில் விளையாடி கோப்பையை வென்று விட்டதாக பல … Read more

78 வருடங்களாக நீங்கள் எதையும் கற்றுக்கொள்ளவில்லை – பாக்.முன்னாள் வீரரின் கருத்துக்கு யோக்ராஜ் சிங் பதிலடி

மும்பை, 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடர் முதலில் பாகிஸ்தானில் மட்டுமே நடைபெறுவதாக இருந்தது. ஆனால் பாதுகாப்பு பிரச்சினை காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் அனைத்தும் துபாயில் நடைபெற்றது. இதில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்தியா தோல்வியே சந்திக்காமல் கோப்பையை கைப்பற்றியது. இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய பாகிஸ்தான் அணி ஒரு வெற்றி கூட … Read more

ஐபிஎல் 2025.. ஆன்லைனில் டிக்கெட் வாங்குவது எப்படி?.. ரசிகர்களே நோட் பண்ணிக்கோங்க!

மினி உலக கோப்பை என அழைக்கப்படும் சாம்பியஸ்ன் டிராபி தொடர் நேற்று முன்தினம் (மார்ச் 09) முடிவடைந்தது. இத்தொடரின் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்றது. இதனால் இந்திய அணி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.  இந்த நிலையில், வரும் மார்ச் 22ஆம் தேதி ஐபிஎல் தொடர் தொடங்குகிறது. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பெங்களூரு அணியும் மோத உள்ளன. இப்போட்டி கொல்கத்தாவின் ஈடன் … Read more

IPL 2025: கேப்டன் பதவியை நிராகரித்த கே.எல்.ராகுல்.. குழப்பத்தில் டெல்லி அணி

கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் 2025 ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. இத்தொடர் தொடங்க இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன.  கடந்த டிசம்பர் மாதம் ஐபிஎல்லின் மெகா ஏலம் நடைபெற்றது. இதில் முக்கிய வீரர்கள் பலர் வேறு அணிகளால் வாங்கப்பட்டனர். குறிப்பாக ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் என கடந்த சீசன்களில் அவர்கள் இருந்த அணிகளுக்கு கேப்டனாக இருந்த … Read more

IPL 2025: இடிக்கு மேல் இடி.. கே.எல்.ராகுல், மயங்க் யாதவ் ஐபிஎல்லில் இருந்து விலகல்?

2025 ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பொங்களூரு அணியும் மோதுகின்றன. மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இந்த ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பே ஏராளமான அதிர்ச்சி செய்திகள் வெளியாகி வருகிறது.  ஏற்கனவே ஜஸ்பிரீத் பும்ரா ஐபிஎல்லின் முதல் இரண்டு பாதியில் விளையாட மாட்டார் என செய்திகள் வெளியானது. அதேபோல் டெல்லி அணியின் வீரர் ஹாரி புரூக் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாகவும் … Read more

ரோகித் சர்மா ஓய்வை அறிவிக்காததால் வருத்தத்தில் இருக்கும் 2 வீரர்கள்!

துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 12 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றியுள்ளனர். கடைசியாக தோனியின் தலைமையில் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்று இருந்தது. அதன் பிறகு தற்போது ரோகித் சர்மாவின் கேப்டன்ஷியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த தொடர் முழுவதும் தோல்விகளை சந்திக்காமல் இந்தியா வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. … Read more

ஹர்மன்ப்ரீத் கவுர் அரைசதம்.. குஜராத் வெற்றி பெற 180 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை

மும்பை, மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மும்பையில் இன்று நடைபெற்று வரும் 19-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஹேய்லி மேத்யூஸ் – அமெலியா கெர் களமிறங்கினர். இதில் அமெலியா கெர் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த மேத்யூஸ் – நாட் ஸ்கைவர் பிரண்ட் … Read more

சாம்பியன்ஸ் டிராபி: அந்த இந்திய வீரர்தான் தொடர் நாயகன் விருதுக்கு தகுதியானவர் – அஸ்வின்

சென்னை, 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபாயில் நேற்றிரவு அரங்கேறிய இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 251 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக டேரில் மிட்செல் 63 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பின்னர் 252 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய … Read more