ஐபிஎல் 2025: சிஎஸ்கேவுக்கு பெரிய சிக்கல்; காயத்தால் விலகும் கான்வே? மாற்று வீரர் யார்?

IPL 2025, Chennai Super Kings News: வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்க உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடங்க இருக்கிறது. இந்த தொடரை கிரிக்கெட் உலகமே மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறது எனலாம். சாம்பியன்ஸ் டிராபி தொடரை (Champions Trophy 2025) நிறைவடைந்ததும், ஐபிஎல் 2025 தொடர் மார்ச் மாதம் 21ஆம் தேதி இந்தியாவில் நடைபெற இருக்கிறது. ஒரு ஐசிசி தொடருக்கு இணையாக ஐபிஎல் தொடருக்கும் கடும் எதிர்பார்ப்பு இருக்கிறது எனலாம்.  இந்த ஐபிஎல் தொடரில் (IPL … Read more

ஆசிய காது கேளாதோர் போட்டி : பதக்கம் வென்ற தமிழக வீரர் வீராங்கனைகளுக்கு உதயநிதி ஸ்டாலின் பாராட்டு

சென்னை, துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், மலேசியாவில் நடைபெற்ற 10வது ஆசிய பசிபிக் காது கேளாதோர் போட்டி 2024-ல் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர், வீராங்கனையர் வெவ்வேறு போட்டிகளில் 4 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 14 பதக்கங்களைக் குவித்து சாதனை படைத்துள்ளனர். தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ள நம் வீரர் – வீராங்கனையரை குறிஞ்சி முகாம் அலுவலகத்தில் இன்று நேரில் சந்தித்து பாராட்டினோம். இந்திய நாட்டிற்கும், … Read more

முதல் டெஸ்ட்: கவாஜா, ஸ்மித் சதம்…ஆஸ்திரேலியா 330 ரன்கள் குவிப்பு

காலே, இலங்கைக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தலா 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் 2 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்கியது . இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார் … Read more

ஐசிசி தலைமை செயல் அதிகாரி ஜெப் அலர்டிஸ் ராஜினாமா

துபாய் , 8 அணிகள் பங்கேற்கும் 9-வது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சாம்பியன்ஸ் கோப்பை தொடர் அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது இந்த நிலையில்,சாம்பியன்ஸ் கோப்பை தொடர் ஆரம்பமாக உள்ள நிலையில் ஐசிசி தலைமை செயல் அதிகாரி ஜெப் அலர்டிஸ் தனது பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்துள்ளார் … Read more

ஐசிசி தரவரிசை: இந்திய வீரர் வருண் சக்கரவர்த்தி முன்னேற்றம்

சென்னை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வீரர் வருண் சக்கரவர்த்தி 25 இடங்கள் முன்னேறி 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். நேற்று நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனால் அவர் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். நேற்று நடைபெற்ற போட்டியில் சிறப்பாக பந்துவீசிய இங்கிலாந்து வீரர் ஆதில் ரஷித் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார் .வெஸ்ட் இண்டீஸ் வீரர் அகில் ஹொசைன் … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து; நார்த் ஈஸ்ட் யுனைடெட் – ஐதராபாத் அணிகள் இன்று மோதல்

புதுடெல்லி , 13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று ஒரு லீக் ஆட்டம் நடைபெறுகிறது. அதன்படி இரவு 7.30 மணிக்கு கவுகாத்தியில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் – ஐதராபாத் அணிகள் மோத உள்ளன. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளிப்பட்டியலில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 6வது இடத்திலும், ஐதராபாத் … Read more

இந்திய அணிக்கு தண்ணி காட்டிய பென் டக்கெட்… ஐபிஎல் தொடரில் விளையாடுகிறாரா?

Ben Duckett IPL 2025: ஐந்து டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட இங்கிலாந்து அணி, இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதலில் டி20 போட்டியில் நடைபெற்று வரும் நிலையில், முதலிரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது.  யாருமே எதிர்பாராத விதமாக இங்கிலாந்து அணி மூன்றாவது போட்டியில் 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்தின் வெற்றியால் இந்த டி20 தொடர் உயிர்ப்புடன் இருக்கிறது எனலாம். கடைசி இரண்டு போட்டிகளில் யார் வெற்றி பெறுவார்கள் … Read more

IND vs ENG: இந்திய அணி செய்த பெரிய தவறுகள்… தொடரை வெல்ல இனி என்ன செய்யணும்?

India National Cricket Team: இந்தியா – இங்கிலாந்து (India vs England) அணிகளுக்கு இடையிலான வொயிட் பால் தொடர்கள் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னர் கிரிக்கெட் உலகில் பெரும் கவனத்தை பெற்றிருக்கிறது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாடி வருகிறது. இதன் பின்னர் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் இரு அணிகள் விளையாட உள்ளன.  அந்த வகையில், கொல்கத்தா மற்றும் சென்னையில் நடைபெற்ற முதலிரண்டு … Read more

சிஎஸ்கே-விற்கு தலைவலியாய் அமையும் முன்னாள் வீரர்! இரட்டை சதம் அடித்து அசத்தல்!

உத்திரபிரதேசத்தை சேர்ந்த சமீர் ரிஸ்வி அனைவராலும் பேசப்படும் ஒரு கிரிக்கெட் வீரராக மாறி வருகிறார். இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடர்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வீரராக கருதப்படுகிறார். குறிப்பாக உள்நாட்டு தொடர்களில் தொடர்ந்து ரன்கள் அடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார். தனது அசுரத்தனமான பேட்டிங் மூலம் எதிரணிகளை கலங்கடிக்கிறார். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார் சமீர் ரிஸ்வி. ஆனால் இந்த ஆண்டு மெகா ஏலத்தில் … Read more

3-வது டி20 போட்டி: டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு

ராஜ்கோட், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் கொல்கத்தாவில் நடந்த தொடக்க ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், சென்னையில் நடந்த 2-வது ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று, தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 3-வது டி20 போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணையின் கேப்டன் … Read more