ஐபிஎல் 2025 புள்ளிப் பட்டியலில் முதன்முறையாக நடந்த அதிசயம்..!

IPL Points Table Latest News : ஐபிஎல் 2025 தொடர் கோலாகலமாக தொடங்கி நாள்தோறும் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் விளையாடுகின்றன. இப்போட்டி ஆர்சிபி அணியின் கோட்டையாக இருக்கும் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு போட்டி சரியாக துவங்கும். இந்த சூழலில் இப்போது இருக்கும் ஐபிஎல் 2025 புள்ளிப் பட்டியலில் இதுவரை நடக்காத ஒரு அதிசயம் நடந்திருக்கிறது. அது என்ன … Read more

ஐ.பி.எல்: பஞ்சாப்புக்கு எதிரான தோல்வி… லக்னோ கேப்டன் பண்ட் கூறியது என்ன..?

லக்னோ, ஐ.பி.எல். தொடரில் லக்னோவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – லக்னோ அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 171 ரன்கள் எடுத்தது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 44 ரன் எடுத்தார். பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 172 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த பஞ்சாப் அணி 16.2 … Read more

கோலி vs சிராஜ்… சின்னசாமியில் மான்கொம்பு Fight… ஆர்சிபியை அடக்குமா குஜராத்?

IPL 2025, RCB vs GT: ஐபிஎல் 2025 தொடரின் 13வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. நடப்பு சீசனில் இந்த மைதானத்தில் முதல்முறையாக போட்டி நடைபெறுகிறது. RCB vs GT: பெரிய நம்பிக்கையுடன் வரும் ஆர்சிபி இரு அணிகளும் தலா 2 போட்டிகளை விளையாடி உள்ளன. ஆர்சிபி 2 போட்டிகளிலும் வென்று தற்சமயம் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. குஜராத் … Read more

பஞ்சாப்புக்கு ஈசி வின்.. ஹோம் கிரவுண்டில் தோற்ற லக்னோ!

18வது ஐபிஎல் தொடர் கடந்த 22ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்று (ஏப்ரல் 01) 13வது லீக் ஆட்டம் லக்னோவின் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.  டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்த நிலையில், முதலில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பேட்டிங் செய்தது. … Read more

பொறுப்பற்ற பண்ட்… வெச்சு செய்யும் நெட்டிசன்கள்.. ரூ.27 கோடியும் கோவிந்தாவா…?

கடந்த ஆண்டு இறுதியில் நடந்த மெகா ஏலத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் ரூ. 27 கோடி கொடுத்து ரிஷப் பண்டை ஏலத்தில் எடுத்தனர். ஐபிஎல் வரலாற்றில் ஒரு வீரருக்கு வழங்கப்பட்ட அதிகபட்ச தொகை இதுவாகும். இது கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது. பெரிய தொகை கொடுத்து வாங்கி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வழிநடத்தும் பொறுப்பையும் அணி நிர்வாகம் வழங்கியதால், ரிஷப் பண்ட் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவர் மீது வைக்கப்பட்ட எதிர்பார்ப்புக்கு … Read more

இந்த சீசனுடன் தோனி ஓய்வு பெறுவாரா? பரவும் தகவல்கள்! உண்மை என்ன?

18வது ஐபிஎல் தொடர் கடந்த 22ஆம் தேதி தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இச்சூழலில் தற்போது இத்தொடரில் மிகப்பெரிய சர்ச்சையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும் விக்கெட் கீப்பருமான எம். எஸ். தோனியின் பேட்டிங் வரிசைதான்.  கடந்த மார்ச் 28ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதியது. இதில் முதலில் பெங்களூரு அணி பேட்டிங் செய்து 196 ரன்கள் அடித்தனர். பெங்களூரு அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் … Read more

டி20 கிரிக்கெட்டில் 8,000 ரன்களை கடந்த சூர்யகுமார் யாதவ்

மும்பை, ஐ.பி.எல். தொடரில் மும்பையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, மும்பை வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதன் காரணமாக வெறும் 16.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த கொல்கத்தா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக ரகுவன்ஷி 26 ரன் எடுத்தார். மும்பை … Read more

அறிமுக போட்டியில் 4 விக்கெட்; மும்பைக்கு கிடைத்த புது ஹீரோ…யார் இந்த அஸ்வனி குமார்..?

மும்பை, உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மாதம் 22ம் தேதி கொல்கத்தாவில் தொடங்கியது. இந்த தொடரில் இதுவரை 12 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இந்த தொடரில் பல, புதிய வீரர்கள் அறிமுகமாகி தங்களது திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர். இதுவரை நடந்து முடிந்த லீக் ஆட்டங்களில் ஐதராபாத் அணியில் அனிகேத் வர்மா, ஜீஷான் அன்சாரி, டெல்லி அணியில் விப்ராஜ் நிகாம், லக்னோ அணியில் பிரின்ஸ் … Read more

BBL தொடரில் விராட் கோலி…? ஓய்வு கன்பார்மா…? சிட்னி சிக்சர்ஸ் அணி வெளியிட்ட அறிவிப்பு!

ஐபிஎல் தொடரை போல பல்வேறு கிரிக்கெட் வாரியம் பிரிமியர் லீக் தொடர்களை நடத்தி வருகிறது. இந்த பிரிமியர் லீக் மூலம் பல இளம் வீரர்களுக்கு சர்வதேச போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கிறது. உதாரணத்திற்கு ஐபிஎல்லை எடுத்துக்கொண்டால், இளம் வீரர்களுக்கு இந்திய அணிக்குள் நுழைய வாய்ப்பு கிடைக்கிறது.  அதே சமயம் வெளிநாட்டு வீரர்கள் இங்கு வந்து விளையாடுவதால், அவர்களுக்கு மைதானம் பற்றிய புரிதல் மற்றும் மற்ற வீரர்கள் எப்படி விளையாடுகிறார்கள் உள்ளிட்ட பல விஷயங்களை அறிந்து கொள்ள முடியும். … Read more

இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடர்; புதிய பெயரில் பரிசுக்கோப்பை..?

லண்டன், 2007-ம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் நடைபெறும் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரில் வெற்றி பெறும் அணிக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மன்சூர் அலிகான் பட்டோடி பெயரில் பரிசுக்கோப்பை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த கோப்பைக்கு ஓய்வு கொடுக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி வருகிற ஜூன், ஜூலை மாதங்களில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த … Read more