இளம் வயதில் ஐசிசி சேர்மானாகும் ஜெய்ஷா – இந்திய கிரிக்கெட்டுக்கு கிடைக்கப்போகும் கோடி லாபம்

Jay Shah : இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக இருக்கும் ஜெய்ஷா விரைவில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) தலைவராக வாய்ப்புள்ளது. ஏனென்றால் தற்போதைய ஐசிசி சேர்மேனாக இருக்கும் கிரெக் பார்கலே தன்னை மூன்றாவது முறையாக இந்தப் பதவிக்கு நியமனம் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். அவரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து ஐசிசி தலைவர் பதவிக்கான தேர்வு நடைபெற இருக்கிறது. ஆகஸ்ட் 27 ஆம் தேதிக்குள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டும். பிசிசிஐ செயலாளர் ஜெய் … Read more

சாம்பியன்ஸ் டிராபி 2025: ரோகித்துடன் இவர்தான் தொடக்க வீரராக களம் இறங்குவார் – தினேஷ் கார்த்திக்

புதுடெல்லி, நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதைத் தொடர்ந்து அடுத்ததாக 2025 சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல இந்திய அணியினர் தீவிரமாக தயாராகி வருகின்றர். 2025ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா? என்பதில் இன்னும் முடிவு எடுக்கவில்லை. இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரோகித்துடன் தொடக்க வீரராக கில் அல்லது ஜெய்ஸ்வால் ஆகியோரில் யார் களம் … Read more

அவருடன் இணைந்து வேலை செய்ய மோர்னே மோர்கல் மிகவும் விரும்புவார் – அல்பி மோர்கல் கருத்து

கேப்டவுன், இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்க முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான மோர்னே மோர்கல் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் எதிர்வரும் வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து பயிற்சியாளராக செயல்பட உள்ளார். இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீரின் பரிந்துரைப்படி மோர்னே மோர்கல் புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மோர்னே மோர்கல் வெளிநாடுகளில் பெரிய அனுபவத்தை கொண்டுள்ளார். எனவே வருன் ஆஸ்திரேலியா தொடரில் அவர் இந்திய பவுலர்களுக்கு மிகப்பெரிய உதவியாக … Read more

யுவராஜ் சிங் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது? – விரைவில் படப்பிடிப்பு

புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங். ஆல் ரவுண்டரான இவர் இந்திய அணிக்காக கடந்த 2000-ம் ஆண்டில் அறிமுகம் ஆனார். இந்திய அணிக்காக மூன்றுவித கிரிக்கெட்டிலும் ஆடி உள்ளார். இந்திய அணி 2007 டி20 உலகக்கோப்பையை வென்றதிலும், 2011ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பையை வென்றதிலும் இவர் முக்கிய பங்காற்றியவர். இந்த சூழலில், அவரது வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. … Read more

Impact Player விதி வேண்டுமா, வேண்டாமா? அஸ்வின் – Pdogg காரசார விவாதம் – ரிசல்ட் என்ன?

Latest Cricket News Updates: ஐபிஎல் 2025 தொடரில் பெரிய பெரிய மாற்றங்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. ஒவ்வொரு அணிகளில் இருந்தும் முக்கிய வீரர்கள் சிதறுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. பலமிக்க அணியாக பார்க்கப்படும் பல அணிகள் பலமிழக்கலாம் அல்லது மேலும் பலமாகலாம், பலமற்ற அணிகள் வீழ்த்த முடியாத அணியாக உருவெடுக்கலாம். இந்த அத்தனைக்குமான விடை அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில்தான் தெரியும் என்றாலும் அதற்கான தொடக்க புள்ளி என்பது கூடிய விரைவில் நடைபெற இருக்கும் மெகா ஏலத்தில்தான்… … Read more

சர்வதேச கிரிக்கெட்டில் 16 ஆண்டுகள் நிறைவு; விராட் கோலி குறித்து தினேஷ் கார்த்திக் நெகிழ்ச்சி பதிவு

சென்னை, இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி நவீன கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக போற்றப்படுகிறார். கடந்த 2008-ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி கோப்பையை வென்று கொடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் குறுகிய காலத்திலேயே நிலையான இடத்தை பிடிக்கும் அளவுக்கு இந்தியாவின் மேட்ச் வின்னராக அவதரித்தார். அப்போதிலிருந்து உலகின் அனைத்து எதிரணிகளையும் பந்தாடி வரும் அவர் 26000+ ரன்களையும் 80 சதங்களையும் அடித்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி … Read more

வின்ஸ்டன்-சலேம் ஓபன் டென்னிஸ்; முதல் சுற்றில் தோல்வி கண்ட சுமித் நாகல்

வின்ஸ்டன் சலேம், அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் வின்ஸ்டன் சலேம் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சுமித் நாகல், குரோஷியாவின் போர்னா கோரிக் உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய போர்னா கோரிக் 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் சுமித் நாகலை வீழ்த்தினார். இந்த தோல்வியின் மூலம் சுமித் நாகல் முதல் … Read more

என்னை இந்திய அணியில் எடுங்கள் – தேர்வாளர்களுக்கு சவால் விட்ட தமிழக வீரர்!

இந்திய கிரிக்கெட் அணி தற்போது முக்கிய போட்டிகளுக்கு தயாராகி வருகிறது. சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிரான தொடருக்கு பிறகு இந்திய வீரர்கள் நீண்ட நாட்கள் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வில் உள்ளனர். தற்போது துலீப் டிராபியில் விளையாட உள்ளனர். இது வரக்கூடிய டெஸ்ட் போட்டிகளுக்கு பெரிதும் உதவும். இந்நிலையில் காயத்தில் இருந்து மீண்டும் வரும் தமிழக வீரர் மற்றும் ஆல்-ரவுண்டர் சாய் கிஷோர் தான் சர்வதேச டெஸ்ட் போட்டிகளுக்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். சாய் கிஷோர் 2023 … Read more

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்; இந்த இரு வீரர்களை அதிக அளவில் பயன்படுத்துவோம் – கம்மின்ஸ்

சிட்னி, இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது. ஆஸ்திரேலியாவில் வைத்து அந்த அணியை தொடர்ந்து மூன்றாவது முறையாக டெஸ்ட் தொடரில் இந்தியா வீழ்த்துமா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர். இந்திய அணி 2018/19 மற்றும் 2020/21 பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியாவுக்கு சென்று விளையாடியது. … Read more

கொல்கத்தா அணி என்னை வெளியேற்றினால் இந்த அணிக்காக விளையாட விரும்புகிறேன் – ரிங்கு சிங்

புதுடெல்லி, நடந்து முடிந்த ஐ.பி.எல் (2024) தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. கடந்த சில ஐ.பி.எல் தொடர்களில் கொல்கத்தா அணிக்காக அதிரடி ஆல்ரவுண்டர் ரிங்கு சிங் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதன் காரணமாக அவர் இந்திய அணியிலும் இடம் பிடித்து விளையாடி வருகிறார். இந்நிலையில் 2025-ம் ஆண்டு மெகா ஏலத்திற்கு முன்னர் கொல்கத்தா அணி எந்தெந்த வீரர்களை தக்கவைக்கும்? எந்தெந்த வீரர்களை வெளியேற்றும்? என்பது குறித்த … Read more