ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை சிட்டி அணியை வீழ்த்தி ஜாம்ஷெட்பூர் எப்.சி. வெற்றி

மும்பை, 13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி. – ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் அணி சார்பில் முகமது சனான், ஜோர்டான் முர்ரே, ஜாவி ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். மும்பை சிட்டி அணி எந்த கோலும் அடிக்கவில்லை. இந்த நிலையில் ஆட்டநேர முடிவில் … Read more

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்: அவரை அணியில் சேர்க்காதது குழப்பமாக உள்ளது – இந்திய முன்னாள் வீரர்

மும்பை, இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி வரும் 22-ம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அந்த அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி நீண்ட நாட்கள் கழித்து இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். மேலும் துணை … Read more

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி.. கம்மின்ஸ் கேப்டனா? ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு!

ICC Champions Tropy 2025: அடுத்த மாதம் 19ஆம் தேதி சாம்பியன்ஸ் டிராபி தொடங்கி நடைபெற உள்ளது. மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடர் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறும். இதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் குருப் பி-யில் பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகள் குருப் ஏ-வில் இடம் பெற்றிருக்கின்றன.  இந்த நிலையில், இத்தொடருக்கான அணியை ஒவ்வொரு நாடும் அறிவித்து வருகிறது. ஏற்கனவே நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், … Read more

2025 ஐபிஎல்-லில் வரவுள்ள கடுமையான மாற்றங்கள்! ஐசிசி விதிகள் பின்பற்றப்படும்!

2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடர் வரும் மார்ச் மாதம் தொடங்க உள்ளது. கடந்த ஆண்டு இதற்கான ஏலம் நடந்து முடிந்தது. 2025 ஐபிஎல்லில் சில கடுமையான விதிகள் பின்பற்றப்படும் என்று கூறப்படுகிறது. இந்தியா அல்லது வெளிநாட்டு வீரர்கள் என யாரேனும் தவறு செய்யும் பட்சத்தில் அவர்களின் மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் நடத்தை விதிகள் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஐபிஎல் 2025 போட்டிகள் … Read more

இன்னும் சீட் கூட ரெடியாகல! பாகிஸ்தானில் போட்டிகள் நடக்குமா? ஐசிசி புதிய முடிவு!

2025 Champions Trophy: அடுத்த மாதம் பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற உள்ளதால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பாகிஸ்தானிற்கு நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் கடந்த சனிக்கிழமை முதல் ஐசிசி அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். சர்வதேச போட்டி நடைபெறுவதற்கான அனைத்தும் தயார் நிலையில் உள்ளதா என்பதை சரி பார்த்து வருகின்றனர். ஏற்கனவே சில ஆய்வுகள் நடத்தப்பட்ட நிலையில் தற்போது இரண்டாவது முறையாக ஆய்வு நடைபெறுகிறது. இந்த … Read more

ஜடேஜா, ரிஷப் பந்த் வேண்டாம் – ஹர்பஜன் சிங்!

Harbajan Singh About ICC Champions Trophy: அடுத்த மாதம் 19ஆம் தேதி சாம்பியன் டிராபி தொடங்கவுள்ளது. பாகிஸ்தானில் நடைபெறும் நிலையில், இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது. இதற்காக இந்திய அணி தயாராகி வரும் நிலையில், ஒவ்வொரு நாட்டில் கிரிக்கெட் வாரியமும் தங்களது அணிகளை அறிவித்து வருகிறது. இந்திய கிரிக்கெட் வாரியமும் விரையில் இந்திய அணியை வரும் நாட்களில் அறிவிக்க உள்ளது. இதில் எந்தெந்த வீரர்கள் இந்திய அணியில் இடம் பெறப் போகின்றனர் என்பதில் ரசிகர்கள் … Read more

கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படும் ரோஹித்! இனி இவர் தான் கேப்டன்!

சமீபத்தில் நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் தொடரை இந்திய அணி இழந்தது. இந்த தொடரில் ஏற்பட்ட தோல்விக்கான காரணம் குறித்து பிசிசிஐ சமீபத்தில் மீட்டிங் நடத்தியுள்ளது. இதில் கேப்டன் ரோகித் சர்மா,  பயிற்சியாளர் கௌதம் கம்பீர், தேர்வாளர் அஜித் அகர்கர் ஆகியோர் இடம் பெற்றுள்ளார். இந்த மீட்டிங்கில் ரோகித் சர்மாவின் கேப்டன்சி குறித்தும், விராட் கோலி எதிர்காலம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆஸ்திரேலியா தொடர் முடிந்ததும் ரோஹித் சர்மா டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுவார் … Read more

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: கேஸ்பர் ரூட் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

மெல்போர்ன், டென்னிசில் ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதன்படி இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் இன்று தொடங்கி 26-ந் தேதி வரை நடக்கிறது. இன்று முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் நார்வேயின் கேஸ்பர் … Read more

சாம்பியன்ஸ் டிராபி தொடர்; வங்காளதேச அணி அறிவிப்பு

டாக்கா, 8 அணிகள் கலந்து கொள்ளும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19-ந் தேதி தொடங்கி மார்ச் 9-ந் தேதி வரை நடக்கிறது. இந்த தொடருக்கான அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி குரூப் ஏ-வில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், குரூப் பி-யில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை … Read more

விஜய் ஹசாரே கோப்பை காலிறுதி : விதர்பா அணி 291 ரன்கள் குவிப்பு

வதோதரா, இறுதி கட்டத்தை எட்டியுள்ள 32-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் குஜராத் மாநிலம் வதோதராவில் நேற்று நடைபெற்ற ஒரு காலிறுதி ஆட்டத்தில் பஞ்சாபை வீழ்த்தி மராட்டியம் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது . இந்த நிலையில் , இன்று நடைபெறும் 2வது காலிறுதி ஆட்டத்தில் ராஜஸ்தான் – விதர்பா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போப்பட்டது. அதில் டாஸ் வென்ற விதர்பா அணியின் கேப்டன் கருண் நாயர் பந்துவீச்சை தேர்வு செய்தார். … Read more