பாரீஸ் எனது கடைசி ஒலிம்பிக் போட்டியாக இருக்கலாம்: முன்னாள் கேப்டன் மன்பிரீத் சிங்

புதுடெல்லி, 33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்சின் பாரீஸ் நகரில் வருகிற 26-ந்தேதி கோலாகலமாக தொடங்குகிறது. இந்த போட்டிக்கு இந்தியா சார்பில் இதுவரை 124 பேர் தகுதி பெற்றுள்ளனர். இந்த நிலையில், பாரீஸ் எனது கடைசி ஒலிம்பிக் போட்டியாக இருக்கலாம் என இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டன் மன்பிரீத் சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, நான்கு ஒலிம்பிக்கில் விளையாட முடியும் என நான் நினைக்கவே இல்லை. ஒலிம்பிக்கில் விளையாடி பதக்கம் வெல்லவேண்டும் என்பது ஒவ்வொரு … Read more

விம்பிள்டன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறிய இத்தாலி வீரர்

லண்டன், டென்னிஸ் போட்டியில் ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிகவும் கவுரவமிக்கதாக கருதப்படும் நூற்றாண்டு காலம் பழமையான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இத்தாலி வீரர் லாரன்சோ முசெட்டி, அமெரிக்காவின் டெய்லர் பிரிட்சுடன் மோதினார். இதில் முசெட்டி 3-6, 7-6 (7-5), 6-2, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் வென்று … Read more

இர்பான் பதான், யூசப் பதான் ரெண்டு பேருக்கும் மைதானத்திலேயே வெடித்த சண்டை

Pathan Brothers fight Viral Video : இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடிய சகோதரர்கள் யூசப் பதான், இர்பான் பதான். இருவரும் இந்திய அணி டி20 உலகக்கோப்பை வென்ற அணியில் இடம்பிடித்து இந்திய அணிக்காக ஒன்றாக விளையாடியவர்கள். இப்போது இருவரும் மைதானத்துக்குள்ளேயே ஆக்ரோஷமாக சண்டைப்போட்டுக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இருவரும் உலக சாம்பியன்ஷிப் லெஜண்ட்ஸ் தொடரில் இந்திய அணிகாக ஆடிக் கொண்டிருக்கும் நிலையில், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியின்போது இந்த சண்டை நடந்திருக்கிறது.  இருவருக்கும் இடையே … Read more

சாம்பியன்ஸ் டிராபி : பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு அடுத்த அடியை கொடுத்த பிசிசிஐ

Indian Cricket Team News Tamil : சாம்பியன்ஸ் டிராபி கோப்பை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாகிஸ்தானில் தொடங்க இருக்கிறது. இந்த தொடரில் ஐசிசி தரவரிசைப் பட்டியலில் டாப் 8 இடங்களைப் பிடித்திருக்கும் அணிகள் பங்கேற்க இருக்கின்றன. அதன்படி, இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்கு தகுதி பெறவில்லை. இந்த எட்டு அணிகளும் … Read more

சாம்பியன்ஸ் டிராபியும் இந்தியாவுக்கு தான்… பிசிசிஐ போடும் பக்கா பிளான் – ஸ்கெட்ச் என்ன?

India National Cricket Team: இந்திய கிரிக்கெட் அணியின் பொற்காலம் தொடங்கிவிட்டது என்கின்றனர் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள். ஆம், டி20 உலகக் கோப்பை சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றியதில் இருந்து இந்திய அணியின் நல்ல காலம் தொடங்கிவிட்டதாம்.  கௌதம் கம்பீர் பயிற்சியாளராக பணியமர்த்தப்பட்டிருப்பதால் அதனால் இந்திய அணியில் ஏற்படப்போகும் அதிரடி மாற்றங்கள், அடுத்தாண்டில் வர உள்ள ஐசிசி சாம்பியன் டிராபி (ICC Champions Trophy 2025) மற்றும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் (ICC World Test … Read more

'இவர்தான் சிறந்த பேட்ஸ்மேன்…' விராட் கோலி இல்லை – ஆண்டர்சன் சொன்ன அந்த வீரர் யார்?

James Anderson Retirement: டி20, ஓடிஐ, டெஸ்ட் ஆகிய மூன்று பார்மட்களில் வீரர்களுக்கு அதிகம் கடினமாக இருக்கும் பார்மட் எதுவென கிரிக்கெட் ரசிகர்களிடம் நீங்கள் கேட்டால் நிச்சயம் யாரும் யோசிக்காமல் மறுநொடியில் டெஸ்ட் கிரிக்கெட்தான் என்பார்கள். டெஸ்ட் போட்டியை விளையாடுவது என்பது வீரர்களுக்கு கடினம் என்றாலும் ஒரு சிறந்த வீரராக உருவெடுக்க அவர் நிச்சயம் டெஸ்ட் போட்டியில் தனது காலடி தடத்தை பதிக்க வேண்டும்.  அதுவும் இந்த டி20 யுகத்தில் பலரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை … Read more

டி.என்.பி.எல்: சேப்பாக் அணிக்கு எதிராக டாஸ் வென்ற திருப்பூர் பந்துவீச்சு தேர்வு

சேலம், 8-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) டி20 கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் கலந்து கொண்டுள்ளன. ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும். இந்த தொடரில் இதுவரை 7 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. … Read more

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3வது டி20; டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு

ஹராரே, சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை 2 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன.இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி ஹராரேவில் இன்று நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, இந்திய … Read more

3வது டி20: கில் அரைசதம்… இந்திய அணி 182 ரன்கள் குவிப்பு

ஹராரே, சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை 2 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன.இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி ஹராரேவில் இன்று நடைபெறுகிறது.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, இந்திய அணி … Read more

கவுதம் கம்பீர் தலைமையில் இந்திய அணியில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள்!

ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா ஆகிய மூத்த வீரர்கள் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள நிலையில், இந்திய அணியின் டி20 கேப்டனாக ஹர்டிக் பாண்டியா செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டி20 உலக கோப்பைக்கு முன்பு அவர் தான் அணியின் கேப்டனாக செயல்பட்டார். அதே சமயம் ஒருநாள் போட்டியில் இன்னும் ரோஹித் சர்மா சிறிது காலம் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் இல்லாத சமயத்தில் கேஎல் ராகுல் தலைமை பொறுப்பை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டி20 … Read more