இலங்கை – ஆஸ்திரேலியா இடையேயான ஒரு நாள் கிரிக்கெட் இன்று தொடக்கம்

கொழும்பு, இலங்கைக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. அடுத்து இவ்விரு அணிகள் இடையே 2 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது. இதன் முதலாவது ஒரு நாள் போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கு தங்களை சிறந்த முறையில் தயார்படுத்துவதற்கு இந்த தொடரை ஆஸ்திரேலியா சரியாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கும். கேப்டன் ஸ்டீவன் சுமித், டிராவிஸ் ஹெட், மேக்ஸ்வெல், … Read more

ஹாட்ரிக் வெற்றி பெறுமா இந்தியா..? – 3வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்துடன் நாளை மோதல்

அகமதாபாத், இந்தியாவுக்கு வருகை தந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதையடுத்து தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் 2 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 2-0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கைப்பற்றி விட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது … Read more

பும்ரா மட்டும் இல்லை! இந்த வீரர்களும் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட மாட்டார்கள்!

2025 Champions Trophy: சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் அடுத்த வாரம் தொடங்க உள்ள நிலையில் இந்திய அணிக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. காரணம் இந்திய அணியில் இருந்து ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக விளையாட மாட்டார் என்கிற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. ஆஸ்திரேலியா தொடரில் முதுகில் ஏற்பட்ட காயத்திற்குப் பிறகு தற்போது முழு நேர ஓய்வில் இருந்து வருகிறார். இன்னும் பும்ராவிற்கு ஓய்வு தேவை என்பதால் அவர் இடம் பெறவில்லை. பும்ராவிற்கு பதில் சாம்பியன்ஸ் … Read more

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர்; ஆஸ்திரேலிய கேப்டனாக செயல்படும் ஸ்டீவ் ஸ்மித்

கொழும்பு, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 2 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் நாளை தொடங்குகிறது. இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டாலும், அந்த அணிக்கு யார் கேப்டனாக செயல்படுவார் என்பது அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் … Read more

ரச்சின் ரவீந்திரா விலகிவிட்டால்… சிஎஸ்கே இந்த 3 பேரில் ஒருவரை நம்பி எடுக்கலாம்!

IPL 2025 CSK: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் (Champions Trophy 2025) நெருங்கி வருகிறது. பிப். 19ஆம் தேதி தொடங்கும் இந்த தொடர் அடுத்த 20 நாள்கள் நடைபெறும். மார்ச் 9ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெறுகிறது. இதன் பின் மார்ச் 21ஆம் தேதி முதல் ஐபிஎல் தொடர் தொடங்க இருக்கிறது. இப்போதே பல முன்னணி வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் ஜஸ்பிரித் பும்ரா; ஆஸ்திரேலியாவில் ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் மார்ஷ், பாட் கம்மின்ஸ்; இங்கிலாந்து … Read more

CSK ரசிகர்களுக்கு ஷாக்: சேப்பாக்கில் தோனியை பார்க்க முடியாது!

Chennai Super Kings: ஐபிஎல் தொடரின் 18வது சீசன் மார்ச் மாதம் கடைசியில் தொடங்க உள்ளது. சாம்பியன் டிராபி தொடர் வரும் 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 09ஆம் தேதி முடிவடைகிறது. இத்தொடரை தொடர்ந்து இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் நடக்க இருக்கிறது.  வழக்கமாக ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பு அனைத்து அணிகளும் தனது சொந்த மைதானங்களுக்கு சென்று பயிற்சி மேற்கொள்ளும். அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சென்னை சேப்பாக்கத்தில் பயிற்சி மேற்கொள்வர். இதனை … Read more

49 பந்தில், 160 ரன்கள்.. சம்பவம் செய்த மார்ட்டின் கப்தில்!

நியூசிலாந்து அணியின் முன்னாள் அதிரடி வீரர் மார்ட்டின் கப்டில். இவர் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை பெற்றார். இந்த நிலையில், லெஜண்ட் 90 வாரியர்ஸ் என்ற 15 ஓவர் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் சத்தீஸ்கர் வாரியர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.  இந்நிலையில், பிக் பாய்ஸ் உனிகாரி – சத்தீஸ்கர் வாரியர்ஸ் அணிக்களுக்கு இடையே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்டில் அதிரடியாக விளையாடி அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தி உள்ளார்.  இப்போட்டியில் முதலில் … Read more

கே.எல்.ராகுலுக்கு நடப்பது சரி இல்லை.. கம்பீரை எச்சரித்த இந்திய முன்னாள் வீரர்!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. 3 போட்டிகள் கொண்ட இத்தொடரில் 2 போட்டிகள் முடிவடைந்துள்ளது. 2 போட்டிகளிலுமே இந்திய அணி வென்று தொடரை கைப்பற்றி உள்ளது. இத்தொடரை இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியின் முன்னோட்டமாகவே அனுகி வருகிறது.  குறிப்பாக பேட்டிங்கில் முக்கிய பரிசோதனைகளை செய்து வருகிறது இந்திய அணி. அதன்படி கே.எல்.ராகுல் இறங்க வேண்டிய ஐந்தாம் வரிசையில் அக்சர் பட்டேல் இறக்கப்பட்டு வருகிறார். அக்சரும் சிறப்பாகவே விளையாடினார்.  முதல் போட்டியில் … Read more

சாம்பியன்ஸ் டிராபி: பும்ரா விளையாடுவாரா..? பி.சி.சி.ஐ. இன்று முடிவு.. வெளியான தகவல்

மும்பை, 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 19-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. பிப்ரவரி 19-ந்தேதி கராச்சியில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; ஒடிசா எப்.சி. – பஞ்சாப் எப்.சி. ஆட்டம் 'டிரா'

புவனேஸ்வர், 13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் புவனேஸ்வரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஒடிசா எப்.சி. – பஞ்சாப் எப்.சி. அணிகள் மோதின. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் பஞ்சாப் அணி ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தின் முதல் சில நிமிடங்களிலேயே ஒடிசா அணி ஒரு கோல் … Read more