ஐபிஎல்: கொல்கத்தா – பஞ்சாப் ஆட்டம் மழையால் ரத்து

கொல்கத்தா, ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா – பஞ்சாப் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பிரியன்ஸ் ஆர்யா,பிரப்சிம்ரன் சிங் இருவரும் அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இருவரும் அரைசதம் கடந்த நிலையில், பிரியன்ஸ் ஆர்யா 69 ரன்களிலும், பிரப்சிம்ரன் சிங் 83 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்த … Read more

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

மாட்ரிட், மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 2-வது சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்றார். இந்த நிலையில், இன்று நடைபெற்ற 2-வது சுற்றில் ஜோகோவிச், இத்தாலியின் மேட்டியோ அர்னால்டியுடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 3-6, 4-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். … Read more

ஐபிஎல் கோப்பையை வெல்லப்போகும் அணி இதுதான்.. அடித்து சொல்லும் யுவராஜ் சிங்!

நடப்பாண்டு ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து அணிகளும் இதுவரை 9 போட்டிகள் விளையாடி உள்ளது. அதன்படி புள்ளிப்பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் இடத்திலும் டெல்லி கேபிடல்ஸ் அணி இரண்டாவது இடத்திலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மூன்றாவது இடத்திலும் உள்ளன. இந்த மூன்று அணிகளும் 12 புள்ளிகள் பெற்றுள்ளது.  இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் அனி 10 புள்ளிகளுடன் 4வது இடத்திலும் பஞ்சாப் மற்றும் … Read more

கொல்கத்தா – பஞ்சாப் ஆட்டம் மழையால் பாதிப்பு

கொல்கத்தா, ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பிரியன்ஸ் ஆர்யா,பிரப்சிம்ரன் சிங் இருவரும் அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இருவரும் அரைசதம் கடந்த நிலையில், பிரியன்ஸ் ஆர்யா 69 … Read more

IPL 2025: கொல்கத்தா – பஞ்சாப் ஐபிஎல் போட்டி ரத்து!

ஐபிஎல் தொடரின் 44வது போட்டி இன்று (ஏப்ரல் 26) கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கி நடைபெற்றது. டாஸ் வென்ற  பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களான பிரப்சிம்ரன் சிங் மற்றும் பிரியானஸ் ஆர்யா களம் இறங்கினர்.  இருவரும் அதிரடியாக விளையாடினர். இவர்களின் விக்கெட்டை கொல்கத்தா அணியால் வீழ்த்த முடியவில்லை. 120 ரன்கள் சேர்த்த பின்னரே பிரியான்ஸ் ஆர்யா ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய அவர் 69 ரன்கள் சேர்த்த … Read more

சிஎஸ்கே அணிக்கு எதிர்கால நட்சத்திரம் கிடைத்துவிட்டார் – அனில் கும்ப்ளே

தென்னாப்பிரிக்க இளம் வீரர் டெவால்ட் பிரெவிஸ் எதிர்காலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு ஒரு முக்கியமான வீரராக நிரூபிக்க முடியும் என்று முன்னாள் இந்திய பயிற்சியாளரும், ஜாம்பவான் பந்து வீச்சாளருமான அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இது சொந்த மண்ணில் சிஎஸ்கேவின் தொடர்ச்சியான நான்காவது தோல்வியாகும். இருப்பினும், அந்த அணிக்கான தனது முதல் போட்டியில், பிரெவிஸ் 25 பந்துகளில் … Read more

ப்ரீ ஹிட்டை மிஸ் செய்த கமிந்து, காவ்யா மாறன் கொடுத்த ரியாக்ஷன் வைரல்

Kavya Maran Reaction : சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை சந்தித்து நடப்பு ஐபிஎல் 2025 தொடரில் பிளே ஆப் வாய்ப்பை நேரடியாக இழந்த முதல் அணியாக மாறியது. இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்கு மிகப்பெரிய கவலையாக இருந்தாலும் சன்ரைசர்ஸ் அணி ரசிகர்களுக்கு நிம்மதியைக் கொடுத்துள்ளது. ஏனென்றால் அந்த … Read more

பாகிஸ்தானுடனான கிரிக்கெட் உறவை இந்தியா முறித்துக்கொள்ள வேண்டும் – கங்குலி அதிரடி!

ஜம்மு காஷ்மீர் அருகே உள்ளது பகல்காம். இந்தியாவின் சுதர்லாந்து என அழைக்கப்படும் இப்பகுதியில் ஏப்ரல் 22 ஆம் தேதி  திடீரென பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். பலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்யா பயங்கரவாத அமைப்பின் நிழல் பிரிவான தி ரெசிஸ்டன்ஸ் ஃபோர்ஸ் பொறுப்பேற்ற நிலையில், இந்தியா பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  இந்த நிலையில், இந்திய … Read more

அந்த நான்கு பேர் தான் காரணம்! தோல்வி குறித்து தோனி சொன்ன முக்கிய வார்த்தைகள்!

ஐபிஎல் 2024 ஆம் ஆண்டை தொடர்ந்து இந்த ஆண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் செல்ல தவறி உள்ளது. இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 7ல் தோல்வி அடைந்துள்ளனர். குறிப்பாக சென்னை அணியின் கோட்டை என்று சொல்லப்படும் சேப்பாக்கம் மைதானத்திலேயே தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகின்றனர். நேற்று நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியை சந்தித்தது. இதனால் அதிகாரப்பூர்வமாக பிளே … Read more

ஐதராபாத் அணிக்கு 155 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சென்னை

சென்னை, 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 43-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. 5 முறை சாம்பியனான சென்னை அணி நடப்பு தொடரில் வழக்கத்துக்கு மாறாக தடுமாறி கொண்டிருக்கிறது. இதனால் சென்னை அணிக்கு இனி ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானதாகும். எஞ்சிய 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால்தான் ‘பிளே-ஆப்’ சுற்று வாய்ப்பில் … Read more