திமுக கூட்டணி உடையும் என அதிமுகவும், பாஜகவும் பகல் கனவு காண்கின்றன: செல்வப்பெருந்தகை

கோவை: திமுக கூட்டணி உடையும் என அதிமுகவும், பாஜகவும் பகல் கனவு காண்கின்றன என்று காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”இண்டியா கூட்டணி வலிமையாக இருக்கிறது. மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும், பாஜகவினரும் கூறுவது போன்று கூட்டணியில் எந்தவிதமான ஓட்டையும் இல்லை. நெல்லிக்காய் மூட்டை தான் சிதறும். சிதறுவதற்கு இது நெல்லிக்காய் மூட்டை கிடையாது. இது எஃகு கோட்டை கூட்டணி. இது சிதறுவதற்கு வாய்ப்பு … Read more

திருப்பரங்குன்றம் முதல் அறநிலையத் துறை வெளியேற்றம் வரை – முருக பக்தர்கள் மாநாட்டில் 6 தீர்மானங்கள்

மதுரை: தமிழகத்தில் உள்ள கோயில்களில் இருந்து அறநிலையத் துறை வெளியேற வேண்டும் என்பது உள்ளிட்ட 6 தீர்மானங்கள், மதுரையில் நடந்துவரும் முருக பக்தர்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. தமிழக இந்து முன்னணி சார்பில், மதுரை பாண்டிகோவில் அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு இன்று (ஜூன் 22) நடைபெற்றது. இதில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்கள்: > கார்த்திகை தீப திருநாளன்று திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வேண்டும் > ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்கு காரணமான இந்திய ராணுவத்துக்கும், … Read more

’விரல் நுனியில் அரசு சேவைகள்’ மூத்த குடிமக்களுக்காக தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு

Tamilnadu Government : மூத்த குடிமக்களுக்காக தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் செயலியை பயன்படுத்திக் கொள்ளுமாறு கரூர், நாகை மாவட்ட சீனியர் சிட்டிசன்களிடம் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. 

''கருப்பு நிறத்தை வைத்து கடவுளை சீண்டும் கூட்டம் தமிழ்நாட்டில் உள்ளது'' – பவன் கல்யாண் ஆவேசம்

மதுரை: “கருப்பு நிறத்தை வைத்து கடவுளை சீண்டும் கூட்டம் தமிழ்நாட்டில் உள்ளது. இந்து மதத்தை கேலி செய்யும் அவர்களால் மற்ற மதங்களை கேலி செய்ய முடியுமா” என்று ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் கேள்வி எழுப்பி உள்ளார். இந்து முன்னணி சார்பில், மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பவன் கல்யாண், “என்னை மதுரைக்கு வர வழைத்தது முருகன். என்னை வளர்த்தது முருகன். எனக்கு துணிச்சல் தந்தது முருகன். … Read more

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு : 2 மாவட்ட தேர்வர்களுக்கு குட் நியூஸ்..!!

TNPSC Group 4 Exam Free Mock Test 2025 : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகளுக்கு விண்ணப்பித்த நாகப்பட்டினம், தஞ்சாவூர் மாவட்ட தேர்வர்களுக்கு மாதிரி தேர்வுகள் தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கோவை வருகை

கோவை: ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பாகவத் இன்று கோவை வந்தார். பேரூரில் நாளை நடைபெறும் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பாகவத் மும்பையில் இருந்து விமானம் மூலம் இன்று கோவை வந்தார். கார் மூலமாக கோவைப்புதூர் அருகேயுள்ள சுண்டக்காமுத்தூர் நாச்சிகோனார் தோட்டத்திற்கு சென்றார். இரவு அங்கு தங்கும் அவர் நாளை காலை பேரூர் ஆதீன மடத்திற்கு சென்று அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். … Read more

அனைத்து துறைகளிலும் தமிழகத்தை பின்னுக்குத் தள்ளியதே ஸ்டாலினின் சாதனை – இபிஎஸ் சாடல்

சென்னை: “திமுக அரசு வெற்று விளம்பரங்கள் மூலம் உண்மைகளை மறைக்கும் அரசு என்பதை தமிழக மக்கள் நன்றாகவே உணர்ந்துள்ளனர். நான்காண்டுகளில் தமிழகத்தை அனைத்துத் துறைகளிலும் பின்னுக்குத் தள்ளி, கடன் வாங்குவதில் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக்கியதுதான் முதல்வர் ஸ்டாலினின் சாதனை” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “விளம்பர வெற்றிகளில் மட்டுமே மிதக்கும் பொம்மை முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவதெல்லாம் வெறும் கற்பனையில் மட்டுமே என்பதை … Read more

கீழடி வரலாறு, மத்திய அரசு அங்கீகரிக்க மறுப்பு – அமைச்சர் தங்கம் தென்னரசு அடுக்கிய குற்றச்சாட்டு

Thangam Thennarasu : கீழடி வரலாற்றை மத்திய அரசு அங்கீகரிக்க மறுக்கிறது, அறிவியல் பூர்வமாக விளக்கம் கொடுத்தாலும் ஏற்க மறுப்பது ஏன் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார். 

மதுரையில் களைகட்டிய முருக பக்தர்கள் மாநாடு – பவன் கல்யாணுக்கு உற்சாக வரவேற்பு

மதுரை: மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் வருகை தந்தார். காலை முதலே மாநாடு நடைபெறும் திடலுக்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் வேல்களை ஏந்தியும், காவடி எடுத்தும் வருகை தந்தனர். மாநாட்டு திடலில் திரண்ட பக்தர்கள்: மதுரை ரிங்ரோடு அருகே சுமார் 20 ஏக்கர் பரப்பில் முருக பக்தர்கள் மாநாடு நடக்கிறது. மாலை 3 மணிக்கு தொடங்கும் மாநாட்டில் பங்கேற்க, வெளியூர் பக்தர்கள் அதிகாலை முதலே … Read more

''முருகப்பெருமான் முதல்வர் பக்கம் இருக்கிறார்'' – அமைச்சர் சேகர்பாபு

சென்னை: “எது ஆன்மிகம், எது அரசியல் என்பதை ஆண்டவன் பார்த்துக் கொண்டிருக்கின்றான். அவர்கள் நடத்துகின்ற இன்றைய மாநாடு முழுக்க முழுக்க அரசியல் மாநாடு,” என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்னை அயனாவரம், காசி விஸ்வநாதர் கோயிலில் பொதுநல நிதி மற்றும் திருக்கோயில் நிதி மூலம் ரூ.97 லட்சம் மதிப்பீட்டில் குளத்தை சீரமைக்கும் பணிகளை இன்று (ஜூன் 22) தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் … Read more