தொடரும் ஆசிரியர்களின் போராட்டம்… வந்து விழுந்த கேள்வி – அமைச்சர் அன்பில் மகேஷின் பதில் என்ன?

Teachers Protest: நிதி நெருக்கடி இல்லாமல் எதை முதலில் அமல்படுத்த முடியுமோ அதை செய்வோம் என ஆசிரியர்கள் போராட்டம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டியளித்துள்ளார். 

''தற்சார்பு கிராமங்களை உருவாக்க திராவிட மாடல் அரசு உழைக்கும்'' – கிராம சபைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை: கிராமங்களில்தான் மக்களாட்சி முறையானது முதலில் தோன்றியிருக்கிறது. நீர் ஆதாரங்களை வளப்படுத்துதல், தண்ணீரின் முக்கியத்துவம், நிலத்தடி நீரினை செறிவூட்டுதல், நீர்நிலைகளைப் பாதுகாத்தல் போன்ற ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ள வேண்டும், என கிராம சபைக்கூட்டத்தில் காணொலி வாயிலாக கலந்துகொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். காந்தி ஜெயந்தியையொட்டி தமிழகம் முழுவதும் இன்று (அக்.2) கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியது: “திராவிட மாடல் ஆட்சி அமைந்ததற்குப் … Read more

திமுக அரசை விமர்சித்து விஜய் ரசிகர் ஒட்டி உள்ள போஸ்டரால் பரபரப்பு!

“இன்று நீங்கள நேரு அரங்கத்திற்கு வருவதை தடுக்கலாம், ஆனால் நாளை உங்கள் கீழ் அமையப் போகும் அரசாங்கத்தை எவராலும் தடுக்க முடியாது” என  அரசை விமர்சித்து விஜய் ரசிகர் ஒட்டி உள்ள போஸ்டரால் பரபரப்பு.  

காந்தி ஜெயந்தி | தமிழக ஆளுநர், முதல்வர் ஸ்டாலின் மரியாதை

சென்னை: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர்தூவி மரியாதை செவுத்தினர். நாடு முழுவதும் உத்தமர் காந்தியடிகளின் 155-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் சார்பில், சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து தமிழக … Read more

திருநங்கைகளுக்கு உரிமை தொகை முதல்வர் அறிவிப்பார்: அமைச்சர் கீதாஜீவன் தகவல்

திருப்புவனம்: திருநங்கைகளுக்கும் உரிமைத் தொகை வழங்குவது குறித்து விரைவில் முதல்வர் அறிவிப்பார் என்று சமூகநலத் துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் திமுக மகளிர் தொண்டரணி சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா கருத்தரங்கு நடைபெற்றது. அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், தமிழரசி எம்.எல்.ஏ. ஆகியோர் பேசினர். நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக 22 திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. திருநங்கைகளுக்கு உரிமைத் தொகை வழங்குவது குறித்து விரைவில் முதல்வர் … Read more

சென்னை உட்பட 29 இடங்களில் 14 நிமிடத்தில் சுத்தம் செய்யப்பட்ட வந்தே பாரத் ரயில்கள்

புதுடெல்லி: நாடு முழுவதும் 29 இடங்களில் அடுத்த பயணத்துக்காக வந்தே பாரத் ரயில்கள் வெறும் 14 நிமிடங்களில் சுத்தம் செய்யப்பட்டது. ஜப்பானில் ‘7 மினிட்ஸ் மிராக்கள்’ என்ற பெயரில் புல்லட் ரயில்களை சுத்தப்படுத்தும் பணி அறிமுகப்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்பாட்டில் உள்ளது. அதன்படி, கடைசி ரயில் நிலையத்துக்கு ரயில் வந்தடைந்ததும் பயணிகள் அனைவரும் இறங்கிய பிறகு,வெறும் 7 நிமிடங்கள் சுத்தப்படுத்தப்படும். அதன்பின், அடுத்த பயணத்துக்கு அந்த ரயில் தயாராகிவிடும். அதே போன்ற ஒரு திட்டத்தை ரயில்வே துறை நாட்டில் … Read more

ஒரு கோடி பனை விதைகள் நடும் திட்டம் தொடக்கம்: முயற்சி வெற்றிபெற முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு, பனைமர தொழிலாளர் நலவாரியம் சார்பில், தமிழகம் முழுவதும் கடலோரப் பகுதிகளில் ஒரு கோடி பனை மர விதைகள் நடும் திட்டம் நேற்று தொடங்கியது. இந்தமுயற்சி வெற்றியடைய முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். பனை மரங்கள் வளர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில், தமிழக தொழிலாளர் நலத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரியம் சார்பில் தமிழகம் முழுவதும் ஒரு கோடி பனை விதைகளை விதைக்கும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. இதையொட்டி, … Read more

காவிரியில் நீர்வரத்து 3,446 கனஅடியாக சரிவு: மேட்டூர் அணை நீர்மட்டம் 36.94 அடி

மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து குறைந்து, அணை நீர்மட்டம் 36.94 அடியாக சரிந்துள்ளது. தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை இல்லாதது, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடகா விடுவிக்க மறுப்பது உள்ளிட்ட காரணங்களால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 4,524 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 3,446 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக … Read more

''சென்னையில் நாள்தோறும் 500 மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை'' – ராமதாஸ் குற்றச்சாட்டு

சென்னை: சென்னையில் நாள்தோறும் 500 மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் நிலவும் கடுமையான ஓட்டுனர் பற்றாக்குறை காரணமாக 2022-23 ஆம் ஆண்டில் மட்டும் 29.70 லட்சம் தடவை பேருந்து சேவை பாதிக்கப்பட்டதாக -புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மாநகர போக்குவரத்துக் கழகத்தின் ஒட்டுமொத்த சேவைகளில் ஆறில் ஒரு பங்கு சேவை, ஓட்டுனர்கள் பற்றாக்குறையால் நிறுத்தப்படுவது போக்குவரத்துத் துறைக்கு தலைகுனிவாகும். சென்னை … Read more

தமிழர்களின் கம்பீரமான கலையுலக அடையாளம் சிவாஜி கணேசன்: முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி

சென்னை: “நடிப்பின் இமயமாய், தமிழர்களின் கம்பீரமான கலையுலக அடையாளமாய் என்றென்றும் உயர்ந்து நிற்கும் “நடிகர் திலகம்” சிவாஜி கணேசனின் புகழ், தரணியும், தமிழும் உள்ளவரை என்றென்றும் நிலைத்திருக்கும்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தலைவர் கருணாநிதியின் கனல் தெறிக்கும் வசனங்களை அனல் பறக்கத் தமது சிம்மக் குரலால் பேசி, ரசிக நெஞ்சங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்த “நடிகர் திலகம்” சிவாஜி கணேசனின் 96-ஆவது பிறந்தநாள் இன்று! நடிப்பின் … Read more