"ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகள் தொடர்ந்து வருத்தத்தை தருகின்றன".. திடீரென குரல் தழுதழுத்த ஸ்டாலின்!

சென்னை: ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களின் விகிதம் தொடர்ந்து குறைந்து வருவது தனக்கு மிகுந்த வருத்தத்தை தருவதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் கல்லூரி மாணவ, மாணவிகள் மத்தியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று உரையாடினார். அப்போது அவர் பேசியதாவது: படிப்பு என்பது பட்டம் சார்ந்தது மட்டுமல்ல; திறமை சார்ந்ததாகவும் மாற வேண்டும். வேலை என்பது சம்பளம் சார்நதது மட்டுமல்ல; திறமை சார்ந்ததாகவும் மாற வேண்டும். அந்த திறமையை உங்களிடம் … Read more

கருணாநிதி எனது ஆசான் என சொல்வதில் எனக்கு பெருமை: குஷ்பு பேச்சு

கோவை: கருணாநிதி குறித்து பேச வேண்டுமென்றால் நான் நாள் முழுக்க பேசிக்கொண்டே இருப்பேன் என தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு தெரிவித்தார். தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, கோவை மக்கள் சேவை மையம் சார்பில் கைத்தறி ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி கோவையில் இன்று (ஆக.7) நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட குஷ்பு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பின்னர், குஷ்பு செய்தியாளர்களிடம் கூறியதாவது: கருணாநிதி எனது ஆசான் என்று சொல்லிக்கொள்ளவதில் … Read more

தமிழக மீனவர்கள் கைது படலம்… ஒரே மாசத்தில் 34 பேர்… அமைச்சர் ஜெய்சங்கருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக கச்சத்தீவை இலங்கைக்கு அளித்த விவகாரம் பார்க்கப்படுகிறது. இந்தியா – இலங்கை அரசுகள் மாறி மாறி எத்தனை முறை பேச்சுவார்த்தை நடத்தினாலும் பிரச்சினை தீர்ந்தபாடில்லை. நாகை மீனவர்கள் வேதனை தமிழக மீனவர்கள் கைது தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்யப்படுவது மட்டுமின்றி, அவர்களின் படகுகளும் சேதப்படுத்தப் படுகின்றன. சில சமயங்களில் துப்பாக்கிச்சூடு சம்பவங்களால் உயிர் பலியாகும் … Read more

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதித்தது ஏன்? – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

சென்னை: பொது ஒழுங்குக்கு இடையூறு ஏற்படுத்துவதால் தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகள் தடை செய்யப்பட்டுள்ளது. இது அரசின் கொள்கை முடிவு, என்று செனனை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து தமிழக அரசு சட்டம் இயற்றியது. இதை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது … Read more

12 மணி உச்சி வெயிலில் எந்த தலைவராவது பாதயாத்திரை சென்ற வரலாறு உண்டா..? அமர் பிரசாத் ரெட்டி நெகிழ்ச்சி

மதுரை: தமிழ்நாட்டு வரலாற்றிலேயே எந்த அரசியல் தலைவராவது மதியம் 12 மணி உச்சி வெயிலில் பாத யாத்திரை சென்றிருக்கிறார்களா.. ஆனால் எங்கள் தலைவர் அண்ணாமலை மக்களுக்காக எப்படி கஷ்டப்படுகிறார் பாருங்கள் என்று பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி நெகிழ்ச்சியாக கூறினார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பாஜக தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை சென்று வருகிறார். ராமேஸ்வரத்தில் தொடங்கிய இந்த பாதயாத்திரை பல மாவட்டங்களை கடந்து தற்போது மதுரையில் நடந்து கொண்டிருக்கிறது. இது … Read more

தாடியுடன் செந்தில்பாலாஜி… சாஸ்திரி பவனுக்கு அழைத்து வந்த அதிகாரிகள் – அடுத்தது என்ன?

Minister Senthil Balaji In ED Custody: அமைச்சர் செந்தில் பாலாஜியை 5 நாள் காவலில் எடுத்த விசாரிக்க சென்னை முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, அதிகாரிகள் அவரை சிறையில் இருந்து அழைத்துச்சென்றனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக காவலில் எடுத்தது அமலாக்கத் துறை

சென்னை: ஆகஸ்ட் 12-ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதியளித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், புழல் சிறையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவு நகலை புழல் சிறை அதிகாரிகளிடம் வழங்கிய அமலாக்கத் துறை அதிகாரிகள், அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்தனர். மூன்று வாகனங்களில் வந்த அமலாக்கத் துறை அதிகாரிகள், துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎஃப் காவலர்களின் உதவியோடு … Read more

காவலில் எடுக்கப்பட்ட செந்தில் பாலாஜி.. சர்ர்ரென அழைத்துச் சென்ற அமலாக்கத்துறை.. மாறிப்போன முகம்

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் எடுத்துள்ளனர். இதையடுத்து, புழல் சிறையில் இருந்து செந்தில் பாலாஜியை தங்கள் காரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் நடந்த பணமோசடி வழக்கு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் ரெய்டு நடத்திய போலீஸார், கடந்த ஜூன் மாதம் அவரை கைது செய்தனர். பின்னர் அவரை விசாரிப்பதற்காக அழைத்து சென்ற போது தனது நெஞ்சு வலிப்பதாக கூறி கதறினார் செந்தில் பாலாஜி. இதனைத் தொடர்ந்து, … Read more

காவிரியில் நீர் திறக்காததால் குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு முழு நிவாரணம் வழங்குக: ஓபிஎஸ்

மதுரை: காவிரியில் உரிய நேரத்தில் தண்ணீர் திறக்காததால் குறுவை சாகுபடி விவசாயிக்கு முழு நிவாரணம் அரசு வழங்கவேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார். மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக அவர் இன்று மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ”தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு அரசு ஒதுக்கிய நிதியை மகளிர் உரிமைத் தொகைக்கு மாற்றி வழங்கினால் அது தவறு. சட்டப்படி குற்றம். தஞ்சையில் குறுவை நெல் சாகுபடி பயிர்கள் கருகுகின்றன. அதற்கு முழு காரணம் … Read more

செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க.. புழல் சிறைக்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள்.. பரபரப்பில் திமுக

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுப்பதற்காக அமலாக்கத்துறை அதிகாரிகள் புழல் சிறைக்கு வந்துள்ளனர். இன்னும் சிறிது நேரத்தில் செந்தில் பாலாஜியை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரிக்க தொடங்குவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையின் காவலுக்கு செல்வதால் திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் நடந்த பணமோசடி வழக்கு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் ரெய்டு நடத்திய போலீஸார், கடந்த ஜூன் மாதம் அவரை கைது செய்தனர். பின்னர் … Read more