கடலூர் தென் பெண்ணையாற்றில் கை துப்பாக்கி கண்டெடுப்பு: போலீஸார் விசாரணை

கடலூர்: கடலூர் தென்பெண்ணை ஆற்றில் இருந்து கை துப்பாக்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் ஆல்பேட்டை அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றில் இன்று(ஆக.6) சிறுவர்கள் சிலர் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அதில் ஒரு சிறுவனின் கையில் கை துப்பாக்கி ஒன்று கிடைத்துள்ளது. இதனால் அந்த சிறுவர்கள் பதற்றம் அடைந்துள்ளனர். பின்னர் அவர்கள் அந்த கை துப்பாக்கியை கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவலுக்கு நின்ற போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து … Read more

'மாமன்னன்' ரத்னவேல் கேரக்டரை கொண்டாடுவதா..? கொந்தளித்த டாக்டர் கிருஷ்ணசாமி.. பகத் பாசிலுக்கும் அட்வைஸ்

சென்னை: ‘மாமன்னன்’ திரைப்படத்தையும், அதன் இயக்குநர் மாரி செல்வராஜையும் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். அதேபோல, அந்த திரைப்படத்தில் நடிகர் ஃபகத் பாசில் ஏற்று நடித்த ரத்னவேல் கதாபாத்திரம் கொண்டாடப்படுவதற்கும் அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் அமைச்சர் உதயநிதி, வடிவேலு ஆகியோரின் நடிப்பில் உருவாகி கடந்த மாதம் வெளிவந்த திரைப்படம் ‘மாமன்னன்’. கமல்ஹாசனின் தேவர் மகன் திரைப்படம் ஏற்படுத்திய தாக்கத்தின் வெளிப்பாடே ‘மாமன்னன்’ என்று மாரி செல்வராஜ் ஏற்கனவே … Read more

அண்ணாமலை நடைபயணம் தமிழகத்தில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது: கே.எஸ்.அழகிரி

சென்னை: “அண்ணாமலை மேற்கொள்ளும் இந்த நடைபயணத்தால், அவர்களது கட்சியிலேயே எதுவும் ஏற்படாது. அது தமிழகத்திலும் எந்தவிதமான மாற்றத்தையும் ஏற்படுத்தாது. அண்ணாமலையின் நடைபயணத்துக்கு தமிழகத்தில் யாரும் அச்சப்படமாட்டார்கள்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நடைபயணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்றதை … Read more

"முஸ்லிம்கள் சாத்தானின் பிள்ளைகள் அல்ல; பாரத தாயின் பிள்ளைகள்".. சொல்வது அர்ஜுன் சம்பத்!

சென்னை: “முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் சாத்தானின் பிள்ளைகள் அல்ல.. அவர்கள் பாரதத் தாயின் பிள்ளைகள்” என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மணிப்பூரில் நடந்த கலவரத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் அண்மையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் சாத்தானின் பிள்ளைகள்” என்று கூறினார். சீமானின் இந்த பேச்சு தமிழகத்தில் பெரும் சர்ச்சையான நிலையில், இதுதொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக செய்தியாளர் … Read more

அதிமுக – பாஜக கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை: ஹெச்.ராஜா

பெரியகுளம்: “பாஜகவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி ஏதாவது பேசினால் மட்டும் நான் பதிலளிக்கிறேன்” என்று பாஜகவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறியுள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பாஜகவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், பாஜக – அதிமுக கூட்டணி குறித்தும், அண்ணாமலை குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கருத்து தெரிவிப்பது குறித்தும் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “பாஜகவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி ஏதாவது பேசினால் மட்டும் நான் பதிலளிக்கிறேன். நான் … Read more

பாத்ரூம் செல்லும் மாணவிகள் தான் "டார்கெட்".. பள்ளியில் கொடூரம்.. ஆசிரியரை பதம் பார்த்த பெற்றோர்கள்!

ஹைதராபாத்: பள்ளி மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த ஆசிரியரை மாணவிகளின் பெற்றோர் துரத்தி துரத்தி அடித்து துவைத்த சம்பவம் தெலங்கானாவில் நடந்துள்ளது. காமக்கொடூரனாக வலம் வந்த ஆசிரியர், மாணவிகளுக்கு செய்த கொடுமையை கேட்கும் போது நமக்கே நெஞ்சம் பதறுகிறது. தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள அட்டாப்பூர் பகுதியில் எஸ்ஆர்டிஜி என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 1000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் விஷ்ணு (32) என்பவர் உடற்கல்வி … Read more

ராகுல்காந்தியை பார்க்க பயப்படுறீங்களா? பாஜகவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி

நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தியை பார்க்க பாஜக பயப்படுகிறதா? என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.  

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி கோரி மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம்

மதுரை: மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தக் கோரி மக்கள் நீதி மய்யம் சார்பில் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மணிப்பூர் வன்முறைக்கு எதிராக நாடு முழுவதும் அரசியல் கட்சியினர், கல்லூரி மாணவர்கள் என பலரும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், மதுரை பெத்தானியபுரம் பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அக்கட்சியின் இளைஞரணி செயலர் கவிஞர் சிநேகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மணிப்பூரில் பாஜக அரசை கலைத்துவிட்டு … Read more

அண்ணாமலை மனுவை கீழே போட்டாரா..? "செவுலை திருப்பிடுவேன்".. திடீரென ஆவேசமான எச். ராஜா

மதுரை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து ஒரு கேள்வியை கேட்டதுமே எச். ராஜா ஆவேசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அண்ணாமலை பாதயாத்திரை தொடங்கியுள்ளார். ராமேஸ்வரத்தில் தொடங்கிய இந்த பாதயாத்திரை தற்போது மதுரையில் நடைபெற்று வருகிறது. தான் செல்லும் இடங்களில் எல்லாம் திமுக அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் அண்ணாமலை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில், அண்ணாமலையுடன் பல இடங்களில் பாதயாத்திரை சென்ற பாஜக மூத்த தலைவர் … Read more

நேராக கூட்டி வாங்க செவிட்டில் அரைகிறேன் – தேனியில் எச். ராஜா ஆவேசம்

தேனியில் பேசிய எச்.ராஜாவிடம் அண்ணாமலையிடம் கொடுக்கப்பட்ட மனு கீழே வீசப்பட்டது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அப்படி சொன்னவர்களை நேரில் கூட்டி வாங்க செவிட்டில் அரைகிறேன் என ஆவேசமாக தெரிவித்துள்ளார்.