அவனியாபுரம் ஜல்லிக்கட்டு | 6 சுற்றுகள் முடிவில் 510 காளைகள் அவிழ்ப்பு; 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு: 40 பேர் காயம்

மதுரை: மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 6 சுற்றுகள் முடிந்த நிலையில் 510 காளைகள் அவிழ்க்கப்பட்டுள்ளன. 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கினர். காளைகள் முட்டியதில் இதுவரை 40 பேர் காயம காயமடைந்துள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் முதல் ஜல்லிக்கட்டுப்போட்டி அவனியாபுரத்தில் இன்று நடைபெற்று வருகிறது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு … Read more

புறநகர் ரயில் நிலையத்தில் பெரிய டிஜிட்டல் காட்சி பலகை அகற்றம்: தகவல் அறிய முடியாமல் தவிக்கும் பயணிகள் @ சென்னை

சென்னை: சென்னையில் முக்கியமான புறநகர் ரயில் நிலையங்களில் ஒன்றான மூர்மார்க்கெட் வளாக ரயில் நிலையத்தில் பெரிய டிஜிட்டல் காட்சி பலகை இல்லாததால், ரயில்கள் தொடர்பான தகவலை அறிய முடியாமல் பயணிகள் தவித்து வருகின்றனர். எனவே, பெரிய டிஜிட்டல் காட்சி பலகையை மீண்டும் அமைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னையில் பொது போக்குவரத்தில் புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து மையமாக இருக்கிறது. புறநகர் மின்சார ரயில் போக்குவரத்தை பொருத்தவரை, சென்னை கடற்கரை–செங்கல்பட்டு வழித்தடம், சென்னை சென்ட்ரல்–திருவள்ளூர் … Read more

மணிகண்டன்

காஞ்சிபுரம்: உத்திரமேரூர் நகரின் பிரதான சாலையில் குறுகிய இடத்தில் செயல்பட்டு வரும் பேருந்து நிலையத்தால், நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் நகருக்கு வெளியே நவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையத்தை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகாவில் ஏராளமான கிராமங்கள் அமைந்துள்ளன. மாவட்ட தலைநகரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் இருந்தாலும் உத்திரமேரூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் வளர்ச்சி திட்டங்கள் ஏதும் பெரிய அளவில் நடைபெறவில்லை … Read more

முடிஞ்சா என்ன அடக்கி பார்! ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்திற்குள் வந்த நாய்!

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று தொடக்கம். மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வெற்றி பெறும் சிறந்த மாடுபிடி வீரருக்கு ஒரு கார், சிறந்த மாட்டுக்கான பரிசு ஒரு கார் என இரண்டு கார்கள் வழங்கப்பட உள்ளன.  

அண்ணாமலை மீதான தனிப்பட்ட தாக்குதலுக்கு தமிழக அரசு வருத்தம் தெரிவிக்க வேண்டும்: தமிழக பாஜக

சென்னை: “ஜனநாயக அமைப்பில், கட்சிகள், அரசை மேற்பார்வையிடும் கருவிகள் தானேயன்றி ஏதோ, தங்களுக்கே சொந்தமானதாக எண்ணி தாந்தோன்றித்தனமாக அறிக்கைகள் வெளியிடுவதை அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். நேற்றைய செய்திக்குறிப்பை அரசு திரும்ப பெறுவதோடு, பாஜக தலைவர் அண்ணாமலை மீதான தனிப்பட்ட தாக்குதலுக்கு வருத்தமும் தெரிவிக்க வேண்டும்” என்று பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று தமிழக அரசு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதோடு அண்ணாமலை வரலாற்றை மாற்றவோ, … Read more

ஜல்லிக்கட்டு ரவுண்ட் அப்: சீரிப்பாய்ந்த காளைக்கு காயம்-வீரர்கள்51 பேருக்கு அடி..!

மதுரை அவனியாபுரம் ஜல்லிகட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்தது. இதையொட்டி, இன்று ஜல்லிக்கட்டு பாேட்டியில் நடைப்பெற்ற சுவாரஸ்யமான நிகழ்வுகளை பார்க்கலாம்.   

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு | 17 காளைகளை அடக்கிய இளைஞருக்கு கார் பரிசு; காவல்துறையினர் உட்பட 51 பேருக்கு காயம்

மதுரை: மதுரை அவனியாபுரம் ஜல்லிகட்டு போட்டி விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. 17 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த அவனியாபுரத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர் கார்த்திக் என்பவருக்கு 10 லட்சம் மதிப்பிலான கார் மற்றும் கறவை பசு பரிசாக வழங்கப்பட்டது. அதேபோல், சிறந்த காளைக்கும் கார் மற்றும் கறவை பரிசாக வழங்கப்பட்டன. இந்தப்போட்டியில் 2 காவலர்கள் உள்பட 51 பேர் காயமடைந்தனர். 817 காளைகள் அவிழ்ப்பு: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று காலை 7 … Read more

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு: கோல்டு காயின்களை வாரி வழங்கிய மதுரை அமைச்சர்கள்

Avaniyappuram Jallikattu: பொங்கல் விழாவையொட்டி நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லாமல் நடந்து முடிந்தது. போட்டியில் வென்ற மாடுபிடி வீரர்களுக்கு மதுரை அமைச்சர்களான மூர்த்தி மற்றும் பிடிஆர் ஆகியோர் கோல்டு காயின்களை வாரி வழங்கினர். 

'தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை மத்திய பாஜக அரசு வேடிக்கைப் பார்க்கிறது' -இந்திய கம்யூ. கண்டனம்

சென்னை: புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் பகுதியில் இருந்து, மீன் பிடிக்க சென்ற 12 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதையும், அவர்களது வலைகளும், படகுகளும் உடைத்து சேதப்படுவதையும் மத்திய பாஜக அரசு மவுன சாட்சியாக வேடிக்கை பார்த்து வருகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் பகுதியில் இருந்து, வங்கக் கடலில் மீன் பிடிக்க சென்ற 12 மீனவர்கள் … Read more

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் நடைபெற்ற சுவாரஸ்ய நிகழ்வுகள்..!

avaniyapuram jallikattu 2024 highlights: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பல்வேறு சுவாரஸ்ய சம்பவங்கள் நடைபெற்றன. அதனை தொகுப்பை இங்கே பார்க்கலாம்.