மிக்ஜாம் பாதிப்பு | இதுவரை ரூ.17.60 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தமிழக அரசு தகவல்

சென்னை: மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு 34 மாவட்டங்களிலிருந்து பெறப்பட்ட ரூ.17.60 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மிக்ஜாம் புயல் மற்றும் மழையினால் பாதிப்புகள் ஏற்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு உதவுவதற்கான ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை ரிப்பன் கட்டடத்திலுள்ள பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் கடந்த டிச.6-ம் தேதி … Read more

நாடாளுமன்ற அவைக் குறிப்பில் இருந்து பெரியார் பெயர் நீக்கம்: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

சென்னை: “நாடாளுமன்றத்திலேயே கருத்துரிமையின் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது” என நாடாளுமன்ற அவைக் குறிப்பிலிருந்து பெரியார் பெயர் நீக்கப்பட்ட சம்பவத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “மாநிலங்களவையில் எம்.பி. எம்.எம்.அப்துல்லா உரையாற்றும்போது சுட்டிக்காட்டிய தந்தை பெரியாரின் மேற்கோளுக்கு பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெரியாரின் பெயரும் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்திலேயே கருத்துரிமையின் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது. மண்டல் ஆணையப் பரிந்துரையை அமல்படுத்தியபோது தந்தை பெரியார்தான் இதற்குக் காரணம் என்று … Read more

மிக்ஜாம் பாதிப்பு | கல்லூரிச் சான்றிதழ்களை இழந்தவர்கள் கட்டணமின்றி நகல்களைப் பெற சிறப்பு வலைதளம்

சென்னை: “மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்பினால் கல்லூரிச் சான்றிதழ்களை இழந்த மாணவ / மாணவிகளுக்கு கட்டணமின்றி அவற்றின் நகல்களைப் பெற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது” என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பான தமிழக அரசின் செய்தி குறிப்பு: தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாவட்டத்திலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, மழை, வெள்ள பாதிப்பினால், கல்லூரி … Read more

காங்கிரஸ் போல தமிழகத்தில் திமுக ஒரு மிகப்பெரிய ஊழல் கட்சி – பாஜக

காங்கிரஸ் எப்படி ஒரு ஊழல் கட்சியோ அதே போன்று தமிழகத்தில் திமுக ஒரு மிகப்பெரிய ஊழல் கட்சி என்று விருதாச்சலத்தில் பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் கூறியுள்ளார்.  

அதிமுக பெயர், சின்னம் விவகாரம் | “தனி நீதிபதி உத்தரவை மீறவில்லை” – உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தகவல்

சென்னை: அதிமுகவின் பெயர், கட்சிக் கொடி, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து தனி நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவை தற்போது வரை மீறவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மீண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பன்னீர்செல்வத்துக்கு எதிராக இபிஎஸ் தொடர்ந்த வழக்கின் விசாரணை ஜனவரி 22-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள மனுவில், ‘அதிமுக கட்சியின் பெயர், சின்னம், கொடி … Read more

மாற்றுத் திறனாளி நலத் துறைக்கு நிரந்தர அதிகாரியை நியமிக்கக் கோரி மதுரையில் ஆர்ப்பாட்டம்

மதுரை: மாற்றுத் திறனாளி நலத்துறைக்கு நிரந்தர அதிகாரி நியமிக்கக் கோரி மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரையில் இன்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில் மதுரை மாவட்டத்துக்கு மாற்றுத் திறனாளி நலத் துறை அதிகாரியை நிரந்தரமாக நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாநகர மாவட்டத் தலைவர் பி.வீரமணி தலைமை வகித்தார். புறநகர் மாவட்டத் தலைவர் கே.தவமணி … Read more

பொம்மை முதலமைச்சரே வெள்ளை அறிக்கை கொடுங்க – ஜெயக்குமார் விளாசல்

வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட்டால், எப்போது கூப்பிட்டாலும் விவாதத்திற்கு தயாராக இருப்பதாக அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.   

2015 vs 2023 | “அன்று ரூ.5,000, இன்று ரூ.6,000…” – மீட்பு, வெள்ள நிவாரணத்தை ஒப்பிட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: “2015 வெள்ளத்தின்போது மத்திய அரசிடமிருந்து அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கோரிய நிவாரணத் தொகை ரூ.10,780 கோடி. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அப்போது வழங்கப்பட்ட நிவாரணத் தொகை ரூ.5,000. ஆனால், தற்போது மத்திய அரசிடம் ரூ.5,060 கோடி மட்டுமே கோரியுள்ள தமிழக அரசு நிவாரணத் தொகையாக ரூ.6,000 அறிவித்துள்ளது” என்று தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில், தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் … Read more

அன்று நடந்தது என்ன? – அட்டைப் பெட்டியில் ஒப்படைக்கப்பட்ட இறந்த குழந்தையின் தந்தை விவரிப்பு

சென்னை: குழந்தையின் உடலை அட்டைப் பெட்டியில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை ஒப்படைத்த சம்பவத்தில் நடந்தவற்றை அக்குழந்தையின் தந்தை மசூத் விவரித்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இறந்து பிறந்த குழந்தையின் உடலை முறையாக துணி சுற்றாமல், அட்டைப் பெட்டிக்குள் வைத்து பெற்றோரிடம் ஒப்படைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்துக்கு சமூக வலைதளங்களில் தங்களது வருத்தத்தையும், கண்டனங்களையும் பதிவு செய்து வந்தனர். இந்நிலையில், அக்குழந்தையின் தந்தை மசூத் மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: “டிசம்பர் 6-ம் தேதியன்று … Read more

மிக்ஜாம் நிவாரண நிதி: பாதிக்கப்பட்டவர்கள் பெறுவது எப்படி?

மிக்ஜாம் புயல் பாதிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியை அரசு நியாயவிலைக் கடைகள் மூலம் நேரடியாக கொடுக்க இருந்த நிலையில் வங்கிகளில் செலுத்தக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.