முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் 18 வயது நிரம்பிய குழந்தைகள் முதிர்வுத் தொகை பெற அழைப்பு

சென்னை: முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் பதிவு செய்துள்ள 18 வயது நிரம்பிய பெண் குழந்தைகள், முதிர்வுத் தொகையை பெற்றுக் கொள்ளுமாறு சமூக நலத்துறையின் ஆணையர் அழைப்பு விடுத்துள்ளார். தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனம் வாயிலாக ‘முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 2001 முதல் மார்ச் 2023 வரை 9 லட்சத்து 56 பெண் குழந்தைகள் பதிவு செய்துள்ளனர். … Read more

போலீசாரை தாக்க வந்த ரவுடிகள்… என்கவுண்டரில் இருவர் பலி – நடந்தது என்ன?

Tambaram Encounter: தாம்பரம் அருகே போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு ரவுடிகள் உயிரிழந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை | ஊரப்பாக்கத்தில் ரவுடிகள் இருவர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை

சென்னை: சென்னை – தாம்பரம் பகுதியை அடுத்த ஊரப்பாக்கத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு ரவுடிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ரவுடிகளான சோட்டா வினோத் (35) மற்றும் ரமேஷ் (28) மீது காவல் துறையினர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர். காரணை புதுச்சேரி செல்லும் பிரதான சாலையில் போலீஸாரை வெட்டிய ரவுடிகள் இருவரும் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை 3.30 மணி அளவில் போலீஸார் தணிக்கை பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. போலீஸார் … Read more

கே.பி.முனுசாமி போட்ட வெடி… நேரம் பார்க்கும் அதிமுக… பாஜக வேற மாதிரி அரசியல் டீலிங்!

மதுரையில் வரும் 20ஆம் தேதி அதிமுகவின் பிரம்மாண்ட மாநாடு நடைபெறவுள்ளது. எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச் செயலாளராக அங்கீகரிக்கப்பட்ட பின்னர் நடக்கும் முதல் கூட்டம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி ஒவ்வொரு மாவட்டமாக அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. இதற்கு முன்னாள் அமைச்சர்கள் பலரும் தலைமை ஏற்று வருகின்றனர். அதிமுக vs திமுக அரசியல்இந்நிலையில் கடந்த சில நாட்களாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமியின் பேச்சு கவனம் பெற்று வருகிறது. … Read more

ஜெயலலிதாவிற்கு செய்த சிசேரியனில் பிறந்தாரா ஓ பன்னீர்செல்வம்? – திண்டுக்கல் சீனிவாசன்

எம்ஜிஆரின் வாரிசு என்று சொல்லும் ஓ பன்னீர்செல்வம் எம்ஜிஆரின் வப்பாட்டிக்கு பிறந்தாரா? ஜெயலலிதாவின் வாரிசு என்று சொல்லும் ஓ பன்னீர்செல்வம், ஜெயலலிதாவிற்கு செய்த சிசேரியனில் பிறந்தாரா? என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் சர்ச்சை  

விதியில் திருத்தம் செய்ய உள்ளதால் ஸ்மார்ட் மீட்டருக்கான டெண்டர் ரத்து: மின் வாரியம் அறிவிப்பு

சென்னை: நிறுவனங்கள் தரப்பில் எழுப்பிய சந்தேகங்களுக்கு ஏற்ற வகையில் டெண்டர் விதியில் திருத்தம் செய்யப்பட உள்ளதால், வீடுகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான டெண்டரை மின்வாரியம் ரத்து செய்துள்ளது. வீடுகளில் மின் பயன்பாட்டை கணக்கிடுவதில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க, ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை செயல்படுத்துமாறு அனைத்து மாநில மின்வாரியங்களுக்கும் மத்திய அரசு ஏற்கெனவே அறிவுறுத்தி இருந்தது. அதன்படி, வீடுகளுக்கு ஸ்மார்ட் மின் மீட்டர்கள் பொருத்தும் பணியை தமிழ்நாடு மின்வாரியம் மேற்கொண்டது. இந்த ஸ்மார்ட் மீட்டர் திட்டத்துக்கான டெண்டர் செயல்முறை … Read more

கிருஷ்ணகிரி பட்டாசுக் கிடங்கு விபத்து குறித்து நீதி விசாரணை: சிறப்பு கூடுதல் மாவட்ட நிர்வாக நீதிபதி நியமனம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் பட்டாசுக் கிடங்கு வெடிவிபத்து தொடர்பாக நீதி விசாரணை நடத்திட, சிறப்பு கூடுதல் மாவட்ட நிர்வாக நீதிபதியாக குருபரப்பள்ளி சிப்காட் நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையில் கடந்த 29-ம் தேதி காலை பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 15-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்திட (கிரிமினல் ப்ரொசீஜர் கோட் 21-ன் படி) சிறப்பு கூடுதல் … Read more

கையகப்படுத்திய நிலத்தில் சாகுபடிக்கு அனுமதித்தது ஏன்? – என்எல்சி நிர்வாகத்துக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: ‘கையகப்படுத்திய நிலத்தில் சாகுபடி செய்ய ஏன் அனுமதித்தீர்கள்?’ என என்எல்சி நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கடலூர் மாவட்டம், நெய்வேலி என்எல்சி நிர்வாகம் இரண்டு சுரங்க விரிவாக்க பணிக்காக கரிவெட்டி, மேல்வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட கிராமங்களில் நிலங்களை 2007-ம் ஆண்டு கையகப்படுத்தியது. இந்தநிலையில் சம்பந்தப்பட்ட இடங்களில் வாய்க்கால் வெட்டும் பணியின்போது பயிர்கள் சேதப்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு வலுத்த நிலையில், சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர் அறுவடை செய்யப்படும் வரை விவசாயிகளுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது … Read more

“எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு அமித் ஷா புகழாரம் சூட்டலாம். ஆனால்…” – ஜெயக்குமார் கருத்து

சென்னை: “யாராக இருந்தாலும் எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரை சொல்லித்தான் ஆக வேண்டும். அந்த அளவுக்கு அவர்கள் கொண்டு வந்த திட்டங்கள் காலத்தால் அழிக்க முடியாத ஒரு நிலையில் இருக்கிறது” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், பாஜக கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எம்ஜிஆர், ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை மீண்டும் வருவதற்காகத்தான் … Read more