ஆளுநர் ரவியை நீக்கக் கோரும் 50 லட்சம் கையெழுத்துப் படிவங்களை குடியரசுத் தலைவர் மாளிகையில் அளித்ததாக வைகோ தகவல்

புதுடெல்லி: தமிழக ஆளுநர் பொறுப்பிலிருந்து ஆர்.என்.ரவியை நீக்கக் கோரி மதிமுக சார்பில் பெறப்பட்ட 50 லட்சம் கையெழுத்துப் படிவங்களை குடியரசுத் தலைவர் மாளிகையில் புதன்கிழமை ஒப்படைத்துள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்திய அரசியல் சட்டத்துக்கு விரோதமாகவும், தமிழக அரசுக்கு விரோதமாகவும் செயல்பட்டு வருவதால், அவரை தமிழகத்தின் ஆளுநர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று மதிமுக சார்பில் 57 எம்பி.க்கள் உள்ளிட்ட 50 லட்சம் … Read more

சீமான் பாலியல் புகார்: காவல்துறை பதில் அளிக்க உத்தரவு.. செப்டம்பர் 26 தள்ளி வைப்பு

Seeman Rape and Extortion Complaint: சீமான் மீதான வழக்கை 11 ஆண்டுகளாக நிலுவையில் வைத்தது ஏன்? அதற்கனா காரணம் என்ன? தமிழக காவல்துறை விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவு.

வருவாய்துறை பணிகள் நடக்காததால் புதுவை சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏ, ஆதரவு எம்எல்ஏ தர்ணா

புதுச்சேரி: வருவாய்த்துறை பணிகள் நடக்காததால் புதுச்சேரி சட்டப்பேரவை வளாக படிக்கட்டில் அமர்ந்து பாஜக எம்எல்ஏ, ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பேரவைத் தலைவர் அவர்களை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்று பத்து நாட்களில் பணிகளை முடித்துத் தருவதாகக் குறிப்பிட்டார். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இச்சூழலில் பாஜக எம்எல்ஏ கல்யாணசுந்தரம் தனது தொகுதியில் இலவச மனைப்பட்டா வழங்குவது உள்ளிட்ட வருவாய்த்துறை சார்ந்த பணிகள் நடைபெறவில்லை என குற்றம்சாட்டியிருந்தார். இதற்காக சட்டப்பேரவை … Read more

மகளிர் மசோதா | "மத்திய அரசின் தேர்தல் நேர வண்ணஜால முயற்சி மக்களுக்குப் புரியும்" – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: “பெரும்பான்மை பலம் இருந்தும் கடந்த 9 ஆண்டு காலமாகப் பாராமுகமாக இருந்துவிட்டு, தேர்தல் நேர வண்ணஜாலம் காட்டி ஏமாற்ற நினைக்கும் முயற்சியை மக்கள் புரிந்துகொள்வார்கள்!” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மகளிர் உரிமைக்கு 75 ஆண்டு காலமாக பாடுபட்டு வரும் தி.மு.கழகம், மகளிர் ஒதுக்கீட்டை அன்றும் வரவேற்றது; இன்றும் வரவேற்கிறது. நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மகளிர் … Read more

JioFiber Plan: ரூ.500க்கும் குறைவான விலையில் அன்லிமிடெட் இணைய சேவை!

JioFiber Cheapest Plan: ரூ. 500க்கும் குறைவான விலையில் கிடைக்கும் ஜியோஃபைபரின் மலிவுத் திட்டம் பலருக்கும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.  

மகளிர் உரிமைத் தொகை நிராகரிப்பு: சேலத்தில் பெண்கள் வாக்குவாதம்; ஈரோட்டில் மறியல்

சேலம் / ஈரோடு: சேலத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் நிராகரிக்கப்பட்ட பெண்கள் மேல்முறையீடு செய்வதற்காக வந்த நிலையில் சர்வர் முடங்கியதால் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். சமரசம் செய்ய வந்த அதிகாரிகளிடம் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சட்டப்பேரவை தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதியின்படி கடந்த 15-ம் தேதி தமிழகம் முழுவதும் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிலையில், இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்த சுமார் 56 லட்சம் … Read more

பிஜேபி குறித்து அதிமுக நிர்வாகிகள் யாரும் பேசக்கூடாது! முன்னாள் அமைச்சர் கட்டளை!

பிஜேபி கட்சி குறித்து அதிமுக நிர்வாகிகள் யாரும் பேசக்கூடாது என முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் கட்சி நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.   

சென்னையில் 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதியில் சுமார் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வரி ஏய்ப்பு புகாரின் கீழ் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல். 4 தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தெரிகிறது. துரைப்பாக்கம், பள்ளிக்கரணை, நீலாங்கரை, நாவலூர், எண்ணூர், பொன்னேரி உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல். நாடு முழுவதும் அனல் மின் நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் சார்ந்து கோடி … Read more

ஷவர்மா பிரியர்களே அலெர்ட்! பாதிக்கும் மேற்பட்ட கடைகளில் கெட்டுப்போன சிக்கன்!

Shawarma: காஞ்சிபுரத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள ஷவர்மா கடைகள் மற்றும் அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ரைடு நடத்தினர்.  

அண்ணா – தேவர் மோதல்: நடந்தது என்ன?

சனாதனத்தைப் பற்றிப் பேசிய திமுகவின் நிறுவனர் அண்ணாவே 1956-ல் மதுரை தமிழ்ச் சங்க நிகழ்ச்சி மேடையில் தெரிவித்த கருத்துக்காக பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவரால் வெளிப்படையாக கண்டிக்கப்பட்டார், மன்னிப்பு கேட்ட பிறகே ஊர் திரும்ப முடிந்தது என்று அண்மையில் பாஜக-வின் தமிழக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டார். “இது ஆதாரமற்ற செய்தி, திராவிட இயக்கத்தை வளர்த்த முன்னோடியை வேண்டுமென்றே அவதூறாகப் பேசியிருக்கிறார் அண்ணாமலை, இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று அதிமுக தலைவர்கள் சொன்னதோடு… கடுமையான வார்த்தைகளால் அண்ணாமலையை … Read more