மாங்கனி திருவிழா படத்துக்கு பதிலாக வேறு படம் – ‘புதுச்சேரி அரசு தயாரித்த காலண்டரிலும் புறக்கணிப்பு’

காரைக்கால்: புதுச்சேரி அரசால் காரைக்கால் பிராந்தியம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகவும், அரசு வெளியிட்டுள்ள 2024-ம் ஆண்டுக்கான காலண்டரில்கூட இது வெளிப்பட்டுள்ளதாகவும் சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் வேதனை தெரிவிக்கின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 4 பிராந்தியங்களில் புதுச்சேரிக்கு அடுத்த நிலையில் பரப்பளவிலும், மக்கள் தொகை அடிப்படையிலும் 5 சட்டப்பேரவை தொகுதிகளுடன் பெரிய பிராந்தியமாக காரைக்கால் உள்ளது. ஆனால், புதுச்சேரியில் யார் ஆட்சியில் இருந்தாலும் தொடர்ந்து காரைக்கால் வளர்ச்சியை புறக்கணித்து வருவதுடன், அலட்சியப் படுத்தி வருவதாக சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் குற்றம்சாட்டுகின்றனர். … Read more

86 நாட்களுக்கு பிறகு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 71.25 அடியாக சரிவு

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 86 நாட்களுக்குப் பிறகு மீண்டும் 71.25 அடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஆண்டு ஜூன் 12-ம் தேதி குறுவை சாகுபடிக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை பொய்யததாலும், கர்நாடக அரசு மாதந்திர நீர் பங்கீட்டை வழங்காததாலும், நீர்வரத்து குறைந்து, டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது கடந்த அக்டோபர் மாதம் 10-ம் தேதி நிறுத்தப்பட்டது. … Read more

“யோகா பயிற்சி உலகம் முழுவதும் செய்வதற்கு இந்தியா பெருமைப்பட வேண்டும்” – ஆளுநர் தமிழிசை

புதுச்சேரி: புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறை சார்பில் 29-வது அகில உலக யோகா திருவிழா வியாழக்கிழமை இரவு தொடங்கியது. கடற்கரை சாலை காந்தி திடலில் நடைபெற்ற தொடக்க விழாவில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு யோகா திருவிழாவை தொடங்கி வைத்து பேசியதாவது: யோகா கலையை பற்றி உலகம் அறிவதற்கு முன்பே புதுச்சேரியில் 29 ஆண்டு காலமாக யோகா திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு எனது பாராட்டை தெரிவிக்கிறேன். யோகா என்பது மனதும், உடம்பும் ஒருமைப்பட்டு செயலாற்றுவது. உடல்நலமும், … Read more

பிரதமர் மோடி உடன் அமைச்சர் உதயநிதி சந்திப்பு: கேலோ இந்தியா விழாவில் பங்கேற்க அழைப்பு

புதுடெல்லி: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசினார். கேலோ இந்தியா போட்டிகள் தமிழகத்தில் நடக்கவிருப்பதை அடுத்து, இதில் பிரதமருக்கு அழைப்பு விடுக்கும் வகையில் அமைச்சர் உதயநிதி இன்று நேரில் சந்தித்துள்ளார். கிரிக்கெட், ஹாக்கி தவிர மற்ற விளையாட்டுப் போட்டிகளில் திறமையானவர்களைக் கண்டறிந்து பயிற்சியளித்து, ஒலிம்பிக் உள்ளிட்ட போட்டிகளில் பதக்கங்களை வெல்லச் செய்யும் நோக்கில், கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் கடந்த 2018-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகின்றன. … Read more

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 14-வது முறையாக நீட்டிப்பு

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 14-வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கடந்த ஆண்டு ஜூன் 14ல் கைதான அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை, மற்றும் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஜாமீன் நிராகரிக்கப்பட்ட நிலையில் புழல் சிறையில் … Read more

வாரி சுருட்டிச் சென்ற வெள்ளம்: பொங்கல் பானை தயாரிக்கும் மகளிர் குழுவினரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி @ தூத்துக்குடி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தை புரட்டி போட்ட மழை வெள்ளம், கலைநயம் மிக்க பொங்கல் பானை தயாரிக்கும் மகளிர் குழுவினரையும் விட்டு வைக்கவில்லை. ஏரல் அருகே வாழவல்லானில் பல வண்ணங்களில் பொங்கல் பானை தயாரிக்கும் மகளிர் குழுவினரின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது இந்த மழை வெள்ளம். அதில் இருந்து மீண்டு வரும் முயற்சியில் இறங்கியிருக்கின்றனர் இந்த மகளிர் குழுவினர். மகளிர் குழுவினர்: தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள வாழவல்லானில் ‘பொதிகை மகளிர் குழு’ செயல்பட்டு வருகிறது. இந்த குழுவினர் ‘மதிப்புக்கூட்டிய … Read more

போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுங்கள்: இபிஎஸ்

சென்னை: “வேலைநிறுத்த அறிவிப்பு கொடுத்துள்ள அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசாமல் திமுக அரசு தட்டிக் கழிக்கிறது. உடனடியாக தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் இல்லங்களில் பொங்கல் திருநாளை ஓரளவு மகிழ்ச்சியுடனாவது கொண்டாட அரசு வழிவகை செய்திட வேண்டும்” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “இன்றைய காலக்கட்டத்தில் போக்குவரத்து என்பது அனைத்து மக்களின் வாழ்விலும் இன்றியமையாததாகும். தமிழகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ஏழை, … Read more

‘மத்திய அரசு இதுவரை வெள்ள நிவாரணத் தொகை தரவில்லை’ – அமித் ஷாவை தமிழக எம்.பி.க்கள் சந்திக்க முடிவு

சென்னை: “தமிழக அரசு கோரியுள்ள வெள்ள நிவாரணத் தொகையை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வலியுறுத்திட அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்க நேரம் கோரியுள்ளனர்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் கடந்த டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் மிக்ஜாம் புயலினால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பெருமழை ஏற்பட்டு, அதன் காரணமாக கடுமையான … Read more

“மோடி தனது 9 ஆண்டு கால ஆட்சியில் ஒரு குண்டூசியைக் கூட திருடாதவர்” – அண்ணாமலை

சேலம்: “மோடி பிரதமராக வருவதற்கு ஆதரவளிப்பதில் கடைசி இடத்தில் இருந்த தமிழகம், வரப்போகும் தேர்தலில் பாஜகவுக்கு 39 தொகுதிகளிலும் வெற்றியைத் தர வேண்டும். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ரூ.12 லட்சம் கோடி ஊழல் நடைபெற்றது. ஆனால், மோடி தனது 9 ஆண்டு கால ஆட்சியில் ஒரு குண்டூசியை கூட திருடாதவர்” என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ‘என் மண் என் மக்கள்’ என்ற பாத யாத்திரையை மேற்கொண்டு … Read more