அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தும் பயணிகள் – விழிப்புணர்வை அதிகரிப்பதில் ரயில்வே நிர்வாகம் தீவிரம்
சென்னை: சொற்பக் காரணங்களுக்காக, ரயில்களில் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து, ரயிலை நிறுத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், பயணிகளிடம் விழிப்புணர்வை அதிகரிக்க ரயில்வே நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தெற்கு ரயில்வேயில் சென்னை, மதுரை, திருச்சி, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 6 ரயில்வே கோட்டங்கள் உள்ளன. தினமும் 1,303 ரயில்களும், மின்சார மற்றும் மெமு ரயில்கள் 650-ம் இயங்குகின்றன. இவற்றில் தினமும் சுமார் 22 லட்சம் பேர் பயணிக்கின்றனர். ரயில்களில் தீ விபத்து, திருட்டு, வழிப்பறி, தவறிவிழுதல் … Read more