கழிவறைக்கு செல்லும் போது நர்ஸிங் மாணவிக்கு நடந்த கொடூரம்..!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்துவுள்ள ராதாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுகன். இவருடைய 19 வயது மகள் தரணி, அம்மாவட்டத்திலுள்ள தனியார் செவிலியர் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். நேற்று காலை வீட்டுக்கு அருகிலிருக்கும் கழிவறைக்கு சென்ற தரணி, திடீரென சத்தம் போட்டு அலறியுள்ளார். இதை கேட்ட அக்கம் பக்கத்தினர் மற்றும் குடும்பத்தினர் சத்தம்கேட்ட இடத்துக்கு வரும்போது, கழுத்தறக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்துக் கிடந்துள்ளார் தரணி. கழுத்தில் காயம் ஆழமாக இருந்ததால், சிறுதி நேரத்திலேயே தரணி … Read more

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தேனி வீரர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதி – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பெரியகுளம்: அருணாச்சல பிரதேசத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், தேனி மாவட்டத்தை சேர்ந்த ராணுவ மேஜர் ஜெயந்த் உயிரிழந்தார். அவரது குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் வஉசி தெருவை சேர்ந்த ஆறுமுகம் – மல்லிகா தம்பதியின் ஒரே மகனான ஜெயந்த் (37), ராணுவத்தில் மேஜராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் அருணாச்சல பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டரில் லெப்டினன்ட் விவிபி ரெட்டியுடன் ஜெயந்த் சென்று கொண்டிருந்தார். சங்கே … Read more

‘மனித வெடிகுண்டாக மாறுவேன்’ என பேசிய உதயகுமாரை கைது செய்யக்கோரி போஸ்டர்

திருப்பூர்: ‘மனித வெடிகுண்டாக மாறுவேன்’ என பொது வெளியில் பேசிய முன்னாள் அமைச்சர் உதயக்குமாரை கைது செய்யக்கோரி, அதிமுக (ஓபிஎஸ் அணி) சார்பில் திருப்பூரில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது.எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து கடந்த 13ம் தேதி, மதுரை பழங்காநத்தத்தில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பேசிய முன்னாள் அமைச்சர் உதயகுமார், ‘‘அதிமுகவினர் மனித வெடிகுண்டாக மாறுவார்கள்’’ என பேசினார். இந்த கூட்டம் அனுமதியின்றி நடந்ததாக மாஜி அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் … Read more

நாக்கில் காயம்பட்ட குட்டி யானை : டாப்சிலிப் கொண்டு சென்று சிகிச்சை அளிக்க வனத்துறை முயற்சி

நாக்கில் காயம்பட்ட குட்டி யானை : டாப்சிலிப் கொண்டு சென்று சிகிச்சை அளிக்க வனத்துறை முயற்சி Source link

காவல் பணியில் மகளிர் இணைந்ததன் பொன்விழா – பெண் காவலர் நலனுக்காக 9 அறிவிப்புகள்

சென்னை: மகளிர் காவலர் பொன்விழாவை முன்னிட்டு பெண் காவலர்களுக்கான காவல் வருகை அணிவகுப்பு நேரம் மாற்றம், சென்னை, மதுரையில் தங்கும் விடுதி உள்ளிட்ட 9 அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். காவல் துறையில் மகளிர் காவலர்கள் சேர்க்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவுபெறுவதை முன்னிட்டு காவல் துறை சார்பில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், மகளிர் காவலர் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, பொன்விழா ஆண்டு சிறப்பு தபால் உறையை வெளியிட்டார். … Read more

தமிழக மீனவர்கள் 12 பேர் விடுவிப்பு

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டையை சேர்ந்தவர் விஜயா. இவருக்கு சொந்தமான விசைப்படகில், அதே பகுதியை சேர்ந்த 12 மீனவர்கள் கடந்த 12ம் தேதி அதிகாலை கோடியக்கரை தென்கிழக்கு கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். நீதிமன்ற காவல் முடிந்து நேற்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது 12 பேரையும், விடுதலை செய்து இலங்கை பருத்திதுறை நீதிமன்றம் உத்தரவிட்டது. இவர்கள் அனைவரும் விரைவில் தமிழகம் திரும்ப உள்ளனர்.

சூரிய அஸ்தமன காட்சியை பார்க்க முடியவில்லை.. கவர்னர் ஆர்.என். ரவி ஏமாற்றம்

சூரிய அஸ்தமன காட்சியை பார்க்க முடியவில்லை.. கவர்னர் ஆர்.என். ரவி ஏமாற்றம் Source link

“தமிழ்நாட்டில் எங்கும் பால் தட்டுப்பாடு இல்லை” – அமைச்சர் நாசர்

பால் உற்பத்தியாளர்களின் போராட்டம் காரணமாக, தமிழ்நாட்டில் எங்கும் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை என பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ஒரு சங்கம் மட்டுமே பால் விநியோகத்தை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் மற்ற சங்கங்கள் முறையாக பால் வழங்கி வருவதாகவும் கூறினார். இதனால், தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தங்கு தடையின்றி சீராக பால் விநியோகம் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.  Source link

அரசுப் பள்ளிக்கு ஃபர்னிச்சர் வழங்கச் சென்றபோது பசித்திருந்த குழந்தைகளுக்கு உணவு பரிமாறிய பாமக எம்எல்ஏ

தருமபுரி: தருமபுரியில் அரசுப் பள்ளிக்கு ஃபர்னிச்சர்ஸ் வழங்கச் சென்ற எம்எல்ஏ, காலை உணவு சாப்பிடாமல் வந்த குழந்தைகளுக்கு உணவு வாங்கி வந்து பரிமாறினார். தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் ஏ.ஜெட்டி அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட அவ்வை நகர் பகுதியில் அரசு தொடக்கப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த மாதத்தில் தற்செயலாக இந்தப் பள்ளி வளாகத்தில் தருமபுரி எம்எல்ஏ வெங்கடேஷ்வரன்(பாமக) ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியருக்கு போதிய ஃபர்னிச்சர்ஸ் இல்லாததால் தரையில் அமர்ந்து … Read more

‘முதல்வர் ஸ்டாலின் ஐயா காப்பாத்தணும்’ என வீடியோ வெளியான நிலையில் இதய நோய் பாதித்த சிறுவனுக்கு 24 மணி நேரத்திற்குள் அரசு உதவி: கிராம மக்கள் நெகிழ்ச்சி

ராமநாதபுரம்: இதய நோயால் பாதிக்கப்பட்ட பெருநாழி சிறுவன், ‘முதல்வர் ஸ்டாலின் ஐயா காப்பாத்தணும்’ என வீடியோ வெளியிட்ட  24 மணிநேரத்திற்குள் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து உதவிய சம்பவம் கிராம மக்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பெருநாழி பஞ்சாயத்து சண்முகபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித். மனைவி சரண்யா. இருவரும் விவசாய கூலித்தொழிலாளர்கள். மகன் கஜன் (4). பிறப்பிலேயே சிறுவன் கஜனின் இதயத்தில் துளை இருந்தது. மேலும் இதயத்திற்கு செல்லும் ரத்த மாற்றுக்குழாயிலும் பிரச்னை … Read more