திமுக கூட்டணிக்குள் வந்த கமல்? ஈரோடு கிழக்கில் காங்கிரஸிற்கு ஆதரவு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறார். அதன் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசனை நேரில் சந்தித்து தனக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டிருந்தார். கட்சி நிர்வாகிகள் உடன் ஆலோசனை நடத்தி முடிவை அறிவிப்பதாக கமல் ஹாசன் பதில் அளித்திருந்தார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் … Read more

பிப்27-ல் இடைத்தேர்தல் நடக்க உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி தேர்தல் பணிமனை திறப்பு

ஈரோடு: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 235 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று. ஈரோடு கிழக்கு ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இந்த சட்டமன்றத் தொகுதியானது ஈரோடு மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது. பிப்27-ல் இடைத்தேர்தல் நடக்க உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி தேர்தல் பணிமனை திறக்கப்பட்டுள்ளது. கூட்டணி கட்சியினர் ஒன்றிணைந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அமைச்சர்கள் க.முத்துசாமி, செந்தில் பாலாஜி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான … Read more

ஈரோடு இடைத்தேர்தல்: `வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது’ – ஓபன்னீர்செல்வம் நம்பிக்கை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பிரகாசமாக உள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். சென்னையில் இருந்து தேனி செல்லும் முன் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம், “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்” என தெரிவித்தார். மேலும் பேசுகையில், தங்களோடு தொடர்ந்து இணக்கமாக உள்ள, கூட்டணியை விரும்பும் கட்சிகளுடன் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பதாகவும், உறுதியான ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பிரகாசமாக உள்ளதாகவும் கூறினார். நேற்றைய தினம்தான் … Read more

Tamil news today live: துணை சபாநாயகர் பிச்சாண்டி தலைமையில் சட்டசபை உரிமைக்குழு கூட்டம் தொடங்கியது

Tamil news today live: துணை சபாநாயகர் பிச்சாண்டி தலைமையில் சட்டசபை உரிமைக்குழு கூட்டம் தொடங்கியது Source link

காணாமல் போன 3 வயது சிறுவன் கிணற்றில் பிணமாக மீட்பு.!

கடலூர் மாவட்டத்தில் காணாமல் போன 3 வயது சிறுவன் கிணற்றில் பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் நாச்சியார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அருள் செல்வன். இவருடைய மகன் அபிநாத் (3) நேற்று முன்தினம் வீட்டில் இருந்து காணவில்லை. இதனால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் காணாமல் போன அபினாத்தை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அபிநாத் எங்கு தேடியும் கிடைக்காததால் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் … Read more

சிதம்பரத்தில் சோகம்.. ரோந்து பணியில் இருந்த எஸ்ஐ மாரடைப்பால் மரணம்..!

சிதம்பரத்தில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சக போலீசார் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் மகேந்திரன் (58). இவர் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். இன்று அதிகாலை அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடன் இருந்து போலீசார் அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி … Read more

பணிநிரந்தரம் செய்யக் கோரி சிறப்பு பயிற்றுநர்கள் தொடர் உண்ணாவிரதம்

சென்னை: பணிநிரந்தரம் செய்யக் கோரி மாற்றுத்திறன் மாணவர்களுக்கான பயிற்றுநர்கள் சென்னை டிபிஐவளாகத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசுப் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை 2 லட்சம் மாற்றுத் திறன் மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்கு கல்வி பயிற்றுவிக்க 3 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் பணிநிரந்தரம் செய்யக் கோரி 300-க்கும் மேற்பட்ட பயிற்றுநர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் 23-ம்தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 2-வது நாளாக நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் … Read more

ஈரோட்டில் எடப்பாடி ஆடும் சடுகுடு: சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்க முயற்சி!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தீவிர கவனம் செலுத்தி வருகிறார். சேலத்தில் முகாமிட்டு கட்சி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்களை சந்தித்து வரும் அவர் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். இது குறித்து சேலம், ஈரோடு வட்டாரங்களில் விசாரிக்கும் போது முக்கிய தகவல்கள் கிடைக்கின்றன. “ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடுவதை அதிமுக தவிர்த்திருக்க முடியும். ஏற்கெனவே அதன் கூட்டணியில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்த தமாகாவிடம் இம்முறையும் வாய்ப்பை கொடுத்துவிட்டு … Read more

விராலிமலையில் 10 ஆண்டுக்கு பிறகு நடந்த மீன்பிடி திருவிழா: 10-கும் மேற்பட்ட ஊர்களில் இருந்து மக்கள் பங்கேற்பு..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விராலி மலை அருகே நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு உற்சாகத்துடன் மீன்களை பிடித்தனர். விராலிமலை மேலபச்சாக்குடி பெரியடம் பகுதியில்  10 ஆண்டுக்கு பிறகு இன்று மீன் பிடி திருவிழா நடைபெற்றது பத்துக்கு மேற்பட்ட கிராமங்களில் இருந்து மக்கள் குடும்பம் குடும்பமாக மீன்பிடி திருவிழாவுக்காக குவிந்தனர். அவர்கள் தங்களுடன் கொண்டுவந்த வலை, கட்சா, கூடை  ,பரி உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை கொண்டு குளத்தில் இறங்கி மீன்களை பிடித்தனர். குளத்தில் நீர் வற்றி … Read more

கிருஷ்ணகிரியில் ஆறாக ஓடும் சாராயம்… திமுக பெண் கவுன்சிலர் நடத்தும் 24 மணிநேர பார்…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே வேலம்பட்டியில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. அந்த மதுபான கடைக்கு எதிரில் நாகோஜனஅள்ளி பேரூராட்சியின் 4வது வார்டு திமுக கவுன்சிலர் காஞ்சனா என்பவரின் வீட்டில் அரசு பார் நடத்த உரிமம் இருப்பதாக கூறி சகல வசதிகளுடன் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுகிறது. இந்த மது விற்பனையில் திமுக கவுன்சிலர் காஞ்சனா நேரடியாக ஈடுபட்டுள்ளார். இந்த டாஸ்மாக் கடையிலிருந்து 200 மீட்டர் தொலைவில் அரசு பள்ளி அமைந்துள்ளது. திமுக … Read more