தஞ்சை அருகே நள்ளிரவில் ரயில்வே கேட்டில் லாரி மோதி மின் கம்பி அறுந்து விழுந்தது: ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்

திருவிடைமருதூர்: தஞ்சாவூர் அருகே நள்ளிரவில் ரயில்வே கேட்டில் லாரி மோதி மின் கம்பி அறுந்து விழுந்ததால் ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே ஆடுதுறையில், தரங்கம்பாடி சாலையில் உள்ள ரயில்வே கேட் பகுதியில் கும்பகோணத்தில் இருந்து மங்கநல்லூர் பொதுப்பணித்துறைக்கு டீசல் ஏற்றிக்கொண்டு லாரி நேற்று முன்தினம் இரவு வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ரயில்வே கேட்டில் லாரி மோதியதில் உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்தது. உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் சிக்னலுக்கு மின்சார இணைப்பு … Read more

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க முடியாமல் அவதி – நுகர்வோர் வசதிக்காக புதிய இணையதளம்

சென்னை: மின்வாரியத்தின் சர்வர் இணைப்பு அடிக்கடி துண்டிக்கப்படுவதால், ஆதார் எண்ணை இணைக்க முடியாமல் நுகர்வோர் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நுகர்வோர் வசதிக்காக புதிய இணையதளம் அறிவிக்கப்பட்டுள்ளது. மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைத்தால்தான் மின்கட்டணம் செலுத்த முடியும் என மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மின்நுகர்வோர் அனைவரும் ஒரே சமயத்தில் மின்வாரிய இணையதளத்தில் மின் இணைப்புடன், ஆதாரை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் மின்வாரிய இணையதளத்தின் சர்வர் முடங்கியது. அத்துடன், மின்கட்டணத்தை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. … Read more

புறவழி சாலை எதிர்த்து விவசாயிகள் போராட்டம்: பொக்லைன் இயந்திரம் சிறைபிடிப்பு

திருவையாறு: திருவையாறு அருகே சம்பா பயிரை அழித்து புறவழிச்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நெற் பயிரை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, மணக்கரம்பை, அரசூர், காட்டுக்கோட்டை, கண்டியூர், கீழதிருப்பூந்துருத்தி, கல்யாணபுரம், பெரும்புலியூர், திருவையாறு வழியாக 6.74 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.191.34 கோடி மதிப்பீட்டில் புறவழிச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. நெல், கரும்பு, வாழை, தென்னை மரங்கள், வெற்றிலைக் கொடிக்கால் அடங்கிய நிலங்களை அழித்து அதில் சாலை … Read more

ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்யும் முன் ஒரு முறைக்கு பல முறை யோசிச்சு பண்ணுங்க..!!

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அடுத்த சின்ன முதலியார்சாவடி எம்ஜிஆர் நகர் முதல் குறுக்கு தெருவில் வசித்து வருபவர் பெருமாள். இவரது மகன் முத்துசாமி (33).இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். நேற்று அதிகாலை வழக்கம்போல் சின்ன முதலியார்சாவடி ஈசிஆர் சாலையில் நடைபயிற்சி சென்றார். ஆனால் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி மகேஸ்வரி உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து உறவினர்களுடன் மனைவி மகேஸ்வரி பல்வேறு இடங்களில் … Read more

ஆவின் பச்சைப்பாலுக்கு தட்டுப்பாடு; ஆரஞ்சு பால் விலை குறைவது எப்போது?- அன்புமணி

சென்னை: பச்சை பால் விநியோகத்தை அதிகரிக்கவோ, ஆரஞ்சு பாலின் விலையை முன்பிருந்த விலையில் விற்கவோ ஆவின் நிறுவனம் முன்வர வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: “சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆவின் பச்சை உறை பாலுக்கு கடுமையாக தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதனால் லிட்டருக்கு ரூ.16 கூடுதலாக கொடுத்து ஒரு லிட்டர் ரூ.60 என்ற விலைக்கு ஆரஞ்சு உறை பாலை … Read more

காட்டு யானை தாக்கியதில் பெண் பலி

கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த புளியம்பாறையை சேர்ந்தவர் கல்யாணி (55). இவர் கணவரை பிரிந்து தனியே வசித்து வந்தார். நேற்று பக்கத்து வீட்டை சேர்ந்த 3 பெண்களுடன் வனப்பகுதியில் விறகு சேகரிக்க சென்றார். அப்போது மறைந்திருந்த ஒற்றை காட்டு யானை ஆவேசமாக ஓடி வந்தது. மற்ற 3 பெண்களும் சிதறி ஓட்டம் பிடித்தனர். கல்யாணி மட்டும் காட்டு யானையிடம் சிக்கிக்கொண்டார். அவரை தும்பிக்கையால் சுழற்றி கீழே போட்டு காலால் மிதித்தது. இதில் உடல் நசுங்கி கல்யாணி … Read more

அவரை நான் இன்னும் மறக்கவில்லை… அதற்குள் எப்படி? திருமண வதந்திக்கு மீனா முற்றுப்புள்ளி

அவரை நான் இன்னும் மறக்கவில்லை… அதற்குள் எப்படி? திருமண வதந்திக்கு மீனா முற்றுப்புள்ளி Source link

லிவிங் காதல் | பலியான தென்காசி இளைஞர் – 5 ஆண் நண்பர்களுடன் கைதான இளம்பெண்!

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே சமூக வலைத்தளம் மூலம் பழகியவரை, நண்பர்கள் மூலம் கொலை செய்த பெண் உள்ளிட்ட ஆறு பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். தென்காசியை சேர்ந்த சூர்யா என்பவர், சென்னை சேர்ந்த ஸ்வேதா என்பவரை சமூக வலைத்தளம் நட்பு ஏற்படுத்தியுள்ளார். இவர்களின் சமூக வலைதள பழக்கம் பின் நட்பாக மாறி, காதலாக மலர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து கொடைக்கானல் பகுதியில் வீடு எடுத்து இருவரும் ஒன்றாக தங்கி குடும்பமே நடத்த துவங்கி வந்துள்ளனர். காதலர்களுக்கு … Read more

மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ரூ.1500 ஆக உயர்வு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: “தமிழகத்தில் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 4 லட்சத்து 39 ஆயிரத்து 315 நபர்களுக்கு, அவர்கள் தற்போது பெற்றுவரும் ஓய்வூதியம் 1000 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக வரும் ஜனவரி 1-ஆம் நாள் முதல் உயர்த்தி வழங்கப்படும்” என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில், மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரை: “இன்று உலக மாற்றுத்திறனாளிகள் தினமாக கொண்டாடுகிற நாளாக நாம் தொடர்ந்து … Read more