மாநகராட்சி, நகராட்சி கடைகளை 9 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடும் அரசாணைக்கு இடைக்கால தடை

மதுரை: தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சிகளுக்கு சொந்தமான கடைகளை 9 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடும் அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது. காரைக்குடியை சேர்ந்த சிவராஜ், உயர் நீதிமன்ற அமர்வில் தாக்கல் செய்த மனு: காரைக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளை 9 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடுவது தொடர்பாக மே 26-ல் மாநகராட்சி ஆணையர் ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு வெளியிட்டார். இதேபோல் பிற மாநகராட்சிகளிலும் கடைகளை 9 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடுவது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த … Read more

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 29-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று முதல் 29-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் … Read more

இதய அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதி கோரி அசோக்குமார் மனு : அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவு

இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்கா செல்ல அனுமதிகோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார், முன்னாள் உதவியாளர் பி.சண்முகம் உள்ளிட்ட 13 பேருக்கு எதிராக அமலாக்கத் துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு சென்னை … Read more

தமிழகத்தில் 55 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: யாருக்கு என்ன பொறுப்பு? – முழு பட்டியல்

சென்னை: தமிழக அரசுத் துறை செயலர்கள், மாவட்டஆட்சியர்கள் உட்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகள் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உயர்கல்வி துறை செயலராக பொ.சங்கர், வணிக வரி, பதிவு துறை செயலராக ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசுப் பணியில் 3 ஆண்டுகள் ஒரே பணியிடத்தில் பணியாற்றுவோர், இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். இது தவிர, சட்டப்பேரவை, மக்களவை தேர்தல் காலங்களிலும் அனைத்து நிலைகளிலும் இடமாற்றங்கள் நிகழும். இந்த நிலையில், தமிழக அரசுத் துறைகளின் செயலர்கள், துறை … Read more

“நீட் தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை விளையாடுவது பணம்தான்” – முதல்வர் ஸ்டாலின் 

சென்னை: “நீட் தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை பணம்தான் விளையாடுகிறது” என்று முறைகேடு வழக்கு ஒன்றை சுட்டிக் காட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். நீட் தேர்வில் தேர்வில் முறைகேடு செய்து, ரூ.90 லட்சம் பணம் பெற்றுக் கொண்டு, குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை பெற உதவியதாக மகாராஷ்டிராவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது என்ற செய்தியை முன்வைத்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று … Read more

‘திராவிடத்தை ஒழிப்போம்’ என வீடியோ வெளியிட்டது எனக்குத் தெரியாது: நயினார் நாகேந்திரன்

கோவை: “அதிமுக முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் திராவிடத்தை ஒழிப்போம் என வீடியோ வெளியிட்டது எனக்குத் தெரியாது. நிகழ்ச்சி முடிந்தவுடன் கோவை புறப்பட்டுவிட்டேன். அது குறித்து தெரிந்த பின்னர் பதில் அளிக்கிறேன்,” என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். கோவை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 23) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “மதுரையைில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டுக்கு யாரும் வரமாட்டார்கள் என திமுக கூறிய நிலையில் முதல் நாள் 3 லட்சம் பேர், … Read more

“பாரதம் எப்போதும் மற்ற நாடுகளை ஆக்கிரமிக்கவில்லை…” – கோவையில் மோகன் பாகவத் பேச்சு 

கோவை: “உலகம் எப்போதெல்லாம் தர்மத்தை மறைக்கிறதோ, அப்போது அதனை நினைவுபடுத்த வேண்டிய கடமை நமக்கு உள்ளது. பாரதம் எப்போதும் மற்ற நாடுகளை ஆக்கிரமிக்கவில்லை. அன்புடன் அரவணைத்து, உலகை வழி நடத்துகிறது,” என கோவையில் நடந்த விழாவில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளார். கோவை பேரூர் ஆதீனம் மறைந்த ராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழா மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா, பேரூர் மடத்தில் இன்று (ஜூன் 23) நடந்தது. உலக நன்மைக்காக நடத்தப்பட்ட வேள்வியில் … Read more

“சென்னையில் ஒரு தொகுதியில் பவன் கல்யாண் வென்றுவிட்டால்…” – சேகர்பாபு சவால்

சென்னை: “சென்னையில் ஒரு தொகுதியை தேர்வு செய்து போட்டியிட்டு பவன் கல்யாண் வெற்றி பெற்று விட்டால், அதன் பிறகு அவர் என்ன பேசினாலும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்” என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு சவால் விடுத்துள்ளார். மதுரையில் நடந்து முடிந்த முருக பக்தர்கள் மாநாடு குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, “பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார், முன்னாள் தமிழக முதல்வர்கள் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா என அனைவரை பற்றியும் தமிழக … Read more

தமிழ் கடவுள் முருகனுக்கு நெருக்கமானவன் நான்தான் – எ.வ.வேலு!

தமிழ் கடவுள் முருகனுக்கு நெருக்கமானவன் நான்தான் ஏனென்றால் அவர் கையில் வேல் உள்ளது, எனது பெயரில் வேல் உள்ளது என அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.   

தேர்தல் வாக்குறுதிப்படி காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்க அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: “2021-ல் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி 20 ஆண்டுகள் பணிமுடித்த காவலர்களுக்கு சிறப்பு சார்பு ஆய்வாளர்களாக தமிழக அரசு பதவி உயர்வு வழங்க வேண்டும்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகக் காவல் துறையில் துவக்க நிலையில் பணியில் சேரும் காவலர்களுக்கு பணி மூப்பின் அடிப்படையில் (10+5+10) என்ற முறையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருவது காலம் காலமாக நடந்து வருகிறது. தற்போதுள்ள … Read more