தமிழகத்தில் நாளை முதல் செப்.19 வரை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்​தில் நாளை முதல் வரும் 19-ம் தேதி வரை சில மாவட்​டங்​களில் கனமழை பெய்ய வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது. இதுதொடர்​பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தெற்கு ஒடிசா கடலோரப் பகு​தி​களில் நில​விய காற்​றழுத்த தாழ்​வுப் பகு​தி, வடக்கு தெலங்​கானா மற்​றும் அதையொட்டிய விதர்பா பகு​தி​களில் நில​வியது. இது, மேற்​கு-வடமேற்கு திசை​யில் நகர்ந்​து, மத்​திய விதர்பா மற்​றும் அதையொட்​டிய பகு​தி​களை நோக்கி நகரக்​கூடும். தென்​னிந்​தி​யப் பகு​தி​களின் மேல் … Read more

குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.2000 வழங்கும் தமிழக அரசு! யார் யார் விண்ணப்பிக்கலாம்?

Anbu Karangal Scheme: பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.2000 வழங்கும் அன்பு கரங்கள் திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின். முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

வடபழனி முருகன் கோயில் ஓதுவார் பயிற்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க அக்.13-ம் தேதி கடைசி நாள்

சென்னை: வடபழனி முரு​கன் கோயி​லில் ஓது​வார் பயிற்​சிப் பள்​ளி​யில் பகு​திநேர வகுப்​புக்​கான மாணவர் சேர்க்கை நடை​பெறுகிறது. இதற்கு அக்​.13-ம் தேதிக்​குள் விண்​ணப்​பிக்க வேண்​டும் என கோயில் நிர்​வாகம் தெரி​வித்​துள்​ளது. முரு​கன் கோயில்​களில் தொன்​மை​யான தென்​பழனிக்கு நிக​ராக சென்னை வடபழனி​யில் அமைந்​துள்ள முரு​கன் கோயில் புகழ்​பெற்று விளங்​கு​கிறது. இக்​கோயி​லில் தினசரி ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் தரிசித்து வரு​கின்​றனர். ஏராள​மான பக்​தர்​கள் காவடி எடுத்​து, அலகு குத்தி வேண்​டு​தல் நிறைவேற்​றும் தலமாக​வும் திகழ்​கிறது.அறநிலை​யத்​துறை கட்​டுப்​பாட்​டில் உள்ள இக்​கோ​யில் சட்​டப்​பிரிவு, 46(3)ன் கீழ் … Read more

'அஜித் வந்தால் இதை விட அதிக கூட்டம் வரும்' – விஜய்யை சீண்டிப் பார்க்கும் சீமான்

Seeman Criticizes TVK Vijay: அஜித் வந்தார் என்றால் இதை விட கூட்டம் வரும் என்று தவெக விஜய்யின் பிரச்சார பயணம் குறித்து சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

“எத்தகைய வெறுப்பைக் கக்கினாலும் முன்னேறிச் செல்வோம்” – முதல்வர் ஸ்டாலினுக்கு விஜய் பதிலடி

சென்னை: யார் எத்தனைக் கூப்பாடு போட்டாலும், எப்படிக் கதறினாலும், எத்தகைய வெறுப்பைக் கக்கினாலும் நாம் முன்னேறிச் செல்வோம் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “நமது மதுரை மாநாட்டில் அறிவித்ததைப் போலவே. “வாகை சூடும் வரலாறு திரும்புகிறது: உங்க விஜய் நான் வரேன்” என்ற நம் மக்கள் சந்திப்பை, பல்வேறு அரசியல் திருப்புமுனைகளை அமைத்துத் தந்த திருச்சியில் திக்கெட்டும் கேட்கும் வகையில் நேற்று (13.09.2025) தொடங்கினோம். எளிதாகக் கடந்துவிடும் தூரத்தைக்கூட மக்கள் … Read more

அடுத்த இரண்டு நாட்களுக்கு இங்கெல்லாம் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், அடுத்த ஒரு வாரத்திற்கு எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்புள்ளது என்பது சென்னை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   

நாளையுடன் முடிவடையும் கெடு – செங்கோட்டையன் நல்ல செய்தி சொல்வார் என ஓபிஎஸ் பேட்டி

திண்டுக்கல்: “சசிகலாவை கூடிய விரைவில் சந்திப்பேன், செங்கோட்டையன் நல்ல செய்தி சொல்வார். டெல்லி செல்லும் எண்ணம் எனக்கு இல்லை” என திண்டுக்கல்லில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். தேனியில் இருந்து சென்னை செல்ல திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வருகைதந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: செங்கோட்டையன் கொடுத்த கெடு முடிவடையும் நிலையில், அவர் திரும்பவும் ஒரு நல்லசெய்தி சொல்வார். சசிகலாவை சந்திக்க வாய்ப்பு உள்ளது. உரியநேரத்தில் சந்திப்பேன். கூடிய விரைவில் சந்திப்பேன். உங்களிடம் … Read more

கோவை அவிநாசி மேம்பாலம் அக்டோபர் 9-ல் திறக்க ஏற்பாடு: அமைச்சர் எ.வ வேலு

அக்டோபர் 9ம் தேதி கோவை அவிநாசி மேம்பாலம் திறப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

''மத்திய அரசு கொடுத்த நிதிக்கு தமிழக அரசு கணக்கு கொடுக்கவில்லை'' – வானதி குற்றச்சாட்டு

கோவை: “தமிழக கல்வித்துறை வளர்ச்சி திட்ட பணிகளுக்கு மத்திய அரசு ஏற்கெனவே வழங்கிய கோடிக்கணக்கான நிதியை செலவு செய்தது தொடர்பான ரசீது கேட்டால் கொடுப்பதில்லை. இதை மறைத்து தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாக தொடர்ந்து தமிழக அரசு கூறி வருகிறது” என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மாணவர்களின் கல்விக்கான நிதியை மத்திய அரசு வழங்குவதில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி … Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2000? யார் யாருக்கு கிடைக்கும்? எப்படி விண்ணப்பிப்பது?

பண்டிகை காலங்களில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் நிதி உதவியை உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.