“தமிழ்நாடு மிகுந்த பெருமை கொள்கிறது” – பத்ம பூஷண் விருது பெற்ற அஜித்துக்கு கட்சி தலைவர்கள் வாழ்த்து!

புதுடெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (ஏப்.28) நடைபெற்றது. இவ்விழாவில்,நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருதினை குடியரசுத் தலைவர் திரவுபதி வழங்கி கவுரவித்தார். இவ்விழாவில் நடிகர் அஜித் குமாரின் மனைவி ஷாலினி மற்றும் குடும்பத்தினர் கலந்துகொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி: தன் திரைத் துறை சாதனைகளுக்காக இந்திய அரசின் உயரிய … Read more

“வெறுப்பு அரசியலின் மூலதனமே திராவிட இயக்கங்கள் தான்!” – ஹெச்.ராஜா

மதுரை: வெறுப்பு அரசியலின் மூலதனமாக இருப்பது திராவிட இயக்கங்கள் தான் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். மதுரையில் பாஜக சார்பில் அம்பேத்கர் ஜெயந்தி விழா கருத்தரங்கு இன்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் மாரி சக்கரவர்த்தி தலைமை வகித்தார். பெருங்கோட்டப் பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள், முன்னாள் மாவட்ட தலைவர்கள் மகா சுசீந்திரன், சசிராமன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் பாஜக தலைவர் ஹெச்.ராஜா சிறப்புரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “காஷ்மீர் தீவிரவாத தாக்குதலுக்கு … Read more

செந்தில் பாலாஜிக்கு புதிய நிபந்தனைகளை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு – ஜாமீன் ரத்து கோரிய வழக்கு முடித்துவைப்பு

புதுடெல்லி: அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, வழக்கில் வேறு புதிய நிபந்தனைகளை விதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், அவரது ஜாமீனை ரத்து செய்யக் கோரிய வழக்கை முடித்து வைத்தது. சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கடந்த 2023 ஜூன் மாதம் கைது செய்தது. இதைத் தொடர்ந்து, அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு, 2024 செப்டம்பர் 26-ம் … Read more

காவல் துறையினருக்கு வாரம் ஒரு நாளாவது விடுமுறை வழங்க தமிழக பாஜக வலியுறுத்தல்

சென்னை: காவல் துறையினருக்கு வாரம் ஒரு நாளாவது விடுமுறை வழங்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை மாநில அரசு எந்த காரணமும் சொல்லாமல் அப்படியே அமல்படுத்த வேண்டும் என்று தமிழக பாஜக மாநில பொதுச் செயலாளர் இராம ஸ்ரீநிவாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவல் துறை மீது எனக்கு எப்போதுமே ஒரு நல்லெண்ணம் உண்டு. காரணம், அவர்களுக்கு இருக்கும் கடுமையான பணிச் சூழல். எப்போதுமே நெருக்கடியில் இருக்கக்கூடியவர்கள் அவர்கள். எந்த உடல் … Read more

மீண்டும் அமைச்சராக பதவியேற்ற மனோ தங்கராஜ்… பால்வளத்துறை ஒதுக்கீடு!

Minister Mano Thangaraj: கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதி எம்எல்ஏவான மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு பால்வளத்துறை இலாக்கா ஒதுக்கப்பட்டுள்ளது.  

“ரேஷன் கடைகளில் எத்தனை ஆண்டுகளாக நடக்கிறது கலப்படம்?” – சீமான் சரமாரி கேள்வி

சென்னை: “ரேஷன் கடைகளில் கலப்படப் பொருட்களை வழங்கி மக்களின் உயிரோடு விளையாடக் கூடாது” என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் தொடர்ந்து 50 ஆண்டு காலமாக நடைபெற்று வரும் திராவிட ஆட்சியில் ஊழல் முறைகேடுகள் நடைபெறாத துறையே இல்லை. அனைத்து அரசுத் துறைகளிலும் ஊழல் மலிந்து காணப்படுகிறது. குறிப்பாக, உணவு பொருள் வழங்கல் துறையின் கீழ் பொது விநியோக திட்டத்தில், மக்களுக்கு இலவச உணவுப்பொருள் வழங்குகிறோம் … Read more

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி, குடும்பத்தினரை விடுவித்த உத்தரவு ரத்து!

சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது மனைவி, மகன்களை விடுவித்த திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், 6 மாதத்தில் வழக்கை விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2006 முதல் 2010-ஆம் ஆண்டு வரை வருவாய், சட்டம், சிறை மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சராக இருந்த போது இரண்டு கோடியே 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஐ.பெரியசாமி, … Read more

காலாவதியான விசா: புதுச்சேரியில் தங்கியிருந்த 2 பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவு

புதுச்சேரி: விசா காலாவதியானதால் வழக்கு பதிவான நிலையில், புதுச்சேரியில் தங்கியிருந்த பாகிஸ்தானியர்கள் இருவர் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது. பல்வேறு விசாக்களில் வந்த பாகிஸ்தானியர்கள் வெளியேற மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்தது. இந்நிலையில் புதுச்சேரியில் 2 பாகிஸ்தானியர்கள் தங்கி உள்ளனர். இதில் புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஹனீப்கான்(39) கடந்த 2013-ம் ஆண்டு அவரின் உறவினரான பாகிஸ்தானைச் சேர்ந்த பஷியாபானு (38) என்பவரைத் திருமணம் செய்து … Read more

திமுகவினருக்கு பீர் உடன் கூடிய அசைவ விருந்து…! ஜோராக நடைபெற்ற ஆய்வு கூட்டம்!

திமுக ஆய்வு கூட்டத்திற்கு பின் மதுவுடன் கூடிய அசைவ விருந்து நடைபெற்றுள்ளது. இந்நிலையில் விருந்து தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

சிபிஐ வழக்குகளை விசாரிக்க கூடுதல் அமர்வு நீதிமன்றம் திறப்பு

சென்னை: சென்னையில் வங்கி மோசடி தொடர்பான சிபிஐ வழக்குகளை விசாரிக்கும் கூடுதல் அமர்வு நீதிமன்றம் திறக்கப்பட்டுள்ளது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவன மோசடிகள் தொடர்பான சிபிஐ வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பு வழங்குவதற்காக சென்னை அல்லிகுளம் நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் மாநகர உரிமையியல் மற்றும் அமர்வு நீதிமன்றம் என்ற புதிய நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி.பரதசக்ரவர்த்தி முன்னிலையில், உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் திறந்து வைத்தார். … Read more