எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு | கர்நாடகம் போல் தமிழகத்திலும் துணிச்சல் நடவடிக்கை தேவை: ராமதாஸ்

சென்னை: கர்நாடகத்தில் பட்டியலினத்தவர், பழங்குடியினர் இடஒதுக்கீடு அதிகரிக்கப்படுவது வரவேற்கத்தக்கது என்றும், அம்மாநில அரசை தமிழகம் பின்பற்ற வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “கர்நாடகத்தில் மக்கள்தொகை அடிப்படையில் பட்டியலினத்தவருக்கான இடஒதுக்கீடு 15%-ல் இருந்து 17% ஆகவும், பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு 3%-ல் இருந்து 7% ஆகவும் உயர்த்த அம்மாநில அரசு முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. இது மிகச்சிறந்த சமூக நீதி காக்கும் நடவடிக்கையாகும். தமிழகத்தில் பட்டியலின … Read more

மடக்கிய டிடிவி தினகரன்; முதல்வர் கடும் அதிருப்தி!

கரூர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலை போடாமலேயே ரூபாய் 5 கோடி பணத்தை சங்கர ஆனந்த இன்ஃப்ரா என்கிற ஒப்பந்ததாரருக்கு பட்டுவாடா செய்து இருப்பதாக, அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டி உள்ளது. இதுதொடர்பாக அறப்போர் இயக்கம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், ‘கரூர் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சாலை போடாமலேயே, ரூ 5 கோடி பணத்தை சங்கர் ஆனந்த் இன்ஃப்ரா என்ற ஒப்பந்ததாரருக்கு மார்ச் 2022ம் தேதி பட்டுவாடா செய்துள்ளது. இதன் மீது FIR பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் … Read more

கிழங்கை பார்த்து பார்த்து வாங்கிய நிர்மலா சீதாராமன்… மயிலாப்பூர் மார்க்கெட்டுக்கு திடீர் விசிட்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக இன்று (அக். 9) சென்னை வந்தார். தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு திரும்பும் வழியில், மயிலாப்பூரில் உள்ள தெருவோரத்தில் இருந்த கடைகளில் காய்கறி வாங்கினார். இதனால், அப்பகுதி சிறிது பரபரப்பாக காணப்பட்டது.  இதுகுறித்த வீடியோ நிர்மலா சீதாராமனின் அதிகாராப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், கடையில் இருந்த கிழங்கு வகைகளை மத்திய அமைச்சர் பக்குவமாக பார்த்து வாங்கினார். தொடர்ந்து, அங்கிருந்த வேறு கடையில் ஒருசில கீரைக்கட்டுகளையும் வாங்கினார். … Read more

வாலாஜாபாத் அருகே தனியார் தொழிற்சாலையில் கேன்டீனில் உணவு சாப்பிட்ட 30 ஊழியர்களுக்கு வாந்தி, மயக்கம்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் அருகே ஊத்துக்காடு கூட் சாலை பகுதியில் தனியார் இருசக்கர மற்றும் கார்களுக்கான உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு வாலாஜாபாத் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் உள்பட 1000க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். இங்கு ஷிப்ட் அடிப்படையில் வேலை நடந்து வருகிறது. ஊழியர்களுக்காக கேன்டீனும், தொழிற்சாலை வளாகத்தில் இயங்கி வருகிறது. இந்நிலையில், நேற்றிரவு வேலையில் இருந்த 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள், கேன்டீனில் உணவு சாப்பிட்டனர். சிறிது நேரத்தில் 30க்கும் மேற்பட்டோருக்கு  … Read more

அக்.17-ல் சட்டப்பேரவைக் கூட்டம் நடக்கும்போது தொடர் மறியல் போராட்டம்: ஜேஏசி அறிவிப்பு

மதுரை: “அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4 ஆண்டாக நடைபெறாத ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இம்மாதம் 17-ம் தேதி சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடக்கும்போது தொடர் மறியல் போராட்டம் நடைபெறும்” என்று ஜேஏசி அறிவித்துள்ளது. மதுரையில் இன்று கல்லூரி ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கைக்குழு (ஜேஏசி) சார்பில் மூட்டா அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது அதன் ஒருங்கிணைப்பாளர் மு.நாகராஜன் கூறியது: “கல்லூரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கைக்குழுவின் … Read more

ஆர்எஸ்எஸ் நல்ல மனிதர்களை உருவாக்கும் அமைப்பு- பாஜக மாநில பொதுச் செயலாளர்!

விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விருதுநகர் வந்திருந்த தமிழக பாஜகவின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். ஒன்றிய பாஜக அரசு பழிவாங்கும் நோக்கத்துடனும், தமிழகத்தின் உரிமைகளை பறிக்கும் நோக்கத்துடன் நடந்து கொண்டால் திமுக அதன் போர் குணத்தை வெளிகாட்டும் என திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த பேராசிரியர் சீனிவாசன்; மாநில திமுக அரசாங்கம் மத்திய பாஜக அரசுடன் போர் தொடுக்கட்டும் என்றார். மேலும் பேசிய அவர் … Read more

மனித உருவத்துடன் பழங்கால செப்பு நாணயம் கண்டுபிடிப்பு

சேலம் : மதுரையை ஆண்ட அரசி மீனாட்சி காலத்தில் வெளியிடப்பட்ட மனித உருவம் பொறிக்கப்பட்ட பழங்கால செப்பு நாணயம் கிடைத்திருப்பதாக சேலம் பாராமஹால் நாணயவியல் சங்க ஆய்வாளர் தெரிவித்துள்ளார். சேலம் பாராமஹால் நாணயவியல் சங்க வரலாற்று ஆய்வாளர்கள், நாடு முழுவதும் இருந்து பழங்கால நாணயங்களை சேகரித்து வருகின்றனர். சமீபத்தில் கர்நாடகா மாநிலத்தில் நடந்த நாணயவியல் கண்காட்சியில் மதுரையை ஆண்ட அரசி மீனாட்சி காலத்தில் வெளியிடப்பட்ட செப்பு நாணயங்களை குஜராத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் காட்சிப்படுத்தியிருந்தனர். அந்த நாணயங்களை சேலம் … Read more

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் 20 நாட்களில் 2,000 வழக்குகள் முடித்து வைப்பு

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கடந்த 20 வேலை நாட்களில் 2,000 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள மிகவும் பழமையான நீதிமன்றங்களில் சென்னை உயர் நீதிமன்றமும் ஒன்றாகும். சென்னை உயர் நீதிமன்றத்தின் கிளை மதுரையில் செயல்பட்டு வருகிறது. இந்த மதுரைக் கிளையில் கடந்த 20 வேலை நாட்களில் 2,000 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. இதன்படி கடந்த செப்டம்பர் 5-ம் தேதி முதல் 938 மூல வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 776 ரிட் … Read more

கல்லூரிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து: அண்ணா பல்கலை., உத்தரவு ரத்து!

தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்க மறுத்து அண்ணா பல்கலைக்கழகம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக நான்கு வாரங்களில் சுதந்திரமாக உத்தரவு பிறப்பிக்கும்படி பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பத்மாவதி பொறியியல் கல்லூரி மற்றும், ஈரோட்டைச் சேர்ந்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹைடெக் பொறியியல் கல்லூரிகள், தன்னாட்சி அந்தஸ்து கோரி அண்ணா பல்கலைக்கழகத்துக்கும், பல்கலைக்கழக மானியக்குழுவுக்கும் விண்ணப்பித்தன. இந்த இரு விண்ணப்பங்களையும் பரிசீலித்த அண்ணா பல்கலைக்கழகம், … Read more

தொகரப்பள்ளி அருகே 700 ஆண்டுக்கு முந்தைய 13 நடுகற்கள் கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி : தொகரப்பள்ளி அருகே, 700 ஆண்டுகளுக்கு முந்தைய போரில் உயிரிழந்த வீரர்களின் நினைவாக 13 நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியம் தொகரப்பள்ளி பகுதியில் உள்ள சாணாரப்பன் கோயில் எனப்படும் நடுகல் கோயிலில், கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும்  ஆவணப்படுத்தும் குழுத் தலைவர் நாராயணமூர்த்தி தலைமையில், அரசு  அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.  இது குறித்து அருங்காட்சியக காப்பாட்சியர் கூறியதாவது: இந்த நடுகல் கோயிலில், 700 ஆண்டுகளுக்கு முற்பட்ட 13 நடுகற்கள் … Read more