போலீசாருக்கு பயந்து சிகிச்சை பெறாமல் பதுங்கிய வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்..!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள முசுவனூத்து கிராமத்தில் வசித்து வருபவர் புலிகேசி (50). இவர் அரசு பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வேலை முடிந்து புலிகேசி வத்தலகுண்டு அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமணன் (24) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் புலிகேசி மீது மோதியது. இந்த விபத்தில் புலிகேசி, லட்சுமணன் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். இதனால் ஓட்டுனர்களும், … Read more

அக்டோபர் 17-ம் தேதி சட்டப்பேரவை | துணை பட்ஜெட் 18-ல் தாக்கல் – இபிஎஸ், ஓபிஎஸ்-க்கு இருக்கைகள் ஒதுக்கீடு?

சென்னை: தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் வரும் 17-ம் தேதி தொடங்குகிறது. வரும் 18-ம் தேதி துணை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. ஆண்டுதோறும் சட்டப்பேரவை மழைக்காலக் கூட்டத் தொடர் அக்டோபர் மாதத்தில் நடைபெறுவது வழக்கம். அதேபோல, இந்த ஆண்டு மழைக்காலக் கூட்டத் தொடர் வரும் 17-ம் தேதி தொடங்கும் என்று சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார். இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் வரும் 17-ம் தேதி … Read more

திருப்பூர் அருகே கெட்டுப்போன உணவை சாப்பிட்டு 3 மாணவர்கள் பலியான காப்பகத்தை மூட உத்தரவு; ஆய்வுக்கு பின் அமைச்சர் கீதா ஜீவன் நடவடிக்கை

திருப்பூர்: திருப்பூர் அருகே 3 மாணவர்கள் பலியான தனியார் காப்பகத்தை மூட சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் அருகே பூண்டி ரிங் ரோட்டில் ஸ்ரீ விவேகானந்த சேவாலயம் என்ற ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் உள்ளது. இங்கு கடந்த 5ம் தேதி இரவு உணவு சாப்பிட்ட மாணவர்கள் 3 பேர் பலியாகினர். மேலும், வாந்தி, மயக்கத்துடன் 11 மாணவர்கள் மற்றும் காப்பக காவலாளி ஜெயராமன் (63) சிகிச்சை பெற்று வருகின்றனர். அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சமூக … Read more

தஞ்சாவூர் அருகே சோகம்.! 2 வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு தாய் தற்கொலை.!

தஞ்சாவூர் மாவட்டத்தில் 2 வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு தாயும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் ஆலடிக்குமுளை புதுநகர் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ஜான்ராஜ். இவருடைய மனைவி மாலதி(22). இவர்களுக்கு ஹர்சன் (2) என்ற குழந்தை உள்ளது. இந்நிலையில் மாலதி பல்வேறு சுய உதவி குழுவிற்கு பணம் கொடுக்க வேண்டியிருந்தது. இதனால் மாலதி பலரிடம் கடன் கேட்டுள்ளார். ஆனால் பணம் கிடைக்காததால் … Read more

வருமான வரியில் ஒரு தவறு ஏற்பட்டுள்ளதாக கூறி 14.5 லட்சம் அபேஸ்..!!

திருச்சி திருவெறும்பூர் அருகே காட்டூர் பகுதியில் வசித்து வருபவர் முத்து இருளப்பன் (61). ஓய்வுப் பெற்ற தனியார் நிறுவன ஊழியரான இவருக்கு கடந்த சில மாதத்திற்கு முன்பு ஒரு மெயில் வந்துள்ளது. அதில், கடந்தாண்டு கட்டிய வருமான வரியில் ஒரு தவறு ஏற்பட்டுள்ளதாகவும் அதை சரி செய்ய வேண்டுமென்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று ஒரு செயலி முகவரி கொடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து முத்து இருளப்பன் அந்த செயலியை பதிவிறக்கம் செய்து, குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ் … Read more

ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் – பணம் வைத்து விளையாடினால் 3 மாதம் சிறை

சென்னை: தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட அவசர தடைச் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். அதன் மூலம், ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக விளம்பரம் செய்யவும், அந்த நிறுவனங்களுக்கு வங்கிகள் பணப் பரிவர்த்தனை செய்யவும் தடை விதிக்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன் சூதாட்டத்தால் கடன் சுமைக்கு உள்ளாகி, இளைஞர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்து வந்தது. காவல் துறையைச் சேர்ந்தவர்கூட தற்கொலை செய்துகொண்டார். எனவே, தமிழகத்தில் ஆன் லைன் சூதாட்டத்துக்கு கடும் எதிர்ப்புகள் … Read more

நித்தியானந்தா போல தோற்றமளிக்கும் சாமியார்; ஆசிரமத்தை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார்

திருப்பூர்: பல்லடம் அடுத்த காரணம்பேட்டை பகுதியில் கோவை செல்வபுரத்தை சேர்ந்த பாஸ்கரானந்தா (46) என்பவர் ஆசிரமம் நடத்தி வருகிறார். செல்வகுமார் என்பவரிடம் நிலத்தை குத்தகைக்குப் பெற்று ஆசிரமத்தை அமைத்திருந்தார். இந்நிலையில் செல்வகுமார் வங்கியில் பெற்ற கடனை திருப்பி செலுத்தவில்லை என வேறு ஒருவருக்கு ஏலம் விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இரவோடு இரவாக பாஸ்கரானந்தாவின் ஆசிரமம் இடித்து தள்ளப்பட்டது. இது தொடர்பாக அவர் பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். முறையான நீதிமன்ற உத்தரவுகள் இன்றி ஆசிரமத்தை இடித்தது … Read more

ஆன்லைன் சூதாட்டத்திற்கு இன்னொருவர் உயிரிழந்தால் ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

சென்னை: “ஆன்லைன் சூதாட்டத்திற்கு முந்தைய ஆட்சியில் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்ட பிறகு, ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் செய்து கொள்ளப்பட்ட 29-ஆவது தற்கொலை இதுவாகும். ஆன்லைன் சூதாட்டத்திற்கு கடந்த 6 ஆண்டுகளில் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “திருச்சி மாவட்டம் மலையாண்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்ற பொறியியல் மாணவர், ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் தொடர்வண்டி முன் பாய்ந்து தற்கொலை … Read more

கடவுளை வழிபடுவது அவரவர் நம்பிக்கையின்படியான உரிமை; ஐகோர்ட் கிளை நீதிபதி கருத்து

மதுரை: கடவுளை வழிபடுவது அவரவர் நம்பிக்கையின்படியான உரிமை என ஐகோர்ட் கிளை கூறியுள்ளது. மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே மேல நேசநேரியில் உள்ள வாலகுருநாதசுவாமி திருக்கோயில், இருதரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்னையால் 12 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. இக்கோயிலை மீண்டும் திறப்பது தொடர்பான தகுதியான நபரின் (அதிகாரி) அறிவிப்பை ரத்து செய்யக் கோரி சீனி என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.குமரேஷ்பாபு பிறப்பித்த உத்தரவில், ‘‘2011ல் கோயிலை நிர்வகிக்க தகுதியான நபர் (அதிகாரி) … Read more