ராஜராஜ சோழன் இந்து மன்னனா? தமிழினம் சும்மா இருக்காது; கருணாஸ் எச்சரிக்கை

ராஜராஜ சோழனை இந்துவாக மாற்றியுள்ளனர் என்று இயக்குனர் வெற்றிமாறன் பேசியதற்கு கருணாஸ் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவனின் 60வது பிறந்த நாள் விழாவில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், “கலையை இன்று நாம் சரியாக கையாள வேண்டும். தவறினால் வெகு சீக்கிரம் நிறைய அடையாளங்கள் பறிக்கப்படும். நமது அடையாளங்களை நம்மிடம் இருந்து தொடர்ந்து பறித்துக் கொண்டு இருக்கிறார்கள். வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பது, ராஜராஜ சோழனை இந்து … Read more

2வது சீசன் களைகட்டியுள்ள நிலையில் ஊட்டி மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்

ஊட்டி: இரண்டாவது சீசன் களைகட்டியுள்ள நிலையில் ஊட்டி மலை ரயிலில்  பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுவதால் ஊட்டி ரயில் நிலையத்தில்  கூட்டம் அலைமோதுகிறது. நீலகிரி மாவட்டம் ஊட்டி சர்வதேச சுற்றுலா நகரமாக  விளங்கி வருகிறது. மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை இயக்கப்படும்  நூற்றாண்டு பழைமை வாய்ந்த மலை ரயில் உலக பிரசித்தி பெற்றதாகும். யுனஸ்கோ  அமைப்பு நீலகிரி மலை ரயிலை பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது. இந்த மலை  ரயிலில் பயணிக்க பிற மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி, … Read more

பைக் வீலிங் செய்தவருக்கு வார்டு பாய் பணி ! – சென்னை உயர்நீதிமன்ற அதிரடி

சென்னை அண்ணா சாலையில் இரவு நேரத்தில் பைக்கில் சாகம் செய்த இளைஞர், நிபந்தனை ஜாமீன் அடிப்படையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வார்டு பாய்யாக பணி செய்தார். சென்னை அண்ணா சாலையில் கடந்த மாதம் 8ம் தேதி ஹைத்தரபாத்தை சேர்ந்த கோட்லாக் அலெக்ஸ் வினோ என்ற இளைஞர் தனது இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்த வீடியோ இணையத்தில் அதிக அளவில் பரவியது. இந்த வீடியோ தொடர்பாக அசோக்நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறை 7 பேரை … Read more

குவைத்தில் தமிழ் பெண்ணுக்கு நேர்ந்துள்ள கொடுமை!!

குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்ற தமிழ் பெண் ஒருவர், தன்னை கழிவறையில் தங்கவைத்து 20 மணி நேரம் வேலை வாங்குவதாக கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னை தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த புவனா(37) – ஜேம்ஸ் பால் தம்பதிக்கு கொரோனா காலத்தில் ரூ. 4 லட்சம் வரை கடன் ஏற்பட்ட நிலையில் கடன் கொடுத்தவர்கள் பலரும் இவர்களை தொந்தரவு செய்துள்ளனர். இந்நிலையில் ஜான்சன் என்பவர், குவைத் நாட்டில் குழந்தையை பராமரிக்கும் வேலை இருப்பதாகவும் வேலைக்கு சேர … Read more

நீரில் முழ்கி பலியான 6 பேரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம்  நிவாரணம்: அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல் 

சென்னை: கொள்ளிடம் ஆற்றில் நீரில் முழ்கி பலியான 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ” தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டிமாதா … Read more

பிலாஸ்பூர் எய்ம்ஸ் திறப்பு.. மதுரையில் பொட்டல்காடு… சு. வெங்கடேசன் போட்ட ட்வீட்..!

2018 ஆம் ஆண்டு அடிக்கல் நடப்பட்ட சத்தீஸ்கர் பிலாஸ்பூர் எய்மஸ் மருத்துவமனையை நாளை (அக்.,5) பிரதமர் திறந்து வைக்கிறார். அதே வருடம் அடிக்கல் நடப்பட்ட மதுரை எய்ம்ஸ் திறக்கப்படவில்லை என்று மதுரை எம்பி. சு.வேங்கடேசன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு சுட்டிக்காட்டியுள்ளார். மதுரை எய்ம்ஸ் பணிகள் 95 சதவிகிதம் முடிந்துவிட்டதாக இரண்டு நாட்கள் பயணமாக தமிழம் வந்த பாஜக தேசிய தலைவர் ஜே. பி நட்டா தெரிவித்ததற்கு விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 2015 ஆம் ஆண்டு மதுரை … Read more

திண்டுக்கல்லில் 6ம் தேதி புத்தக திருவிழா 16ம் தேதி வரை நடக்கிறது: கலெக்டர் விசாகன் தகவல்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் அக்.6ம் தேதி முதல் அக்.16ம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. என கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் விசாகன் தெரிவித்ததாவது: திண்டுக்கல் ட்டலி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் திண்டுக்கல் இலக்கிய களம் இணைந்து நடத்தும் புத்தகத்திருவிழா அக்.6 முதல் அக்.16ம் தேதி வரை தினசரி காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறவுள்ளது. புத்தகத் திருவிழா நடைபெறும் அக்.6ம் தேதி காலை 7 … Read more

”ஓனரின் சித்ரவதைகளை தாங்க முடியல” – வீட்டு வேலைக்காக துபாய் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

சென்னை தண்டையார்பேட்டை சேர்ந்தவர் ஜேம்ஸ்பால். இவருடைய மனைவி புவனா. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சென்னையில் சரியான வேலை இல்லாததால் கடந்த பிப்ரவரி மாதம், துபாயில் உள்ள ஒரு வீட்டில் பணிப்பெண் வேலை செய்வதற்காக சென்னை சூளைமேட்டில் உள்ள வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பும் ஏஜென்டை அணுகியுள்ளார். அப்போது புவனாவிடம் மருத்துவ பரிசோதனை செய்வதற்காக பத்தாயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு மருத்துவ பரிசோதனை முடித்து அந்த ஏஜென்ட் மூலம் துபாய் உள்ள ஒருவர் வீட்டில் பணி பெண்ணாக … Read more

பேருந்தில் பெண்கள் காசு கொடுத்து செல்லலாமா? : அமைச்சர் விளக்கம்!!

சமீபத்தில் திமுக பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அமைச்சர் பொன்முடி, பெண்களுக்கான இலவச பேருந்து திட்டத்தை ஓசி என குறிப்பிட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. அமைச்சர் பேச்சிற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன. இதற்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி, தான் வழக்கு மொழியில் ஓசியென கூறியதை சிலர் தவறாக புரிந்துக்கொண்டதாக விளக்கமளித்தார். இதனிடையே மூதாட்டி ஒருவர், இலவசமாக பேருந்தில் பயணிக்க மாட்டேன் என்றும் டிக்கெட்டிற்கு பணம் கொடுத்து தான் பயணிப்பேன் என நடத்துநரிடம் அடம் பிடித்த வீடியோ … Read more

மதுபோதையில் நண்பர் கொலை – குற்றவாளிக்கு தண்டனை குறைப்பு

சென்னை: மதுபோதையில் நண்பனை தாக்கி கொலை செய்தவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை 7 ஆண்டு சிறை தண்டனையாக குறைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் மணி மற்றும் விக்கி. இவர்கள் இருவரும், பால் கவர்களை சேகரித்து விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் மது அருந்தும்போது இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மணி தாக்கியதில், அவரது நண்பர் விக்கி உயிரிழந்தார். இந்த வழக்கை விசாரித்த … Read more