ராணிப்பேட்டை மாவட்டத்தில் 52 லட்சம் பனை விதைகள் 5 மணி நேரத்தில் நட்டு உலக சாதனை: 80 ஆயிரம் தன்னார்வலர்கள் பங்கேற்பு
வாலாஜா: தமிழக முதல்வரின் காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 288 கிராம ஊராட்சிகளிலும் பனை விதைகள் நடுவதற்காக, விதைகளை சேகரிக்கும் பணி கடந்த 3 மாதங்களாக மும்முரமாக நடந்து வந்தது. தொடர்ந்து, நேற்று மாவட்டம் முழுவதும் 5 மணி நேரத்தில் 52 லட்சம் பனை விதைகள் நடும் உலக சாதனை நிகழ்வு நடந்தது.அதன்படி, வாலாஜா அடுத்த தென்கடப்பந்தாங்கல் கிராமத்தில் நடந்த பனை விதை நடும் நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். … Read more