பாரூர் ஏரியில் இறந்து கரை ஒதுங்கிய மீன்கள்

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம், பாரூர் பெரிய ஏரியில் கட்லா, ரோகு, சப்பாரை, விரால், போன்ற மீன் வகைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த ஏரியின் அருகே கீழ்குப்பத்தில் இருந்து எலியானூர் செல்லும் சாலையில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தென்னதோப்புகளில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஏரியில் உள்ள மீன்கள் செத்து கரையோரம் ஒதுங்கி அழுகி துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். துர்நாற்றம் காரணமாக அவ்வழியாக செல்வோர் … Read more

ஆதிச்சநல்லூர் அகழாய்வு : வெண்கலத்தால் ஆன விலங்குகள் உருவம் கண்டுபிடிப்பு..!

கடந்த 2020-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் மத்திய அரசின் நிதியில், உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியம் அமைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். தற்போது, அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.  இதற்காக, ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் மூன்று இடங்களை தேர்வு செய்து அகழாய்வு பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த அகழாய்வில் கண்டுபிடிக்கப்படும் ஓவ்வொரு  பொருட்களும் இந்த பகுதியில் அமைய உள்ள உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகத்தில் வைத்து காட்சிப்படுத்தப்பட … Read more

பெட்ரோல் குண்டுவீச்சு எதிரொலி: மதுரையில் பாஜக, ஆஎஸ்எஸ் நிர்வாகிகள் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு

மதுரை: மதுரை மேல அனுப்பானடி பகுதியில் வசிக்கும் ஆர்எஸ்எஸ் இயக்க நிர்வாகி கிருஷ்ணனுக்கு சொந்தமான கார் மீது பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை விரைந்து பிடிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் மதுரை நகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரில், ‘‘தமிழகத்தில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ நடத்திய சோதனையைத் தொடர்ந்து, தமிழகத்தில் ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி, பாஜக … Read more

வெடிக்கும் பெட்ரோல் குண்டுகள்: பாஜக அண்ணாமலை தீட்டும் மாஸ் திட்டம்!

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்பட நாடு முழுவதும் 15 மாநிலங்களில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்புடன் தொடர்புடைய 93 இடங்களில் அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), மாநில போலீசார் ஆகியோர் இணைந்து கடந்த 22 ஆம் தேதி ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில பிஎஃப்ஐ நிர்வாகிகள் 106 பேர் மத்திய விசாரணை அமைப்புகளால் கைது செய்யப்பட்டனர். இந்த அதிரடி சோதனை நடைபெற்ற அன்றிரவே கோவை காந்திபுரம் வி … Read more

'நான் கத்தினேன், அவன் இளித்தான்' – இரவில் சென்னை மாணவிக்கு நேர்ந்த கொடுமை – ஆட்டோ ஓட்டுநர் கைது

சென்னை தனியார் நிறுவனத்தில் ஊடகவியல் பயிலும் மாணவி ஒருவர், தான் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். நேற்றிரவு (செப். 25) சென்னை கிழக்கு கடற்கரை பகுதியில் இருந்து தனது தோழியுடன் சோழிங்கநல்லூரில் உள்ள ஹோட்டலுக்கு வந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக தெரிவித்துள்ளார்.  மேலும், இதுதொடர்பாக போலீசாரிடம் புகார் அளிக்க முயன்றபோது, பல மணிநேரமாக தான் அலைக்கழிக்கப்பட்டதாகவும், தனது புகாரை காவல் துறையினர் அலட்சியப்படுத்தியதாகவும் தனது பதிவில் தெரிவித்துள்ளார். … Read more

மோதிரமலை – பேச்சிப்பாறை இடையே யானை அதிகம் நடமாடும் காட்டில் பெண்ணுக்கு ஆம்புலன்சில் பிரசவம்: ஆண் குழந்தை பிறந்தது

குலசேகரம்: கன்னியாகுமரி மாவட்டம்  கோதையாறு வனப்பகுதியில் உள்ள மோதிரமலை, கொலஞ்சிமடம் என்ற மலைவாழ் கிராமத்தை சேர்ந்தவர் நிஷாந்த். அவரது மனைவி அபிஷா (19). நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். கணவர் வெளியூர் சென்றிருந்த நிலையில் அபிஷாவுக்கு நேற்று இரவு பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து இரவு சுமார் 10 மணி அளவில் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். பேச்சிப்பாறையில் இருந்து உடனே 108 ஆம்புலன்ஸ் கோதையாரில் உள்ள மலை கிராமத்துக்கு விரைந்து சென்றது. அங்கு பிரசவ … Read more

தொல்குடி மக்களை அவமதிப்பதுதான் திராவிட மாடல் ஆட்சியா? அமைச்சருக்கு சீமான் கண்டனம்

தொல்குடி மக்களை அவமதிப்பதுதான் திராவிட மாடல் ஆட்சியா? அமைச்சருக்கு சீமான் கண்டனம் Source link

சாதியின் பெயரிலான அடக்குமுறைகளை ஏற்க முடியாது – அன்புமணி ராமதாஸ்

சென்னை: சாதியின் பெயரில் நடக்கும் அடக்குமுறைகளை ஏற்க முடியாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னையில் ஊ.ப.சௌந்திரபாண்டியன் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற மாநாட்டில் பாமகவின் அன்புமணி ராமதாஸ், கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ”சாதியால் ஏதேனும் ஒரு வகையில் அனைவரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அனைத்து சாதியும் முன்னேற வேண்டும் என்பதே நோக்கம். ஒவ்பொரு சாதிக்கும் ஒரு அடையாளம் உண்டு. ஆனால் சாதி பெயரில் இருக்கும் அடக்குமுறையை ஏற்று கொள்ள முடியாது. ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு … Read more

ஜெயலலிதாவை போல ஸ்டாலின் துணிவாரா..? நடக்குமா ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு?

தமிழகத்தில் வரும் அக்டோபர் 2-ம் தேதி மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி ஆர்எஸ்எஸ் அமைப்பினர் 50 இடங்களில் ஊர்வலம் நடத்த உயர் நீதிமன்றம் நிபந்தனை அனுமதி அளித்துள்ளது. அரசியல் அமைப்பை சாராத ஒரு குழு சீருடை அணிந்துகொண்டு ராணுவ வீரரர்களை போல அணிவகுப்பு நடத்த என்ன காரணம்? அவர்களது நோக்கம்தான் என்ன என்ற பல கேள்விகள் எழும். ஆனால், இதற்கு அவர்கள் தரும் பதில் என்னவென்றால், கலாச்சார ரீதியாக இந்தியாவை ஒற்றுமை படுத்துகிறோம் என்று சொல்கின்றனர். ஆனால், ஆர்எஸ்எஸ்-ஐ … Read more

சூளகிரி அருகே 7 ஆண்டுக்கு பின் நிரம்பிய ஏரி: கிடா வெட்டி வழிபாடு

சூளகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே பெத்தசிகரளப்பள்ளி ஊராட்சி குரல்தொட்டி கிராமத்தில் ஏரி உள்ளது. இந்த ஏரி நிரம்பினால் குரல்தொட்டி, தின்னூர், சிள்னதின்னூர் பாப்பனப்பள்ளி, கார்பாலா, ஆறுப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் உயரும். இதனால் விவசாயம் செழிக்கும். ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக சரிவர மழை இல்லாததால் இந்த ஏரி வறண்டு கிடந்தது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக பெய்த மழையால் தற்போது ஏரி நிரம்பி உள்ளது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனை … Read more