ஆன்லைன் சூதாட்டம்: அவசர சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்!

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அவசரச் சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை, அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய அவசர சட்டம் இயற்றுவது உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. இந்நிலையில், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அவசரச் சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு … Read more

ஆட்சியை கலைத்தால் ரத்த ஆறு ஓடும் என்றார் – கருணாநிதியுடனான நினைவுகள் பகிரும் சு.சாமி

மதுரை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க கட்டடத்தில் வைத்து பாரதிய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகியான சுப்பிரமணியன் சுவாமியின் 83ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பல்வேறு கட்சி நிர்வாகிகள், பிரமுகர்கள், தொழிலதிபர்கள் அவரை வாழ்த்தி பேசினர். இதையடுத்து மேடையில் பேசிய சுப்பிரமணியன் சுவாமி, “இரண்டு மூன்று ஆண்டுகளுக்குள் நாட்டில் மிகப்பெரிய மாற்றம் வர உள்ளது. நாட்டின் கலாசாரத்தை வெள்ளைக்காரர்கள் எரித்ததால் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி சென்றோம். தற்போது அதிலிருந்து மீண்டு சொந்த காலில் … Read more

அய்யலூர் கோயில் அருகே குட்டையில் தேங்கும் கழிவுநீரை அகற்ற கோரிக்கை

வடமதுரை: திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே உள்ள அய்யலூரில் திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீ வண்டிகருப்பணசாமி கோயில் உள்ளது. இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் உள்ள இக்கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து கிடாவெட்டி பூஜை செய்கின்றனர். பின்னர் விருந்து முடிந்ததும் பாத்திரத்தை கழுவும் கழிவுநீர் அருகில் உள்ள குட்டையில் தேங்குகிறது. இதனால் அந்த குட்டையில் இருந்து துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் கழிவுநீர் தேங்கும் குட்டையில் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் இலை கழிவுகள் கொட்டப்படுவதால் கொசு  … Read more

`ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்துக்கு வழங்கிய அனுமதியை திரும்பப் பெறுக’ – திருமாவளவன் மனுதாக்கல்

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கிய உத்தரவை திரும்பப் பெறக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் அக்டோபர் 2ம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பல்வேறு நிபந்தனைகளை விதித்து அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை திரும்ப பெற … Read more

சாண்ட்விச் ஆபத்து? ராணிப்பேட்டையில் 3 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

சாண்ட்விச் ஆபத்து? ராணிப்பேட்டையில் 3 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி Source link

அனிருத்தின் தாத்தா காலமானார்!!

தமிழ் சினிமாவின் பழபெரும் இயக்குநரும், இசையமைப்பாளருமான எஸ்.வி.ரமணன் காலமானார். பழம்பெரும் தயாரிப்பாளரும், இயக்குநருமான கே.சுப்பிரமணியம் மகன்களில் ஒருவரான எஸ்.வி.ரமணன் சுதந்திரத்திற்கு முன்பு வெளியான சில தமிழ் படங்கள் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். பிறகு சினிமாவில் இருந்து சற்று விலகியிருந்த இவர், அவ்வப்போது பின்னணி குரல் கொடுத்தும் வந்தார். தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் ரவிச்சந்தர் இவரது பேரன். அதே போல் இவரது மற்றொரு பேரன் ரிஷிகேஷ் தனுஷ் நடிப்பில் வெளியான ‘வேலையில்லா பட்டதாரி’ … Read more

‘செம்மைப்படுத்தப்பட்ட’ ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம்: தமிழக அமைச்சரவை ஒப்புதல் 

சென்னை: ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்திற்கு தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் கே.சந்துரு தலைமையில் அரசு ஒரு குழுவை அமைத்தது. இக்குழு 27.06.2022 அன்று தனது அறிக்கையினை சமர்ப்பித்தது. மேற்கண்ட அறிக்கை அதே நாளில் அமைச்சரவையின் பார்வைக்காக வைக்கப்பட்டது. அதன்பின், பள்ளி மாணவர்கள் மீது இணையவழி விளையாட்டுகள் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை பற்றி … Read more

பணக்கார சாமிதான்… அதுக்காக இவ்வளவா? மலைக்க வைக்கும் திருப்பதி கோயில் சொத்து மதிப்பு!

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாக திகழும் திருப்பதியில் அன்றாடம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். பல்வேறு மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் வருகைதரும் ஏழுமலையான் பக்தர்களால் ஆண்டுதோறும் எப்போதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிவதன் பயனாக, ஏழுமலையான் கோயில் உண்டியலும் நாள்தோறும் நிரம்பி வழிந்த வண்ணமே உள்ளது. பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் பணம் மற்றும் நகைகளின் மதிப்பை கணக்கிட்டால் மட்டும் தேவஸ்தானத்துக்கு நாள்தோறும் பல லட்சம் ரூபாய் வருவாயாக கிடைத்து வருகிறது. உலகிலேயே பெரிய … Read more

ஆன்லைன் ரம்மி தடை சட்டம் : ஓகே செய்த அமைச்சரவை… ஒப்புதல் அளிப்பாரா ஆளுநர்?

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணத்தை இழந்து தற்கொலை செய்துக்கொள்வது தொடர் கதையாகி வருகிறது. இதனால் இந்த விளையாட்டை தடை செய்யக்கோரி தமிழ்நாடு அரசிடம்  தொடர்ச்சியாக பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வந்தன. இதனையடுத்து, ஆன்லைன் ரம்மியின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது. அக்குழுவில் ஐஐடி தொழில்நுட்ப வல்லுநரான டாக்டர் சங்கரராமன், சினேகா அமைப்பின் நிறுவனரும் உளவியலாளருமான டாக்டர் லட்சுமி விஜயகுமார், … Read more

வத்தலக்குண்டு அருகே கோயிலில் விரைந்து கோபுரம் கட்ட வலியுறுத்தல்

வத்தலக்குண்டு: திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள பழைய வத்தலக்குண்டுவில் கோட்டைப்பட்டி சென்றாய பெருமாள் கோயில் உள்ளது. 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து தினமும் ஏராளமானவர்கள் வந்து பெருமாளை தரிசித்து செல்கின்றனர். இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் கோபுரம் அமைக்க கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பணி தொடங்கியது. அந்தப் பணி தற்போது பாதியில் நிற்கிறது. எனவே கோயிலில் விரைந்து கோபுரம் கட்டி கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் … Read more