நாகை அருகே நெகிழ்ச்சி சம்பவம்..!! அனாதையாக இறந்த 3,000 பேருக்கு தனி மணிதர் தர்ப்பணம்…!!

கையைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (64). சாதி மதம் பாராமல் கடந்த 2012-ம் ஆண்டு முதல் ஆதரவற்றோர் இறந்தால் அவர்களுக்கு இறுதி சடங்கு செய்கிறார். இவரது தன்னலமற்ற சேவையில் முதியவர்கள் பெண்கள் குழந்தைகள் என 3,000க்கும் மேற்பட்ட உடல்களுக்கு இறுதிச்சடங்கு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளை செப்டம்பர் 25-ம் தேதி மகாளய அமாவாசை வருவதோடு அதற்கு முந்தைய 15 நாட்கள் மகாளய பட்சம் என்பதால் தான் அடக்கம் செய்த 3,000க்கும் மேற்பட்ட முன்னோர்களுக்கு உறவாக இருந்து ஒரே இடத்தில் … Read more

மின் கட்டண உயர்வு நெருக்கடி: கோவையில் வடமாநில தொழிலாளர்கள் கட்டாய விடுப்பில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு

கோவை: நூலுக்கு சரியான விலை கிடைக்காதது, மூலப்பொருட்கள் விலை உயர்வு, மின்கட்டணம் உயர்வு உள்ளிட்டவற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக, முதல் முறையாக இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு 600 ஓபன் எண்ட் நூற்பாலைகளில் உற்பத்தி முழுவதும் நிறுத்தப்பட்டு வடமாநில தொழிலாளர்கள் கட்டாய விடுப்பில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். கோவை மாவட்டத்தில் பிஹார், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு வடமாநிலங்களை சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கி பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். உற்பத்தி … Read more

செக் வைக்கும் ஸ்டாலின்: கிலியில் அதிமுக அணிகள்!

தமிழக சட்டப்பேரவை கடைசியாக கடந்த மே மாதம் கூடியது. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பேரவையை கூட்ட வேண்டும் என்பதால், அடுத்த கூட்டத்தை நவம்பரில் கூட்ட வேண்டும். ஆனால், முதலீடுகளை ஈர்க்க நவம்பர் மாதம் வெளிநாடு செல்ல முதல்வர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. எனவே, அதற்கு முன்னதாகவே சட்டப்பேரவையை கூட்டிவிட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறாராம். அதன்படி, தமிழக சட்டப்பேரவை அடுத்த மாதம் 2ஆவது வாரத்தில் கூட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகை வரவுள்ளதால் அதற்கு முன்னதாகவே … Read more

ஆன்மிக அறிவியல் ஆராய்ச்சி – ஆதீனத்தை சந்தித்த இஸ்ரோ முன்னாள் தலைவர்

மயிலாடுதுறை திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் இன்று காலை இஸ்ரோ விக்ரம் சாராபாய் சிறப்பு பேராசிரியரும், இஸ்ரோ முன்னாள் தலைவருமான  டாக்டர் சிவன் தனது மனைவி மாலதியுடன் ஆயுஸ் ஹோமத்தில் பங்கேற்றார். இதையடுத்து, மயிலாடுதுறையில் உள்ள பழைமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்துக்கு வந்த அவர் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை சந்தித்து அருளாசி பெற்றார். அவருக்கு ஆதீனகர்த்தர் திருக்குறள் விளக்கவுரை புத்தகத்தை வழங்கி அருளாசி கூறினார்.  தொடர்ந்து, செய்தியாளர்களைச் … Read more

பொன்பாடி சோதனை சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனை

திருத்தணி: கோவை பாஜ பிரமுகர் கடை மற்றும் அலுவலகத்தில் வெடிகுண்டு வீசப்பட்டது. இதன்காரணமாக பதற்றம்ஏற்பட்டுள்ளதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், உளவுத்துறையின் எச்சரிக்கையின்படி, சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பொன்பாடி சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்ட போலீஸ் செபாஸ் கல்யாண் உத்தரவின்படி, டிஎஸ்பி விக்னேஷ் மேற்பார்வையில், திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையில் போலீசார் அனைத்து வாகனங்களையும் தீவிரமாக சோதனை நடத்தி அனுப்பினர். திருத்தணி பேருந்து நிலையம், … Read more

TNSTC ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை வழங்கவேண்டும் – உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசு போக்குவரத்துக்கழக ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு, வரும் நவம்பர் முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கும், போக்குவரத்துக் கழக ஓய்வூதிய நிதி அறக்கட்டளைக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்களுக்கும், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என 2015-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்பின் நான்கு முறை அகவிலைப்படி உயர்த்தப்பட்டப்போதும், போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்களுக்கும், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி … Read more

ஒரே வீட்டில் 2 கள்ளக்காதலர்கள்: கூலித்தொழிலாளி கொலையில் பகீர் தகவல்..!

சென்னை மதுரவாயல் அருகே உள்ள நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் விஜய்(27). கூலி வேலை செய்து வந்த இவருக்கு, கணவனை பிரிந்து வசித்து வந்த சவுந்தர்யா(29) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கடந்த சில மாதங்களாக ஒன்றாக வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு, விஜய்யை யாரோ சிலர் குத்திக் கொலை செய்து விட்டதாக அப்பகுதி பொதுமக்கள் விருகம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கழுத்தில் கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த விஜய்யின் … Read more

மணலியில் 0% – சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 71% மட்டுமே நிறைவு

சென்னை: சென்னையில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணிகள் இதுவரை 71 சதவீதம் மட்டுமே நிறைவு பெற்றுள்ளது. சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக்கு முன்பு கால்வாய்கள் மற்றும் மழைநீர் வடிகால்கள் தூர்வாரப்படும். இதன்படி இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணிகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, நீர்நிலைகளில் தேங்கியுள்ள வண்டல்கள் மற்றும் ஆகாயத்தாமரைகள், நிலத்திலும் இயங்கக்கூடிய ரொபாடிக் எக்ஸ்கவேட்டர், ஆம்பிபியன் போன்ற நவீன … Read more

திராவிட மாடல் Vs தேசிய மாடல்: முதல்வர் ஸ்டாலினுக்கு சவால் விடுத்த அண்ணாமலை!

விழுப்புரம் அடுத்த பேரங்கியூரை சேர்ந்த நரசிம்மன் மகன் சதீஷ்(வயது 30), பிரகாசம் மகன் பரத் என்கிற செந்தில் 30, இவர்கள் இருவரும் கடந்த 17-ஆம் தேதி மாலை தங்கள் நண்பர்களுடன் பிடாகம் தென்பெண்ணையாற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்களை தேடும் பணியில் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். எனதிரிமங்கலம் பகுதியில் நேற்று முன்தினம் மாலை சதீஷின் உடல் கரை ஒதுங்கியது. இளைஞர் பரத் உடலை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. … Read more

அதிமுக பிரமுகருக்கு எதிரான மரண தண்டனை ரத்து

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், காவேரிப்பாக்கம் சுப்பாராயன் தெருவை சேர்ந்த ராஜு – கலைச்செல்வி தம்பதிக்கு கோவர்த்தனன், கவுதமன் என இரு மகன்கள் உள்ளனர். திண்டிவனம் நகர அதிமுக மாணவரணி தலைவர் மற்றும் நகர தொழில்நுட்ப பிரிவு செயலாளராக இருந்த கோவர்த்தன், புதிய தொழில் தொடங்க பணம் கேட்டு குடும்பத்தினருக்கு தொந்தரவு கொடுத்துள்ளார். அவருக்கு பணம் கொடுக்காததால் பெற்றோர் மற்றும் சகோதரன் கவுதமன் மீதும், கோவர்த்தன்  கோபத்தில் இருந்து வந்தார். இதைத்தொடர்ந்து, 2019 மே 15ஆம் தேதி அதிகாலை … Read more