“உங்கள் துறையில் முதலமைச்சர்”: டிஜிபி அலுவலகம் சென்று மனுக்களை பெற்ற முதல்வர்

சென்னை: “உங்கள் துறையில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் டிஜிபி அலுவலகம் சென்று காவலர்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மாநிலத்தின், அமைதியைப் பேணிப் பாதுகாத்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் முக்கியப் பணிகளை ஆற்றி வரும் காவல் துறையின் பணிகள் சிறக்க, புதிய காவல் நிலையங்கள் மற்றும் காவலர் குடியிருப்புகளை கட்டுதல், ரோந்து வாகனங்களை வழங்குதல், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் காவலர்களின் குறைகளைக் கேட்டு அவற்றை … Read more

ஆம்பூர் சார்பதிவு அலுவலகத்தில் அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை பதிவு செய்த சார்பதிவாளர் இட மாற்றம்

வேலூர்: ஆம்பூர் சார் பதிவு அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை பதிவு செய்த சார்பதிவாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத மனைகளை பத்திரப்பதிவு செய்ய தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், கடந்த அதிமுக ஆட்சியில் சில சார்பதிவாளர் அலுவலகங்களில் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு அங்கீகாரம் இல்லாத மனைகளுக்கு சட்ட விரோதமாக பத்திரப்பதிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்ததும், அங்கீகாரம் இல்லாத மனை பத்திரம் … Read more

10 நாட்களுக்கு முன் காணாமல்போன முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் – ஆற்றில் சடலமாக மீட்பு

ஓமலூர் அருகே செம்மண்கூடல் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சரபங்கா ஆற்றில் சடலமாக மீட்கபட்டார். கடந்த பத்து நாட்களுக்கு முன்பு காணாமல் போனவர் இன்று மாலை ஆற்றில் சடலமாக மிதந்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்தில் செம்மண்கூடல் கிராம ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் உள்ள எல்லாயூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன். இவர் செம்மண்கூடல் ஊராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவர். இவர் தேங்காய் நார் தொழிற்சாலை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு இரண்டு மகன், ஒரு … Read more

‘‘முதல்வரின் மவுனம் சந்தேகத்தை எழுப்புகிறது’’ – ஆ.ராசா விவகாரத்தில் செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு

மதுரை: ‘‘முதல்வரின் மவுனம், விலைவாசி உயர்வை மறைப்பதற்காக ஆ.ராசா பேச வைக்கப்பட்டுள்ளாரா? என்ற சந்தேகத்தை எழுப்புகிறது’’ என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்துள்ளார். முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சரும், மதுரை மேற்குத் தொகுதி சட்ட மன்ற உறுப்பினருமான செல்லூர் கே.ராஜூ தனது தொகுதிக்குட்பட்ட 72வது வார்டில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி சுகாதார வளாகம், முத்துராமலிங்கம்புரம் 7வது மேட்டுத்தெருவிற்கு பேவர் ப்ளாக் சாலைப்பணிகளுக்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சியில் நேற்று கலந்துகொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் … Read more

காய்ச்சலுக்கு முகாம் நடத்தி சிகிச்சை பள்ளிகளுக்கு விடுமுறை அவசியம் இல்லை: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

தஞ்சாவூர்: .தஞ்சாவூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நேற்று அளித்த பேட்டி: தமிழகம் முழுவதும் காய்ச்சல் அதிகளவு பரவி வருவதை பற்றி சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் துறையினர் ஆலோசனை வழங்கி வருகிறார்கள். அவர்கள் என்ன வழிமுறை சொல்கிறார்களோ அதை பின்பற்றி தான் பள்ளிக்கல்வித்துறை செயல்பட்டு வருகிறது. எங்கெல்லாம் 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருக்கிறதோ அங்கெல்லாம் மருத்துவ முகாம்கள் நடத்தி சிகிச்சை அளிக்கப்படும். பயப்படத்தேவையில்லை எனக் கூறியிருக்கின்றனர். இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை விட அவசியம் இல்லை. இல்லம் … Read more

கிரிப்டோ கரன்சி விவகாரம் – நண்பனை கத்தி முனையில் கடத்திய நண்பர்கள் 3பேர் கைது

கிரிப்டோ கரன்சி விவகாரத்தில் நண்பனை கத்தி முனையில் கடத்திய நண்பர்களில் 3 பேர் கைதுசெய்யப்பட்டனர். 2 பேரை போலீசார் தேடிவருகின்றனர். மதுரை கோரிப்பாளையம் தனியார் விடுதியில் கல்லூரி மாணவர் ஒருவரை மூன்று பேர் கத்தி முனையில் கடத்தி சென்றதாக மாநகர காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைப் பற்றி அறிந்த மாநகர போலீஸ் கமிஷனர் சம்பந்தப்பட்ட நபர்களை உடனடியாக பிடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு சம்பவம் நடைபெற்ற விடுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் உள்ள … Read more

கோவை | பாஜக மாவட்ட அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு – போலீஸார் விசாரணை

கோவை: கோவை காந்திபுரத்தில் உள்ள பாஜக மாநகர் மாவட்ட அலுவலகத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசினர். அந்நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை காந்திபுரத்தில் உள்ள வி.கே.கே.மேனன் சாலையில் பாஜக மாநகர் மாவட்ட தலைமை அலுவலகம் உள்ளது. கட்டிடத்தின் முதல் தளத்தில் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. தரை தளத்தில் படிக்கட்டை ஒட்டியவாறு, பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலருக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று (செப்.22) இரவு 9 மணியளவில் கட்சி பிரமுகர்கள் சிலர் … Read more

வரைவுச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள பிரிவுகளை அகற்றிட வேண்டும்..! – பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்..!

ஒன்றிய அரசின் வரைவு இந்திய துறைமுகங்கள் மசோதா 2022,மாநில அரசுகளின் உரிமைகளை பாதிக்கக்கூடிய வகையில் வரைவுச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள பிரிவுகளை அகற்றிட வேண்டும் என்று கோரிக்கைகாக பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம் “ இந்திய துறைமுகங்கள் மசோதா 2022 , கடலோர மாநிலங்களின் உரிமைகளைப் பாதிப்பதாகவும் , சிறு துறைமுகங்களின் எதிர்கால வளர்ச்சியைத் தடுப்பதாகவும் அமையும் என்பதால் , மாநில அரசுகளின் உரிமைகளை பாதிக்கக்கூடிய வகையில் இந்த வரைவுச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள பிரிவுகளை அகற்றிட வேண்டும்” என்று … Read more

தர்மபுரியில் மாடியில் இருந்து பீரோவை இறக்கிய போது மின்சாரம் பாய்ந்து 3 பேர் பலி: மேலும் ஒருவருக்கு தீவிர சிகிச்சை

தர்மபுரி: தர்மபுரி டவுன் சந்தைப்பேட்டை ரோடு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் இலியாஸ் பாஷா(75). இவர் கோல்டன் தெருவில் சொந்தமாக வீடு கட்டி, நேற்று முன்தினம் குடும்பத்தோடு குடி புகுந்தார். இதையடுத்து, 2வது மாடியில் இருந்த வாடகை வீட்டில் இருந்து இலியாஸ் பாஷா, தர்மபுரி ஆத்துமேட்டைச் சேர்ந்த டிரைவர் கோபி (23), கிளீனர் குமார் (20) வீட்டு உரிமையாளர் அன்னசாகரத்தைச் சேர்ந்த பச்சியப்பன்(50) ஆகியோர் பொருட்களை இறக்கி, மினிலாரியில் ஏற்றிக்கொண்டிருந்தனர். குறுகலான மாடிப்படி வழியாக இரும்பு … Read more

4 தலைமுறைகளாக கைவினைப் பொருட்கள் தயாரிப்பில் களைகட்டும் கலைக்குடும்பம் – ஓர் தொகுப்பு!

மயிலாடுதுறையில் 4 தலைமுறைகளாக கைவினைப் பொருட்களை கலைக்குடும்பம் ஒன்று உருவாக்கிவருகிறது. குறுந்தொழிலை விரிவுபடுத்தி வெளிநாடுகளுக்கு கொலு பொம்மைகளை அனுப்பிவருகின்றனர். இவர்களுக்கு வாட்ஸ்-ஆப் மூலமாகவே ஆர்டர்கள் குவிவதாக மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர். மயிலாடுதுறையில் மூன்று தலைமுறைகளாக குடிசைதொழிலாக செய்யப்பட்டு வந்த கொலு பொம்மைகள் உற்பத்தி தொழிலை நான்காம் தலைமுறை பட்டதாரி இளைஞரான ஆனந்தகுமார் விரிவுபடுத்தி அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றுள்ளார். இவர் தயாரிக்கும் கொலு பொம்மைகள், மண் சிற்பங்கள் தமிழகம் மட்டுமின்றி கேரளா, பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும், அமெரிக்கா, … Read more