பொருள் வாங்காதவர்களுக்கு 'கௌரவம்': கூட்டுறவுத்துறை செயலர் தகவல்..!

“குடும்ப அட்டை வைத்திருந்து பொருட்கள் வாங்காத நபர்கள் ‘கௌரவ ரேஷன் கார்டு’ பெற்றுக் கொள்ளலாம்” என கூட்டுறவுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் திருச்சி அண்ணா நகர் கூட்டுறவு வங்கியில், உறுப்பினர்களுக்கு கடனுதவிகளை வழங்கினார். தொடர்ந்து, கல்லுக்குழி நியாய விலைக்கடையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பின்னர், டி.வி.எஸ். டோல்கேட் மின்வாரிய அலுவலகம் அருகில் உள்ள சுப்பிரமணியபுரம் நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஆய்வு மேற்கொண்டார். … Read more

தமிழகத்தில் 1267 பேருக்கு எச்1என்1 ஃப்ளூ காய்ச்சல் உறுதி: 6000 சோதனைக் கருவிகளை வாங்க சுகாதாரத்துறை திட்டம்

சென்னை: தமிழகத்தில் இதுவரை 1267 பேருக்கு எச்1என்1 ஃப்ளூ காய்ச்சல் உறுதியாகியுள்ளது. ஃப்ளூ காய்ச்சல் அதிகரித்து வரும் எச்1என்1 இன்ஃப்ளுயன்ஸா காய்ச்சல் காரணமாக அடுத்த 15 நாட்களில் 6 ஆயிரம் சோதனைக் கருவிகளை வாங்க தமிழக சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஃப்ளூ காய்ச்சல் என்று அழைக்கப்படும் எச்1என்1 இன்ஃப்ளுயன்ஸா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே உள்ளது. பெரும்பாலான நகரங்களில் இன்ஃப்ளுயன்ஸா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக வரக்கூடிய பொதுமக்களின் எண்ணிக்கை கடந்த சில … Read more

பொறுப்பு தலைமை நீதிபதி டி. ராஜா பதவியேற்பு: கடந்து வந்த பாதை!

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த எம்.துரைசாமி நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி டி. ராஜாவை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் கடந்த திங்கள்கிழமை உத்தரவிட்டிருந்தார். அதன்படி சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி டி.ராஜா பொறுப்பு தலைமை நீதிபதியாக இன்று பொறுப்பேற்று கொண்டார். நீதிபதி டி.ராஜா மதுரை மாவட்டம் தேனூர் கிராமத்தில் கடந்த 1961 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் தேதி பிறந்தார். பள்ளிப்படிப்பை … Read more

பள்ளிகளுக்கு விடுமுறையா..?: அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்..!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் தமிழக கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் அன்பில் மகேஷ் சுவாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர், 1955-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ராமேஸ்வரம் அரசு மேல்நிலைபள்ளியில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது: “குழந்தைகளுக்கு வரும் காய்ச்சல் மூன்று நாட்களுக்கு மட்டுமே இருக்கும் என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய அவசியமில்லை. சுகாதாரத் துறை தெரிவிக்கும் வழிமுறைகளைப் பின்பற்றி பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாணவர்களுக்கு காய்ச்சல் பரவாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை … Read more

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா பொறுப்பேற்பு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக நீதிபதி டி.ராஜா இன்று (செப்.22) பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதியாக இருந்த எம்.துரைசாமி நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி டி.ராஜாவை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி டி.ராஜா பொறுப்பு தலைமை நீதிபதியாக இன்று பொறுப்பேற்று கொண்டார்.பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள நீதிபதி டி.ராஜா … Read more

அமித் ஷாவின் டார்கெட் 25… தலைக்கு மேல் தொங்கும் கத்தி- எடப்பாடி எடுக்க வேண்டிய அஸ்திரம்!

தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக விளங்கும் அதிமுக, ஆளும் திமுக அரசின் குறைகளை சுட்டிக் காட்டி ஜனநாயகப் பூர்வமான அரசியலை முன்னெடுக்க முடியாமல் உட்கட்சி பூசலில் மாட்டிக் கொண்டு தவித்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி , ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அக்கட்சி இரண்டு அணிகளாக பிரிந்து நிற்கும் சூழலில் சட்டப் போராட்டங்கள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு தனக்கு சாதகமாக வந்துள்ளதால் அதை தக்க வைத்துக் கொள்ள எடப்பாடி தரப்பு தீவிரம் காட்டி கொண்டிருக்கிறது. அதன்படி, … Read more

Weather Report: தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? வானிலை தகவல் இதோ

தமிழக மாவட்டங்களுக்கான வானிலை தகவலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, பின்வரும் வானிலை மாற்றங்கள் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 22.09.2022 மற்றும் 23.09.2022 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். 24.09.2022, 25.09.2022 மற்றும் 26.09.2022 ஆகிய தேதிகளில் … Read more

தஞ்சை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் நீர்திறப்பு முற்றிலும் நிறுத்தம்

தஞ்சை : தஞ்சை மாவட்டம் அணைக்கரை கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் நீர் திறக்கப்படுவது முற்றிலும் நிறுத்திவைக்கப்படுள்ளது. கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் கடந்த 25 நாட்களாக நீர் வெளியேற்றப்பட்டு வந்தது.

தாம்பரம் திமுக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு!!

தாம்பரம் திமுக எம்எல்ஏ மீது மறைமலைநகர் காவல் நிலையத்தில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தாம்பரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா தனியார் நிறுவன ஊழியர்களை மிரட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியானது. அவர் சிங்கப்பெருமாள் கோயில் அடுத்துள்ள மால்ரோசா புரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு சென்றார். அங்கு பணியாற்றும் ஊழியர்களிடம் தகாத வார்த்தைகளால் பேசி அவர் மிரட்டல் விடுப்பது போன்ற வீடியோ வெளியானது. இந்த விவகாரம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து … Read more

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மீண்டும் தேர்தல் ஆணையத்தில் தாக்கல்

கடந்த ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத் தீர்மானங்கள் அடங்கிய பிரமாணப் பத்திரத்தை முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், இந்திய தேர்தல் ஆணையத்தில் நேற்று மீண்டும் தாக்கல் செய்தார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை சர்ச்சை தொடர்ந்து நீடிக்கிறது. இந்நிலையில், கடந்த ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், சட்ட விதிகளைத் திருத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. Source link