விருதுநகர் | 25 ஆண்டுகளுக்குப் பின் அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

விருதுநகர்: மரம் திரும்பிய பறவைகள் என்ற தலைப்பில் விருதுநகர் அருகே நடையனேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு பயின்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. விருதுநகர் அருகே உள்ள நடையனேரி அரசுப்பள்ளியில் 1992 முதல்-99ம் ஆண்டு வரை 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புபடித்த மற்றும் இடைநிற்றல் மாணவர்கள் சந்தித்த இனிமையான நிகழ்வு அதே ஊரில் தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில், பெங்களூருவில் பணியாற்றி வரும் ஐஆர்எஸ் … Read more

ஆ.ராசா மீது பாயும் நடவடிக்கை?; முதல்வர் ஸ்டாலின் திடீர் அதிரடி!

தமிழ்நாட்டில் சமீப காலமாகவே இந்து மத நம்பிக்கைக்கு எதிராக துணை பொதுச்செயலா் ஆ.ராசா தொடா்ந்து பேசி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தபடி உள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை பொறுத்தவரை மத நம்பிக்கை இல்லாதவர் என்றாலும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் உள்ளிட்ட குடும்பத்தில் உள்ள சிலருக்கு இந்து மதத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கை உள்ளது. அதுமட்டுமல்லாமல், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், மூத்த நிா்வாகி ஜெகத்ரட்சகன் எம்.பி உள்பட பலர் இறை நம்பிக்கையை வெளிப்படையாகவே காட்டி வருகின்றனர். திமுக தலைவா் … Read more

சதுரகிரி மலைப்பகுதியில் தீவிபத்து: பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

வத்திராயிருப்பு: சதுரகிரி கோயில் கிழக்குப்பகுதி மலையில் தீ பரவியதால், பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல வனத்துறையினர் அனுமதி மறுத்தனர். இதனால், நேற்று பக்தர்கள் ஏமாற்றம் அடைந்து திரும்பிச் சென்றனர்.  மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. புரட்டாசி பிரதோஷம், அமாவாசை மற்றும் நவராத்திரி விழாவை முன்னிட்டு, கடந்த மாதம் 23ம் தேதி முதல் வரும் 5ம் தேதி வரை 13 நாட்கள் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த செப்.26ம் தேதி … Read more

சென்னை: பிரியாணி கடை உரிமையாளரை மிரட்டி மாமுல் கேட்ட அதிமுக நிர்வாகி மீது புகார்.!

சென்னை ராயப்பேட்டையில் பிரபல பிரியாணி கடை உரிமையாளரை மிரட்டி பணம் கேட்ட அதிமுக நிர்வாகி மீது சென்னை ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. மாமுல் கேட்டு தொலைபேசியில் உரையாடும் ஆடியோ வெளியே வந்துள்ளது. சென்னை திருவல்லிக்கேணி பகுதி அதிமுக செயலாளராக இருப்பவர் சீனிவாசன் இவர் கடந்த வாரம் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அதிமுக சார்பில் நடத்துவதற்காக அப்பகுதியில் உள்ள பல்வேறு கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களிடம் மாமுல் கேட்டுள்ளார். அதேபோல் சென்னை … Read more

போராட்டத்திலுள்ள மின்துறையினர் மீது எஸ்மா பாயும்: புதுச்சேரி ஆளுநர் தமிழிசை எச்சரிக்கை  

புதுச்சேரி: மின்துறை தனியார் மயமாக்கத்துக்கு எதிராக மதச்சார்பற்ற கட்சியினர் ஆளுநர் தமிழிசை மற்றும் பாஜகவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இந்நிலையில் மக்களை பாதிக்கும் வகையில் போராட்டம் நடத்தும் மின்துறையினர் மீது எஸ்மா பாயும் என்று ஆளுநர் தமிழிசை எச்சரித்துள்ளார். புதுச்சேரி அண்ணாசாலையில் காமராஜர் சிலை வரை திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, சிபிஐ (எம்-எல்) உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகளின் மனித சங்கிலி இன்று நடந்தது. புதுச்சேரி மின்துறையை தனியாருக்கு தர … Read more

ஜெயலலிதா அறை இடிப்பு?; எடப்பாடிக்கு கடும் எதிர்ப்பு!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகிறது. நகமும், சதையுமாக இருந்து வந்த எடப்பாடி பழனிசாமி மற்றும் ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. நாளடைவில் அதிமுக தலைமை பதவியை குறி வைத்து, இருவரும் போட்டியில் இறங்கினர். இதன் தொடர்ச்சியாக அதிமுகவின் பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்களை எடப்பாடி பழனிச்சாமி தன்வசமாக்கினார். இதன் பலனாக, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் … Read more

மாணவிகள் முன்பு பைக் சாகசத்தில் தலைகுப்புற விழுந்து: வீடியோ வைரலாவதால் பரபரப்பு

காரைக்குடி:  காரைக்குடி கல்லூரி சாலையில் மாணவிகளின் முன்பு வாகனத்தில் சாகசம் காட்டிய பாலிடெக்னிக் மாணவர் திடீர் என தலைகுப்புற விழுந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கல்லூரி சாலையில் அழகப்பா பல்கலைக்கழகம் உட்பட பல கல்வி நிலையங்கள் உள்ளன. இங்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி, கல்லூரி துவங்கும் மற்றும் முடியும் நேரத்தில் ‘ரோமியோ’ மாணவர்கள், இளைஞர்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. … Read more

பக்கவாதத்துக்கு வைத்தியம் பார்க்க சென்ற பெண் – 3 மாதமாக நடந்த கொடூரம்; கேரள வைத்தியர் கைது

உடல்நிலை பாதிக்கப்பட்ட கூடலூர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கேரள வைத்தியரை போலீசார் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியைச் சேர்ந்த 36 வயதான பெண் ஒருவர், தனது பதினைந்தாவது வயதில் பக்கவாதம் ஏற்பட்டு நடக்க முடியாத நிலையில் இருந்துள்ளார். பெண்ணின் உறவினர்கள் கடந்த ஜூன் மாதம் அவரை கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்திலுள்ள நிலம்பூர் பகுதியில் கோபாலன் என்னும் வைத்தியரிடம் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். வைத்தியர் கோபாலன் உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கடந்த … Read more

அசாதாரண சூழலில் புதுச்சேரி | விரைகிறது துணை ராணுவம்: போலீஸ் கட்டுப்பாட்டில் 16 துணை மின் நிலையங்கள்

புதுச்சேரி: புதுச்சேரியில் மின்வாரிய ஊழியர்கள் போராட்டத்தால் அசாதாரண சூழல் உள்ளதால் விரைவில் மத்திய துணை ராணுவப்படை இரு பிரிவினர் புதுச்சேரிக்கு வரவுள்ளனர் என அம்மாநில மின்துறை அமைச்சர் கூறியுள்ளார். மேலும், போலீஸ் கட்டுப்பாட்டில் 16 துணை மின் நிலையங்கள் உள்ளதாகவும் அவர் கூறினார். புதுச்சேரியில் மின்துறை தனியார்மயமாக்கப்படுவதற்கான டெண்டர் வெளியிட்டதையடுத்து கடந்த நான்கு நாட்களாக மின் வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாநிலத்தின் நான்கு பிராந்தியங்களிலும் வேலைநிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் … Read more

அதிமுக என்றால் அமித் ஷா திமுகவா? – சுப.வீரபாண்டியன் கேள்வி!

நெல்லை வண்ணார்பேட்டையில் திராவிட இயக்க தமிழர் பேரவை சார்பில் திராவிட நட்பு கழகம் அறிமுக கூட்டம் பேரவை துணைச் செயலாளர் சிங்கராயர் தலைமையில் நடைபெற்றது. இதில் திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் பேசியது: பேருந்தில் பாட்டி ஒருவர் ஓசியில் பயணிக்கமாட்டேன் என்று கூறி வைரலான உபகாரத்தில் தற்போது உண்மை வெளிப்பட்டுள்ளது அந்தப் பாட்டியின் பெயர் துளசி அம்மா. அவரை அதிமுககாரர்கள் பணம் கொடுத்து அவ்வாறு பேச செய்துள்ளனர் இதுதொடர்பாக மூன்று பேர் … Read more