’சசிகலா என் பேச்சை கேட்கவில்லை’ டிடிவி தினகரன் தடாலடி

அதிமுகவிற்குள் மீண்டும் நுழைய வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் சசிகலாவுக்கு ஷாக் கொடுத்திருக்கிறார் டிடிவி தினகரன். இதுவரை அதிமுகவை கைப்பற்றுவோம் என கூறி வந்த டிடிவி தினகரன், இன்று தடாலடியாக அதிமுகவும், அமமுகவும் இணைய வேண்டிய அவசியமில்லை என கூறியிருக்கிறார். மேலும், எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்க வேண்டாம் என தான் கூறியதை சசிகலா கேட்கவில்லை எனத் தெரவித்துள்ள அவர், ஓபிஎஸ் கருத்தும் எனது கருத்தும் என கூறியிருக்கிறார்.  டிடிவி தினகரனின் இந்த பேச்சு சசிகலா ஆதரவாளர்கள் … Read more

தொடர் விடுமுறை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குவிந்த சுற்றுலா பயணிகள்: பரிசல் சவாரி செய்து மகிழ்ச்சி

தருமபுரி: தொடர் விடுமுறை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குவிந்துள்ளனர். ஒகேனக்கல் வந்த சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்து மகிழ்ச்சியடைகின்றனர். தமிழகத்தில் மிகசிறந்த சுற்றுலா தளங்களின் ஒன்றானது ஒகேனக்கல். இங்கு தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக ஒகேனக்கல்லில் அதிக நீர்வரத்து காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து … Read more

பல்கலை. ஊழியர்களை குத்தகை முறையில் நியமிக்கும் முடிவை கைவிட வேண்டும்: ராமதாஸ் 

சென்னை: பல்கலை. ஊழியர்களை குத்தகை முறையில் நியமிக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ச.ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: சென்னை அண்ணா பல்கலைக்கழகம் உட்பட உயர்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தொழில்நுட்ப மற்றும் அலுவலக பணியாளர்களை குத்தகை முறையில் நியமிக்க உயர்கல்வித்துறை தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. பணியாளர்களின் உரிமைகளைப் பறித்து அவர்களை கொத்தடிமைகளாக்கும் புதிய நியமன முறை கண்டிக்கத்தக்கதாகும். இந்தியாவின் புகழ்பெற்ற தொழில்நுட்ப … Read more

ராஜராஜ சோழனை இந்துவாக மாத்திட்டாங்க – இயக்குனர் வெற்றிமாறன்

சென்னையில் கட்சி தலைவர் திருமாவளவனின் மணிவிழா நடந்தது. அதில் கலந்துகொண்டு பேசிய பிரபல இயக்குனர் வெற்றிமாறன் ”இந்து மத திணிப்பு மற்றும் தமிழர்களின் அடையாளங்கள் சிதைக்கப்படுவது குறித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெற்றிமாறன் பேசுகையில், தமிழ் சினிமாவை திராவிட இயக்கம் கையில் எடுத்ததன் விளைவாகத்தான் தமிழ்நாடு இன்னும் ஒரு மதச்சார்பற்ற மாநிலமாக இருக்கிறது. சினிமா வெகுமக்களை மிக எளிதாக சென்றடையக்கூடிய ஒரு கலை வடிவமாக உள்ளது. சினிமாவை அரசியல் மயமாக்குவது ரொம்ப முக்கியம். இன்றைய சூழலில் கலையை … Read more

கொலு வைக்கப்பட்ட அம்மன் சிலையை சுற்றிய பாம்பு! வைரலாகும் வீடியோ!

நவராத்திரி தொடங்கிவிட்டதால் அனைத்து கோவில்களிலும் சாமி சிலைகள் போன்ற பல்வேறு சிலைகளை வைத்து கொலு வைப்பார்கள்.  ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு ஒவ்வொரு விதமான அலங்காரங்கள், நெய்வேத்தியம், பூஜை என கோலாகலமாக 9 நாட்கள் நடைபெறும்.  சிலர் வீடுகளிலும் கொலு வைப்பார்கள், இதற்கென விரதமிருந்து, ஐந்து அல்லது ஏழு அல்லது ஒன்பது படிகள் அமைத்து அதில் கண்கவர் சிலைகளை வைத்து வழிபடுவார்கள்.  இதில் புராண கதைகளை கூறும் விதமான பொம்மைகள், திருக்கல்யாணம், வாணிபம், போக்குவரத்து, நாகரீகம், விலங்குலகம், பறவைகள், … Read more

வத்திராயிருப்பு பேரூராட்சி 2வது வார்டில் பராமரிப்பு இல்லாத மகளிர் கழிப்பறை: சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு பேரூராட்சி 2வது வார்டு மேலத்தெருவில், பராமரிப்பு இல்லாத மகளிர் கழிப்பறையை சீரமைத்து, பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். வத்திராயிருப்பு பேரூராட்சியில் உள்ள 2வது வார்டு மேலத்தெருவில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள பெண்களுக்காக கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. இங்கு தண்ணீர் வசதி இல்லை. கழிப்பறைகளுக்கு கதவுகளும் இல்லை. இதனால், பெண்கள் கழிப்பறையை பயன்படுத்துவதில்லை. கழிப்பறைக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்திக் கொடுத்து, கதவுகளை அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். … Read more

காந்தி உருவச் சிலைக்கு தமிழக ஆளுநர், முதல்வர் ஸ்டாலின் மரியாதை

சென்னை: காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு எழும்பூர் அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆகியோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இந்தியாவின் தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 154-வது பிறந்த நாள் இன்று ( அக். 2) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டின் அனைத்து தலைவர்களும் தேசத் தந்தை காந்தியின் சிலைக்கு மலர்தூவி மரியாதை செய்து வருகின்றனர். அந்த வகையில், எழும்பூர் அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு தமிழக ஆளுநர் … Read more

மோசமாகும் சவுக்கு சங்கர் உடல்நிலை: முதல்வர் ஸ்டாலின் தலையிட கோரிக்கை!

ஊடகங்களில், சமூக ஊடகங்களில் அரசியல் விமர்சகராக, பத்திரிகையாளராக கருத்துகளைத் தெரிவித்து வந்த சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நீதித்துறையில் ஊழல் நிறைந்து இருப்பதாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட சவுக்கு சங்கர், இது தொடர்பாக சில யூடியூப் சேனல்களுக்கும் பேட்டியும் அளித்திருந்தார். இது தொடர்பாக, அவர் மீது ஏன் குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது எனவும், சவுக்கு சங்கர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவும் உயர் … Read more

ஊரக சுகாதாரத்தில் தமிழகத்திற்கு தேசிய அளவில் 3ம் இடம்: ஜனாதிபதி விருது

தமிழகத்தில், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) பகுதி I-இன் கீழ், மக்களிடையே மனமாற்றத்தை ஏற்படுத்தி சுமார் 50 இலட்சம் தனி நபர் இல்லக் கழிப்பறைகள் மற்றும் இடவசதி இல்லாத வீடுகள் பயன்பெறும் வகையில் 413 சமுதாய சுகாதார வளாகங்களும் கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம், 12,525 கிராம ஊராட்சிகள் அனைத்தும் திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற நிலையினை எய்தின. தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) பகுதி II-இன் கீழ், பாதுகாப்பான கழிப்பறை வசதிகள் பெறுவதிலிருந்து எந்த ஒரு குடும்பமும் … Read more

பால் பாயிண்ட் பேனாக்கள் வரவால் சாத்தூரில் ‘சரிந்த’ பேனா நிப்புத் தொழில்: கொடி கட்டி பறந்த தொழில் குற்றுயிராக கிடக்கிறது

சாத்தூர்: சாத்தூரில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த பேனா நிப்புத் தொழில், பால் பாயிண்ட் பேனாக்களின் வரவால் தற்போது வாழ்வாதாரத்துக்கு போராடி வருகிறது. ஒன்றிய, மாநில அரசுகள் மானியக் கடன்கள் வழங்கி தொழிலுக்கு புத்துயிர் அளிக்க வேண்டும் என உற்பத்தியாளர்களும், அதனை சார்ந்த தொழிலாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் முக்கியத் தொழிலாக சேவு தயாரித்தல், தீப்பெட்டி, பட்டாசுத் தொழில் ஆகியவை உள்ளன. இதுதவிர பேனாவுக்கு நிப்புத் தயாரிக்கும் தொழிலும் ஒரு காலத்தில் கொடி … Read more