தருமபுரி அருகே மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழப்பு

தருமபுரி: தருமபுரி அடுத்த சந்தைப்பேட்டையில் வீடு காலி செய்ய இரும்பு பீரோவை இறக்கியபோது மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்தனர். இரும்பு பீரோவைஇறக்கியபோது மின்கம்பியில் பட்டு மின்சாரம் தாக்கியதில் பச்சையப்பன், இலியாஸ், கோபி ஆகியோர் பலியாயினர். மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்த குமார் என்பவர் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

ஆ.ராசாவை கண்டித்து வரும் 26 ஆம் தேதி சிறை நிரப்பும் போராட்டம்.. அண்ணாமலை அறிவிப்பு

இந்து மக்கள் குறித்து அவதூறாக பேசிய ஆ.ராசாவை கண்டித்து, வரும் 26 ஆம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி, பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆ.ராசா, ’நீ கிறிஸ்தவனாக இல்லை என்றால், இஸ்லாமியனாக இல்லை என்றால், பார்சியனாக இல்லை என்றால், நீ இந்துவாகத்தான் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்கிறது. இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது … Read more

மருத்துவப் படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!!

நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள், எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர இன்று முதல், விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022-23ஆம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ். மற்றும் பல் மருத்துவ (பி.டி.எஸ்.) படிப்புக்கான அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு மருத்துவ இடங்கள், நிர்வாக இடங்களில் சேர்வதற்கான இணையதள விண்ணப்ப பதிவு இன்று தொடங்குகிறது. நீட் தேர்வு முடிவுகள் வெளியாக தாமதமானதை அடுத்து மருத்துவ சேர்க்கையும் தாதமாகிவிட்டது. முன்னதாக கால்நடை மருத்துவப்படிப்புக்கு கடந்த 12ஆம் … Read more

சென்னை, கோவை, நெல்லை திமுக மாவட்ட செயலாளர்களை மாற்ற முடிவு: உதயநிதியின் பட்டியலுக்கு முக்கியத்துவம் என தகவல்

திமுக மாவட்டச் செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கும் நிலையில், சென்னை, கோவை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களின், மாவட்டச் செயலாளர்களை மாற்ற கட்சித் தலைமை முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத நிலையில், கடந்த 2021-ல் திமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்ததற்கு காரணம் கட்சியினர் கட்டுக்கோப்பாக இருந்து பணியாற்றியதுதான் என்பது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் நம்பிக்கை. எனவேதான், வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ‘நாற்பதும் நமதே’ என்று திமுகவின் அனைத்து கூட்டங்களிலும் தொடர்ந்து பேசி … Read more

ஆர்.பி.உதயகுமாருக்கு அமைச்சர் மெய்யநாதன் பதில்: விளையாட்டுத் துறையில் செய்த சாதனைகள்!

கடந்த 15 மாதங்களில் மட்டும் 1241 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.36.04 கோடி அளவிற்கு ஊக்கத் தொகையினை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கியுள்ள நிலையில் ஊக்க தொகையை குறைத்துள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமாருக்கு சுற்றுச் சூழல் – காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “உலக செஸ் ஒலிம்பியாட், சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி , கபடி சிலம்பம் … Read more

நல்லடக்கம் செய்யப்பட்ட மூதாட்டி மீண்டும் உயிருடன் வந்த சம்பவம்: உறவினர்கள் ஊர் மக்கள் அதிர்ச்சி

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அம்பேத்கர் நகர், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சந்திரா. வயது 72. இவருடைய கணவர் சுப்பிரமணி. கடந்த சில வருடங்களுக்கு முன்பு சுப்பிரமணி உயிரிழந்து விட்டார். சந்திரா பஜனை கோவில் தெருவில் உள்ள, தனது மகன் வடிவேலு பராமரிப்பில் வசித்து வருகிறார். வயதான சந்திரா அடிக்கடி கோவிலுக்கு செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. குறிப்பாக சந்திரா சிங்கப்பெருமாள் அருகே உள்ள கோவிலுக்கு அடிக்கடி சென்று வருவார். வழக்கம்போல நேற்று சந்திரா சிங்கப்பெருமாள் கோவிலுக்கு … Read more

தமிழகத்தில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா தொடர்புடைய இடங்களில் என்.ஐ.ஏ சோதனை

தமிழகத்தில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் உள்ள அலுவலகங்கள் மற்றும் தலைவர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ சோதனை நடத்தி வருகிறது. தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், கடலூர், ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, தென்காசி உள்ளிட்ட பல இடங்களில் பி.எப்.ஐ அலுவலகங்கள் மற்றும் தலைவர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பு சோதனை நடத்தி வருகிறது. சென்னை மாநில புரசைவாக்கத்தில் உள்ள பி.எப்.ஐ தலைமை அலுவலகத்திலும் என்.ஐ.ஏ சோதனை நடத்தப்படுகிறது. இதையும் படியுங்கள்: பரந்தூர் விமான நிலையம்; பதிவுத் … Read more

திமுக உட்கட்சி தேர்தல் : இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்!!

திமுக உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. அவைத் தலைவர், செயலாளர், துணைச் செயலாளர்கள் 3 பேர், பொருளாளர் மற்றும் தலைமைக் கழகத்தால் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த பொறுப்புகளுக்கு போட்டியிடுவோர், அதற்கென உள்ள படிவத்தில் முறைப்படி பூர்த்தி செய்து, பொறுப்பு ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் கட்டணமாக தலைமைக்கழகத்தில் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். இன்று முதல் வருகிற … Read more

தாம்பரம் திமுக எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா தனியார் நிறுவனத்தில் புகுந்து மிரட்டல்: வைரலாகும் காட்சிகள்

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரை அடுத்த மெல்ரோசாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தின் உள்ளே சென்ற திமுக-வை சேர்ந்த தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, அந்நிறுவன நிர்வாகிகளை ஆபாசமாக திட்டி, கை கால்களை உடைத்து விடுவதாக மிரட்டும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் அருகே மெல்ரோசாபுரத்தில் பூஜா கோயல் என்பவருக்கு சொந்தமாக 1.77 ஏக்கர் நிலம்உள்ளது. அந்த இடத்தை் கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2028 வரை 10 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து … Read more