கேஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம் மிஷினை உடைக்க முயற்சி – கொள்ளையர்களுக்கு ஷாக் கொடுத்த போலீசார்!

மேட்டுப்பாளையத்தில் கேஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சி காவல்துறை ரோந்து வாகனத்தை கண்டவுடன் கொள்ளையர்கள் தப்பியோடியதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து வனபத்திரகாளியம்மன் கோயில் செல்லும் சாலையில் ஒரு தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதனால் இவர்களின் வசதிக்காக பேங்க் ஆப் பரோடா ஏடிஎம் இயந்திரம் சாலையோரமுள்ள கம்பெனி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை மர்ம நபர்கள் … Read more

கோபாலபுரம் குடும்பத்தார் கோவிலுக்கு செல்லும் போது… ட்விட்டரில் கொந்தளித்த அண்ணாமலை!

கபாலீஸ்வரர் கோவிலில் அனுமதியின்றி கூட்டம் நடத்தியதற்காக சென்னை மாமன்ற பா.ஜ.க உறுப்பினர் உமா ஆனந்தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதற்கும், தி.மு.க எம்.பி ஆ.ராசாவை விமர்சனம் செய்ததற்காக பா.ஜ.க மாவட்ட தலைவர் கைது செய்யப்பட்டுள்ளதற்கும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். உமா ஆனந்தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது தொடர்பாக அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தத் திறனற்ற தி.மு.க ஆட்சியில் கோவிலில் சென்று வழிபடுவதற்கு அரசின் ஒப்புதல் தேவையா? மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் … Read more

கொரோனாவை கண்டால் குறுஞ்செய்தி.. நவீன முகக் கவசம் கண்டுபிடிப்பு..!

சீனாவில், கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் 2 ஆண்டுகளை கடந்தும் முற்றாக அழியாமல் உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாக்கும் கவசமாக முகக்கவசம் இருந்து வருகிறது. இந்த நிலையில், காற்றில் கொரோனா வைரஸ் கலந்திருந்தால் அதை குறுஞ்செய்தி மூலம் அணிந்திருப்பவருக்கு காட்டிக் கொடுக்கும் வகையில் நவீன முகக் கவசத்தை சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள டோங்ஜி பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த நவீன முகக் கவசத்தை ஒருவர் … Read more

ஜிப்மரில் தொடரும் பற்றாக்குறை: கையிருப்பு மருந்து, மாத்திரைகளை மட்டும் பரிந்துரைக்க சுற்றறிக்கை

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடரும் மருந்து பற்றாக்குறையால் கையிருப்பில் உள்ள மருந்துகளை மட்டும் பரிந்துரைக்க அனைத்து துறைகளின் டாக்டர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கோரிமேடு பகுதியில் அமைத்துள்ளது ஜிப்மர் மருத்துவமனை. மத்திய அரசின் கட்டுபாட்டில் இந்த மருத்துவமனை இயங்கி வருகிறது. கரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்த இரு ஆண்டுகளாக வெளிப்புறச் சிகிச்சைகள் தொடர்ச்சியாக தரப்படாத சூழல் நிலவியது. தொலைபேசியில் முன்பதிவு செய்து அதன்பிறகே சிகிச்சைக்கு வரவேண்டிய நிலை இருந்தது. இரு ஆண்டுகளாக தொற்றா நோய்களான … Read more

ஓபிஎஸ் முகாமுக்குள் அதிருப்தி: சீனியர்கள் வருத்தம்!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோர் வீடுகளில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வருமானவரித்துறை ரெய்டு நடைபெற்றது. எடப்பாடியின் வலதுகரமான எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் மட்டும் இதுவரை 3 முறை ரெய்டுகள் நடைபெற்றுள்ளன. அதேபோல், இபிஎஸ்ஸுக்கு நெருக்கமானவர்கள், அவரது ஆதரவாளர்களுக்கு சொந்தமான இடங்களிலும் ரெய்டு படலம் தொடர்கிறது. இதுபோன்று எடப்பாடி தரப்பினர் மீது தொடர் ரெய்டுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், அவர்கள் எந்த நேரமும் கைது செய்யப்படும் வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் … Read more

மீண்டும் மஞ்சப்பை திட்டம் மூலம் பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்துள்ளது: அமைச்சர் மெய்யநாதன்

சென்னை லயோலா கல்லூரியில், இந்தியன் சயின்ஸ் மானிட்டர் (Indian science monitor) அமைப்பின் சார்பில் நடைபெற்ற சுற்றுச்சூழல் கருத்தரங்கில் தமிழக சுற்றுச்சூழல், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் சிவ. வீ மெய்யநாதன் பங்கேற்று சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பான உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டார்.  இந்நிகழ்ச்சியில் பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழலில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவர்கள் இடத்தில் அமைச்சர் மெய்யநாதன் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மெய்யநாதன், பூமி தாய்க்கு நன்றி செலுத்துகின்ற இந்த தினத்தில், … Read more

புதுகும்மிடிப்பூண்டியில் அரசு மேல்நிலை பள்ளியில் ஆய்வகம் திறக்க மாணவர்கள் வலியுறுத்தல்

கும்மிடிப்பூண்டி: புதுகும்மிடிப்பூண்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட அறிவியல் ஆய்வகம் இதுவரை திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இந்த ஆய்வகம் விரைவில் திறக்கப்படுமா என மாணவர்கள் எதிர்பார்ப்புடன் வலியுறுத்துகின்றனர். கும்மிடிப்பூண்டி அருகே புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசிக்கின்றனர். இங்கு தமிழக அரசின் தொடக்க கல்வி, நடுநிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி என ஒருசில கிராமங்களில் இயங்கி வருகிறது. இங்குள்ள கிராமம் ஒன்றின் ஒதுக்குப்புறத்தில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் … Read more

’’நான் அப்படி கூறவில்லை’’ – மாணவி ஹிஜாப் விவகாரம் குறித்து தலைமை ஆசிரியை விளக்கம்

ராமநாதபுரம் அருகே அரசு பள்ளியில் இஸ்லாமிய மாணவி ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வரக்கூடாது என தலைமையாசிரியர் கூறியதாக வீடியோ வைரலாகி வருகிறது. முதன்மை கல்வி அலுவலர் விளக்கம் கேட்டதற்கு நான் அப்படி கூறவில்லை என்று தலைமை ஆசிரியர் விளக்கம் அளித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சாத்தான்குளம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாக பள்ளியில் சேர்க்கப்பட்ட இஸ்லாமிய மாணவி ஒருவரை சால் அணிந்து (ஹிஜாப் அணிந்து) பள்ளிக்கு வரக்கூடாது என சாத்தான்குளம் ஊராட்சி … Read more

புதுச்சேரியில் காய்ச்சலுக்கு 747 குழந்தைகள் பாதிப்பு: மருத்துவமனைகளில் 200 குழந்தைகளுக்கு சிகிச்சை

புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்காலில் ஃப்ளூ காய்ச்சலால் 747 குழந்தைகள் வெளிப்புற சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுள்ளனர். புதிதாக 50 குழந்தைகள் மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளதால் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 200 ஆனது. புதுவையில் இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சல் குழந்தைகளை அதிகளவில் பாதிக்கிறது. நாள்தோறும் காய்ச்சலால் அவதிப்பட்டு சிகிச்சை வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது 1 முதல் 8ம் வகுப்பு வரை விடுமுறை விடப்பட்டுள்ளன. புதுவை அரசு மருத்துவமனை, ராஜீவ்காந்தி மகளிர் … Read more

'ஆ.ராசாவால் சிறுபான்மையினர் ஓட்டுகள் கிடைக்காது' – திமுகவுக்கு அண்ணாமலை சவால்!

திமுகவிற்கு சிறுபான்மையினர் ஓட்டுகள் கிடைக்காது என தமிழக பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்து உள்ளார். எம்பி ஆ.ராசா, அண்மையில், இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்து இருந்தார். இதற்கு பாஜக தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து அவருக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அத்துடன், இந்துக்கள் குறித்தும், இந்து மதம் குறித்தும் அவதூறாக பேசியதாக ஆ.ராசாவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல காவல் நிலையங்களில் பாஜக சார்பாக புகார் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, திமுக எம்பி … Read more